2022 ஆம் ஆண்டு யோகமான காலமாக அமையும்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒவ்வொரு நாளும் ஒரு ஜாதகத்தில் யோகமான, அவ யோகமான விஷயங்களைப் பற்றி பேசுகிறோம். அந்தக் காலத்தில் பெண்களுடைய படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் திருமணம் என்பது கடந்த காலத்தில் அதிகமாக செய்தார்கள். அவர்களுடைய சூழ்நிலை அப்படி அமைந்து இருந்தது, அந்த திருமணம் நடந்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் பெண்கள் காதலித்து திருமணம் செய்துடுவாங்க, இல்லை பையன் காதலித்து திருமணம் செய்து கொள்வான், இல்லை பையனுக்கு படிப்பு இல்லை, இப்படி ஒரு சில காரணங்களுக்காக இளம் வயதிலேயே திருமணம் நடத்துகிறார்கள். 18 to 21 வயதிற்குள்ளேயே திருமணம் நடக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒரு யோகமான காலம் உண்டு. எல்லாரும் நல்லவர்களாகவும் இருக்க மாட்டாங்க, கெட்டவர்களாகவும் இருக்க மாட்டாங்க அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலை கால கிரக நிலைகள் இந்த உடலும் மனமும் பேசும். நிறைய நிகழ்வுகள் நீங்கள் பார்க்க முடியும். ஒரு 10 வருடத்திற்கு பிறகு கெட்டவராக இருப்பவர் இப்பொழுது நல்லவராக இருப்பார். இப்பொழுது நல்லவராக இருப்பவர் 10 வருடத்திற்கு பிறகு கெட்டவராக இருப்பார். சந்தர்ப்ப சூழ்நிலைகள் இப்படி மாற்றத்தை ஏற்படுத்தும். எண்ணம் போல் வாழ்கை என்று சொல்வோம். இந்த எண்ணம் உதிப்பதும் கிரகங்களிடம்தான். இதை வெளியில் இருந்து யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த பாதையில் போனால் நல்லது, இந்த பாதையில் போனால் கெட்டது. நம்மிடம் இரண்டு மனங்கள் உள்ளது ஒன்று சந்திரன், மற்றொன்று குரு, சந்திரன் என்பது நான் ஆசை படுவது, ஆனால் அதன் பின்னர் ஆசைகள் நிறைவேறினால் என்ன பிரச்சனை? ஆசைகள் நிறைவேறாவிட்டால் என்ன பிரச்சனை? ஒரு பையன் படத்திற்கு போகணும் என்று ஆசைப்படுகிறான் இது சந்திரன். ஆனால், படத்திற்கு சென்றால் அப்பா அடிப்பாங்க இது குரு. ஒரு ஜாதகத்தில் குரு எப்பவும் பலப்படனும். குரு பலப்பட்டால் தான் அந்த ஜாதகம் யோகமாக மாறும். ஏன்னா வழிகாட்டக் கூடிய நபர் அப்பாவாக, அம்மாவாக, உறவினர்களாக, ஒரு அந்தணராக இல்லை, கோவிலில் இருக்கக்கூடிய ஒரு நபராக இல்லை வயது முதிர்ந்த தாத்தா பாட்டிகள் ,இல்லை ஜோதிடர்கள் இல்லை ஆசிரியர்கள் இப்படி ஏதோ ஒரு ரூபத்தில் குருபகவான் வழிகாட்டுவார். இப்படி நம்முடைய வாழ்க்கையில் யாரோ ஒருவர் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்கள். அவர்கள் எல்லாரும் நம்முடைய குரு, நம்முடைய வாழ்க்கையில் வழிகாட்ட வந்த இயற்கை படைத்த ,இயற்கை நமக்கு கொடுத்த மிகப்பெரிய வரம் அவர்கள்தான். அவர் என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது அப்படின்னு சொல்வோம். அவர் சொல்வதை நான் கேட்பேன் என்று இப்படியும் சொல்லுவோம். கண்டிப்பாக ஒருவர் சொல்லிவிட்டார் நான் கேட்பேன் என்று சொல்வோம், இதில் தான் நம்முடைய குருபகவான் எங்கு இருக்கு என்பதை உணர வேண்டும். கண்டிப்பாக குரு பல படவில்லை என்றால் அந்த ஜாதகத்தில் எதை சொன்னாலும் கேட்கமாட்டார்கள் கேட்கிற மாதிரி நடிப்பார்கள் ஆனால், அதை கேட்க மாட்டார்கள். உங்கள் ஜாதகத்தில் அட்சய லக்னத்திற்கு 6, 8, 10, 12 ல் குரு இருந்தால் கண்டிப்பாக நீங்கள் இயற்கையை பலமாக வழிபாடு செய்யுங்கள். ரமண மகரிஷியை வழிபாடு செய்யுங்கள். ஆத்மார்த்தமாக நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு எண்ணங்களுக்கும், செய்யக்கூடிய செயல்களுக்கும், நான் பிரதிபலனாக ஏதோ ஒன்றை கொடுத்தோ அல்லது இழந்தோ ஆக வேண்டும். அது நல்லதாக இருந்தால் சந்தோஷமாக எனக்கு வரும், அதுவே கெட்டதாக இருந்தால், இல்லை ஒரு செயலாக செய்தால் அது ஏதோ ஒரு ரூபத்தில் கண்டிப்பாக வரும். யாருக்குத் தெரியப்போகிறது எனக்கு மட்டும்தான் தெரியும் என்று நீங்கள் இப்படி நிறைய நினைக்கலாம் கண்டிப்பாக இந்த குருபகவான் ஏதோ ஒரு ரூபத்தில் உங்களை சிக்க வைப்பார். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/xx9XUg32D4Y

அரசு வேலை உண்டு

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். இறந்தவர்களின் ஜாதகத்தை கண்டிப்பாக பார்க்க கூடாது. ஜோதிடர்கள் அனைவரும் இதை செய்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது. ஏன்னா? இறந்தவர்கள் கடவுளிடம் சென்று விட்டார்கள் என்று சொல்கிறோம். ஒரு நிலையை விட்டு இன்னொரு நிலையை அடையக்கூடிய ஆத்மாவிற்கு,உடலுக்கு மறுபடியும் ஜாதகம் பார்ப்பது என்பது தவறான விஷயம். இருக்கும் நபர்களுக்கு தான் நாம் ஜாதகத்தை பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். இல்லாதவர்களுக்கு நாம் ஜாதகம் பார்க்கக் கூடாது. இல்லாத விஷயத்தை தேடுவது மிக சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும். அதனால் இறந்தவர்களுடைய ஜாதகம் பார்த்தால் அதனுடைய பின்விளைவு எல்லோரையும் பாதிக்கும். அதனால் பார்க்க கூடாது. பார்ப்பவர்கள், கேட்பவர்கள் இரண்டு பேருக்கும் அந்த நிகழ்வு பாதிக்கும். அட்சய லக்ன பத்ததி முறையில் 2,7,8 ,10 தொடர்பு இருந்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நன்றி, வணக்கம்.

https://youtu.be/2DvQCdvNbXA

2021 டிசம்பரில் குழந்தை உண்டாகும்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். அட்சய நட்சத்திரம்: அட்சய நட்சத்திரம் என்பது சுக்ர திசை என்றால் மூன்று நட்சத்திரத்தில் உங்களுடைய மனநிலை பயணிக்க கூடிய அமைப்பை ஏற்படுத்தும். இன்றைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்களை, அத்தனை மன இயல்புகளையும், எண்ண ஓட்டங்களையும், அட்சய நட்சத்திரத்திடம் தான் இருக்கும். அட்சய ராசி மேஷம், அட்சய நட்சத்திரம் பரணி நட்சத்திரம், பரணி நட்சத்திரம் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில் கோவில்களில் அர்ச்சனை செய்யும் பொழுது அட்சய நட்சத்திரம் என்று அர்ச்சனை செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை மாறும். ஜென்ம நட்சத்திரங்கள் நம்முடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும். ஆனால் இன்றைய நட்சத்திரம் அட்சய நட்சத்திரம் என்பது தசாபுத்திகள் எந்த திசையில் நடக்கிறதோ அதனுடைய நட்சத்திரம் அட்சய நட்சத்திரம் என குறிப்பிட வேண்டும். இன்றைக்கு எந்த நட்சத்திரத்தில் பயணிக்கிறீர்களோ அதுதான் உங்களுடைய அட்சய நட்சத்திரம். அட்சய ராசி மேஷம், அட்சய நட்சத்திரம் பரணி நட்சத்திரம் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை மாறும். எந்த ராசியில் பிறந்தீர்களோ அந்த ராசியில் இருந்து வரக்கூடிய தசாபுத்தி, அதிலிருந்து வரக்கூடிய நட்சத்திரம்தான் அட்சய நட்சத்திரம். சந்திரன் எங்கு இருக்கிறதோ சந்திரனிலிருந்து எந்த தசாபுத்தி நகர்கிறதோ அதுதான் அட்சயராசி. நன்றி, வணக்கம்.

https://youtu.be/nCByBO3AtFs

காதல் திருமணம் நடக்குமா….? நடக்காதா…?

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். அட்சய லக்ன பத்ததி முறையில் ஒவ்வொரு ஜாதகத்திலும் எந்த காலம் யோகம், எந்த காலம் அசுப காலம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். வாய்ப்புகளை நல்ல நேரத்தில் பயன்படுத்தினால் யோகம் உண்டு. அசுப காலத்தில் பயன்படுத்தினால் விரயமாகும். எல்லா காலகட்டத்திலும் ஜோதிடம் என்பது பரிணாம வளர்ச்சி. இதெல்லாம் கடவுளுடைய அமைப்பு. கடவுள் ஜோதிடம் வழியாக ஏதோ ஒரு ரூபத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். ஜாதகம் தனக்குத்தானே பரிணாமத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. கிரகங்களும் கடவுள்களும் ஏதோ ஒரு ரூபத்தின் வழியாக ஜோதிடத்தில் புதிய பரிணாமங்களை கொண்டு வந்து ஒரு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. குரு ஜாதகத்தில் எவ்வளவு பலபடுகிறதோ அந்த அளவிற்கு யோகத்தைக் கொடுக்கும். குரு என்றால் வழிகாட்டுதல். குரு பார்ப்பதால் உங்கள் வாழ்க்கை செம்மையாக மாறும். அட்சய ராசிக்கு கிரக பெயர்ச்சிகள் பார்ப்பது மிக சிறப்பான ஒரு விஷயத்தை ஏற்படுத்தும். கிரகப்பெயர்ச்சி என்பது ஜெனன கால ஜாதகம் தசாபுத்தி நன்றாக இருந்தால் அதனுடைய ஊன்றுகோல் கோள்களின் கிரகங்களுடைய கோட்சார தன்மைகள். ஜெனன ஜாதகம் நன்றாக இருந்தால் கோட்சார கிரகங்கள் எவ்வளவு சுபமாக இருந்தாலும், அசுபமாக இருந்தாலும், ஜாதகம் பளுவாக வேலை செய்யும். ஜாதகருடைய வாழ்க்கையை வழிகாட்டுதலும், நெறிப்படுத்துதலும் தான் ஜோதிடருடைய கடமை. ஜோதிட இருக்கும் பலப்பட வேண்டும் ஜாதகருக்கும் பலப்பட வேண்டும். நன்றி, வணக்கம்.

https://youtu.be/q0-pPXOxjSM