காலகட்டத்தில் நிறையபேர் குழந்தை பாக்கியம் தடையினால்

Spread the love

வணக்கம்.

 

இன்றைய காலகட்டத்தில் நிறையபேர் குழந்தை பாக்கியம் தடையினால் நிறைய பேர் டெஸ்ட் டியூப் பேபி நோக்கி போயிட்டு இருக்காங்க. இதற்கு

எந்த மாதிரியான கிரகங்கள் காரணம்? ALP முறையில் இதை எப்படி பார்க்கலாம் அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கா?

 

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் தனிப்பட்ட முறையில் தான் பலன் சொல்ல முடியும்.ஏன்னா இது ஒரு நபர் சார்ந்த நிகழ்வு அல்ல,இரண்டு பேருடைய முடிவு. கணவன் மனைவியுடைய அமைப்பு.

இப்போ,கை வலித்தால் இதற்கு காரணம் இதுதான் அப்படின்னு சொல்லலாம்.

ஆனால் குழந்தை இல்லனா கணவன் நிலையில் பிரச்சனை இருக்கா?

மனைவி நிலையில் பிரச்சினை இருக்கா ?என்பதை பார்க்கணும்.

ரொம்ப ரொம்ப கவனமாக பார்த்தால் தான் இதை சொல்லமுடியும்.

 

எல்லாரும் என்ன சொல்றாங்கனா, சார் நா நிறைய தடவ டாக்டர் பார்த்த, 2 தடவ டெஸ்டியூப் பேபி வச்சி பாத்த , ஆனால் எதுவும் நடக்கல இதனால் பொருளாதார செலவு ஒரு பக்கம், மன உளைச்சல் , உடலில் வேதனை இதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்.

 

இதை பற்றி நிறைய நிகழ்வுகள் நான் ஆய்வு செய்தபோது , இரண்டு பேருவுடைய நிலையிலும் பிரச்சனை இருக்கும். மருத்துவம் என்று போய்ட்டால் பெண்ணுடைய பலமாக இருந்தால் கூட கருமுட்டை எடுத்து வளர்த்து கரு உண்டாக்கலாம்.

அதனால் பெண்ணுடைய ஜாதகத்தை முதலில் பார்க்கணும்.

 

 

இதுவே ALP லக்னம் மேஷ லக்னம் ஒருவருக்கு வந்தால் ,எப்பொழுதும் சனிபகவான் பல படனும். ஏன்னா? சனி பகவான் எங்கு இருக்கு என்று பார்த்துட்டு தான் பலன் சொல்ல முடியும். சனி பகவான் இருந்தால் சூரியனுக்கும் சனிக்கும் உள்ள தொடர்பு பார்கனும். சனி பகவானும், சூரியபகவானும் 6,8 ல் சஷ்டாஷ்டகமாக இருந்தால்,குழந்தை பிறப்பு, மருத்துவம் மூலமாக குழந்தை பிறப்பு ரொம்ப ரொம்ப கடினம்.

 

ALP ரிஷப லக்னம் வந்தால் இதற்கும் சனிபகவான் பலபடனும்.இல்லைனா ரொம்ப கஷ்டம்.புதனுக்கும் சனிக்கும் உள்ள தொடர்பு , புதனும் சனியும் Alp ரிஷப லக்னத்திற்கு 6 ல் இருந்தால், மருத்துவ செலவு உண்டு

அதுவே அட்டமத்தில் இருந்தால் எதிர்பார்த்த மாதிரி இருக்காது.

அகவும் ரிஷப லக்னத்திற்கு புதனும், சனியும் 11 ல் இருந்தால் குழந்தை பிறப்பு கிடையாது.

Alp முறையில் குழந்தை பிறப்பு வாய்ப்பு இருக்கு என்று சொல்ல காரணம் ஒரு கிரகம் பலமாக இருந்தால் வாய்ப்பு இருக்கு என்று சொல்லுவோம்.

2 கிரகம் பலமாக இல்லைனா இதற்கு முயற்சி செய்ய வேண்டாம்,வேற ஏதாவது தத்து குழந்தை எடுத்துக்கோங்கனு சொல்லிடுவோம்.

2 கிரகம் நல்லா இருந்தால் முயற்சி செய்யுங்கள், டாக்டர் அறிவுரை கேட்டுகோங்க.

அறிவியலுடைய அமைப்பு இன்றைக்கு நிறைய வளர்ச்சியடைந்துவிட்டது.

காரண காரியங்கள் சில பேருக்கு முன்கூட்டியேசில விஷயங்களை சொல்லும்.

 

முதலில் குழந்தை பிறப்புனா குரு பலப்படனும்.குரு பகவான் பலபட்டால் மட்டும்தான் அந்த குழந்தை பிறப்பு ஆத்மார்த்தமாக சந்தோஷமாக இருக்கும்.

இல்லை எனக்கு குருநீசமாக இருக்கு, குரு ராகுவோட சேர்ந்திருக்கு,இப்படி குரு ஏதாவது ஒரு கிரகத்தோடு சேர்ந்து இருந்தால்,

குருவும் சூரியனும் சேர்ந்திருந்தால் குழந்தை பிறப்பில் பெரிய அழுத்தத்தை கொடுக்கும்.

அப்படி ஒரு நிகழ்வு இருக்கு. ஆனால் எனக்கு குழந்தை பிறந்துட்டு

அப்படி சொன்னாங்கன்னா?

 

குழந்தை பிறப்பு பிறந்த பிறகு குழந்தை மூலமாக தண்டனை அனுபவிக்க வேண்டும் ஜாதகர் என்பது விதியாக இருக்கும்.

குரு பலபட்டால் மட்டும்தான் வம்சவிருத்தி என்பது ஒரு ஆணுக்கு செவ்வாய் பலப்படனும் , ஒரு பெண்ணுக்கு சுக்ரன் பலப்படனும் ,குழந்தைன்னா குரு பலப்படனும் இந்த மூன்று கிரகம் பலபட்டால் மட்டும்தான் குழந்தை பிறப்பு திருப்தியாக இருக்கும்.குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

 

ALP மிதுன லக்னம் வந்தால் எப்பொழுதும் சுக்கிரனும், குருவும் பல படனும்.

சுக்கிரன் குரு பலப்பட்டால் கொஞ்சம் வாய்ப்பு கொடுக்கும்.

இல்லை சுக்கிரன் – குரு 6, 8 ,10 ,12 இல் இருந்தால் அந்த குழந்தை பிறப்பு எதிர்பார்த்தது போல் இருக்காது.

 

ALP கடகலக்னம் வந்தால் ,செவ்வாய் பல படனும்.

கடக லக்னத்திற்கு செவ்வாய் பலப்பட்டால் குழந்தை பிறப்பு நல்லா இருக்கும்.

கடக ராசி பொருத்தவரை சந்திரன் செவ்வாய் ஜாதகருடைய உடம்பு வீக்கா இருக்கும்.சாப்பிட மாட்டாங்க, சாப்பிட்டாலும் சரியாக சாப்பிட மாட்டாங்க,உடம்பு அவங்களை கெடுத்துக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுவாங்க.,சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்க.

 

ALP சிம்ம லக்னம் வந்தால், குரு பலபட்டால் கண்டிப்பாக பெரிய யோகத்தை கொடுத்துவிடும். அவர்கள் இருக்கக்கூடிய இடத்தாலேயே பிரச்சனையாகும்.

சிம்ம லக்னத்திற்கு உடம்பில் பிரச்சனை ஒரு பக்கம்,

அதேபோல் பெண்ணாக இருந்தால் நீர் கட்டி, நீங்குமிழி மூலம் பிரச்சனை,

ஆணாக இருந்தால் ஆணாலே பிரச்சனை வரும்.

அதுபோல் கனவு கற்பனைகள், ஆசைகள் மூலமாக கற்பனை மூலமாகவே வாழ்க்கை நடத்தக்கூடிய அமைப்பு சில நேரத்தில் உண்டுபன்னும்.

அந்த கற்பனைகள் மூலமாகவே குழந்தை பிறப்பு தள்ளிப் போகும்.

குரு பலப்பட்டால் மட்டும் தான் யோகத்தை கொடுக்கும்.

குரு சுக்ரன் சப்போர்ட் பன்னால் நல்லா இருக்கும்.

 

ALP கன்னி லக்னம் வந்தால், புதனும் சனியும் பலப்படனும். புதன் – சனி பலப்பட்டால் , புதன் சனி 6, 8,ல் இல்லாமல் இருந்தால் மருத்துவத்தின் மூலமாக குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு.

 

ALP துலாம் லக்னம் வந்தால் , சனியும் சந்திரனும் 10 வருட காலம் ALP லக்னத்தில் போனால் மிகமிக கவனமாக இருக்கனும். படுத்தி எடுக்கும்.

துலாம் லக்னக்காரர்கள் தான் குழந்தை தத்து எடுத்துடுவாங்க.

மேஷம், துலாம் தத்து பிள்ளை எடுப்பதில் முதலில் இருக்கும்.

ரொம்ப கஷ்டமாக இருக்கும் சில நேரம் தத்து பிள்ளை எடுக்கும் யோகத்தை கொடுக்கும், சில நேரம் தத்து பிள்ளை எடுத்து அவயோகத்தையும் கொடுக்கும்.

 

ALP விருச்சிக லக்னம் வந்தால், குரு பலப்படனும். விருச்சிக லக்னம் வந்தால் உடல் உபாதைகள் மூலம் தான் பிரச்சனை இருக்கும்.

உடலில் பிரச்சனை இருக்கும்.

விருச்சிகத்தில் வரும்பொழுது முழுக்க முழுக்க உடலில் தான் பிரச்சனை.

உடலில் கொடுக்ககூடிய சக்தி, பெறக்கூடிய சக்தி, தாங்கக்கூடிய சக்தி இருக்காது.

 

ALP தனுசு லக்னம் வந்தால் , செவ்வாய் பலப்படனும். செவ்வாய் பலப்பட்டு, புதனும் பலப்பட்டால் இந்த நேரத்தில் டாக்டரிடம் அணுகுமுறைகள் மூலமாகவே தடைபடும். சரியாக டாக்டர் சொன்னதை பின்பற்றினால் யோகம் உண்டு.

 

ALP மகரலக்னம் வந்தால், சுக்ரன் பலப்படனும், சுக்ரன் பலப்பட்டால் மகர லக்னத்திற்கு யோகத்தை கொடுக்கும்.

 

ALP கும்பலக்னம் , புதனும் செவ்வாயும் சம்பந்தப்பட்டால் ஏதோ ஒரு வகையில் பலமாக யோகத்தை கொடுக்கும். அறுவை சிகிச்சை, செயற்கை கருவூட்டல் மூலமாக தான் குழந்தை பிறக்கும்.

 

ALP மீன லக்னம் சந்திரனும் குருவும் சம்பந்தப்படனும், இது எதிர்பாரத யோகத்தை கொடுக்கும். சில நேரத்தில் இவர் களுக்கு வைக்கக்கூடிய குழந்தைகள் இரட்டை குழந்தையாக பிறக்கும் அமைப்பு இருக்கு.

 

வழிபாடு:

மருத்துவம் என்றால் தன் வந்திரி பகவான், அதில் பைரவர் வழிபாடு மட்டும்தான். வேறு ஒன்றும் இல்லை.

 

குழந்தை இல்லாதவர்கள் காலையில் 4:30 to 6 தலை குளிச்சிடனும்.

ஏன்னா இவர்களுடைய உடல் உஷ்ணம் அதிகரிக்க அதிகரிக்க கர்பப்பை வீக்காகும்.

அடிக்கடி தலைமுடி இறுக்கி பின்னி போடணும் என்று சொல்வேன். ஏன்னா? அந்த காலத்தில் தலைமுடி இறுக்கி பின்னினால் கர்பப்பை சந்தோஷமாக இருக்குமாம். தலைவிரிச்சி போட்டால் உஷ்ணம் அதிகமாகும்.

அதே போல் அந்த காலத்தில் கோலம் போடும் பொழுது பெண்களுக்கு கர்பப்பை விரிவடையும்.

மருதாணி அதிகமாக கை, கால் ல் போடுவாங்க,

நெற்றியில் பொட்டு குங்குமப்பொட்டு வக்கிறது

அந்த காலத்தில் இதெல்லாம் பன்னுவாங்க

இந்த காலத்தில் குல தெய்வம், குரு ஆசிர்வாதம் வேணும்.

ஆத்மார்தமாக திருப்தியாக வாழணும்னா அப்பா அம்மா ஆசிர்வாதம் வேணும்.

 

நன்றி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *