அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
இன்றைக்கு நிறைய பேர் வாழ்க்கையில் திருமண தடையை உண்டு பண்ணும் தோஷம் களத்திர தோஷம்.
அட்சய லக்ன முறை தெரிந்து கொள்ளும் போதுதான் உண்மையான களத்திர தோஷம் எப்பொழுது வேலை செய்யும் என்பது தெரிந்தது.
அட்சய லக்ன பத்ததி முறை வித்தியாசமான முறை.ஏனென்றால்?
வெறும் லக்னத்தை மட்டும் வைத்து பலன் பார்த்த நாம்
10 வருடத்திற்கு ஒரு முறை லக்னம் மாறும் என்ற புதிய விஷயத்தை கொண்டு வந்தது அட்சய லக்ன பத்ததி.எந்த மாதிரியான சூழ்நிலையில் வாழ்க்கை நடக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.
களத்திர தோஷம் என்பது திருமண காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் 3ம் பாவகம் வேலை செய்யும்போது
திருமண யோகம் ஏற்படும்.
ஒரு சிலருக்கு 4-ஆம் பாவம் வேலை செய்யும்போது திருமண யோகம் ஏற்படும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் எந்த மாதிரியான அமைப்புகளுக்கு களத்திரதோஷம் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.