இந்த காலத்து ஆண்கள் கிழிந்த ஆடையை அணிகிறார்கள்.கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கை முறையில் நிறைய கஷ்டப்படுவார்கள்.

Spread the love

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
என்னிடம் ஒரு நண்பர் கேட்ட கேள்வி:
இந்த காலத்து ஆண்கள் கிழிந்த ஆடையை அணிகிறார்கள். இதற்கு என்ன கிரகங்கள் வருது.

என்னை பொறுத்தவரையில் இதற்காக பொருள் விரயம் செய்கிறோம்.அதிகமாக செலவு செய்து அந்த ஆடையை அணியும் பொழுது அவர்களுக்கு சுக்கிரனுடைய தன்மை அதாவது பணத்துடைய மோகம் பணத்துடைய ஆதிக்கம் அவர்களுக்கு குறைவாக இருக்கும்.

கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கை முறையில் நிறைய கஷ்டப்படுவார்கள்.
கலாச்சாரம் மாறிவிட்டது என்று நினைத்து நீங்கள் அந்த ஆடையை அணிந்தால் கண்டிப்பாக சுக்கிரனுடைய அமைப்பு பாதிக்கப்படும்.

சுக்கிரன், சனி சம்பந்தப்பட்ட விஷயங்கள் பாதிக்கப்படும் பொழுது கண்டிப்பாக மனம் சார்ந்த விஷயங்கள், உடல் சார்ந்த விஷயங்கள் கண்டிப்பாக ஜாதகர் சந்திக்கக்கூடும்.
இந்த மாதிரி ஆடைகளை அணிவதால் கண்டிப்பாக பிற்காலத்தில் அவர்கள் நிறைய கஷ்டப்படுவார்கள்.

உடைகள் எப்படி தேர்ந்தெடுக்கிறோமோ அதேபோல்தான் வண்ணங்களும், வண்ணங்களை பொறுத்து தான் உடல் இயங்குகிறது.

இந்த உலகத்தில் இரண்டு விஷயங்கள்தான் 1.வெளிச்சம்
இன்னொன்று நம் காதால் கேட்கக்கூடிய 2.சத்தம்
வெளிச்சமும், சத்தமும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் முக்கியமானவை. நீங்கள் போடக்கூடிய சட்டைகள்,அணிகலன்கள் வண்ணங்கள்,நம் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாகும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி ,வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *