அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் யோக பலன்கள்.
அட்சய லக்ன பத்ததி ஆய்வு முறையில் அந்த கால பாடல்களுடன் அட்சய லக்கனம் எப்படி பொருந்தி வருகிறது.என்பதையும் ஆய்வு செய்திருக்கோம்.
செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்,யோக பலன்களாக இருக்கட்டும் அது எந்த மாதிரியான யோகங்களும் லாபங்கள் ஏற்படுத்தும் என்பதை ஒரு பாட்டாக எழுதி வைத்திருக்காங்க.
அந்த பாடல்களை அட்சய லக்ன பத்ததி யுடன் தொடர்பு படுத்தும் பொழுது
அந்தகிரக அமைப்புகள் அட்சய லக்கனப்படி அமைந்திருந்தால் கண்டிப்பாக அதற்கு உண்டான பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
உதாரணமாக “வல்அரவு கேந்திரத்தில் தனித்து நின்று மறைவனோடு இசைஞானி மருவக் கானில்,எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு, எவர்களுமே பணிவார்கள் இறைவன் போலே,
வல்லவியாம் ஈஸ்வரியின் கடாசத்தாலே,வாழ்ந்திருப்பான் என்னாலும் வளமாகவே “,
ராகு கேந்திரத்தில் தனித்து நின்று குருவோடு சேர்ந்திருந்தால்
“நல்லவர் என்றும் உரை போரில்
சங்கன் புந்தி நவ கோணத்தில் இருப்போரேல்”
* சுப கிரகங்கள், சுப கோள்கள் என்று சொல்லக்கூடிய புதனும், சுக்ரனும் நவ கோணத்தில் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு கடாட்சம் உண்டு.
இந்த பாட்டு உடைய பலன் அட்சய லக்கனமாக வந்து,அட்சய லக்னத்தின் கேந்திரங்களில் ராகு தனித்து நின்று,குருவோடு கேதுவும் இடம்பெற்று,சுப கோளான சுக்கிரனும், புதனும் நவ கோணத்தில் இடம்பெற்று இந்த பலன்கள் நிறைய பேர் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் ,யோகத்தையும் உண்டாக்கும்.
என்பதை இந்த ஆய்வில் நாங்கள் பார்த்திருக்கோம்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.