குரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும் ?

Spread the love

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். பண்டைய காலத்தில் ஜோதிடம் பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு பொருளை தானமாகக் கொடுத்துதான் ஜாதகம் பார்ப்பார்கள். அந்தக் காலத்தில் வெற்றிலை பாக்கு வாங்கி வந்துதான் ஜாதகம் பார்ப்பார்கள். அதன் பிறகு அரிசி, நெல், மிளகாய் இப்படி ஏதாவது ஒரு பொருளை தானமாக கொடுப்பார்கள். நமது வாழ்க்கையில் வழிகாட்டக்கூடிய ஜோதிடர்களுக்கு ஏதாவது ஒரு பொருளை தானமாகக் கொடுக்க வேண்டும். உணவு வாங்கி கொடுக்கலாம். துணி வாங்கி கொடுக்கலாம். அல்லது யாராவது ஒரு குருமார்களையோ, அந்தணர்களையோ,அல்லது வாழ்க்கையில் வழிகாட்டக்கூடிய நமது ஆசிரியர்களையோ, இல்லை நமக்கு ஜாதகம் பார்க்கும் நமது வாழ்க்கையை வழிகாட்டக்கூடிய ஜோதிடர்களுக்கும், கரும்பு சாருடைய தானம்,இனிப்பு தானம் கொடுக்கலாம். ஒரு ஜோதிடருக்கு நீங்கள் கரும்புசாறு தானம் கொடுத்தீர்கள் என்றால் உங்களுடைய வாழ்க்கையில் அந்த குரு தோஷம் நீங்கும். குரு தோஷம் என்று சொல்லக்கூடிய வீட்டில் குழந்தை இல்லை, குழந்தை நன்றாக படிக்கவில்லை, குழந்தை பிரச்சனை இருக்கு, எதிர்பார்த்த யோகம் கிடையாது இப்படியெல்லாம் இருக்கக்கூடிய வீட்டில் ஏதாவது ஒரு வகையில் குரு உடைய சாபம் அதாவது சொல்வதை கேட்காதவர்கள். அதாவது உதாரணமாக நான் ஜோதிடம் சொல்லி கொடுக்கிறேன் அது புரியாதவர்கள்,அதாவது குருவை பலிப்பவர்கள், ஜோதிடர்களை பலிப்பவர்கள், மறைமுகமாக திட்டுபவர்கள், அல்லது குருமார்கள் சொல்லிக் கொடுப்பதை இன்னொருவருக்கு மறைமுகமாக சொல்லி கொடுத்து ஒரு பொருளைத் தானமாகப் பெறுவார்கள். சொல்லிக் கொடுப்பது ஒரு குருவிடம் கற்ற வித்தையை, கல்வியை அவருடைய அனுமதியுடன் கற்றுக் கொடுக்க வேண்டும். அதுதான் முறையான கல்வி. இன்னாரிடமிருந்து இந்த கல்வி வந்தது, இன்னாரிடமிருந்து இந்த கல்வியை கற்றுக்கொண்டேன். இந்த கல்வியை அவரிடம் அனுமதி பெற்று நான் கற்றுக் கொடுக்கிறேன். அப்படி சொல்லிக் கொடுக்கும் பொழுது அந்த குரு உடைய தோஷம் வராது. அது இல்லாமல் மறைமுகமாக சொல்லிக் கொடுத்து ஒரு ஜோதிடர் இன்னொரு ஜோதிடருக்கு சொல்லிக் கொடுக்கும் பொழுது குரு உடைய தோஷம் கண்டிப்பாக உண்டாகும். கண்டிப்பாக அவருடைய வாழ்க்கையில் குடும்பம் என்று சொல்லக்கூடிய, அட்சய லக்னத்திற்கு 6, 8 ,10 ,12 ல் குரு பகவான் இருக்கக்கூடிய காலகட்டங்களில் குருமாருடைய சாபத்தை பெறக்கூடிய ஜாதகராக மாறுவார். குருவிடம் கற்ற கல்வியை யாருக்காவது மறைமுகமாக சொல்லி கொடுப்பார். மறைமுகமாக சொல்லி கொடுத்து பணத்தை பெறுவார். பேர் புகழ் வாங்குவார்கள். இது ஏதோ ஒரு விதத்தில் சாபத்தை ஏற்படுத்தும். உண்மையில் குரு சரியாக சொல்லிக் கொடுப்பார். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் குருவை பலிப்பது, மறைமுகமாக திட்டுவது, ஏதாவது ஒரு பழிச்சொல்லுக்கு ஆளாவது, இதெல்லாம் எப்படி தெரிந்து கொள்வது என்றால்? அந்த குடும்பத்தில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட குறைபாடு இருக்கும், குரு என்றால் குழந்தைகள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஒருவர் செல்ல முடியவில்லை என்றால் அவருக்கு குரு உடைய தோஷம் இருக்கு. தோஷம் என்று சொல்லுவது ஜாதகத்தில் குரு 6, 8, 10, 12ல் இருந்தால் வீட்டிற்கு பக்கத்தில் குடமுழுக்கு நடக்கும் அதற்கு செல்ல முடியாது. மறைமுகமாகச் சாடினாலும் கண்டிப்பாக குரு தோஷம் ஏற்படும். அப்பாவுக்கும் மகனுக்கும் ஏற்படக் கூடிய பாக்கியம் எதிர்பார்த்த யோகம் கிடையாது. அதனால் கண்டிப்பாக கரும்புசாறு வாங்கி தானம் கொடுங்கள். ஏதாவது ஒரு குருவை சாந்த படுத்துங்கள். உங்களுக்கு யாரெல்லாம் வழிகாட்டுகிறார்கள் அவர்களுக்கு கரும்புசாறு வாங்கி கொடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை மாறும். இல்லையென்றால் சிவன் கோவிலுக்கு கரும்புசாறு வாங்கி அபிஷேகம் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கை வளமாகும். அபிஷேகம் செய்த கரும்புசாறு வாங்க அருந்தும் போது இன்னும் சந்தோஷம். உங்களுடைய வாழ்க்கை நிவர்த்தியாகும். அதன் பிறகு பணம், தனம், மகிழ்ச்சி, குடும்ப உறவுகள், குழந்தைகளுடைய படிப்பு, குழந்தைகளுடைய ஆரோக்கியம், குழந்தைகளுடைய செல்வம், மகிழ்ச்சி, ஆனந்தம், எல்லாம் அந்த வீட்டில் கண்டிப்பாக வாழ்க்கை வளமாகும். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/Wwy0QOjwXPM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *