அட்சய லக்ன பத்ததியில் எப்படி பிறந்த நேரத்தை வைத்து துல்லிதமாக சொல்லமுடியும்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நீங்கள் கொடுக்க கூடிய பிறந்த நேரம் சரியாக இருக்க வேண்டும்.
பிறந்த நேரத்தை சரியாக அமைத்தால் நாங்கள் சொல்லக்கூடிய பலன் சரியாக இருக்கும்.

அட்சய லக்ன பத்ததியில் எப்படி பிறந்த நேரத்தை வைத்து துல்லிதமாக சொல்லமுடியும் என்பதை ஆய்வு செய்கிறோம்.ஆய்வு முறைகள் எந்த அளவிற்கு துல்லிதமாக இருக்கிறது என்பதை எங்களால் உணர முடியும்.
ஏன்னா?
கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிடு செய்யும் பொழுது, இந்த ஜாதகம் இந்த கிரகங்களோடு ஒப்பிடும் பொழுது, இந்த தசாபுத்தி ஒப்பிடும்போது ,இந்த அட்சய லக்கனம் செல்லும் பொழுது, இந்த
லக்கன புள்ளி செல்லும் போது இது நடந்ததது அப்படின்னா? அந்த ஜாதகர் கொடுத்த 5 மணி 45 நிமிடம் சரி.
5 மணி 45 நிமிடம், 5 மணி 42 நிமிடமாக கணக்கிடப்பட்டால் 8 வது மாதம் 5 வது மாதம் ஆகும்.

கல்யாண தேதியை வைத்து எளிதாக கூறமுடியும்.பிறந்த தேதி, பிறந்த நேரம், கல்யாண தேதி இதை கொடுத்தால் 1, ,7 , ஜனன லக்னத்திற்கோ அட்சய லக்னத்திற்கோ சம்பந்தப்பட்டால் அவர்களுக்கு கல்யாணம் நடந்திருக்கும்.இல்லை என்றால் கல்யாணம் நடந்து இருக்காது. இதுதான் அட்சய லக்ன பத்ததியை பொருத்தவரை என்னுடைய ஆய்வு.

உதாரணமாக அட்சய லக்கனத்திலும் செல்லாமல், அட்சய புள்ளியிலும் செல்லாமல்,நேரத்தை ஒரு சில நிமிடங்கள் குறைத்து வைத்து அட்சய லக்ன பத்ததி மூலம் பலன் சொல்ல முடியும்.
இந்த மாதிரி ஒரு சில விஷயங்களை அட்சய லக்ன பத்ததி மூலம்தான் மிக துல்லிதமாக கூறமுடியும்.

இன்று எளிதாக அட்சய லக்ன பத்ததி மென்பொருள் மூலம் பிறந்த இடம் ,பிறந்த நேரம்,
பிறந்த ஊர், கல்யாண தேதி கொடுத்து உங்கள் ஜாதகத்தை எளிதாக ஆய்வு செய்யலாம்.

அட்சய லக்ன பத்ததியில் ஒரு சில விஷயங்களை வைத்து மாறின தூரம் எவ்வளவு சரியாக இருக்கு என்பதை நம்மால் உணர முடியும்.
கடந்த கால நிகழ்வுகள் சரியாக இருந்தால் மட்டும் தான் எதிர்காலம் பலன்களை நம்மால் சரியாக கூற முடியும்.
துல்லிதமாக மாற்றியமைக்கக்கூடிய முறை அட்சய லக்ன பத்ததியில் மிக எளிமையான முறை.

அட்சய லக்னபத்ததி முறையில் பிறந்த ஊர் ,பிறந்த இடம், பிறந்த தேதி ,பிறந்த நாள், பிறந்த நேரம் வீட்டில் கடைசியாக நடந்த சுப நிகழ்வுகள் , துயர சம்பவங்கள் இதை வைத்து ஜாதகம் உண்மையா? பொய்யா? என்பதை அட்சய லக்ன பத்ததி முறை மூலம் சரியாக கூறமுடியும்.
நன்றி, வணக்கம்.

ஒரு ஜாதகருக்கு பணம் எப்படி வரும்?

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் நிறைய விஷயங்களை ஆய்வு செய்கிறோம்.

இன்றைக்கு அட்சய லக்ன பத்ததி முறை மூலம் ஒரு ஜாதகருக்கு பணம் எப்படி வரும்?
அட்சய லக்கனம் என்பது ஒரு லக்னம் நகர்வது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஜென்ம லக்னம் மேஷம்,
யாரோ ஒருவருக்கு மட்டும் அந்த சூத்திரம், அந்த வழிமுறைகள், தெரிந்து வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இருப்பார்.
ஆனால் கடவுள் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பார், வரம் கொடுப்பார், அதை தெரிந்து நாம் செயல்படுவது நம் கையில் தான் உள்ளது.

பூட்டும், சாவியும் வெவ்வேறு கையில் இருக்கும் அதை இணைப்பது தான் நம்முடைய வாழ்க்கை முறை.

நம்முடைய எண்ணங்களும், செயல்பாடுகளும் இணைந்து செயல்படும் பொழுது காலங்கள் நமக்கு வழி கொடுக்கும்.
இந்த காலம் தான் நம்முடைய அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை.

காலத்தில் ஏற்படக்கூடிய செயல்முறைகள் சரியாக இருந்தால் ஜெயித்து விடுவார்கள்.
இடத்திற்கு தகுந்த மாதிரி நம்முடைய பொருளையும்,நம்முடைய லாபத்தையும்,நம்முடைய வழிமுறைகளும் மாற்றினால் மட்டுமே ஜெயிக்க முடியும்.

ஒருவர் மட்டும் ஜெயிப்பதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கையின் வழிமுறைகளை தெரிந்து வைத்திருப்பார்கள்.

மேஷ லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு
வயது 29.
இப்பொழுது மிதுனலக்னம்.
மிதுன லக்னத்தின் 2ம் அதிபதி சந்திரன்.மேஷ லக்னத்திற்கு 2ம் அதிபதி சுக்கிரன்.சுக்கிரனையும் ,சந்திரனையும் நினைத்து வழிபட வேண்டிய விஷயம். இரண்டுமேபெண் தெய்வம் ஆக இருக்கு. மகாலட்சுமி, பத்மாவதி தாயார்.
அப்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பெருமாள் சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு வெள்ளிக்கிழமை,திங்கட்கிழமை செல்லவேண்டும்.
திங்கட்கிழமை சோமவார நாள் நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் சிவபெருமான் இல்லை தாயார் சன்னதிக்கு செல்லலாம்.
காலத்திற்கு தகுந்த மாதிரி இந்த தெய்வத்தை வணங்கினால் பலன் கிடைக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் செலவு செய்யக் கூடிய வழிமுறைகளை பொருத்து பணம் நம்மிடம் வந்து கொண்டு இருக்கும்.

மேஷ லக்னத்திற்கு சுக்கிரன், சந்திரன் என்பது வெண்மை, வெள்ளை என்று வரும்.
வெள்ளை கிளாஸ் டம்ளரில் தண்ணீர் வைத்து வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை உங்களுக்கு தெரிந்த ஸ்லோகத்தை கூறி அந்த தண்ணீரை பருகினால் எளிதாக பணம் சேரும்.

சுக்கிரனும் ,புதனும் சேரும் பொழுது கண்டிப்பாக அந்த நாளில் நீங்கள் பணம் பற்றி பேசி இருக்க வேண்டும், பணம் வாங்கி எண்ணியிருக்கலாம் ஏதாவது ஒரு விஷயம் வாழ்க்கையில் நடந்து இருக்கும்.
இந்த மாதிரி ஒவ்வொரு 12 லக்னத்திற்கும் மேஷ ராசியிலிருந்து மீனம் ராசி வரை பலன் எடுக்க வேண்டும்.

“வழி தெரியாமல் நாங்கள் தேடலே ஆனால் வழி தெரியல” என்பதுதான் இங்கு பொருள்.
வீட்டு தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை சந்திர ஹோரையில் வழிபாடுகள் செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இந்த நாட்களில் சந்திரனும் ,சுக்கிரனும் சம்பந்தப்படும்போது பணம் வந்திருக்கும்.

ஜோதிடர்களுக்கு மட்டும் இல்லாமல்
பொது மக்களுக்கும் இந்த அட்சய லக்ன பத்ததி நல்ல பலன்களை கொடுக்கும்.
நல்லதொரு நிகழ்வு அமையட்டும்.
நன்றி, வணக்கம்.

இந்த காலத்து ஆண்கள் கிழிந்த ஆடையை அணிகிறார்கள்.கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கை முறையில் நிறைய கஷ்டப்படுவார்கள்.

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
என்னிடம் ஒரு நண்பர் கேட்ட கேள்வி:
இந்த காலத்து ஆண்கள் கிழிந்த ஆடையை அணிகிறார்கள். இதற்கு என்ன கிரகங்கள் வருது.

என்னை பொறுத்தவரையில் இதற்காக பொருள் விரயம் செய்கிறோம்.அதிகமாக செலவு செய்து அந்த ஆடையை அணியும் பொழுது அவர்களுக்கு சுக்கிரனுடைய தன்மை அதாவது பணத்துடைய மோகம் பணத்துடைய ஆதிக்கம் அவர்களுக்கு குறைவாக இருக்கும்.

கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கை முறையில் நிறைய கஷ்டப்படுவார்கள்.
கலாச்சாரம் மாறிவிட்டது என்று நினைத்து நீங்கள் அந்த ஆடையை அணிந்தால் கண்டிப்பாக சுக்கிரனுடைய அமைப்பு பாதிக்கப்படும்.

சுக்கிரன், சனி சம்பந்தப்பட்ட விஷயங்கள் பாதிக்கப்படும் பொழுது கண்டிப்பாக மனம் சார்ந்த விஷயங்கள், உடல் சார்ந்த விஷயங்கள் கண்டிப்பாக ஜாதகர் சந்திக்கக்கூடும்.
இந்த மாதிரி ஆடைகளை அணிவதால் கண்டிப்பாக பிற்காலத்தில் அவர்கள் நிறைய கஷ்டப்படுவார்கள்.

உடைகள் எப்படி தேர்ந்தெடுக்கிறோமோ அதேபோல்தான் வண்ணங்களும், வண்ணங்களை பொறுத்து தான் உடல் இயங்குகிறது.

இந்த உலகத்தில் இரண்டு விஷயங்கள்தான் 1.வெளிச்சம்
இன்னொன்று நம் காதால் கேட்கக்கூடிய 2.சத்தம்
வெளிச்சமும், சத்தமும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் முக்கியமானவை. நீங்கள் போடக்கூடிய சட்டைகள்,அணிகலன்கள் வண்ணங்கள்,நம் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாகும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி ,வணக்கம்.

லக்னபுள்ளி விபரீத ராஜ யோகத்தை கொடுக்கும்.

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததியில் விபரீத ராஜ யோகம் யாருக்கு?
10 வருடத்திற்கு ஒருமுறை லக்ன புள்ளியை நகர்த்தி பலன் பார்ப்பதுதான் அட்சய லக்ன பத்ததி.
நாம் பிறக்கக்கூடிய நாளிலிருந்து
லக்கன புள்ளி ராசியில் எப்படி இருக்கு, நவாம்சத்தில் எப்படி இருக்கு, என்பதை பொறுத்துதான் அட்சய லக்ன பத்ததி.

ஜாதகத்தை ஆய்வு செய்யும் பொழுது அதில் தெரிந்த விஷயம் என்னன்னா? லக்னபுள்ளி விபரீத ராஜ யோகத்தை கொடுக்கும்.

உதாரணமாக தனுசு லக்னத்தில் பிறக்க கூடிய ஒருவருக்கு லக்னம் கும்பம்.கும்ப லக்னம் வரும்பொழுது ஒரு விபரீத ராஜயோகத்தை அடைகிறார்.
கும்ப லக்னத்தில் அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் இருக்கும்.
அவருடைய லக்ன புள்ளி சதய நட்சத்திரத்தில் செல்கிறது.சதய நட்சத்திரம் செல்லும்பொழுது அவர் பிறக்கக்கூடிய ராசி கன்னி.தசா புக்தி ராகு திசையில் செல்கிறது.
ஜாதகருக்கு நகர்ந்து வரக்கூடிய அட்சய லக்ன புள்ளி கும்பம், அங்கு லக்னபுள்ளி சதயம் நட்சத்திரத்தில் ராகு,ராசியுடைய அமைப்பில் சுவாதி நட்சத்திரத்தில் செல்லக்கூடிய ராகு, பிரம்மாண்ட யோகத்தை கொடுத்திருக்கிறது.தசா புத்தியில் அந்த காலகட்டத்தில் 12 பாவங்களும் எங்கு இருந்தாலும் யோகத்தைக் கொடுக்கும்.

12ல் இருந்தால் சுப யோகங்கள் கொடுக்கிறது.
8ல் இருந்தால் விபரீத ராஜ யோகத்தை கொடுக்கும்.
3ல்இருந்தால் மக்கள் தொடர்பான அரசியல் யோகத்தைக் கொடுக்கும்.

சூரியன் நீச்சமாக இருந்தாலும் அதிகமான அரசியல் அமைப்பை கொடுக்கக்கூடிய காலமும் உண்டு.

விபரீத ராஜ யோகம் என்பது அட்சய லக்ன புள்ளியும், தசா புத்தியும்,இரண்டும் ஒரே கிரகங்களோடு ஒத்துப் போனால் விபரீத ராஜ யோகத்தை கொடுக்கும்.

ரோகிணி,அஸ்தம் ,திருவோணம் இந்த மூன்று நட்சத்திரங்களில் அட்சய லக்ன புள்ளி செல்ல அன்றைக்கு தசா புத்தியில் சந்திரன் நடப்பில் இருந்தால் கட்டாயம் விபரீத ராஜ யோகம் உண்டு.

இந்த உலகத்தில் பிறக்கக் கூடிய அனைவருக்கும் முயற்சி உண்டு. ஆனால் எல்லோருக்கும் முயற்சி கிடைப்பதில்லை. முயற்சி ஏதோ ஒரு விதத்தில் தடைபடுகிறது, மறுக்கப்படுகிறது,மறைக்கப்படுகிறது.

ராசியும்,லக்னமும் ஒரே நேர் கோட்டில் பயணிக்க கூடிய காலம் பிரம்மாண்டமானதாக, அரசியல் வாழ்க்கையிலும் திடீர் யோகத்தை கொடுக்கும் என்பதை நாங்கள் ஆய்வு செய்யும்பொழுது நாங்களே பிரமிக்க கூடிய ஒரு விஷயமாக இருந்தது.
கண்டிப்பாக வாழ்க்கையில் ஆய்வு செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு ஒரு மாற்றம் உண்டு.விபரீத ராஜ யோகம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

அட்சய லக்ன பத்ததியில் ஒருவருக்கு எப்படி பலன் பார்க்கப்படுகிறது?

அன்பே சிவம், அன்பே ஆனந்தம், அன்பே வாழ்க்கை,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் அட்சய ராசி என்ற இரண்டாவது நூல் வெளிவந்துள்ளது.

இந்த அட்சய லக்ன பத்ததியில் லக்கனம்  வளரக்கூடிய தன்மைகளும், ராசி வளர்ந்து அதனுடைய பலன்கள் எப்படி இருக்கும் என்ற தன்மைகளும் இரண்டாவது புத்தகத்தில் வெளியிட்டுள்ளேன்.

அட்சய லக்ன பத்ததியில் ஒருவருக்கு எப்படி பலன் பார்க்கப்படுகிறது?

லக்னம் மேஷ லக்னம், அவருடைய 30 வயதில் மிதுன லக்னம்,மிதுன லக்னத்திற்கு தசாபுத்தி பார்க்கணும்.

இன்றைக்கு நடக்கக்கூடிய தசாநாதன் ,புத்தி நாதன் எங்கிருந்து இயக்குகிறார் என்பதை பார்க்கணும். இதுதான் நம்முடைய அட்சய லக்ன பத்ததி பார்க்கப்படுவது.

இதை வைத்தே ஜாதகத்தை ஆய்வு செய்யலாம்.

உதாரணமாக, மிதுன லக்னத்திற்கு ராகு திசை நடக்கிறது. பிறந்த கன்னி ராசி. இன்றைக்கு துலாம் ராசியில் அட்சய ராசி இயங்குகிறது.

ராகு திசை அட்சய லக்னத்திற்கு 5ம் வீட்டை இயக்குகிறது. ஆனால் இந்த ராகு பகவான் ,உதாரணமாக அட்சய லக்கினத்திற்கு 11ல் நிற்கிறது.

அவர் எதிர்பார்த்த யோகங்கள், எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாமே பெரிய பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கும்.

மிதுன லக்னத்திருந்து 5ம் இடத்தை சுவாதி நட்சத்திரத்தில் இருந்து ராகு தசை இயக்குகிறது. தசை நாதன் ராகு 11-ல் இயக்குறார். கோடி கோடியான செல்வம் கோடி கோடியான பிரம்மாண்டத்தை கொடுக்கக்கூடிய காலமாக இது அமைகிறது.

30 வயதிற்குள்ளேயே இந்த ஜாதகருக்கு பெரிய கோடிஸ்வரன் ஆகும் வாய்ப்பு உள்ளது.

குருதிசை வரக்கூடிய காலகட்டத்தில் முதல் மூன்று பாதங்கள் விசாகம்1, விசாகம்2, விசாகம்3, செல்லக்கூடிய காலகட்டத்தில்

3,6க்குடையவன் ராசியிலிருந்து லக்கனம் கடக லக்கனம், ஆக மாறுகிறது. கடக லக்கினத்திற்கு  6ம் வீட்டில் குருபகவான் நடத்துவார்.

குருபகவான் கடக லக்கினத்திற்கு 9ம் வீட்டிலிருந்து நடத்துவார்.இதனால்

எதிர்பாராத யோகம் உண்டாகும்.நாலைந்து கட்டிடங்கள் கட்டி பெரிய கோடீஸ்வரனாக வாழ்வார். மேஷ லக்னம் ஜென்ம லக்னம் ,ALP லக்னத்திற்கு 12ல் குரு. அதனால் யோகத்தை செய்யாது.

கடக லக்னத்தில் 9ம் இடத்தில் இருந்து குரு, தசாநாதன் யோகத்தை கொடுப்பார் என்பது தான் அட்சய லக்ன பத்ததியில் என்னுடைய ஆய்வு.

ஒவ்வொரு காலமும் மாற மாற, வயது மாற மாற ,அவர்களுடைய வாழ்க்கை ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

வயது மாற்றம் கொடுக்கும்போது அட்சய லக்னம் அதற்கு தகுந்தார்போல் பலனை கொடுக்கும்.

  • 20 வயதில் சுக்கிர திசை வருவதற்கும்,
  • 60 வயதில் சுக்கிர திசை வருவதற்கும்,
  • 80 வயதில் சுக்கிர திசை வருவதற்கும் யோகம் உண்டு.

ஒருவருக்கு 40 வயதில் சுக்கிர திசை வரும் பொழுது ஓரளவு வளர்கிறார். 80 வயதில் கோடீஸ்வரன் ஆகிவிடுகிறார்.

மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கக்கூடியது இந்த அட்சய லக்கனம், எங்கிருந்து யார் இயக்குகிறார் என்பதுதான்.

அட்சய லக்னத்திற்கு அடுத்த அதிபதி யார் இயக்குகிறார். உதாரணத்திற்கு கடக லக்னத்திற்கு அடுத்த 10 வருட அதிபதி சந்திரன். அதனால் யோகமாக இருக்கும்.அதற்குள் இருக்கக் கூடிய நட்சத்திரங்கள் புனர்பூசம் ,பூசம், ஆயில்யம். இந்த மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர அதிபதிகள் பலமாக அமையவேண்டும். குரு,சனீஸ்வரன், புதன்.இந்த 3 கிரகங்களும் பலமாக அமைந்தால் மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும், மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.

மூன்று கிரகங்களும் சந்திரனுக்கு 6 ,8 , 12ல் மறைந்தால் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இந்த ஜாதகருக்கு யோகத்தை கொடுக்காது.

எந்த பாதையில் அதிகமா வெற்றி கிடைக்கும் என்பதை அடுத்த நிகழ்வில் பார்ப்போம்.

நல்லதொரு நிகழ்வே அமையட்டும்.

நன்றி ,வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/fBQLemFc-vE