பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பருவகாலத்தில் மண முடிக்க குரு பலம் வந்து விட்டதா ஜோதிடர்கலிடம் கேட்பார்கள்.
குரு பலம் என்பது திருமணம் நடத்துவதற்கு ஏற்றகாலம் என்பது உண்மையாகும்.
இதே போன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்துவதற்கு முக்கிய கிரகம் சுக்கிரன் ஆகும்.
சுக்கிரன் ஜாதகத்தில் எவ்வாறு அமைந்ததோ அதற்கு எற்றவாறு வரன் அமையும்.
சுக்கிரன் தோஷம் உள்ளவர்கள், குறிப்பாக சுக்கிரன் பெண் கிரகமாவதால் கல்யாணம் ஆகாத கன்னிப்பெண்கள் சுக்க்ர தோஷம் நிவர்த்தி பண்ண விவரமுள்ள அருகே உள்ள ஜோதிடரிடம் கேட்டுக் அதன்படி செய்யவும். பொதுவாக சுக்கிரனுடைய ஸ்தலம் திருவரங்கம் ஆகும் (ஸ்ரீரங்கம்).
அங்கு சென்று கன்னிப்பெண்கள் சுக்ர சுலோகம் சொல்வதும் வெண்ணிற வஸத்திரம் விரித்து சுலோகம் சொல்வது சிறப்பாகும் வெண்ணிறம் சுக்கிரனுக்குடையது என்பது குறிப்பிடத்தக்கது கல்யாணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு கல்யாணம் ஆகும்.