எண்ணங்கள் என்பது சந்திரன் முடிவுகள் என்பது குருபகவான்

வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஏதாவது ஒரு நிகழ்வுகளுக்கு ஏதாவது வழி கிடைத்துவிடாதா? இல்லை ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா?

என்ற எல்லாருடைய ஏக்கத்திற்கும் இந்த ஜோதிடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி, மிகப்பெரிய மைல்கல் என்பது

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இருக்கு.

 

என் வாழ்க்கையில் இப்போ என்ன நடக்கும், நாளைக்கு என்ன நடக்கும், அடுத்து ஒரு மாதம் எப்படி இருக்கும், அடுத்து ஒரு வருடம் எப்படி இருக்கும்.

இந்த நிகழ்வு மிகப்பெரிய நீண்ட தூரத்தில் இந்த அட்சய லக்ன பத்ததி உடைய வளர்ச்சி இருக்கு.

 

ஒரு மனிதன் எப்படி வளர்ச்சி பெறுகிறதோ, மாற்றம் அடைகிறதோ,

அதேபோல் ஜென்ம லக்னம் வளர்ந்து, நகர்ந்து மாற்றம் அடைந்து ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடந்த, நடக்ககூடிய நிகழ்வுகளை கூறுவதுதான்

அட்சய லக்ன பத்ததி.

 

அட்சய லக்ன பத்ததி என்ற நிகழ்வு

youtube வீடியோ நிறைய இருக்கு.

கண்டிப்பாக உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கையில் உதவும்.

ஏன்னா? வழிக்காட்டுதல் இல்லாமல் நீங்கள் போனால் எப்படி இருக்கும்.

அதாவது எங்க போறது, எப்படி போறது என்று தெரியாது.

இந்த இரண்டிற்கும் விளக்கம் சொல்வதுதான் ஜோதிடம்.

 

இந்த விளக்கத்தை இவ்ளோ தூரத்தில், இவ்ளோ வேகத்தில் இந்த இடத்திற்கு போனால் உங்கள் வாழ்க்கை பயணம் வெற்றியாகும்.

ஒரு நிகழ்வு :

நான் சமஸ்கிருதம் கத்துட்ட, அந்த நிகழ்வு சரியா முடியல, நான் பரதநாட்டியம் கத்துகிட்டேன் அது சரியா பண்ண முடியல. இப்படி நிறையா நிகழ்வுகள் சொன்னப்போ நான் சொன்னேன் ஒரு

பொருத்தமில்லாத சின்ன பாட்டிலுக்கு ஒரு பெரிய மூடியோ, பெரிய பாட்டிலுக்கு சின்ன மூடியோ, போட்டால் அது பாதுகாப்பாக இருக்குமா? இருக்காது

அதுபோல் தான் நம் வாழ்க்கை.

எனக்கு எது புடிக்குமோ, எனக்கு எது தெரியல

நீங்க 10 பேரை சந்திச்சிருப்பிங்க, அதில் இவர் சரியாக இருக்க மாட்டார், இவர் சரியாக இருப்பார் என்று மனம் ஒரு அறுதியிட்டு சொல்லும்ல அதுதான் இறுதியாளர்.

 

உங்கள் வாழ்க்கையில் ஒரு 10 விஷயம் செய்திருப்போம்,

பரதநாட்டியம் ஒத்து வரல, சமஸ்கிருதம், பரதநாட்டியம், ஆன்மிகம், ஜோதிடம், யோகா,

இப்படி இவ்வளவு நிகழ்வு இருந்தாலும், இந்த யோகாவில் மறுபடியும் மறுபடியும் ஒரு நிகழ்வு வந்து அதில்தான் என்னுடைய உடல் லயத்து போகிறது, மனம் லயத்து போகிறது என்று சொல்லும் இடத்தில்தான் ஒரு ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்கும்.

அதுதான் உங்களுக்கு பொருத்தமான

பாட்டில்கு ஏற்ற மூடி.

அங்குதான் ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்கும்.

இந்த நிகழ்வுகளை சரியாக பொருத்திவிட்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி தான்.

 

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு குழந்தை பேறு சம்பந்தப்பட்ட நிகழ்வு.

இதற்கு திருமணம் ஆவதற்கு முன் குருவிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.

இதற்கு விசாகம், மகம் நட்சத்திரம் வரும் நாட்களில் குருவிடம் ஆசிர்வாதம் வாங்கனும்.

குரு என்றால் நவக்கிரக குரு,

ஆன்மிக குரு இல்லை, நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரோ, இல்லை ஜோதிடரோ,

ஜோதிடரிடம் இந்த விஷயங்கள்

நடக்காதப்போ தான் போவாங்க.

இப்படி செய்யக்கூடாது.

 

நம்முடைய எண்ணங்கள் ஒன்று,

முடிவுகள் ஒன்று

எண்ணங்கள் என்பது சந்திரன்

முடிவுகள் என்பது குருபகவான்

ஒருவர் மேல் கோபப்படக்கூடிய தன்மைகளை செய்வது சந்திரன்.

அதிதமாக கோபப்படுவதற்கு செவ்வாய் ஏதோ ஒரு வகையில் பலமாக இருக்கணும்.

ஆனால் சந்திரன் சம்பந்தப்படும் பொழுது உடனே கோபப்பட வைக்கும்.

ஆனால் குரு தெரியாமல்தானே செய்றாங்க, மன்னிசிடுங்க, இந்த விஷயம்பத்தி இப்போ பேச வேணாம், 2 நாள் போகட்டும், என்ற.

அந்த குரு தான் உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும்.

 

ஒரு ஜோதிடரை பார்க்க நினைக்கும்பொழுது அன்றைக்கு உங்கள் வாழ்க்கை மாறும்.

ஆனால், குரு பலமில்லை என்றால் உங்களை பலவகையில் அலைய வைக்கும்.

அந்த காலத்தில் விளக்கு ஏற்றி வைத்து, அதை பார்த்து பலன் சொல்வார்கள்.

 

வாழ்க்கையில் வழிகாட்டக் கூடிய, எண்ணங்களை தோற்றுவிக்க கூடிய

நல்லது, கெட்டதுகளை

குருபகவான் ,

மனசாட்சி,வாழ்க்கையில் நடக்கக்கூடிய அத்தனை எண்ணங்களையும் நாம் கவனிக்கணும்.

இது சரி,இது நல்லது என்று முடிவு செய்யணும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இதற்கு என்ன பண்றோம்னா?

அகம்,புறம் என்று வைத்திருக்கோம்.

அதாவது உள் மனதிற்குள் அகமனம் , புற மனம் என்று வைத்திருக்கோம்.

அட்சய லக்னத்திற்கு 6, 8, 10, 12ல் குரு பகவான் இருந்தால், உங்கள், வெளிமனம் வேகமாக இருக்கும் ‘உள்மனம் (குரு) இன்னும் வேகமாக போக சொல்லும்.

கவனமாக இருக்கனும்.

நன்றி.

https://youtu.be/IivTzi5cnq

வசிஷ்டரின்_வாயால்_பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் #விசுவாமித்திரர்.

#வசிஷ்டரின்_வாயால்_பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் #விசுவாமித்திரர்.

 

ஆனால், அந்தப் பட்டம் அவருக்கு உடனே கிடைத்துவிடவில்லை. கடுமையான தவம் இயற்றிய பிறகே அவருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது.

 

விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற வரலாறு:

 

ஒரு நாட்டின் மன்னனாக இருந்த கௌசிகன் என்பவன், வேட்டையாடுவதற்காக படைபரிவாரங்களுடன் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடி விட்டு திரும்பும் வழியில், வசிஷ்டரின் ஆசிரமம் பக்கமாக வருகிறார். தன் ஆசிரமம் பக்கமாக வந்த கௌசிக மன்னனையும் படைபரிவாரங்களையும் உணவு தந்து உபசரிக்க விரும்பிய வசிஷ்டர், கௌசிகனிடம், ‘‘உங்களுக்கும் உங்களுடைய படையினருக்கும் நான் உணவு பரிமாறுகிறேன், நீங்கள் உணவு உண்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்று சொன்னாராம்.

 

அதற்கு கெளசிகர், ‘’எனக்கும் என் படை யினருக்கும் உங்களால் உணவு பரிமாற முடியாது, காட்டுப் பகுதியில் ஆசிரமத்தில் தனிமையில் இருக்கும் நீ எப்படி இத்தனை பேருக்கும் உணவு சமைத்து பரிமாற முடியும்?’’ என்று கேட்டார்.

 

வசிஷ்டர், ‘‘முடியும் மன்னா, நீங்களும் உங்கள் பரிவாரங்களும் சற்றே இளைப்பாற அமருங்கள். சற்றுநேரத்துக்குள் உங்களுக்கு அறுசுவை விருந்து தயாராகிவிடும்’’ என்றார்.

 

பிறகு வசிஷ்டர், ஆசிரமத்துக்குப் பின்புறம் இருந்த கோமாதாவிடம் சென்று, ‘‘வந்திருக்கும் அனைவருக்கும் அறுசுவை விருந்து தயார் செய்து, பணிப்பெண்கள் மூலம் பரிமாற வேண்டும்’’ என்றார். அப்படியே சற்றுநேரத்தில் அறுசுவை விருந்து தயாரா னது. பரிமாறுவதற்கு பணிப்பெண்களும் வந்தனர்.

 

வசிஷ்டரின் ஆசிரமத்தில் இப்படி ஒரு தெய்விகப் பசு இருப்பதைக் கண்ட கௌசிகன், ‘‘கேட்டதைத் தரும் அட்சய பத்திரமான கோமாதா, சாதாரண முனிவரான உன்னிடம் இருக்கக்கூடாது. நாட்டின் மன்னனான என்னிடம்தான் இருக்க வேண்டும்’’ என்று சொல்லி, அந்த தெய்விகப் பசுவைத் தனக்குத் தருமாறுக் கேட்டார். வசிஷ்டர் மறுத்தார்.

 

வசிஷ்டரின் மகிமை தெரியாத கௌசிகன், தன்னுடைய படையினரைப் பார்த்து, அந்தப் பசுவை இழுத்து வருமாறு கூறினான். படையினர் கோமாதாவை இழுத்து வரச் சென்றனர். அவர்கள் அனைவரையும் எரித்து சாம்பலாக்கும்படி சாபம் கொடுக்கிறார் வசிஷ்டர். அப்படியே படைவீரர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகி விடுகின்றனர்.

 

அப்போதுதான் வசிஷ்டரின் தவ வலிமையை உணர்ந்துகொண்ட கௌசிகன், ‘‘தங்களுக்கு எப்படி இந்த வலிமை கிடைத்தது? தங்களைப் போலவே நானும் பிரம்மரிஷி ஆகவேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?’’ என்று கேட்டான்.

 

‘‘கடுமையாகத் தவம் இயற்றினால் மட்டுமே பிரம்மரிஷி பட்டம் கிடைக்கும். சுகபோகங்களில் திளைத்த உன்னால் அப்படி கடும் தவம் புரியமுடியாது’’ என்று வசிஷ்டர் சொல்ல,

 

‘‘படைபரிவாரங்கள் இல்லாமல் நான் நாட்டுக்குப் போவதும் ஒன்றுதான். போகாமல் இருப்பதும் ஒன்றுதான். எனவே நானும் தங்களைப் போல் கடும் தவம் புரிந்து, உங்கள் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுகிறேன்’’ என்று சபதம் செய்வதுபோல் கூறிவிட்டு தவம் இயற்றச் சென்றுவிட்டார்.

 

தவத்தின் பயனாக அளவற்ற ஆற்றலும் பெற்றார். விசுவாமித்திரர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஆனால், தவப் பயனாகத் தான் பெற்ற ஆற்றலை, திரிசங்கு சொர்க்கம் அமைத்துக் கொடுத்ததால் இழந்துவிட்டார். இழந்த சக்தியைப் பெறுவதற்காக மீண்டும் தவம் இயற்றும் பொருட்டு வட திசையில் இருந்து தென் திசைக்கு வந்து சேர்ந்த இடம்தான் விஜயாபதி. விஜயாபதி கடற்கரைக்கு அருகில் லிங்கத்திருமேனியாக இறைவனையும், இறைவியையும் எழுப்பி பூஜை செய்து, ஓமகுண்டம் வளர்க்க ஆரம்பித்தார். அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை என்ற அரக்கி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தாள். தாடகையின் தொல்லையைப் பொறுக்கமுடியாமல், விசுவாமித்திரர், ராம லட்சுமணர்களை அழைத்து வருகிறார். ராமபிரான் தாடகையை அழிக்க அஸ்திரம் தொடுத்தார். ராமரின் அஸ்திரத்துக்கு பலியான தாடகை, அருகில் உள்ள மலையில் விழுந்து மடிகிறாள். தாடகை விழுந்து மடிந்த மலை, தாடகை மலை என்றே அழைக்கப்படுகிறது. (கன்னியாகுமரி மாவட்டம், தோவாளைக்கு அருகில் இருக்கும் தாழக்குடி என்ற இடத்துக்கு அருகில் உள்ள இந்த மலை, ஒரு பெண் படுத்திருப்பதைப் போலவே காட்சி தருகிறது).

 

யாகத்தின் முடிவில், இறைவனும், இறைவியும் விசுவாமித்திர மகரிஷிக்கு தம்பதி சமேதராகக் காட்சி கொடுத்து ’’இழந்த சக்திகளைப் பெற்று விட்டாய்., காசிக்குச் சென்று உன்னை சபித்த வசிஷ்டர் வாயாலேயே ரிஷிகளில் உயர்ந்த பட்டமான ‘பிரம்மரிஷி’ பட்டத்தைப் பெறுவாய். வசிஷ்டரே உனக்கு குருவானவர். மேலும் நீ தவம் புரிந்த இந்த இடத்துக்கு வந்து செல்பவர்களுக்கு தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை’’ எனச் சொல்லி அருளினர். விசுவாமித்திரரும் காசிக்குச் சென்று, வசிஷ்டர் வாயாலேயே பிரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார்.

 

’விஜயம்’ என்றால் வெற்றி, ’பதி’ என்றால் இடம். விஜயாபதி என்றால் ‘வெற்றிக்கான இடம்’ என்பதாகும். விசுவாமித்திரர் யாகம் செய்த இடமாதலாலும், இழந்த சக்திகளை மீண்டும் பெற்று விட்ட இடமாதலாலும் இங்கு இவருக்குத் தனிக்கோயில் உள்ளது. இந்தியாவிலேயே விசுவாமித்திர மகரிஷிக்கு தனிக்கோயில் இருப்பது விஜயாபதியில்தான். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது விஜயாபதி.

 

கடற்கரையை நோக்கி கையில் கமண்டலத் துடனும், கழுத்தில் ருத்திராட்ச மாலையுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் விசுவாமித்திர மகரிஷி. அருகிலேயே உள்ளது விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோயில். இறைவனை விசுவாமித்திரர் வழிபட்ட காரணத்தால், இத்தல இறைவனுக்கு விசுவாமித்திர மகாலிங்க சுவாமி என்றும், இறைவிக்கு அகிலாண்டேஸ்வரி என்றும் திருநாமம் வழங்கப்படுகிறது. இறைவனும், இறைவியும் தனித்தனி மண்டபத்தில் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சியளிக்கின்றனர். கோயிலின் தல விருட்சம் வில்வமரம்.

 

விசுவாமித்திரர் யாகம் செய்வதற்கு முன்னால், இங்குள்ள விநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் யாகம் செய்துள்ளார். அதனால், இந்த விநாயகருக்கு ஓமகுண்ட கணபதி என்று பெயர்.கணபதி சந்நிதிக்குள் வலப்புறம் ராமர், இடப்புறம் லட்சுமணர் உருவம் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரர் யாகம் செய்த ஓமகுண்டம் தற்போது கிணறு போல காட்சியளிக்கிறது. விசுவாமித்திரர் சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று யாகமும், மாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று தியானத்தையும் தொடங்கினாராம்.

 

விசுவாமித்திரரின் ஜன்ம நட்சத்திரம் விசாகம். ஒவ்வொரு மாதமும் அனுஷம், உத்திரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங் களிலும், பெளர்ணமி தினத்தன்றும் விசுவாமித்திரருக்கு சிறப்பு அபிஷேகமும் புஷ்ப அர்ச்சனையும் நடைபெறு கின்றன. இதில் கலந்து கொண்டால், பித்ருக்கள் சாபம் நீங்குவதாகச் சொல்லப் படுகிறது. கடலில் நீராடி, ஈர ஆடையுடனே ஓமகுண்ட கணபதிக்கு சிதறு தேங்காய் உடைத்து, விசுவாமித்திரருக்கு சிவப்பு வெள்ளை வஸ்திரம் அணிவித்து, அவருக்கு உகந்த ரோஜாப்பூ மாலை சாத்தி, 11 நெய் தீபமேற்றி, விசுவாமித்திரர் சந்நிதியை மூன்று முறைச் சுற்றி வந்து, மறுபடியும் ஒரு முறை விசுவாமித்திரரை தரிசனம் செய்துவிட்டுச் சென்றால் சில நாட்களிலேயே முன்னேற்றம் தெரிவதாகக் கூறுகின்றனர் பலன் பெற்றவர்கள்.

 

விசுவாமித்திர மகாலிங்க சுவாமிக்கு வெள்ளை வஸ்திரம், வெள்ளை அரளி மாலை அணிவித்து, அகிலாண்டேஸ்வரி அம்பிகைக்கு சிவப்பு நிறப் பட்டு, செவ்வரளி மாலை சாத்தி நெய் தீபமிட்டு வழிபட்டால் நினைத்த காரியம் ஸித்தியாகுமாம். தைமாதம் தைப்பூசத்தில் இறைவனையும், இறைவியையும் விசுவாமித்திரர் பிரதிஷ்டை செய்ததால், தைப் பூசத்தன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

 

அடைந்த தோல்வியை மாற்றி வெற்றியை அருளும் விஜயாபதி விசுவாமித்திரர் கோயிலுக்குச் சென்று, ஐயனையும் அம்பிகையையும் வழிபடுவதுடன், விசுவாமித்திரரையும் தரிசித்து வாழ்க்கையில் தோல்விகளைத் தவிர்த்து, எங்கும் எதிலும் வெற்றிகளே கிடைக்க பிரார்த்திப்போம்.

இவன்

அடியேன்

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 

(படித்ததில் பிடித்ததை இங்கு பதிவு செய்யபட்டுள்ளது.)

 

முருகப்பெருமான் அகத்தியருக்கு அருளிய தமிழை போல்

அனைவருக்கும் வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் சாந்திதேவி ராஜேஷ்குமார் தஞ்சாவூர்.

ஒரு முருக பக்தரை பற்றி அறிந்து கொள்ளபோகிறோம்.

16 வருடங்களாக மாலை அணிந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கும் பழனிமலைக்கு சென்று வருகிறார்.முருகப்பெருமான் அகத்தியருக்கு அருளிய தமிழை போல்

ஸ்ரீபாலதண்டாயுதபாணி அருள் பெற்று

அவர் உருவாக்கிய ஜோதிட முறையான அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில் முதன்முதலில் புத்தகம் எழுதிய காலத்திலிருந்து கூட இருந்த நபராக நான் உணர்ந்த அறிந்த ஆச்சரியப்பட்ட சில விஷயங்களை இந்த கட்டுரை வாயிலா சமர்ப்பிக்கின்றேன்.

 

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தென்னடார் நடுக்காட்டில் ப. சிங்காரவேலன் சி. பத்மாவதி அவர்களுக்கு மகனாக  பிறந்தார். ஆசிரியர் பயிற்சி கல்வியும், இளங்கலை பட்டப் படிப்பும், முதுகலை தமிழ் பட்டமும் பெற்றார். ஓலைச்சுவடி தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்து உள்ளார். ஓலைச்சுவடியில் ஜோதிடம் சார்ந்த

பதிப்புகள் செய்துள்ளார்.

ஜோதிடத் துறையில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே அவருக்கு ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது. அவர் குடும்பத்தில் அவர் ஆசிரியராக வரவேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. அதற்கான படிப்பும் பயிற்சியும் பெற்றுள்ளார். ஆனால் அவரை ஏதோ ஒரு விஷயம் இந்த ஜோதிடத் துறைக்குள் இழுத்துக் கொண்டே இருந்தது. அதில் நிறைய தேடுதல்களும் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ளக்கூடிய தூண்டுதல்களும் அவருக்கு நிறையவே இருந்தது. அதன் காரணமாக நிறைய ஜோதிடம் சார்ந்த விஷயங்களை அவர் ஆழ்ந்து உற்று நோக்கிக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த ஆழ்ந்த உற்றுநோக்கின் காரணமாக ஜோதிடத்தில் ஏன் வெவ்வேறான பலன்கள் வருகிறது ஜோதிடம் என்பது ஒரு கணித முறை. கணிதத்தை எந்த முறையில் போட்டாலும் ஒரே விடைதானே வரவேண்டும். இதில் மட்டும் ஏன் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி வெவ்வேறான பலன்கள் சொல்கிறார்கள் என்ற கேள்வி அவருள் எழுந்து கொண்டே இருந்தது

 

அதே போல் ஒரு அம்மாவுடைய கண்ணீர் துளிதான் அவருக்கு இந்த ஜோதிட துறையில் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உண்டாக்கியே தீரவேண்டும் என்கிற ஒரு எண்ணத்தை அவருக்குள் விதைத்தது என்று சொல்லலாம், என்ன காரணம் என்றால் அந்த அம்மா உடைய பொண்ணுக்கு ரொம்ப நாளாகியும் திருமணம் நடக்கவில்லை. எல்லாருமே செவ்வாய் தோஷம் என்று சொல்லி ஜாதகம் பொருத்தம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதனால் பொண்ணுக்கு வரன் அமையவில்லை அப்படின்னு அவங்க அழுத்தினால் அந்த கண்ணீர் வந்து அவருக்குள் ஒரு தீராத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனுடைய விளைவாக ஜோதிடத்தில் எப்படி ஒரு கிரகம் மட்டும் திருமண வாழ்க்கையை முடிவு செய்யும். அப்போ மற்ற கிரகங்கள் எல்லாம் வேலை செய்வது இல்லையா? என்பது போன்ற ஒரு தேடுதல் அவருக்குள்ளே தோன்ற ஆரம்பித்தது. அதை நோக்கி பயணம் செய்தார் அவருக்குள் நிறைய விஷயங்கள் புலப்பட ஆரம்பித்தது.

 

அவர் ஒரு தீவிரமான முருக பக்தர் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் முருகன் மேல் மிகுந்த பற்றுதல் உள்ள ஒரு குடும்பம். எப்படி முருகப்பெருமான் வந்து அகத்திய மாமுனிவருக்கு ஆசி கொடுத்து இந்த தமிழ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை இந்த உலகுக்கு அகத்தியர் கொடுத்தாரோ அதே மாதிரி அந்த முருகனுடைய அருளாலும் கருணையினாலும் அந்த முருகன் அவருக்கு அருளிய மிகப்பெரிய நன்கொடை அப்படின்னு தான் சொல்லணும்.

இந்த ஒரு ஜோதிட முறை அவருக்குள்ள ஏற்பட்டதற்கு காரணம் அவருடைய முருக பக்தியும் இந்த ஜோதிட உலகிற்கு ஏதாவது ஒரு விஷயத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் தான் காரணம். முருகன் மட்டுமல்ல அவர் தீவிரமான ஆஞ்சநேயர் பக்தரும் கூட, நிறைய தேடுதல்களால் நிறைய இடங்களுக்கு போயிருக்காரு இமயமலை பயணங்கள் அடிக்கடி மேற்கொள்வார். அப்படி ஒரு முறை இமயமலை போயிருந்த போது தான் அவர் நீம் கரோலி பாபாஜி ஆசிரமத்துக்கு சென்றுள்ளார். அங்கு அந்த பாபாஜியிடம் கேட்கிறார் யார் யாருக்கோ என்னன்மோ கொடுக்குறீங்க எனக்கு ஏதாது குடுங்க ஜோதிடத்தில்

ஒரே பலன்கள் மாதிரியான எல்லோராலும் சொல்ல முடிவதில்லை மக்களுக்கு, வெவ்வேறான பலன்கள் சொல்றாங்க, அப்போ ஒரே பலனை சொல்லக்கூடிய ஒரு ஜோதிட முறை என்ன அட்டிங்கிற மாதிரி சிந்தனை செய்து கொண்டே அவர் பார்த்த விஷயங்கள் எல்லாமே ஒரு வளரும் தோற்றத்தை தான் அவருக்கு உணர்த்தியிருக்கு

ஒரு ஆலமரத்தடியில் கண்ண மூடி தியானத்தில் இருக்காரு.

அப்போ அவருக்கு வந்த ஒரு உள்ளுணர்வு அவர் கண்ணு முன்னாடி அந்த ஆலமரத்தின் விழுதுகள் வளர்ந்த நிலையில் அவருக்கு காட்சி கொடுக்கிறது. அந்த காட்சியில் அந்த விழுதுகள் வளரும் பொழுது,

ஏன் லக்னம் வளர கூடாது அப்படின்னு யோசிச்சு அதுக்கு அப்புறம் அதுக்காக நிறைய கணிதங்களையும் நிறைய ஆய்வுகளையும் பல வருடங்களாக மேற்கொண்டு இந்த அட்சய லக்ன பத்ததி என்ற அற்புதமான ஜோதிட முறையை நமக்கு கொடுத்திருக்கார் . வளரும் லக்கன பாவக முறை லக்கனத்தை நகர்த்தி பலன் எடுக்கக் கூடிய ஒரு ஜோதிட முறையை ரொம்ப எளிமையாக எல்லாரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் கொடுத்திருக்கார்.

இது எத்தனை பேருக்கு புரியுதுனு தெரியல ஆனா இன்றைக்கு நிறைய பேரு புரிஞ்சுக்கிட்டு பார்க்கக்கூடிய ஒரு எளிமையான ஜோதிட முறையாக இன்னைக்கு நம்ம கையில அட்சய லக்ன பத்ததி என்கிற ஒரு ஜோதிட முறையையும், அதற்கான மென்பொருளும் இருக்கு. அப்படிங்கற போது இந்த காலத்தில் அவர் கூட நம்ம பயணிக்கிறோம், அவர் கூட நாம் இருக்கிறோம் என்பதே ஒரு பெரிய மகிழ்ச்சியான பாக்கியமான விஷயமாக உணர முடிகிறது.

 

வருங்காலத்தில் ஜோதிடத்தின் அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பொக்கிஷமாக பலன் சொல்வதற்கு எளிமையான ஒரு துல்லிதமான ஒரு ஜோதிட முறையாக இந்த அட்சய லக்ன பத்ததி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

 

இதை பற்றி நிறைய விஷயங்கள் பேசும்போது நான் சார் கிட்ட கேட்டு இருக்கேன். ஏன் சார் இந்த ஜோதிட முறைக்கு உங்க பெயர் வைக்கல ? அவங்கவங்க கண்டுபிடித்த ஜோதிட முறைக்கு அவங்கங்க பேரு வச்சிக்கிறாங்களே . உங்களுடைய இந்த அரிய உழைப்புக்காக நீங்க கண்டுபிடிச்ச இந்த ஜோதிட முறைக்கு ஏன் உங்க பேரு வைக்கலன்னு

அப்ப, அவங்க சொல்வாங்க இது தனிப்பட்ட என்னுடைய கண்டுபிடிப்பு அப்படினு நான் சொல்ல விரும்பல, இது இறைவன் எனக்கு அளித்த ஒரு கொடை. இதை மத்தவங்களும் பயன்படுத்தனும் என்பதற்காக கொடுக்கிறேன். இதில் என் தனிப்பட்ட பெயரை கொண்டு வரணும்னு நான் விரும்பல. அப்படினு சொன்னாங்க. அதனாலதான் இது வளர்தல் என்று ஒரு பொருள் படனும் அப்படிங்கிறதுக்காக அந்த வளரும் பெயருடைய தன்மையான அட்சய என்பதை பெயராக வச்சாங்க.

ஏன்னா என்னைக்குமே காலங்காலமாக அட்சய பாத்திரம் போல் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கக்கூடிய ஜோதிட முறையாக இருக்கும். ஒவ்வொரு லக்னமும் மாறிக்கொண்டே இருக்கும். எப்படி ஆளுடைய தோற்றம் வளர்கிறதோ அதே போல் அந்த லக்ன புள்ளியும் வளர்ந்து கொண்டே இருக்கும் அப்படிங்கிற பொருள் படும் விதமாக அட்சய லக்ன பத்ததி அப்படினு அதுக்கு பேரு வச்சிருக்காங்க.

 

வருங்கால ஜோதிட தலைமுறைக்கு இது ஒரு மைல்கல்லாக இருக்கும்.

 

ஏன் சார் லக்கனத்தை மட்டும் வைத்து பலன் பார்காம இப்படி லக்னம் மாறும் என்ற ஒரு விஷயத்தை கண்டு பிடிக்கணும்னு உங்களுக்கு தோணுச்சுனு நான் கேட்டேன். அப்போ வந்து பிறப்புடைய ரகசியத்தை தெரிந்து கொள்வதுதான் அந்த லக்ன புள்ளி. இந்த ஜென்மத்தில் நாம் என்னவாக இருக்கப் போகிறோம், என்ன அனுபவிக்கப் போகிறோம் அதை தெரிஞ்சுக்க கூடிய ஒரு ஆரம்பப் புள்ளி தான் நம்முடைய ஜென்ம லக்னம் பிறப்பின் லக்னம் என்பது. ஆனால் அதை எந்த வழியில் நாம் அனுபவிக்கப் போகிறோம். இப்போ ஒரு ஊருக்கு போகணும்னா எந்த பஸ்ல போகனும் எத்தனை மணிக்கு அந்த பஸ் வரும், அந்த பஸ் எந்த வழில போகும் அப்படிங்கிறதை தெரிஞ்சிக்கிற மாதிரிதான் இப்போ இந்த transit லக்கனமும். இப்ப நம்ம எந்தப் பாதையில் நாம் போகனும், எந்த பாதை வழியாக சென்று அனுபவிக்கப் போகிறோம், அந்த பாதைகள் எப்படி இருக்கும், கரடுமுரடாக இருக்குமா, இல்ல சீராக இருக்குமா, இல்ல நல்ல பைபாஸ் மாதிரி நல்லா இருக்குமா, என்பதை தெரிஞ்சிக்கூடிய ஒரு தன்மைதான் இந்த அட்சய லக்ன புள்ளின்னு அவங்க சொல்லும்போது

 

எப்படி யாருக்குமே தோன்றாத விஷயங்கள் இவருக்குள் தோணுச்சு? எப்படி இத அவங்க கொண்டு வந்தாங்க அப்படின்னு ஒரு தடவை இல்ல இரண்டு தடவை இல்ல ஒரு நூறு தடவை அவருடைய இந்த ஜோதிட ஞானங்களை பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன்.

 

ஒரு நேரத்தில் கஷ்டப்படுறவங்க ஒரு நேரத்தில் நல்லா இருப்பாங்க அது ஏன்? எப்போதுமே கஷ்டப்பட்ட ஜாதகரும் கிடையாது, அதே போல் எப்போதுமே நல்ல வாழ்ந்த ஜாதகமும் கிடையாது.

 

ஏதாவது ஒரு கால கட்டங்களில் அவங்க பிரச்சினைகளையும் கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள். இந்த மாதிரி இதுக்கெல்லாம் காரண காரியங்கள் என்ன அப்படிங்கற

தேடுதல்களை மேற்கொண்டு அந்த தேடுதலின் விடை தான் நமக்கெல்லாம் இன்றைக்கு ஒரு அரிய பொக்கிஷமாக இருக்கக்கூடிய இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை என்று

சொல்லலாம்.

அதேபோல் 6 வருட கடுமையான உழைப்பில் தான் மென்பொருள் தயாரிச்சிருக்காங்க. ஏன்னா? இந்த கணிதம் என்பது எல்லோருக்கும் எளிமையாக இருக்கணும், எல்லாரும் புரிஞ்சுக்கூடிய அமைப்பில் இருக்கணும் என்பதற்காகவே அவங்க வந்து இந்த அட்சய லக்ன பத்ததி மென்பொருளை உருவாக்கி அதற்காக நிறைய நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து யார் பலன் சொன்னாலும் ஒரே பலன்தான் வரணும் அப்படிங்கிறத்துக்காக எளிமையாக அதனுடைய கால அளவுகளை ஒரு 360° டிகிரி கொண்ட ஒரு ராசி மண்டலத்தில் 120 வருட விம்சோத்தரி தசா வருடங்களை இணைத்து 10 வருடத்திற்கு ஒரு லக்னம் மாறும் 1 வருடம், 1 மாதம் , 10 நாள் ஒரு நட்சத்திர பாதத்தில் travel பண்ணும் அது எந்த தேதியில் இருந்து எந்த தேதிவரை செயல்படும் என்ற கணித முறையை மென்பொருளில் கொடுத்துள்ளார்.

 

இன்றைக்கு நிறைய மாணவர்கள் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். கிட்டதட்ட ஒரு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை கற்றுக்கொண்டு இருக்காங்க.

அதேபோல் 200 மாணவர்கள் வந்து இதில் பலன் சொல்லும் அளவுக்கு ரெடியாகி அவங்க வந்து பலன் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு ஒரு எளிமையான ஒரு ஜோதிட முறையாக இந்த அட்சய லக்ன பத்ததி இருக்கு.

 

அவங்களுடைய

அந்தப் போராட்டங்கள், அவங்க வாழ்க்கையில் அவங்க அனுபவித்த கஷ்டங்கள், அதுக்காக அவங்க தியாகம் செய்த காலங்கள், இது எல்லாமே நாம கூடவே இருந்து பயணித்ததனால் எங்களால் நிறைய விஷயங்களை புரிஞ்சிக்க முடிஞ்சது, உரை முடிந்தது.

 

சார்பலன் சொல்லும் போது ஆச்சரியமான நிறைய விஷயங்கள் சொல்லி இருக்காங்க. அது வந்து கணிதத்திற்கும் அப்பாற்பட்டு அவங்க சொன்ன விஷயங்கள் அப்படிங்கறது எங்களால் நிறைய நேரத்துல புரிஞ்சுக்க முடிஞ்சது.

ஏன்னா?

ஒரு விஷயத்தை ஜாதகத்தை கணித்து பாத்து சொல்லனும் என்பதை விட அவங்க வந்தவுடனேயே அவங்களுக்கு இப்படித்தான் நடக்கும் என்பதை எண்ணங்கள் மூலமாக வெளிப்படுத்தும் போது அது ரொம்ப ஆச்சர்ய படக்கூடிய ஒரு விஷயமாகவே இருந்தது.

ஒரு நாள் ஒரு ஜாதகர் வரும்போது அவர் வந்து இந்த இடத்துக்கு போகலாமா வேண்டாமான்னு அவர் நினைத்து 3 தடவை சட்டையை கழட்டி மாட்டி இருக்காரு. அந்த விஷயத்தை அவர் வந்து உட்கார்ந்த Second la சொன்னாரு, ஏய்யா வந்திங்க, உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் தானே 3 மூணு தடவை சட்டையை கழட்டி மாத்தினிங்க, இப்ப ஏன் வந்தீங்கனு கேட்கும் போது எங்களுக்கெல்லாம் அவ்வுளவு ஆச்சரியம். எப்படி இத கேட்க முடிந்தது.

 

இந்த மாதிரி ஒரு நிகழ்வு கிடையாது பல ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நம்மலால் சொல்ல முடியும், அத சொல்றதுக்கு இந்த ஒரு கட்டுரை எனக்குப் போதாது அப்படின்னு தான் சொல்லணும். ஏன்னா அந்தளவுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு.

 

அதே மாதிரி அவங்க இந்த ஆய்வில் 18 புத்தகம் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை பற்றி அவங்க எழுதறாங்க. இந்த பதினெட்டு புத்தகத்துல என்ன எழுதனும் என்னென்ன விஷயங்களை மக்களுக்கு கொடுக்கணும் முடிவு பண்ணின அப்புறம் தான் இந்த மாதிரி ஒரு ஜோதிட முறையே இருக்கு அப்படிங்கறத அவங்க வெளியிட்டாங்க.

 

இந்த ஜோதிட முறையை அவங்க Copyright பண்ணி இருக்காங்க. ஏன் சார் இதற்கு உங்க பேரு வைக்கல, ஆனா Copyright மட்டும் பண்றீங்களே எதனால அப்படினு சொல்லி நான்

கேட்ட போ என்ன சொன்னாங்க தெரியுமா அப்பாவது இந்த ஜோதிட முறையை Copyright பண்ற அளவுக்கு இதுல என்ன இருக்கு அப்படின்னு யாராவது வந்து பார்ப்பாங்க அப்படிங்கறதுக்காக தான் இந்த Copyright பண்ணதா கூட சொன்னாங்க. அந்த மாதிரி அவருடைய அந்த உழைப்பு இந்த ஜோதிடமுறை காக அவர் அற்பணிச்சது என்பது நிறைய இருக்கு.

 

 

அட்சயலக்ன பத்ததியில் கிரகங்கள், நட்சத்திரங்கள் ஒவ்வொரு வயதுக்குத் தகுந்த மாதிரிதான் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று முதன்முதலில் சொன்னது இவர்தான். அதே போல் லக்னம் நகரும் என்று சொன்னது இவர் தான். அதுவும் 12 கட்டங்களுக்கு பத்து பத்து வருடம் 12 கட்டத்திற்கு 120 வருடம் நகரும்னு ரொம்ப எளிமையாக சொல்லி எல்லாருக்கும் புரிய வைத்திருக்கிறார். அதுக்கு ஒரு தனி மென்பொருளே கண்டுபிடித்து இருக்கிறார். இந்த சாப்ட்வேர் உருவாக்கறத்துக்கு மட்டும் அவருக்கு 6 வருடம் உழைத்திருக்கிறார். அதில் உள்ள கணக்கு முறைகளை நாம கையாள கணக்கு போட்டம்னா ஒரு நாளைக்கு ஒரு ஜாதகம் கூட முழுமையாக நம்மால் பார்க்க முடியாது. ஏன்னா? அந்த அளவுக்கு ஒரு கடுமையான கணக்கு முறைகளை ரொம்ப எளிமையாக்கி அந்த மென்பொருள்ல கொடுத்து இருக்கதனால இன்றைக்கு நிறைய பேர் அதை பயன்படுத்த முடியுது.

 

அதே போல அந்த மென்பொருளிலும் முன்ஜென்மத்தை பற்றியும் தனியாக ஆய்வு பண்ணிருக்காங்க. மறுஜென்மத்தை பற்றியும் ஆய்வு செஞ்சு இருக்காங்க. ஆனால் மறு ஜென்மம் என்பது புரிபட்டால் யாரும் இந்த ஜென்மத்தில் வாழ முடியாது அப்படிங்கறதுக்காக அதை பற்றி வெளில அவங்க யாருக்கும் சொல்லல அதேபோல் முன் ஜென்ம ஜாதகத்தையும் இப்ப உள்ள ஜாதகத்தையும் ஒப்பீடு பன்றாங்க. ஒப்பீடு பண்ணி அந்த காரணகாரியங்கள் எதனால் இந்த ஜென்மத்துல நல்லாஇருக்காங்க, எதனால் கஷ்டபடுறாங்க அப்படிங்கறதையும் அவங்க தெரிந்து அதையும் அவரால் சொல்ல முடியும். கடந்த காலத்தில் எந்த வருடம் பிறந்திருக்காங்க என்பதை கூட ஒரு அனுமானமாக சொல்லும் அளவிற்கு மென்பொருளை உருவாக்கி இருக்காங்க.அந்த ஜாதகத்தையும் தற்போதைய நிகழ்வுகளையும் ஒப்பிடு செய்கிறாங்க. அது தான் அவருடைய ஆய்வுகள். எல்லாமே ஒரு சாதாரண மனிதருடைய ஆய்வுகள் அல்ல. அதை யாராலும் தற்போது புரிந்துகொள்ளமுடியாது. போக போக புரிந்து கொள்வார்கள்

 

எல்லாருக்கும் ஜாதகம் பார்ப்பது கிடையாது அவங்க சில பேருக்க தான் பாக்குறாங்க.

 

வேறு ஒருவர் புத்திக்கு இந்த ஜோதிட முறை எட்டி இருந்தால் இப்போது பல கோடி பில்லியன்களை குவிச்சிருப்பாங்க. ஆனால் இவர் அப்படி நினைக்கல. தேவைகளுக்கு மட்டுமே பணம் பெறுகிறார். இருந்தால் கொடு, இல்லைனா விடு அப்படி சொல்லிடுறாங்க.

 

மெடிக்கல் அஸ்ட்ராலஜிக்குனு தனிய ஆய்வு செய்திருக்கிறார்.

ஒவ்வொரு 10 நிமிடத்திற்க்கும் கிரகங்கள் அமைப்பு எப்படி இருக்கும், அன்றாட நிகழ்வுகளில் கூட ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும், என்பதை ஜோதிடம் தெரியாத ஒரு நபர் கூட அறிந்து கொள்ளக்கூடிய வகையில் அந்த மென்பொருளை வடிவமைத்திருக்கிறார். அதில் எல்லாமே குறியீடு மூலமாகவும், எண்கள் மூலமாகவும், சதவிகித மூலமாகவும் குறிச்சிருக்காங்க.

 

எண் கணிதத்தை ALP லக்னத்தோடு பொருத்தி 10 வருட கிரகங்கள் நன்றாக இருந்தால் அவர் அந்த கிரகங்களுக்குரிய எண்களையோ, பெயர்களையோ மாற்றி அமைத்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதையும் மென்பொருளில் வடிவமைத்துள்ளார்.

 

திருமணப் பொருத்தம் பார்த்து செய்யும் திருமணங்கள் பல விவாகரத்தில் முடிவதின் காரணகாரியங்களை ஆராய்ந்து அதை தவிர்க்கும் வகையில் அட்சய லக்ன பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதற்கான மென்பொருளையும் உருவாக்கியுள்ளர்.

 

18 புத்தகங்களில் 4 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 5, 6 ம் அச்சுப் பதிப்பில் இருக்கு. அடுத்தடுத்த பதிப்புகளும் வரவிருக்கிறது.

 

2017ல் இந்த ஜோதிட

முறைக்காண புத்தகத்தை Copyright செஞ்சிருக்காங்க. இந்திய அரசால் அந்த Copyright அவருக்கு வழங்கப்பட்டிருக்கு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் வெளிநாடுகளில் இருந்தும் நிறைய பேர் படிக்கிறாங்க இவர்கிட்ட. பொது நிகழ்சிகளில் நிறைய உலகியல் ஜோதிடத்தை ஆய்வு செஞ்சு செல்லி இருக்காங்க. அதிலும் குறிப்பாக இந்த 2021 மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் கணிப்பில் 29ம் தேதி ஏப்ரல் மாதமே மாலை முரசு பத்திரிகையில் தி.மு.க பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும், ஜெயிக்கும் என்று சொல்லி இருக்கார். இதுபோல நிறைய விஷயங்களை இவரால் கணிக்க முடியும். அமானுஷ்ய விஷயங்களாக இருக்கட்டும் முன்ஜென்ம விஷயங்களைப் பற்றியும் நிறைய இவரால் பார்க்க முடியும். கடந்தகால ஜாதகத்தையும் பதிவு செய்திருக்கிறார். இந்த வினைப்பயன் யாருடையது அப்பா வழியில் வந்ததா , அம்மா வந்ததா , ஜாதகரின் சுய கர்ம வினைப் பயனால் வந்ததா, என்பதையும் ஆய்வு செஞ்சு ரொம்ப எளிமையாக அதை எல்லோருக்கும் புரிகிற மாரி சொல்லிருக்காங்க. புத்தகங்களையும் அது சம்பந்தமான விளக்கங்களையும் கொடுத்திருக்காங்க. அதே போல் ஒரு சில ஜாதகங்களை மட்டும் தான் நம்மளால் இயக்க முடியும் இயக்க வைக்க முடியும். பரிகாரம் என்பது எல்லோ ஜாதகங்களுக்கும் பொருந்தாது. சில ஜாதகங்கள் மட்டுமே பரிகாரம் செய்து இயங்கவைக்க முடியும் | சில ஜாதகங்கள் எவ்ளோ பரிகாரம் செய்தாலும் அதை இயக்கவைக்க முடியாது, அந்த வினைப்பயனை அவங்க அனுபவித்து மட்டுமே தீர்க்கணும் அப்படின்னு அவங்க ரொம்ப துல்லிதமாக சொல்லி இருக்காங்க. இது எல்லாமே அவங்க சொல்லும்போதும் அவங்க எழுதும் போது அது எல்லாமே நமக்கு ரொம்ப ஆச்சரியமான ஒரு நிகழ்வுகளாக தான் இருக்கும்.

 

அதே மாதிரி நிறைய அமானுஷ்யமான நிகழ்வுகளை கூட இருந்து பார்த்ததினால் இதெல்லாம் எங்களால் உணர முடிஞ்சுது ஒருநாள் கோவில ஒரு அம்மா வருதத்தோட உட்கார்ந்திருந்தாங்க. அம்மா உன் பேரனுக்கு நல்ல மார்க்கு கிடைக்கும். மெடிக்கல் சீட்டு கிடைக்க போகுது ஏன் கவலைபடுறிங்க, இந்த கல்லை கொண்டுபோய் வீட்டில் வைத்து சாமி கும்பிடுங்கன்னு சொல்லி, பக்கத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து அவங்க கையில் கொடுத்தார்.

 

அந்த அம்மாவுக்கு ஒன்னுமே புரியல என் பேரன் மெடிக்கல் காலேஜுக்காக பரிட்சை எழுதிருக்கான். அத நெனச்சு தான் நான் கவலையோட உட்கார்ந்திருந்தேன். நீங்க எப்படி ஐயா இதை கரெக்டா சொன்னீங்கனு சொல்லி அவங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

 

அந்த மாதிரி போறபோக்கில் நிறைய பேருக்கு ஒரு வாக்காக அவங்க கொடுத்திருக்காங்க. அதனால தானோ என்னமோ அவங்களுக்கு வாக்கு யோகி என்ற பெயரும் அவங்களுக்கு இருக்கு. இன்னும் சொல்லபோனால் ஒவ்வொரு விஷயங்களையும் ஆழ்ந்து , உற்று நோக்கி , ஒரு ஜோதிடராக இருக்கக்கூடியவருக்கு 360°ளையும் கண்கள் இருக்கனும்னு பல தடவை அவங்க சொல்லுவாங்க. தன்னிடம் படிக்கும் மாணவர்கள் ஒரு சின்ன தவறு கூட செஞ்சிரக்கூடாது ,

ஏன்னா? எல்லாரும் ஒரே விதமான பலன்களை சொல்லணும். அது தான் அவருடைய ஆசை. ஜோதிடம் அப்படிங்கறதுனா அது ஒரு கணக்கு தான்.அந்த கணக்கு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கணும். அது வசதியானவங்களுக்கு ஒரு கணக்கு, ஏழைகளுக்கு ஒரு கணக்கு அப்படிங்கற மாதிரி எல்லாம் கிடையாது. அதே மாதிரி வெவ்வேறான பலன்களையும் தராது. இந்த கிரகங்கள் இந்த நட்சத்திரத்தில் பயணம் செய்யும் பொழுது அது இந்த விதமான விளைவுகளை மட்டும் தான் கொடுக்கும். இந்த ஆதிபத்தியங்களின்

பலன்களை தான் கொடுக்கும் அப்படிங்கறதா ரொம்ப எளிமையாக சொல்லிகொடுக்கிறார்.

 

இது எல்லாமே ஒரு சாதாரண மனிதரால் இதெல்லாம் கண்டிப்பா சாத்தியமே கிடையாது. ஒரு இறைநிலை, அல்லது இறை சக்தி அதிகம் பெற்ற ஒரு மகானால் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியமாகும். ஏன்னா? அந்த அளவுக்கு அவருக்கு பக்தியும் அதிகமாகவே இருந்தது. வருஷம் தவறாமல் கிட்டதட்ட 16 வருடமாக மாலை போட்டு பிள்ளையார்பட்டிக்கும் பழநிமலை முருகன் கோவிலுக்கும் போய்ட்டு வருவார். அதேமாதிரி இமயமலைக்கும் அடிக்கடி போயிட்டு வருவார். இது ஏதோ ஒரு இறை சக்தி அல்லது ஏதோ ஒரு சித்த ஆத்மாக்கள் தான் இவருக்குள்ள இருந்து இந்த மாதிரி ஒரு ஜோதிட முறையை மக்களுக்கு வெளிக்கொண்டுவந்து அதனால் மக்கள் பயன்பெறணும், ஒரே விதமான பலன்கள் எல்லாருக்கும் கிடைக்கனும். ஒரே விதமான ஜோதிடம். ஜோதிடம்னா? இந்த ஜோதிடத்தில் யார் பலன் சொன்னாலும் ஒரே மாதிரி பலன் தான் வரணும் அப்படிங்கிறத எல்லாருக்கும் புரிய வைக்க இவர் மூலமாக ஜோதிட உலகிற்கு வழங்கிக்கொண்டிருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன்.

இந்த மாதிரி நிகழ்காலத்தில் வாழக்கூடிய ஒரு மனிதர் இருக்கக்கூடிய ஒரு காலத்திலேயே நாமும் வாழறோம் அவர் பக்கத்துல இருக்கிறோம், என்பதை ஒரு பெருமைக்குரிய விஷயம்னு தான் சொல்லணும்.

 

நிறைய விஷயங்கள் இருக்கு இதுல, நிறைய கணித முறைகள் இருக்கு, ஒவ்வொரு விஷயத்தையும் அவங்க ரொம்ப ரொம்ப பார்த்து பார்த்துதான் பண்ணிட்டு இருக்காங்க, அதுல பங்குச் சந்தைக்கான ஆய்வுகளும் நிறையவே பண்ணி இருக்காங்க, ஆனா அதை யாருக்கும் இப்ப சொல்லிக்கொடுக்கல, எத்தனையோ பேரு ரொம்ப request பண்ணி கேட்டும் அவங்க யாருக்கும் சொல்லிக் கொடுக்க விருப்பபடல. ஏன்னா? அந்த ஆய்வு முழுமையடையல அதனால் இப்ப அதை சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டாங்க. அந்த மாதிரி அவருடைய சிறப்புகள் வந்து ரகசியமாகவும் ,அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். இருக்கு, அப்படிங்கறத தான் நாம புரிஞ்சுக்கனும்.

 

அவருடைய ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் , எல்லாமே ஒரு வீட்டுக்கு ஒரு ஜோதிடராவது இருக்கணும்னு அப்படிங்கறது தான்.ஏன்னா? நாம எதுக்காக இந்த பூமியில் பிறப்பெடுதிருக்கோம், என்ன காரணத்துக்காக படைக்கப்பட்டிருக்கோம், எந்த நோக்கத்துக்காக நம்ம போராட போறோம், எந்த வழியில் பயணம் செய்யப் போறோம் அப்படிங்கறத ஒரு குடும்பத்துல ஒருத்தர் உணர்ந்துட்டாலே அந்த குடும்பத்தையே வழிநடத்திச் செல்வாங்க என்பதில் அவருக்கு அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை இருக்கு. அதனால் எல்லாருமே வீட்டுக்கு ஒருவராவது ஜோதிடராகனும் என்பது தான் அவருடைய லட்சியம்.

அதற்காக அவங்க நிறைய வகுப்புகள் எடுத்துட்டு இருக்காங்க. நிறைய அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் வெளிக்கொண்டு வந்து எல்லாருக்கும் புரியும் படியாக ரொம்ப எளிய முறையில் அவங்க சொல்லிக் கொடுத்திருக்காங்க. ஆனால் இது எத்தனை பேரை சென்றடைய போகுதுனு தெரியல ஆனால் இதை யாரெல்லாம் கற்றுக் கொண்டார்களோ, யாரெல்லாம் இந்த முறையில் பலன் பாக்குறாங்களோ, அவங்க எல்லாருமே பாக்கியம் செய்தவர்கள்.

 

நிறைய பேருக்கு அவங்க வந்து பலன் சொல்லும்போது ரொம்ப ஆச்சரியமா இருக்கும். அதுக்கு எல்லாமே கணக்கு முறைகள் இருக்கு அப்படின்னு தான் சொல்லுவாங்க ஆனால் கணக்கு முறைகள் மட்டும் காரணமல்ல எல்லாமே கணக்கு முறைகள் தான், ஆனால அந்த கணக்குமுறைகள் அவங்களுக்கு தேவையான விஷயத்தில் அது வெளிப்படுத்துகிறதா அப்படிங்கறது தான் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். ஒருத்தங்க என்ன தேவைக்காக வருவாங்க, என்ன நோக்கத்துக்காக வருவாங்க, அவங்க என்ன கேள்வி எல்லாம் கேப்பாங்க, அப்படிங்கறத இந்த வளரும் அட்சய லக்ன பத்ததி முறையில் ரொம்ப எளிமையாக சொல்ல முடியும்னு நிருபிச்சிருக்காங்க.

 

உதாரணமாக ஒரு பிறப்பு லக்னத்தில் இருந்து ஒரு மூன்றாவது லக்கனத்தில் ஒரு ஜாதகர் வராரு, ஒரு 20 to 30 வயசுக்குள்ள ஒருத்தர் ஜாதகம் பார்க்க வராருனா, அவருடைய முயற்சி பற்றிய கேள்விகள் தான் அதிகமாக இருக்கும். திருமணம் சார்ந்த விஷயங்கள் இருக்கும், குழந்தை பிறப்பு சார்ந்த விஷயங்கள் அதிகமாய் இருக்கும், அப்படிங்கறதா அவங்க பதிவு செய்றாங்க. அதைப் போல ஜென்ம லக்கினத்திற்கு ஐந்தாவது லக்னமாக அட்சய லக்னம் வரும்போது ஜாதகரை பற்றிய கேள்விகள் அதிகமாக இருக்கும். குழந்தைகள் பற்றிய கேள்விகள் அதிகமாக இருக்கும், அப்படிங்கறத பதிவு செய்றாங்க. அதேபோல் 6ம் இடம் அட்சய லக்கனமாக செல்லும்போது ஒருத்தர் வராருனா அவங்களுக்கு ருண, ரோக, சத்ரு உபாதைகளை அனுபவிக்கக் கூடிய ஒரு காலமாக தான் இருக்கும். அப்படிங்கறத பதிவு செய்றாங்க.

 

ஒருவர் பிறக்கும்போது அவருடைய வினைப்பயன் எத்தனை சதவீதம் இருந்தது அவருடைய தற்போதைய வினைப்பயன் எத்தனை சதவீதம் உள்ளது, அவருடைய சாதகமான ஒரு சூழ்நிலை அமைப்புகள் எப்படி இருக்கு, அந்த பாதகமான ஒரு சூழ்நிலைகளை தடுப்பதற்கான வழிமுறைகள் இருக்கா? அது எத்தனை சதவீதம் உள்ளது அப்படிங்கறதை எல்லாமே இதில் வந்து ரொம்ப ஈசியா நம்மளால் அறிஞ்சு பலன் சொல்ல முடியும்.

 

இப்படி ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒரு ஜாதகர் வயதுக்கு ஏற்ப தான் பலா பலன்களை அடைவார் அப்படிங்கறததையும் அதுவும் தசாபுக்திகளை வைத்துப் பார்க்கும்போதும் அந்த வயதுக்குரிய தசை தான் அவங்களுக்கு பலன்களைத் தரும்.

 

20 வயசில ஒருத்தருக்கு சுக்கிர தசை நடக்குது, 60 வயசுல ஒருவருக்கு சுக்கிர தசை நந்தால் 20 வயசில் நடக்கக்கூடிய அந்தச் சுக்கிர தசை அவருக்கு சுகபோகங்களையும், பெண்களால் ஆதாயத்தையும், திருமண உறவுகளால் பாக்கியத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்,

 

ஆனால் அதுவே 60 வயதில் அந்த சுக்கிர திசைனா அவருக்கு அந்த மாதிரி ஆதாயங்களை தராது இல்லையா, அது மாதிரி ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு வயதிற்கும் தகுந்த பலன் தான் இன்றைக்கு நமக்கு நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் அப்படிங்கறத இந்த நவீன உலகத்திற்கு ஏற்ற மாதிரி நவீன ஜோதிட முறையாக இந்த அட்சயலக்ன பத்ததி ஜோதிட முறையை நமக்கெல்லாம் தந்துருக்காருனா அது ரொம்ப பெருமைப்படக்கூடிய விஷயம்.

 

இந்த நேரத்தில் நான் ஒரு விஷயத்தை சொல்லணும், நம்முடைய தமிழ் புலவர் பாரதியார் அவர் எழுதின கவிதைகள் எதுவுமே அவர்கள் இருக்கும்போது பிரபலமாகல, அவரைப் பற்றி யாருக்கும் தெரியல, ஆனால் அவருக்கு அப்புறம், அவர் காலம் ஆனதுக்கு அப்புறம் தான் அவர் எழுதிய கவிதைகள் என்பது இன்றைக்கும்

“ஓடி விளையாடு பாப்பா நீ

ஓய்ந்திருக்கலாகாது ”

இந்த மாதிரியான அவருடைய பாடல் வரிகள் மக்கள் மனதில் இன்றும் நிலைத்து இருக்கு. அது பாடப்புத்தகத்திலும் இருக்கு, அவருடைய கவிதைகள் இன்றைக்கும் இன்னும் பல ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் அப்படின்னா அது வந்து அவர் இருக்கும்போது உணர்திருந்தா எவ்வுளவு சந்தோஷமா இருந்திருக்கும், அதை அவர் எவ்வளவு சந்தோஷமாக கொண்டாடி இருப்பார், இன்னும் எவ்வளவு கவிதைகளை நமக்கு கொடுத்து இருப்பார், அந்த மாதிரி ஒருத்தர் இருக்கும்போது அவருடைய திறமைகளை வந்து நம்ம அங்கீகரிக்கிறது இல்லை, அவரை Appreciate பண்றது இல்லை, அவருக்கு ஊக்கம் கொடுக்கிறது இல்லை, அந்த விஷயத்துக்கு நாம மதிப்பு கொடுக்கறதே இல்லை, என்ன பெருசா கண்டுபிடிச்சிட்டாரு, அல்லது வயது ஒரு காரணமாக அமைஞ்சிடுது, இது ஒரு கலைக்கு, ஒரு கண்டுபிடிப்புக்கு வயதுங்கறதெல்லாம் ஒரு காரணமே கிடையாதுங்க, அதேபோல் இவரின் இந்த விஷயத்தை கண்டுபிடிச்சிருக்காரு, இந்த ஜோதிட முறையில் இதுவரைக்கும் யாருமே செய்யாத ஒரு புதிய முயற்சியை செஞ்சு நமக்கு எளிமையாக பயன்படக்கூடிய ஒரு வகையில இது கொடுத்திருக்காரு, அப்படின்னா அது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம், அதுவும் ஒரு தமிழ்நாட்டில் ஒரு தமிழர் கண்டுபிடித்திருக்கிறார் அப்படிங்கிறபோது அதை அங்கீகரிக்கிறத்துக்கு நம்மளால் என்ன முடியுமோ அதை நாம கண்டிப்பா செய்யணும். அப்படி செஞ்சாதான் இந்த ஜோதிட உலகிற்கு நாம செய்யக்கூடிய ஒரு சிறு உதவியாக இருக்கும். அந்த சித்தர் பெருமக்கள் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறாங்க அப்படிங்கறது இவர் மூலியமாக அது வெளிப்பட்டு இருக்கு, அத நம்மளால் முடிஞ்ச அளவு மக்களுக்கு வெளிப்படுத்துவோம்.

 

கடவுள் நமக்கு இவர் மூலமாக ஒரு அரிய பொக்கிஷத்தை, ஒரு அரிய ஒரு விஷயத்தை நமக்கெல்லாம் கொடுத்தது ஒரு வரபிரசாதம். இதை நாம எத்தனை பேர் பயன்படுத்திக்க போறோம், எத்தனை பேரு அத உணரப்போறோம் என்பது எனக்கு தெரியல.

 

நான் உணர்ந்தேன் அப்படிங்கற முறையில் இதை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

 

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கு ஜோதிட உலகிற்க்கு அறிமுகபடுத்திய

 

திரு.பொதுவுடைமூர்த்தி சார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின்

உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்…

அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் பேட்டி எடுத்தார்…

“உங்களை

வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?” என்ற கேள்விக்கு ..

ஃபெமி கூறினார்:

“நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்.”

1.முதல் கட்டமாக செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.

2.பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கும் இரண்டாம் கட்டம் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை நான் உணர்ந்தேன், மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது.

3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவே இல்லை.

4. இறுதிக்காலத்தில் தான் யதார்த்தமாக என் நண்பன் அவனுக்கு தெரிந்த பள்ளியில் ஊனமுற்ற குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கி கொடுக்க சொன்னான், சுமார் 200 குழந்தைகள்.

என் நண்பனே கேட்டதற்காக நானும் உடனடியாக சக்கர நாற்காலிகள் வாங்கினேன்.

ஆனால் நண்பனோ நானும் அவனுடன் சென்று சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினான். சரி நானும் மனமாறுதலுக்காக அவருடன் சென்றேன்.

அங்கே நான் சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு என் சொந்த கைகளால் கொடுத்தேன். அப்போது அந்த குழந்தைகளின் முகங்களில் விசித்திரமான பிரகாசத்தை நான் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர்.

அவர்களின் ஆனந்தத்தை என்னால் விவரிக்கவே முடியவில்லை… அது

எனக்குள் ஏதோ சொல்லமுடியாத அற்புதத்தை உணர்ந்தேன். எல்லாம் முடிந்து நான் வெளியேற முடிவு செய்த போது குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை என் கால்களை மிகசெல்லமாக பிடித்து கொண்டது, நான் சிரித்து கொண்டே என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்து கொண்டே விடாமல் இறுக பிடித்து கொண்டது

நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உனக்கு வேறு ஏதாவது வேணுமா?

இந்த குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியை தந்து வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகு முறையையும் முற்றிலுமாக மாற்றியது.

அந்த குழந்தை கூறியது இது தான்:

‌”நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை சொர்க்கத்தில் சந்திக்கும் போது, உங்களுக்காக கடவுளிடம் பேசி நான் உங்களுக்கு பிடித்ததை வாங்கி தருகிறேன் என்று சொல்லி அந்த சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டது… தெய்வத்தின் அருளை நான் அன்று தான் முழுமையாக உணர்ந்தேன்….

படித்ததில் பிடித்தது