ALP ASTROLOGY 01 | முக்காலத்தையும் கணிக்கும் ஓர் ஜோதிட புரட்சி | அட்சய லக்ன பத்ததி

ALP ஜோதிடர் மேடவாக்கம் சம்பத் – 8925250925 ALP ஜோதிடர் கள்ளக்குறிச்சி திருமலை கேசவன்- 9786868144 முக்காலத்தையும் கணிக்கும் ஓர் ஜோதிட புரட்சி | அட்சய லக்ன பத்ததி | ALP ஜோதிடர்கள் மாடம்பாக்கம் சம்பத் மற்றும் கள்ளக்குறிச்சி திருமலை கேசவன் நடத்தும் அட்சய லக்ன பத்ததி பற்றின ஓர் விவாதம் | 00:05 ALP ஜோதிடர்கள் அறிமுகம் 00:28 அட்சய லக்ன பத்ததி என்றால் என்ன ? 02:07 இந்த புதிய ஜோதிடமுறையை உருவாக்கியவர் யார் ? திருமணம் எப்போது நடக்கும் என்பதை ALPயில் துல்லியமாக கணித்துச் சொல்ல முடியும் பொருத்தம் பார்த்து செய்தும் திருமணங்கள் பொய்த்துப்போவது ஏன் பிரமிப்பான கணிப்புகள் ALP’யில் பரிகாரங்கள் எப்படி மாங்கல்ய சரடு மாற்றுவதன் பின் இருக்கும் சூட்சமங்கள் குழந்தை உண்டா இல்லையா என்பதை கண்டுபிடிக்கும் வழி 16:50 5 வருடமாக குழந்தை இல்லாத தம்பதிக்கு ALP யில் கிடைத்த பதிலால் 3 மாதத்தில் கரு உருவான அதிசயம் 17:30 உழைக்க தயாராக இருந்தும் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு எந்த துறையில் வெற்றி 18:12 தொழில் சுணக்கத்திற்கு பரிகாரங்கள் 19:02 வெளிநாடு செல்லும் வாய்ப்பு 19:45 கடன் பாதிப்புகளை முன்பே கண்டுபிடிக்க முடியும் 21:06 கடன் வாங்கி நோயிலிருந்து தப்பிக்கலாம் 23:04 சொந்தவீடு அமைய என்ன செய்யவேண்டும் 27:16 ALP யை எல்லோரும் கற்றுக்கொள்ளமுடியும் 28:44 வேலைக்காக பணம் கொடுத்து ஏமாறுவாய் என முன்பே எச்சரித்த ALP 30:06 ஜாதகத்தைப் பார்த்து காதலை சொன்ன நாளை கண்டுபிடித்த அதிசயம் 31:32 ரிஷிகள் வெற்றிலையில் மை போட்டு உலகத்தை காட்சியாக பார்ப்பதுபோல் ALPயில் பார்க்கமுடியும் 32:22 பிளஸ் டூ முடித்து அடுத்து என்ன படிப்பது 34:32 பங்குச்சந்தை முதலீடு செய்யலாமா 36:00 நோய் அவஸ்தை தீர என்ன வழி 38:50 பிரம்ம முகூர்த்தத்தில் நடத்தப்படும் ALP வகுப்பு 39:50 வந்தவர் என்ன கேட்கவந்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் அதிசய ஜோதிடமுறை 41:50 பத்து வெவ்வேறு ALP ஜோதிடரும் ஒரே மாதிரிதான் பலன் சொல்லும் ஆச்சரியம் 43:00 திருமணமாக விவாகரத்துக்கு காத்திருப்போர் 44:55 சித்தர்பூமி வாசகர்களும் கமெண்டில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்

அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம்(முக பாவனை)

முக பாவனை ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியத்துவம், அதனுடைய உட்கூறுகள் என்ன, என்பதை அமெரிக்காவை சார்ந்த பால் ஹெல்ப் மேன் என்ற மன இயல் அறிஞர், உளவியல் அறிஞர் என்ன பண்றாருனா இதைப்பற்றிய உடல் கூறுகள், நம்முடைய புன்னகைக்கும், நம்முடைய உடல் அசைவுகளுக்கும், இயக்கங்களுக்கும் எவ்வளவு ஒத்துப் போகிறது. அதாவது உடல் அசைவுகளுக்கும் புன்னகைக்கும் உள்ள வேறுபாடு என்ன? எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறது? பொய்யா சிரிக்கிறார்களா, இல்லை ஆழ்மனதிலிருந்து ஆழ்ந்து சிரிக்கிறார்களா, இல்லை முகத்திற்கும் அந்த சிரிப்பிற்கும் ஒத்துப் போகிறதா, என்று சொல்லி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முக பாவனைகளை ஆய்வு செய்கிறார். உணர்ச்சியே அட்லஸ் என்ற வார்த்தையை அவர் குறிக்கிறார். அது சம்பந்தப்பட்ட ஆய்வுகளை முன்னோடியாகத் திகழ கூடிய பால் ஹெல்ப் மேன் என்பவர் புன்னகை உடைய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அது எதார்த்தமான தோற்றத்தைக் குறிக்கணும் ,எதார்த்தமாக உருவாகணும், பொய்யாக சிரிக்கும் பொழுது உடல் மொழி எப்படி இருக்கு என்பதை ஆய்வு செய்திருக்கிறார். அதை பற்றிதான் இன்று பேசப் போகிறோம். நம் வாழ்க்கையில் எல்லோருக்கும் நோய் சார்ந்த பிரச்சனைகளாக இருக்கட்டும், கடன் சார்ந்த பிரச்சனையாக இருக்கட்டும், எல்லாம் பிரச்சனைகளாக பேசும் பொழுது அது எந்த அளவிற்கு யோகம் கொடுக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் இதற்கெல்லாம் ஒரு மருந்து நம்முடைய ஆழ்ந்த சிரிப்பு. அதுதான் புன்னகை. அதாவது நம்முடைய ஆழ்மனதில் இருந்து எதார்த்தமாக சிரிப்பது. ஒருவர் நகைச்சுவை சொல்லும்பொழுது அதில் சிரிப்பு இருக்காது ஆனால் அவருக்காக நாம் சிரிக்கணும், அதாவது மூளையின் செயல்பாடு எப்படி இருக்கும்னா வெளியில் வாய் சிரிப்பு தோற்றத்தை காமிக்குமே தவிர மனதில் சிரிப்பு இருக்காது. ஆழ்ந்த சிரிப்பு இருக்கும்பொழுது கண்டிப்பாக நோய்களுக்கு மருந்தாகும். நம்முடைய வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு நகைச்சுவை பார்க்கும் பொழுது தன்னை அறியாமல் சிரிப்போம். ஏதாவது ஒரு நகைச்சுவை பார்த்திருப்போம், ஏதாவது ஒரு மொழியை கேட்டிருப்போம், சின்ன குழந்தை ஏதாவது ஒரு விஷயம் பேசி இருக்கும், இல்லை சிரித்திருக்கும் குழந்தைகளின் சிரிப்பு பார்க்கும்பொழுது ஆனந்தம் வரும் பாருங்கள் அதுதான் புன்னகை. அந்தப் புன்னகை தான் நம்முடைய வாழ்க்கையில் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும். உதாரணமாக நம் கண்ணாடி முன் நின்று சிரித்து பாருங்கள், அது பொய்யான சிரிப்பாக இருக்கும். இதுவே ஒரு நகைச்சுவை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது எதார்த்தமாக சிரிப்போம், நாலு பேர் இருக்கும்போது சிரிக்க மாட்டோம், இதுவே எங்காவது தனியாக இருக்கும் பொழுது நகைச்சுவை பார்த்தால் நம்மை அறியாமல் சிரிப்போம். நம்மை அறியாமல் இந்தப் புற சூழ்நிலைகள், அதுதான் இந்த மனிதர்களுடைய சிரிப்பு அலைகளை கட்டுப்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு நாள், அந்த நாளில் இன்றைக்கு யாரைப் பார்த்தாலும் சந்தோஷமாக சிரிக்கணும், வணங்கனும், நன்றி சொல்லனும், வாழ்த்துக்கள் சொல்லணும், என்று காலையில் 6 மணிக்கு ஆரம்பித்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் பார்க்கும் பொழுதெல்லாம் சிரியுங்கள். உங்களை கேள்வி கேட்டு இருப்பாங்க, உங்களை கோபப்படுத்தி இருப்பாங்க, உங்களைப் புகழ்ந்து இருப்பாங்க, எல்லாவற்றிற்கும் உங்களுடைய மருந்து, உங்களுடைய விடை சிரிப்பாக இருக்கட்டும். அந்த ஒரு நாள் உங்கள் வாழ்க்கையை மாற்றும். அப்படி ஒரு நாள் இருந்து பாருங்கள். அன்றைய இரவில் உங்கள் மனம் ஒரு 100 சதவீதம் ஒரு ஆழ்ந்த உறக்கமும், ஒரு ஆழ்ந்த சந்தோஷமும், என்றைக்கும் இல்லாத ஒரு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும். தொல்காப்பியர் 8 வகைப்பாடுகள் வகைபடுத்தி உள்ளார். தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான நகைச்சுவை,சந்தோஷம், இன்பம் இப்படி நிறைய வகைபடுத்தக் கூடியதில், முதலில் சொல்லக்கூடிய உணர்வாக நகைச்சுவையை தான் சொல்கிறார். சிரிப்பை தான் சொல்கிறார். அதனால் நம்முடைய வாழ்க்கையில் சிரிப்புதான் அடுத்தகட்ட இலக்கை நோக்கி பயணிக்கக்கூடிய ஒரு நிகழ்வாக மாறும் என்பதை நமக்கு புரியவைக்கிறார். நம்முடைய மூளை ஒரு எதார்த்தமான சிரிப்பிற்க்கும், பொய்யான சிரிப்பிற்க்கும் இந்த இரண்டு வகையான சிரிப்புகளை, மூளை எளிமையாக புரிந்துகொள்ளும். நாம் எதார்த்தமாக சொல்வோம். இது உண்மையாக சிரிக்கிறோம், இது போலியாக சிரிக்கிறோம் என்று ஆனால், இந்த மூளைக்கு போலியான சிரிப்புகளையும் உணர கூடிய தன்மை உள்ளது. நம் உடலில் இருக்கக்கூடிய தசைநார்கள் ஒரு இறுக்கமாக இருக்கு, இல்லை இருக்க மற்று இருக்கு, உதாரணமாக கை, கால், இல்லை நம் மூளையின் பின்பகுதியில் தசைநார்கள் இருக்கமாக இருந்தால் எதார்த்தமான சிரிப்பு வராது. அதேபோல் தசைநார்கள் இறுக்கமற்று இருக்கும்பொழுது அந்த உணர்வுகள் சந்தோஷமான சிரிப்பு, ஆழ்ந்த சிரிப்பு எதார்த்தமாக வரும் அந்த சிரிப்பு. இந்த மாதிரி இருக்கும் பொழுது யாருக்கு அந்த அமைப்பு வரும் என்றால் நாம் கிரக ரீதியாக பார்க்கணும், சந்திரன் என்ற கிரகமும், சுக்கிரன் என்ற கிரகமும், இது பலமாக இருக்கணும். இந்த இரண்டு கிரகங்களும் குருவோட தன்மைகளாக எப்படி இருக்கும் என்பதை பொறுத்தி பார்க்கும் பொழுது தான் நம் மூளையினுடைய செயல்பாடுகளுக்கும், நம் தசைநார் உடைய செயல்பாடுகளுக்கும், நாம் விளக்கத்தை காணமுடியும். இல்லை சார் , சந்திரன் சுக்கிரனுக்கு 6,8 ஆக இருக்கு, சந்திரனுக்கும், குருவுக்கும் சஷ்டாஷ்டகமாக இருக்கு என்றால் அதனுடைய தசைநார்கள் எப்போதும் ஒரு இறுக்கத்தை கொடுக்கும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த உணர்வுகள் மாறும் பொழுது கோட்சார கிரகங்கள் வைத்தும் நாம் பலன் சொல்லலாம். கண்டிப்பாக சந்திரன் சுக்கிரன் இருக்கும்பொழுது அந்த தசை நார்கள் ஒரு யோகமான ஒரு ஆனந்தமான சிரிப்பு வரும்.

#அட்சய_லக்ன_பத்ததி_Alp_astrology_method

#alp_astrology_software_free_download

#download_ALP_Astrology

#alp_Astrologer

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/MG-2oVRig5E

தொழில் அல்லது வேலை எது சிறந்தது

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒரு முடிவெடுக்க முடியாத அமைப்பு எப்படி இருக்கும் என்றால் ஒரு ஜோதிடரிடம் வரும்பொழுது நான் தொழில் செய்யலாமா? நான் வேலைக்கு போகலாமா? என்று வரும்பொழுது இவர்கள் ஒரு முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியும். நான் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்குமா? இப்படி வேலை விஷயங்களில் 1000 கேள்வி கேட்டால் சரி. ஆனால் எங்க அப்பா செய்த தொழில் இருக்கு , அதை நானும் செய்யலாமா? என்று கேட்பது ஒருவகை. தொழில் செய்யலாமா? வேலை பார்க்கலாமா ? என்று கேட்டால் அங்கேயே முதல் குழப்பம் உண்டாகும். ஒருவருடைய கேள்வி ஒரு தெளிவில்லாத, முடிவில்லாத மனநிலையை காமிக்கும். நீங்கள் ஜோதிடரிடம் செல்லும் பொழுது படித்த படிப்பிற்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா? எப்பொழுது வேலை கிடைக்கும்? இதை மட்டும் சரியாக கேட்டால் உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய அத்தனை விஷயங்களுக்கும் அந்த ஜோதிடர் வழிகாட்டியாக வருவார். கண்டிப்பாக வழி காட்டுவார். எதை நோக்கி நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்று முன்கூட்டியே முடிவு செய்தால் இந்த பயணம் வெற்றி பெறும். வாழ்க்கை என்பது நெடுந்தூர பயணம். அதை தொலைநோக்குடன் பார்த்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். உடனே உடனே ஒரு முடிவை மாற்றிக் கொண்டிருந்தால் அதில் நிறைய பிரச்சனைகள், குழப்பங்கள், இடையூறுகள், அலைக்கழிப்புகள் இப்படி நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய காலமாக அமையும். திட்டமிட்டு வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். 20 – 30 வயது வரை இனம் புரியாத பருவமாக மாணவர்கள் செல்வார்கள் ஏன்னா? படித்து முடித்து வேலைக்கு செல்லும் பொழுது குறைந்தது 6 வருடமாவது வேலை பார்த்து அந்த வேலையைக் கற்றுக் கொண்டால் மட்டுமே அவருடைய வாழ்க்கை வளமாகும். ஒரு தொழிலில் நேராக வந்து உட்கார்ந்தால் அதில் என்ன நுணுக்கங்கள், எதில் லாபம், எதில் நஷ்டம் என்பது தெரியாது இப்படி நிறைய விஷயங்களில் கஷ்டப்பட்டு அந்த முதல் கடனாக மாறும். 20 to 30 வயது வரை உள்ள ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இது புரியணும் சொல்லிக் கொடுங்கள். ஒரு இடத்தில் வேலை பார்த்தால்தான் காசு உடைய அருமை தெரியும். எந்த தொழிலாக இருந்தாலும் குறைந்தது 6 வருடமாவது தொழிலில் இருந்து கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை வளமாகும். இதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_Alp_astrology_method

#alp_astrology_software_free_download

#download_ALP_Astrology

#alp_Astrologer

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/gm3FnDhKz28

திருமணம் எப்போது

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஜாதகம் திருமணம் என்று பார்க்கும் பொழுது திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தான் ஜாதகம் அதிகம் பார்க்கப்படுகிறது. திருமணம் பார்க்கும் பொழுது பெண், ஆண், இருவருடைய அப்பா அம்மா நட்சத்திரப் பொருத்தம் பார்த்துக்கொண்டு இது பொருந்துகிறது பொருந்தவில்லை என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள். லக்னம் மாறும் பொழுது கண்டிப்பாக செவ்வாய், ராகு – கேது என்பது லக்னம் மாறும் பொழுது அதனுடைய தன்மைகளும் மாறுகிறது. தயவுசெய்து நீங்களே முடிவு செய்யாதீர்கள். அதற்காக தான் திருமணப் பொருத்தத்திற்கு ஒரு சாப்ட்வேர் உருவாக்கியுள்ளேன். google Play Store ல் Alp Astrology சாப்ட்வேர் உள்ளது. அதில் ஒரு பகுதியை திருமண பொருத்தத்திற்காக உருவாக்கியுள்ளேன். ஏன்னா? இந்தக் காலகட்டம் ஜாதகரால் பிரச்சனை. இந்த காலகட்டம் வரக்கூடிய பெண்ணால் (மனைவி) பிரச்சனை, அதுவே கணக்கீடு செய்யும். ஆரம்பிக்கக் கூடிய காரணகருத்தாக யார் இருந்தார் என்றால் அந்த ஜாதகத்தில் Software ல் காண்பிக்கும். நிறைய திருமண உறவுகள் முறிவதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை மிக மிக இலகுவாக அமைத்துவிட்டது. அதீதமான அறிவுப் பெருக்கம் நம்முடைய வாழ்க்கையை முடிவு செய்கிறது. என்னுடைய வாழ்க்கையை நானேமுடிவு செய்வேன் , எனக்கு எல்லாம் தெரியும், இப்படி நிறைய காரணிகள் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையிலும், ஒரு ஆணுடைய வாழ்க்கையிலும் புரிதல் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்துகிறது. இது திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதற்கு காரணம் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக் கூடிய கிரகங்கள் உடைய அமைப்புகளை நீங்கள் பார்த்தால் உணர முடியும். திருமண பொருத்தம் என்பது நுண்ணியமாக ஆய்வு செய்து கொடுக்கக் கூடிய அமைப்பு திருமண பொருத்தம். திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஆணுடைய ஜாதகத்தையும் பெண்ணுடைய ஜாதகத்தையும் இணைத்து பார்க்கப்பட வேண்டும். நட்சத்திரத்தை மட்டும் வைத்து பொருத்தம் பார்க்க வேண்டாம். நட்சத்திரம் மட்டும் வைத்து பொருத்தம் பார்க்கக்கூடாது. நீங்களே செவ்வாய் தோஷம் இருக்கு என்று எழுதக்கூடாது. ஜோதிடரிடம் கொடுத்தால் அதில் என்ன குறை, என்ன நிறை என்று பார்த்துச் சொல்வார்கள். புரிதல் உண்டாகும் சந்தோஷம் உண்டாகும். இதனால் 1 வருடம் , 1 மாதம், 10 நாள் ஜாதகருடைய நிலை என்ன கணவருடைய நிலை என்ன மனைவியுடைய நிலை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இப்படி ஆய்வு செய்து தான் சாப்ட்வேர் வெளியிட்டுள்ளேன். இது ஜோதிடர்களுக்கு தான் பயன்படும். ALP Astrology செயலியில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். உங்களுடைய அட்சய லக்னம், அட்சய ராசி, நவாம்சம், பாத சாரம், ALP புள்ளி தெரிந்துகொள்ளலாம். நன்றி

#அட்சய_லக்ன_பத்ததி_book pdf

#ALP_Astrology_English_class

#ALP_Astrology_Basic_Training_Classes

#ALP_Astrology_apps_on_google_play

#ALP_astrology_contact_Alpofficenumber_9786556156

https://youtu.be/0YWWM9a2JuE