ALP ஜோதிட முறை இது பாரம்பரிய ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சி. 

வணக்கம்

ALP ஜோதிட முறை:

இது பாரம்பரிய ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சி.

யுகமாக யுகமாக உள்ள ஜோதிடத்தை அடுத்த

நிலைக்கு அதாவது, இன்றைய காலகட்டத்திற்கு உடனடியாக பலன் சொல்லக்கூடிய ஒரு துல்லியமான முறை.

இந்த ஜோதிட முறையை கண்டுபிடித்தவர்

திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா, அவர்கள்,

Sir, என்ன சொல்றாங்கனா மனிதருடைய ஆயுள் 120 வருடம், 12 கட்டம் இருக்கு,

ஜென்ம லக்னம் எங்கு இருக்கிறதோ அங்கிருந்து இந்த 12 கட்டத்திற்கும் ஒரு 120 வருட காலத்தில்

பரவி வரும்பொழுது இந்த ,இந்த நிகழ்வுகள் இப்போ இப்போதான் நடக்கும் என்று துல்லியமாக சொல்லமுடியுது.

இதைப்பற்றிய நிறைய Videos youtube-ல்

இருக்கு. நீங்கள் அதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், உங்கள் வயதிற்கேற்றது போல் லக்னம் மாறும்.என்பது தான் முக்கியம்.

ஒவ்வொரு 10 வருடமும் லக்னம் நகரும்.

ஆச்சரியமாக இருக்கா! வாங்க பார்க்கலாம்.

ALP ஜோதிட முறையை கண்டுபிடித்த

திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் , வீட்டிற்கு ஒரு ஜோதிடர் என்ற முடிவு எடுத்திருக்கிறார்.

ஏன்னா? வீட்டிற்கு ஒரு ஜோதிடர்,

என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் வழிநடத்தக் கூடிய அளவிற்கு இருக்கணும்.

ஏன்னா? நம் பிரச்சனை நமக்கு தான் புரியும்.

இன்னொருவருக்கு எந்த அளவிற்கு புரியும் என்று சொல்லமுடியாது.

அப்போ,சூழ்நிலை,பிரச்சனையை சரியாக புரிந்து கொண்டு,

அதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கனும்னா ?

உங்கள் பிரச்சனையை சரியாக புரிந்து கொண்டவர்கள் வீட்டில் இருப்பவர்கள் தான்.

வீட்டிற்கு ஒரு ஜோதிடர் வரணும்.

என்பதுதான் அவருடைய லட்சியம்.

ஏன்னா? அவருடைய கண்டுபிடிப்பை அவர் மட்டும் பயன்படுத்தாமல்,எல்லாருக்கும் பயன்படும்படி இருக்கனும் என்றுதான் இந்த வகுப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

நீங்கள் இந்த ALP முறையை வெறும் 15 Class -ல்

நீங்கள் இதில் தேர்ச்சி பெற முடியும்.

இந்த வகுப்பு எப்பொழுது நடக்கும் என்றால்?

அதிகாலை 4:32 to 7 .

ஏன் இந்த நேரம் ?

இந்த நேரம் நம்முடைய மனம் தெளிவாக இருக்கும்.

உங்களுக்கு தொந்தரவு எதுவும் இருக்காது. வேறு எந்தகவனச்சிதறலும் இருக்காது.

உங்களுடைய கவனம் முழுவதும் இங்கு இருக்கும்.

நீங்கள் கவனமாக இருந்தால் மட்டும்தான் இந்த ஜோதிட முறையை கற்றுக் கொள்ள முடியும்.

அதனால்தான் இந்த நேரம்.

ஜோதிடம் கற்றுகொள்ள எனக்கு தகுதி இருக்கா? என்று ஒரு பொதுவான கேள்வி கேட்கறாங்க.

ஜோதிடம் கற்றுக்கொள்ள தகுதிகள் தேவையில்லை.

ஏன்னா? இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட விஷயம்.

நான் சம்பாதிக்க முடியுமா?

நான் வண்டி ஓட்ட முடியுமா?

இந்த மாதிரி கேள்வி அது.

எல்லாராலும் வண்டி ஓட்ட முடியும்,

எல்லாராலும் சம்பாதிக்க முடியும்,

அதற்கான ஒரு திறன் இருக்கு,

அதை கற்றுக் கொள்ளணும் அவ்வளவுதான்.

இதுபோல் ஜோதிடத்தில் இரண்டு பகுதியாக பிரித்துக் கொள்ளலாம்.

1) அன்றாட வாழ்வியலுக்கான ஜோதிடம் உங்களுக்குத் தெரிந்தே இருக்கணும்.

எனக்கு கணக்கு போட தெரியும் என்று, கணக்கை பயன்படுத்தி என்ஜினியர் ஆவது வேறு,

2) அதேபோல் கணக்கை உபயோகப்படுத்தி அன்றாட தேவைகளுக்கான கணக்குகள் தெரிவது வேறு.

உங்களுக்கு கணக்கு தெரிந்திருக்க வேண்டும், ஆனால்,இன்ஜினியர் ஆவது உங்களுடைய விருப்பம்.

இதுபோல் நீங்கள் மிகப்பெரிய ஜோதிடராக மாறுவதும்,

உங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய ஜோதிடத்தை தெரிந்து கொள்வதற்கும்,

வித்தியாசம் இருக்கு.

இங்கு Basic class என்பது உங்களுடைய அன்றாட வாழ்வியலுக்கான ஜோதிடத்தை உங்களுக்கு சொல்லித்தருவது.

உங்களுக்கு ஏற்கனவே ஜோதிடம் தெரிந்திருப்பது நல்ல விஷயம்,

உங்களுக்கு ஏற்கனவே அடிப்படை தெரியும் ,ஆனால் இங்கு இந்த வழிமுறையை ஐந்து வருடமாக கற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை இங்கு 15 வகுப்புகளில்

கத்துதராங்கனா,இங்கு இருக்கக்கூடிய அடிப்படைகள் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு.

அதனால் நீங்கள் இதை என்னவென்று கற்றுக் கொண்டால்தான்,

நீங்கள் அடுத்த Advanced level – க்கு போவதற்கு தகுதியானவர்களாக மாறுவீர்கள்.

சேர்ந்தவர்கள் எல்லாருமே Advanced level-க்கு போவது இல்லை.

இதற்கு நாங்கள் தகுதிப்படுத்துகிறோம், இந்த தகுதி உள்ளவர்கள் மட்டும்தான் அடுத்த Advanced level-க்கு அறிமுகம் கொடுக்றோம்.

அதனால்,நீங்கள் ஜோதிடராக இருக்கலாம், நிறைய அனுபவங்கள் இருக்கும்,

உங்கள் அனுபவங்களை நாங்கள் மதிக்கிறோம்,

ஆனால் ALP -க்கு என்று இருக்கின்ற விதிகளையும்,

ALP க்கான அடிப்படைகளையும், நீங்கள் தெரிந்துகொண்டால்தான், Advanced level-க்கு நீங்கள் செல்ல முடியும்.

அதனால் இதுவும் உங்களுக்கு தேவை.

இது online வகுப்பாக Zoom App -ல் நடைபெறும்.

அதனால், நீங்கள் வீட்டில் இருந்தே உங்களுடைய சவுகரியத்தில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய முறை.

நீங்கள் Expensive Travel செய்ய வேண்டாம்,

எங்கேயும் தங்க வேண்டாம்.

ஆனால், தினப்படிக்கு நீங்கள் practice செய்து , practice செய்து வந்தால்தான்,உங்களுக்கு ஜோதிடம் அனுபவத்திற்கு வரும்.

இந்த 15 நாள் ,15 வகுப்பும் நீங்கள் ஜாதகம் கொண்டுவரப்போறீங்க, அதை Class – ல் உட்படுத்தி அதனுடைய பலன்களை உங்களையே சொல்ல வைக்கப்போறோம்.

அதுதான் இந்த வகுப்பின் நோக்கம்.

அதனால், உங்களுக்கு எவ்வளவு ஜாதகம் எடுத்துட்டு வர முடியுமோ, அவ்வளவு ஜாதகம் எடுத்துட்டு வாங்க.

ஏன்னா? ஜாதகம் உங்களுடையது,

அதனுடைய நல்லதும், கெட்டதும் உங்களுக்கு தெரியும்.

அதற்கு இந்த ஜாதகத்தில் நாங்கள் சொல்லக்கூடிய விதிகளை apply செய்தால் பலன் வருதா? இல்லையா ? என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.

அதுதான் உங்களுக்கு அனுபவமாக மாறும்.

அந்த அனுபவம் உருவாக்குவது தான் இந்த வகுப்பின் அடிப்படை.

அதனால் கட்டாயமாக உங்களுக்கு இது பயன்படும்படியாக இருக்கும்.

ஜோதிடம் கற்றுக்கொள்ளக்கூடிய முறைகளில் இரண்டு விஷயம் இருக்கு.

1) கணித முறை

2) பலன் சொல்லும் முறை

இந்த ஜோதிடம் எல்லாருக்கும் வராது என்று சொல்லக்கூடிய ஒரே காரணம்,

கணிதம் போடுவது என்பது எல்லோருக்கும் ஒத்து வராது

கணிதம் போடுவது ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் சரியாக இருக்கும்.

முன் கணிதம் தெரியாதவர்களுக்கு ஜோதிடம் வராது என்ற நிலை இருந்தது.

இப்போ பொதுவுடைமூர்த்தி ஐயா,என்ன

செய்து இருக்காங்கன்னா, இந்த கணித முறைகளை எல்லாம் இரத்தின சுருக்கமாக்கி, அதை ஒரு Software – ஆக அதை Mobile -ல் use செய்யும்படியான ஒரு App – ஆக மாற்றிகொடுத்துள்ளார்.

free Software இருக்கு.

இந்த free Software இப்போது போதும் உங்களுக்கு.

Basic Class – Start செய்து முடியும் வரைக்கும் இந்த Software பயன்படுத்துவது போதுமானது.

உங்களுக்கு மேற்கொண்டு ஆர்வம் இருந்து, இது மேற்கொண்டு எனக்கு பயன்படும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் purchase செய்தால் போதும்..

உங்களுக்கு ஆரம்பத்திலே free Software வந்துவிடும்.

Class எவ்ளோ எளிமையாக இருக்கும் ?

இங்கு பெரிய மனப்பாடம் செய்வதோ, ஒப்பிப்பதோ,உள்வாங்குவதோ ரொம்ப இல்லை.

நட்சத்திரங்கள் பெயர் எனக்கு தெரியாது? கிரகங்கள் பெயர் தெரியாது?

ராசி பெயர் தெரியாது ?

வாங்க கற்றுக்கொள்ளலாம்.

இது எல்லாமே சொல்லி தருவோம்.

இதை மட்டும் தான் நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டியதாக இருக்கும்.

விதிகள் பார்த்தால் இங்கு 5 விதிகள் தான்.

அதைக் கற்றுக்கொண்டால், அந்த 5 விதிகளை apply செய்தால் உங்களிடம் ஜாதகம் கொடுப்பவர்கள் என்ன கேள்விக்காக வந்திருப்பார் என்று நீங்கள் சொல்ல முடியும்.

அவர் என்ன பதில் எதிர்பார்க்கிறார் என்றும் நீங்கள் சொல்லலாம்.

இதை இரண்டையும் சொன்னால்தான் துல்லியமான பலன்.

நடக்குமா? நடக்காதா? இது நடக்கும், இது நடக்காது என்று அறுதியிட்டு சொல்ல முடியும் ALP முறையில், அதுதான் இதனுடைய சிறப்பு.

 

இதை கற்றுக் கொள்வதற்கு பெரிய திறன்கள் எதுவும் தேவையில்லை.

உங்களுடைய ஆர்வமும் ஈடுபாடும் தான் ரொம்ப முக்கியம்.

இந்த 15 நாள், 15 Class -யை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ALP Astrology Office Number :9786556156

வருகின்ற ஜனவரி 6ம் தேதி 2023  அடிப்படை வகுப்பு துவக்கம்.

வாங்க சந்திப்போம்……

https://youtu.be/tMvOE-p3Sbs

 

2023 வருடம் இப்படித்தான் இருக்கும்.

வணக்கம்.

 

அட்சய லக்ன பத்ததி முறையில் 2023ம் ஆண்டின் ALP நட்சத்திர பலன்

(பரணி 1, 2, 3, 4 பாதம்) :

 

அட்சய லக்னம் மேஷம்,

அட்சய நட்சத்திர புள்ளி பரணி நட்சத்திரம் போனால் இந்த காலகட்டம் எப்படி இருக்கும்.

ஒவ்வொரு நட்சத்திர பாதம் வலிமையானது.

பரணி நட்சத்திரம் 1, 2, 3, 4 பாதங்களுக்கு ஒரு பொதுவான பலன்கள்:

 

தொழில் சார்ந்த மாற்றங்களை குறிக்கக்கூடிய ஒரு அமைப்பு தான் பரணி நட்சத்திரம்.

வாழ்க்கையில் ஏதாவது தொழில் செய்யணும், குறிப்பாக ஹோட்டல் சம்பந்தப்பட்டது, கேட்டரிங் படிக்கணும் இப்படி எண்ணங்கள் முழுவதும் உணவு சார்ந்து, பயணம் சார்ந்து தொழிலில் ஏதாவது வேலை மாற்றம் வேணும், ஏதாவது ஒரு தொழில் செய்யணும் இதுதான் பரணி நட்சத்திர அமைப்பு.

 

என்னுடைய நண்பர் தொழில் செய்யணும் என்று ஆசைப்பட்டு நஷ்டமடைந்தார்.

ஒரு தொழில் செய்து நஷ்டமடைந்து விட்டது, நஷ்டமடைந்ததை சம்பாதிக்க அவருக்கு 10, 15 வருடங்கள் ஆகியது.

தொழில் செய்வது நல்ல விஷயம் தான்.

ஆனால் அந்த தொழிலுக்கான கால நிர்ணயம் என்ன என்பதை முடிவு செய்துவிட்டு பன்னுங்க

 

அட்சய லக்ன பத்ததியில் இதை தெளிவாக சொல்ல முடியும்.

இந்த காலகட்டத்தில் தொழில் செய்யலாம், இந்த காலகட்டத்தில் தொழில் செய்யக்கூடாது, தொழில் சார்ந்த விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்கனும்.

 

ஹோட்டல் வைக்கலாம், ஆனால் வியாபாரம் அவ்வளவு சிறப்பாக இருக்காது.

2023, இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த தொழில் செய்தாலும் வாடிக்கையாளர் கூட்டம் இருக்காது.

அதனால் பெரிய முதலீடு செய்ய வேண்டாம்.

இருக்கக்கூடியதில் ஏதாவது அசையா சொத்தாக வாங்கி வைக்கலாம்.

 

அடுத்து வரக்கூடிய 4 வருடங்களுக்கு இடம் சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்யும் பொழுது கவனமாக முதலீடு செய்யனும்.

இந்த காலகட்டங்கள் நிலங்களை விற்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையக்கூடிய நிகழ்வு.

 

இந்த காலகட்டங்கள் நிலங்களை விற்று , விற்ற பணத்தை கொஞ்சம் தூரத்தில் ஏதாவது இடம், இல்லை விவசாய சம்பந்தப்பட்ட இடங்களோ வாங்கி நீங்கள் முதலீடு செய்யலாம்.

இல்லை தங்கத்தில் முதலீடு செய்யலாம்

இப்படி செய்யலாம் தவிர, இல்லை 2 வீடுகட்டி வாடகைக்கு விடக்கூடிய அமைப்பு உண்டு.

அசையா சொத்துக்கள் மூலம் வருமானத்தை கொடுக்குமே தவிர வேறு எதிலும் வருமானம் வராது இந்த காலகட்டம்.

 

படிப்பு எப்படி இருக்கும்?

இந்த காலகட்டம் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் பிரச்சனையாகத்தான் இருக்கும்.

உடல் சார்ந்த பிரச்சனைகளாலே படிக்க முடியாது.

 

பரணி நட்சத்திரம் 1, 2, 3, 4 பாதம் போகும்பொழுது உடல் சார்ந்த நோய்கள்,

உடல் சார்ந்த பிரச்சனைகள்

கண்டிப்பாக இருக்கும்.

அதனால் கவனமாக இருக்கனும்.

 

முயற்சிகள் எப்படி இருக்கும்?

முயற்சி சார்ந்த விஷயங்கள் நல்லா இருக்கும்.

முயற்சி செய்தால் கண்டிப்பாக வாய்ப்பு உண்டு.

ஆனால் தொழிலுக்காக முயற்சி செய்ய வேண்டாம்.

தொழிலுக்காக முயற்சி செய்தால் கடனாக, பிரச்சனையாக தான் போகும்.

போட்டித்தேர்வு எழுதலாம்.

 

வீடு வாங்கலாமா?

வீடு வாங்கினால் கண்டிப்பாக இந்த இடத்தில் கொஞ்சம் பிரச்சனை இருக்கும்.

கொஞ்சம் கவனமாக பார்த்து வாங்கலாம்.

கல்யாண மண்டபம், காம்ப்ளக்ஸ் கட்டலாம்.

பழைய வீடு வாங்கி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

அசையா சொத்துக்களில் முதலீடுகள் நல்லா இருக்கும்.

 

குழந்தைகள் மூலமாக, பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.

நோய், கடன், வழக்கு இப்படி ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை இருக்கும்.

ரொம்ப கவனமாக இருக்கணும்.

 

கடன் சார்ந்த விஷயங்கள் தலைக்கு மேல் பிரச்சனை இருக்கும்

தலையிலும் பிரச்சனை இருக்கும்

இந்த நேரத்தில் முடி கொட்டுவது,

தலைவலி சார்ந்த பிரச்சனை,

இல்லை, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை,

வரும்.

அதனால் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணும்.

 

திருமண வாய்ப்புகள் எப்படி இருக்கும்?

பெண் வீட்டு பக்கத்தில்,

இல்லை வேலை செய்யக்கூடிய இடத்தில் பெண் இருக்கும்.

கண்டிப்பாக யோகத்தை கொடுக்க கூடிய அமைப்பு உண்டு.

பரணி நட்சத்திரம் 1ம் பாதம் போனால் கண்டிப்பாக காதல் திருமணம்.

பரணி நட்சத்திரம் 3ஆம் பாதம் போனால், வீட்டில் பார்க்கக்கூடிய திருமணம்,

எதிர்பாராத திடீர் திருமணம் உண்டு.

 

உடல் சார்ந்த தனிப்பட்ட நோய்வாய்படுமா?

தலைவலி மட்டும் தான் பிரச்சனை.

 

இந்த காலகட்டத்தில் அப்பாக்கு எப்படி இருக்கும்?

அப்பாக்கு கடனாகக் கூடிய வாய்ப்பு உண்டு.

வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாற்றம் உண்டு.

இடம் விட்டு இடம் மாறிக்கலாம்,

வேலையில் இடம் மாற்றம் உண்டு சம்பளம்

இக்கரைக்கு அக்கரை பச்சை இருக்கக்கூடிய கம்பெனியை விட மற்றொரு கம்பெனியில் சம்பளம் அதிகம் என்று சொல்லி ஏமாற்றுவார்கள் அதனால் இப்போது

இடமாற்றம் செய்யாமல் இருப்பது நல்லது.

 

லாபம் உண்டா?.

லாபம் உண்டு.பழைய சொத்துக்கள் மூலமாக லாபம் உண்டு,

அதை பயன்படுத்திக் கொள்ளவும்.

 

தூக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பிரச்சனையாக இருக்கும்.

வேலையில் அழுத்தம் இருக்கும்,

ஒரு சம்பளத்தை கொடுத்து இரண்டு வேளை வாங்குவார்கள்.

இப்படி தான் போகும்.

அடுத்த 2023 வருடம் இப்படித்தான் இருக்கும்.

 

ஜோதிடம் எல்லோரும் படிங்க, அப்போதான் உங்கள் ஜாதகம் உங்களுக்கு புரியும்.

நன்றி.

பணம் வரவழைக்கும் பரிகாரம்

பணம் வரவழைக்கும் பரிகாரம்:

ALP லக்னம் கன்னி லக்னம் வரும்பொழுது அவர் என்ன செய்தால் பணம் வரும்?

ஒருவருக்கு கண்டிப்பாக பணம் வரவேண்டும் என்றால் வந்துவிடும்.
ஒருவருக்கு பணம் வரவே வராது ஆனால் சில விஷயங்கள் முயற்சி செய்ய பணம் வரும்,
வரவே வராது என்றால் என்னதான் பரிகாரம் பண்ணினாலும் அதற்கு வாய்ப்பே இல்லை.

கன்னி லக்னம் 10 வருட காலம் இயங்கும்.
ஒரு தடவையாவது குருவாயூர் போய் சாமி கும்பிட்டு வந்தால் அவருடைய வாழ்க்கை அவ்வளவு ஒரு ஆத்மார்த்தமாக இருக்கும்.

அதாவது பணம் வரணும் என்று நினைத்து போக வேண்டாம்,எங்கள் ஆத்மார்த்தமாக அந்த மண்ணை மிதித்து வரும்பொழுது அவ்வளவு ஒரு சந்தோஷம்.எப்படி எங்கிருந்து யார் மூலம் எந்த தொடர்பு அப்படி எல்லாம் எதுவும் வேண்டாம்,

இதுபோல் சந்திரதிசை யாருக்காவது நடந்தால் கண்டிப்பாக குருவாயூர் போகணும்.சந்திர திசை ,சந்திர புத்தி ,சந்திர அந்திரம், சந்திரன் சூட்சுமம்
ஏதோ ஒரு இடத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் குருவாயூர் கோவிலுக்கு போங்க, கன்னி லக்னம் காரர்கள் ஆத்மார்த்தமாக குருவாயூர் கோவிலுக்கு போங்கள்.

அவ்வளவு தூரம் போக முடியாது என்றால் லெட்சுமி நரசிம்மர் கோவில்கு போகலாம்.அல்லது லட்சுமி நரசிம்மர் போட்டோ பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம்.

ALP ஜோதிட முறையில் கன்னி லக்னம் போகக்கூடிய 10 வருட காலம் லெட்சுமி நரசிம்மர் போட்டோ கையில் வைத்துக் கொள்ளலாம். நாம் எங்கெல்லாம் பணம் வைத்திருக்கிறோமோ அங்கும் வைத்துக் கொள்ளலாம்.
வீட்டில் பூஜை அறையில், வீட்டில் பணப்பெட்டியில் இதிலெல்லாம் லெட்சுமி நரசிம்மர் போட்டோ வைத்துக்கொள்ளலாம்.
இல்லையென்றால் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு போய ஹோமம் நடக்கும், இல்லை தேன் வாங்கிக்கொடுத்து அபிஷேகம் செய்வது,அவ்வளவு ஒரு
ஆத்ம திருப்தி அடைந்து பணம் வருவதற்கான வாய்ப்பு கொடுக்கும்.

மகாலட்சுமி பூஜையில் கலந்துகொண்டு தாமரைப்பூைவையும்,தேனையும் அந்த யாகத்தில் கொடுக்கும் பொழுது அது பணமாக மாறிவிடும்..
அந்த தேன் கையில் கொடுத்தால் எடுத்து சாப்பிடுங்கள் கண்டிப்பாக ஆத்ம திருப்தி கிடைக்கும்.
அதேபோல் கன்னி லக்னக்காரர்கள் எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக் கொள்ளலாம்.அதை முழுமையாக வைத்துக் கொள்ள வேண்டும் உடைக்கக்கூடாது.
அது அறிந்து ஜூஸ் சாப்பிடலாம் ,உணவாக உட்கொள்ளலாம்.
ஆனால் வாகனத்திற்கு முன் வைக்கக் கூடாது.

இது போல் நிறைய விஷயங்கள், நிறைய பரிகாரங்கள்
அட்சய லக்ன பத்ததியில் இருக்கு.
ஆனால் யார் எதை செய்யணும், எப்ப எதை செய்யனும் என்பது முக்கியம்.

நன்றி.

https://www.youtube.com/watch?v=4Q9nH3vBRLA