வாழ்க்கையை பல கோணங்களில் துணிலியமாக கணிக்கும் நவீனமுறைதான் ALP ஜோதிடம் | PART -1|

வாழ்க்கையை பல கோணங்களில் துணிலியமாக கணிக்கும் நவீனமுறைதான் ALP ஜோதிடம் | PART -1

அனைவருக்கும் வணக்கம் நம்முடைய வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்குமா? இல்லை பாதுகாப்பு இருக்குமா? என்பதை நாம் இன்றைக்கு தேடிக்கொண்டிருக்கும் ஒரு விசயம். இதுபோன்ற நிகழ்வுகளை நம் வாழ்வில் கணித்து கூறமுடியுமா? என்பது ஒரு கேள்விகுறியான செயலாகவே உள்ளது. இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் துல்லியம் என்பது ஒரு அறிதான விசயமாக போய்கொண்டு இருக்கிறது, இந்த சூழ்நிலையில் நம்முடைய எதிர்காலத்தையும் கடந்தக்காலத்தையும் தற்போது நடக்கும் நிகழ்வுகளையும் மிகவும் எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் மிக மிக துல்லியமாகவும் கணித்து கூறக்கூடிய ஒரு அற்புதமான ஜோதிடமுறைதான் அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடம்.

நம் அன்றாட வாழ்க்கையில் அனைவரும் ஜோதிடத்தை அடிப்படையாய் கொண்டே அனைத்து நிகழ்வுகளையும் திட்டமிடுகிறோம் ஆனால் இவை எல்லாம் சரியாக நடக்கிறதா? இல்லையா? என்பது நம் அனைவரின் மனதில் உள்ள கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்விகளை அனைத்தையும் ALP ஜோதிட முறையினை கண்டுபிடித்த அய்யா, முனைவர் சி. பொதுவுடைமூர்த்தி அவர்களிடம் கேட்டபொழுது அவர் நமக்காக சில பதில்கள் அளித்தார், வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனிடமும் தேடல் என்பது இருந்துகொண்டேதான் இருக்கிறது நாளை என்ன? அடுத்து என்ன ? இப்படி கேள்விகள் அடுக்கடுக்காக இருந்து கொண்டேதான் இருக்கிறது, அறிவியலையும் கடந்து இந்த நம்பிக்கை வீண் போகாமல் இருக்க ALP அட்சய லக்ன பத்ததி என்ற ஓர் அற்புதமான ஜோதிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக முனைவர் சி.பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்கள் கூறினார்கள். மேற்கொண்டு அவர் நம்மிடையே காலநிலை மாற்றங்கள் பருவநிலை மாற்றங்கள், வானிலை மற்று பிரபஞ்ச நிகழ்வுகளையும் அதன் நகர்வுகளையும் விரிவாக எடுத்து கூறினார்கள். நாம் எப்படி பேசுவது என்பது முதல் எந்த ஆடையினை அனியவேண்டும் போன்ற நம்பிக்கை சார்ந்த செயல்களையும் எடுத்து கூறினார்கள். மேலும் பிரபஞ்சம் என்பது பல வண்ண ஒளிகளால் நிரம்பியுள்ளது என்றும் கூறினார்கள். மேலும் ஜோதிடம் என்பது மூட நம்பிக்கையா? என்ற கேள்வியும் அவரிடம் கேட்டபொழுது, அதற்கு பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்கள் கூறிய பதில்கள், அனைத்திலும் கடவுள் இருக்கிறார் அவர் கிரகங்கள் இருக்கும் இடத்தை பொருத்து அவரவர் செயல்களுக்கு ஏற்றவாறு நன்மைகளையும், சோதனைகளையும் தருகிறார் என்றும் மாற்றம் தரக்கூடிய அனைத்தையும் மாற்றுவார் என்றும் கூறினார்கள். மேலும் அவர் “உணர்வதும் உணர்த்துவதும்தான் வாழ்க்கை” என்பதையும் நம்மிடையே ஆழமாக பதிவிட்டார்.

 

https://youtu.be/5E1nEb-OgQ4

ஒவ்வொரு 10 வருடமும் லக்னம் நகரும்.

வணக்கம்
ALP ஜோதிட முறை:
இது பாரம்பரிய ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சி.
யுகமாக யுகமாக உள்ள ஜோதிடத்தை அடுத்த
நிலைக்கு அதாவது, இன்றைய காலகட்டத்திற்கு உடனடியாக பலன் சொல்லக்கூடிய ஒரு துல்லியமான முறை.
இந்த ஜோதிட முறையை கண்டுபிடித்தவர்
திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா, அவர்கள்,
Sir, என்ன சொல்றாங்கனா மனிதருடைய ஆயுள் 120 வருடம், 12 கட்டம் இருக்கு,
ஜென்ம லக்னம் எங்கு இருக்கிறதோ அங்கிருந்து இந்த 12 கட்டத்திற்கும் ஒரு 120 வருட காலத்தில்
பரவி வரும்பொழுது இந்த ,இந்த நிகழ்வுகள் இப்போ இப்போதான் நடக்கும் என்று துல்லியமாக சொல்லமுடியுது.
இதைப்பற்றிய நிறைய Videos youtube-ல்
இருக்கு. நீங்கள் அதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
ஆனால், உங்கள் வயதிற்கேற்றது போல் லக்னம் மாறும்.என்பது தான் முக்கியம்.
ஒவ்வொரு 10 வருடமும் லக்னம் நகரும்.
ஆச்சரியமாக இருக்கா! வாங்க பார்க்கலாம்.
ALP ஜோதிட முறையை கண்டுபிடித்த
திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் , வீட்டிற்கு ஒரு ஜோதிடர் என்ற முடிவு எடுத்திருக்கிறார்.
ஏன்னா? வீட்டிற்கு ஒரு ஜோதிடர்,
என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் வழிநடத்தக் கூடிய அளவிற்கு இருக்கணும்.
ஏன்னா? நம் பிரச்சனை நமக்கு தான் புரியும்.
இன்னொருவருக்கு எந்த அளவிற்கு புரியும் என்று சொல்லமுடியாது.
அப்போ,சூழ்நிலை,பிரச்சனையை சரியாக புரிந்து கொண்டு,
அதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கனும்னா ?
உங்கள் பிரச்சனையை சரியாக புரிந்து கொண்டவர்கள் வீட்டில் இருப்பவர்கள் தான்.
வீட்டிற்கு ஒரு ஜோதிடர் வரணும்.
என்பதுதான் அவருடைய லட்சியம்.
ஏன்னா? அவருடைய கண்டுபிடிப்பை அவர் மட்டும் பயன்படுத்தாமல்,எல்லாருக்கும் பயன்படும்படி இருக்கனும் என்றுதான் இந்த வகுப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
நீங்கள் இந்த ALP முறையை வெறும் 15 Class -ல்
நீங்கள் இதில் தேர்ச்சி பெற முடியும்.
இந்த வகுப்பு எப்பொழுது நடக்கும் என்றால்?
அதிகாலை 4:32 to 7 .
ஏன் இந்த நேரம் ?
இந்த நேரம் நம்முடைய மனம் தெளிவாக இருக்கும்.
உங்களுக்கு தொந்தரவு எதுவும் இருக்காது. வேறு எந்தகவனச்சிதறலும் இருக்காது.
உங்களுடைய கவனம் முழுவதும் இங்கு இருக்கும்.
நீங்கள் கவனமாக இருந்தால் மட்டும்தான் இந்த ஜோதிட முறையை கற்றுக் கொள்ள முடியும்.
அதனால்தான் இந்த நேரம்.
ஜோதிடம் கற்றுகொள்ள எனக்கு தகுதி இருக்கா? என்று ஒரு பொதுவான கேள்வி கேட்கறாங்க.
ஜோதிடம் கற்றுக்கொள்ள தகுதிகள் தேவையில்லை.
ஏன்னா? இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட விஷயம்.
நான் சம்பாதிக்க முடியுமா?
நான் வண்டி ஓட்ட முடியுமா?
இந்த மாதிரி கேள்வி அது.
எல்லாராலும் வண்டி ஓட்ட முடியும்,
எல்லாராலும் சம்பாதிக்க முடியும்,
அதற்கான ஒரு திறன் இருக்கு,
அதை கற்றுக் கொள்ளணும் அவ்வளவுதான்.
இதுபோல் ஜோதிடத்தில் இரண்டு பகுதியாக பிரித்துக் கொள்ளலாம்.
1) அன்றாட வாழ்வியலுக்கான ஜோதிடம் உங்களுக்குத் தெரிந்தே இருக்கணும்.
எனக்கு கணக்கு போட தெரியும் என்று, கணக்கை பயன்படுத்தி என்ஜினியர் ஆவது வேறு,
2) அதேபோல் கணக்கை உபயோகப்படுத்தி அன்றாட தேவைகளுக்கான கணக்குகள் தெரிவது வேறு.
உங்களுக்கு கணக்கு தெரிந்திருக்க வேண்டும், ஆனால்,இன்ஜினியர் ஆவது உங்களுடைய விருப்பம்.
இதுபோல் நீங்கள் மிகப்பெரிய ஜோதிடராக மாறுவதும்,
உங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய ஜோதிடத்தை தெரிந்து கொள்வதற்கும்,
வித்தியாசம் இருக்கு.
இங்கு Basic class என்பது உங்களுடைய அன்றாட வாழ்வியலுக்கான ஜோதிடத்தை உங்களுக்கு சொல்லித்தருவது.
உங்களுக்கு ஏற்கனவே ஜோதிடம் தெரிந்திருப்பது நல்ல விஷயம்,
உங்களுக்கு ஏற்கனவே அடிப்படை தெரியும் ,ஆனால் இங்கு இந்த வழிமுறையை ஐந்து வருடமாக கற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை இங்கு 15 வகுப்புகளில்
கத்துதராங்கனா,இங்கு இருக்கக்கூடிய அடிப்படைகள் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு.
அதனால் நீங்கள் இதை என்னவென்று கற்றுக் கொண்டால்தான்,
நீங்கள் அடுத்த Advanced level – க்கு போவதற்கு தகுதியானவர்களாக மாறுவீர்கள்.
சேர்ந்தவர்கள் எல்லாருமே Advanced level-க்கு போவது இல்லை.
இதற்கு நாங்கள் தகுதிப்படுத்துகிறோம், இந்த தகுதி உள்ளவர்கள் மட்டும்தான் அடுத்த Advanced level-க்கு அறிமுகம் கொடுக்றோம்.
அதனால்,நீங்கள் ஜோதிடராக இருக்கலாம், நிறைய அனுபவங்கள் இருக்கும்,
உங்கள் அனுபவங்களை நாங்கள் மதிக்கிறோம்,
ஆனால் ALP -க்கு என்று இருக்கின்ற விதிகளையும்,
ALP க்கான அடிப்படைகளையும், நீங்கள் தெரிந்துகொண்டால்தான், Advanced level-க்கு நீங்கள் செல்ல முடியும்.
அதனால் இதுவும் உங்களுக்கு தேவை.
இது online வகுப்பாக Zoom App -ல் நடைபெறும்.
அதனால், நீங்கள் வீட்டில் இருந்தே உங்களுடைய சவுகரியத்தில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய முறை.
நீங்கள் Expensive Travel செய்ய வேண்டாம்,
எங்கேயும் தங்க வேண்டாம்.
ஆனால், தினப்படிக்கு நீங்கள் practice செய்து , practice செய்து வந்தால்தான்,உங்களுக்கு ஜோதிடம் அனுபவத்திற்கு வரும்.
இந்த 15 நாள் ,15 வகுப்பும் நீங்கள் ஜாதகம் கொண்டுவரப்போறீங்க, அதை Class – ல் உட்படுத்தி அதனுடைய பலன்களை உங்களையே சொல்ல வைக்கப்போறோம்.
அதுதான் இந்த வகுப்பின் நோக்கம்.
அதனால், உங்களுக்கு எவ்வளவு ஜாதகம் எடுத்துட்டு வர முடியுமோ, அவ்வளவு ஜாதகம் எடுத்துட்டு வாங்க.
ஏன்னா? ஜாதகம் உங்களுடையது,
அதனுடைய நல்லதும், கெட்டதும் உங்களுக்கு தெரியும்.
அதற்கு இந்த ஜாதகத்தில் நாங்கள் சொல்லக்கூடிய விதிகளை apply செய்தால் பலன் வருதா? இல்லையா ? என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.
அதுதான் உங்களுக்கு அனுபவமாக மாறும்.
அந்த அனுபவம் உருவாக்குவது தான் இந்த வகுப்பின் அடிப்படை.
அதனால் கட்டாயமாக உங்களுக்கு இது பயன்படும்படியாக இருக்கும்.
ஜோதிடம் கற்றுக்கொள்ளக்கூடிய முறைகளில் இரண்டு விஷயம் இருக்கு.
1) கணித முறை
2) பலன் சொல்லும் முறை
இந்த ஜோதிடம் எல்லாருக்கும் வராது என்று சொல்லக்கூடிய ஒரே காரணம்,
கணிதம் போடுவது என்பது எல்லோருக்கும் ஒத்து வராது
கணிதம் போடுவது ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் சரியாக இருக்கும்.
முன் கணிதம் தெரியாதவர்களுக்கு ஜோதிடம் வராது என்ற நிலை இருந்தது.
இப்போ பொதுவுடைமூர்த்தி ஐயா,என்ன
செய்து இருக்காங்கன்னா, இந்த கணித முறைகளை எல்லாம் இரத்தின சுருக்கமாக்கி, அதை ஒரு Software – ஆக அதை Mobile -ல் use செய்யும்படியான ஒரு App – ஆக மாற்றிகொடுத்துள்ளார்.
free Software இருக்கு.
இந்த free Software இப்போது போதும் உங்களுக்கு.
Basic Class – Start செய்து முடியும் வரைக்கும் இந்த Software பயன்படுத்துவது போதுமானது.
உங்களுக்கு மேற்கொண்டு ஆர்வம் இருந்து, இது மேற்கொண்டு எனக்கு பயன்படும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் purchase செய்தால் போதும்..
உங்களுக்கு ஆரம்பத்திலே free Software வந்துவிடும்.
Class எவ்ளோ எளிமையாக இருக்கும் ?
இங்கு பெரிய மனப்பாடம் செய்வதோ, ஒப்பிப்பதோ,உள்வாங்குவதோ ரொம்ப இல்லை.
நட்சத்திரங்கள் பெயர் எனக்கு தெரியாது? கிரகங்கள் பெயர் தெரியாது?
ராசி பெயர் தெரியாது ?
வாங்க கற்றுக்கொள்ளலாம்.
இது எல்லாமே சொல்லி தருவோம்.
இதை மட்டும் தான் நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டியதாக இருக்கும்.
விதிகள் பார்த்தால் இங்கு 5 விதிகள் தான்.
அதைக் கற்றுக்கொண்டால், அந்த 5 விதிகளை apply செய்தால் உங்களிடம் ஜாதகம் கொடுப்பவர்கள் என்ன கேள்விக்காக வந்திருப்பார் என்று நீங்கள் சொல்ல முடியும்.
அவர் என்ன பதில் எதிர்பார்க்கிறார் என்றும் நீங்கள் சொல்லலாம்.
இதை இரண்டையும் சொன்னால்தான் துல்லியமான பலன்.
நடக்குமா? நடக்காதா? இது நடக்கும், இது நடக்காது என்று அறுதியிட்டு சொல்ல முடியும் ALP முறையில், அதுதான் இதனுடைய சிறப்பு.
இதை கற்றுக் கொள்வதற்கு பெரிய திறன்கள் எதுவும் தேவையில்லை.
உங்களுடைய ஆர்வமும் ஈடுபாடும் தான் ரொம்ப முக்கியம்.
இந்த 15 நாள், 15 Class -யை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ALP Astrology Office Number : 9786556156
வருகின்ற ஜூலை மாதம் 8 ம் தேதி 2023 அடிப்படை வகுப்பு துவக்கம்.
வாங்க வகுப்பில் சந்திப்போம்……
May be an image of 1 person, temple and text that says "ALP ASTROLOGY அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் அடிப்படை ஜோதிட பயிற்சி வகுப்பு ஜோதிட பேராசிரியர் முனைவர் .பொதுவுடைமூர்த்தி D.T.Ed.,M.A.,B.Ed. M.A(Astrology)..Ph.D., அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தை உருவாக்கியவர் ஜூலை மாதம்: 08/2023 முதல் நாள் தோறும் காலை 04.32-06.32 15-நாள் வகுப்பு ஆன்லைன் வகுப்பு நடைபெறும். 20om முன்பதிவு அவசியம் அலுவலக எண் +91 97 86 556 156"

எண்ணங்கள் என்பது சந்திரன் முடிவுகள் என்பது குருபகவான்

வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஏதாவது ஒரு நிகழ்வுகளுக்கு ஏதாவது வழி கிடைத்துவிடாதா? இல்லை ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா?

என்ற எல்லாருடைய ஏக்கத்திற்கும் இந்த ஜோதிடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி, மிகப்பெரிய மைல்கல் என்பது

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இருக்கு.

 

என் வாழ்க்கையில் இப்போ என்ன நடக்கும், நாளைக்கு என்ன நடக்கும், அடுத்து ஒரு மாதம் எப்படி இருக்கும், அடுத்து ஒரு வருடம் எப்படி இருக்கும்.

இந்த நிகழ்வு மிகப்பெரிய நீண்ட தூரத்தில் இந்த அட்சய லக்ன பத்ததி உடைய வளர்ச்சி இருக்கு.

 

ஒரு மனிதன் எப்படி வளர்ச்சி பெறுகிறதோ, மாற்றம் அடைகிறதோ,

அதேபோல் ஜென்ம லக்னம் வளர்ந்து, நகர்ந்து மாற்றம் அடைந்து ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடந்த, நடக்ககூடிய நிகழ்வுகளை கூறுவதுதான்

அட்சய லக்ன பத்ததி.

 

அட்சய லக்ன பத்ததி என்ற நிகழ்வு

youtube வீடியோ நிறைய இருக்கு.

கண்டிப்பாக உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கையில் உதவும்.

ஏன்னா? வழிக்காட்டுதல் இல்லாமல் நீங்கள் போனால் எப்படி இருக்கும்.

அதாவது எங்க போறது, எப்படி போறது என்று தெரியாது.

இந்த இரண்டிற்கும் விளக்கம் சொல்வதுதான் ஜோதிடம்.

 

இந்த விளக்கத்தை இவ்ளோ தூரத்தில், இவ்ளோ வேகத்தில் இந்த இடத்திற்கு போனால் உங்கள் வாழ்க்கை பயணம் வெற்றியாகும்.

ஒரு நிகழ்வு :

நான் சமஸ்கிருதம் கத்துட்ட, அந்த நிகழ்வு சரியா முடியல, நான் பரதநாட்டியம் கத்துகிட்டேன் அது சரியா பண்ண முடியல. இப்படி நிறையா நிகழ்வுகள் சொன்னப்போ நான் சொன்னேன் ஒரு

பொருத்தமில்லாத சின்ன பாட்டிலுக்கு ஒரு பெரிய மூடியோ, பெரிய பாட்டிலுக்கு சின்ன மூடியோ, போட்டால் அது பாதுகாப்பாக இருக்குமா? இருக்காது

அதுபோல் தான் நம் வாழ்க்கை.

எனக்கு எது புடிக்குமோ, எனக்கு எது தெரியல

நீங்க 10 பேரை சந்திச்சிருப்பிங்க, அதில் இவர் சரியாக இருக்க மாட்டார், இவர் சரியாக இருப்பார் என்று மனம் ஒரு அறுதியிட்டு சொல்லும்ல அதுதான் இறுதியாளர்.

 

உங்கள் வாழ்க்கையில் ஒரு 10 விஷயம் செய்திருப்போம்,

பரதநாட்டியம் ஒத்து வரல, சமஸ்கிருதம், பரதநாட்டியம், ஆன்மிகம், ஜோதிடம், யோகா,

இப்படி இவ்வளவு நிகழ்வு இருந்தாலும், இந்த யோகாவில் மறுபடியும் மறுபடியும் ஒரு நிகழ்வு வந்து அதில்தான் என்னுடைய உடல் லயத்து போகிறது, மனம் லயத்து போகிறது என்று சொல்லும் இடத்தில்தான் ஒரு ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்கும்.

அதுதான் உங்களுக்கு பொருத்தமான

பாட்டில்கு ஏற்ற மூடி.

அங்குதான் ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்கும்.

இந்த நிகழ்வுகளை சரியாக பொருத்திவிட்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி தான்.

 

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு குழந்தை பேறு சம்பந்தப்பட்ட நிகழ்வு.

இதற்கு திருமணம் ஆவதற்கு முன் குருவிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.

இதற்கு விசாகம், மகம் நட்சத்திரம் வரும் நாட்களில் குருவிடம் ஆசிர்வாதம் வாங்கனும்.

குரு என்றால் நவக்கிரக குரு,

ஆன்மிக குரு இல்லை, நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரோ, இல்லை ஜோதிடரோ,

ஜோதிடரிடம் இந்த விஷயங்கள்

நடக்காதப்போ தான் போவாங்க.

இப்படி செய்யக்கூடாது.

 

நம்முடைய எண்ணங்கள் ஒன்று,

முடிவுகள் ஒன்று

எண்ணங்கள் என்பது சந்திரன்

முடிவுகள் என்பது குருபகவான்

ஒருவர் மேல் கோபப்படக்கூடிய தன்மைகளை செய்வது சந்திரன்.

அதிதமாக கோபப்படுவதற்கு செவ்வாய் ஏதோ ஒரு வகையில் பலமாக இருக்கணும்.

ஆனால் சந்திரன் சம்பந்தப்படும் பொழுது உடனே கோபப்பட வைக்கும்.

ஆனால் குரு தெரியாமல்தானே செய்றாங்க, மன்னிசிடுங்க, இந்த விஷயம்பத்தி இப்போ பேச வேணாம், 2 நாள் போகட்டும், என்ற.

அந்த குரு தான் உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும்.

 

ஒரு ஜோதிடரை பார்க்க நினைக்கும்பொழுது அன்றைக்கு உங்கள் வாழ்க்கை மாறும்.

ஆனால், குரு பலமில்லை என்றால் உங்களை பலவகையில் அலைய வைக்கும்.

அந்த காலத்தில் விளக்கு ஏற்றி வைத்து, அதை பார்த்து பலன் சொல்வார்கள்.

 

வாழ்க்கையில் வழிகாட்டக் கூடிய, எண்ணங்களை தோற்றுவிக்க கூடிய

நல்லது, கெட்டதுகளை

குருபகவான் ,

மனசாட்சி,வாழ்க்கையில் நடக்கக்கூடிய அத்தனை எண்ணங்களையும் நாம் கவனிக்கணும்.

இது சரி,இது நல்லது என்று முடிவு செய்யணும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இதற்கு என்ன பண்றோம்னா?

அகம்,புறம் என்று வைத்திருக்கோம்.

அதாவது உள் மனதிற்குள் அகமனம் , புற மனம் என்று வைத்திருக்கோம்.

அட்சய லக்னத்திற்கு 6, 8, 10, 12ல் குரு பகவான் இருந்தால், உங்கள், வெளிமனம் வேகமாக இருக்கும் ‘உள்மனம் (குரு) இன்னும் வேகமாக போக சொல்லும்.

கவனமாக இருக்கனும்.

நன்றி.

https://youtu.be/IivTzi5cnq

இந்த ALP ஜாதகருக்கு வேலை, தொழில் எது சிறந்தது

 

அனைவருக்கும் வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் ஒரு உதாரண ஜாதகம் பார்ப்போம்.

ஜாதகருக்கு வேலை சிறப்பாக இருக்குமா? தொழில் சிறப்பாக இருக்குமோ?

அவருக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டது என்று பார்க்கலாம்.

இந்த ஜாதகருக்கு வயது 52, அவருடைய பிறப்பு லக்னம் துலாம், 2 வருடம் துலாம் லக்னத்தில் இருந்திருக்கு, 12 வயது வரையும் விருச்சிக லக்னம் ,பொதுவாக அட்சய லக்னத்தில் பிறப்பு லக்னம் என்பது குழந்தை பருவம் ஜாதகம் பார்க்க முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஏன்னா அந்த குழந்தைகள் தாய் தந்தையரை சார்ந்துதான் இயக்கும். 10 வருடம் காலம் வரையும் எடுத்துக்கலாம்.12 வயது வரை உள்ள பருவமும் அதற்குப்பின் உள்ள பருவமும் பெற்றோரை சார்ந்தது தான் இருக்கும்.

தனிப்பட்ட முறையில் அவர்களுடைய கல்வி தகுதிகள் 20, 22 வயதிலிருந்து பார்க்கலாம்.

அவர்களுடைய தனிப்பட்ட திறன் வேலை நல்லா இருக்குமா,

தொழில் நல்லா இருக்குமா,அவர்களுடைய 22 வயதிற்க்கு பிறகு இந்த ஜாதகத்தில் பார்க்கலாம்.

அடுத்து 22 வயதிலிருந்து 32 வயது வரை மகர லக்னம்,

லக்னாதிபதி சனி,பத்து வருடத்தை இயக்கக்கூடிய அதிபதி சனி, 4ம் வீட்டில் நல்ல அமைப்பில் தான் இருக்கார்.

சனீஸ்வரன் தன்மை நீச்சமாக இருந்தாலும் , லக்னாதிபதி 10ம் வீட்டை பார்ப்பதால் தொழில் சார்ந்த நோக்கத்தோடு தான் இருப்பார்.

வேலைக்கு போகக் கூடிய எண்ணம் இருக்காது.

அதில் 10ம் வீட்டு அதிபதி சுக்கிரன், 10ம் வீட்டில் பலமாக இருக்கு.

இவருக்கு வேலையை விட தொழில் நல்ல அமைப்பில் இருக்கு,

 ஏன்னா? 10ம் அதிபதி பலமாக இருக்கு.

குரு சந்திரன் 10ம் வீட்டில் இருக்கு, இருக்கலாமா?

7ம் வீட்டு அதிபதி சந்திரன் 10ம் வீட்டில் இருக்கலாம் ஏன்னா? கூட்டி தொழில் சார்ந்த நிகழ்வுகள் உண்டு, இது நல்லா இருக்குமா?

ALP லக்னத்திற்கு 12ஆம் அதிபதி குரு , 3ம் அதிபதி குரு 10ம் வீட்டில் இருக்கிறார். ஜாதகருடைய எண்ணங்கள், செயல்கள் எல்லாமே தொழிலை நோக்கி தான் போகும். இவருக்கு தொழில் செய்யக்கூடிய யோகமும் இருக்கு. ஆனால் இவருக்கு விரயாதிபதி தொழிற் ஸ்தானத்திலிருந்து குருவாக இருக்கிறார், அதனால் குரு சார்ந்த தொழிலை அவர் கையில் எடுக்கக் கூடாது எடுத்தால், அவருக்கு நஷ்டம் உண்டு.

ஆனால் இவர் குரு சார்ந்த தொழிலை செய்திருக்கிறார்.

பைனான்ஸ் சம்பந்தப்பட்ட தொழில், அதேபோல் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி இருக்காங்க.

10ம் இடத்தில் குரு இருக்கு அது சார்ந்து தொழில் எண்ணத்தை கொடுத்து இருக்கு,ஆனால் அவர் விரயாதிபதியாக இருந்ததால் அந்த தொழில் சார்ந்த நிகழ்வுகள் அவருக்கு சிறப்பை கொடுத்து இருக்காது.

1993 ல் ஆரம்பித்து 2015 வரையும் நஷ்டத்தோடே இந்த தொழிலை செய்ததாக சொன்னாங்க.

ALP லக்னம் கும்ப லக்னம் வரும்பொழுது லக்னாதிபதி சனி 3ம் இடத்தில்,

தொழிற் ஸ்தானத்தின் அதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 7ம் வீட்டில்,

அதனால் இங்கு தொழில் சார்ந்த நிகழ்வுகள் 7ல் இருந்து நடத்தி இருப்பதால் ஒர் அளவு தொழில் செய்து இருக்காங்க.

ஒருவருடைய சப்போர்ட் மூலமாக தான் இவர் தொழில் செய்து இருக்கிறார் காரணம் என்னவென்றால் ஜாதகர் தொழிலுக்கு 8ம் வீட்டில் இருந்து விட்டார்.

அதனால் ஜாதகர் தனிப்பட்ட முறையில் தொழில் சார்ந்த நிகழ்வுகளில் இருக்க முடியவில்லை.பார்ட்னர்ஷிப் மூலம் அந்த தொழில் ஓரளவு போனது.

  ALP லக்னம் மீன லக்னம் வரும்பொழுது ,2015 ல் தான் அந்த பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்ட, பினான்ஸ் சம்பந்தப்பட்ட நஷ்டம் அதிகமாக ஏற்பட்டு அந்த பள்ளிக்கூடம் மூடுறாங்க.

இது எதனால் இங்கு வரும் பொழுது நடந்தது,

லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 8ம் வீட்டில் , 8ம் வீட்டில் குரு தொடர்பு பெறும் பொழுது பிரச்சனைக்குரிய காலம் இங்கு ஆரம்பித்தது.

5ம் அதிபதியும் 8ம் இடத்தில் இருப்பதால் மனசு ஒரு நிலையில் இருக்காது.

தொழில் சார்ந்த நிகழ்வுகள் இவருக்கு யோகத்தை தராது.

லக்னாதிபதியும் 8ம் வீட்டில், 10ம் வீட்டு அதிபதியும் 8ம் வீட்டில் இருப்பதால்,

இந்த இடத்தில் தொழில் சார்ந்த விஷயங்களை சமாளிக்க முடியவில்லை.

இந்த ஜாதகத்தில் இன்றுவரையும் இந்த கஷ்டம் தொடர்ந்துட்டு தான் இருக்கு, கடன் அதிகமாக இருக்கு, ஏன்னா?

இந்த லக்னத்திற்கு 6ம் அதிபதி சூரியன் 7ம் வீட்டில் இருக்கு ,

7ம் வீட்டில் இருந்து 7ம் அதிபதியோடு சேர்ந்து லக்னத்தை பார்க்கிறார்,

அதனால் இங்கு பார்ட்னர்ஷிப் மூலம் முயற்சி செய்து பார்த்து இருக்காங்க, ஆனால் முடியவில்லை.இவருக்கு நஷ்டம் என்பது 7ம் வீட்டிற்கு லாபமாக முடிந்தது.அதனால் அந்த பள்ளிக்கூடம் நிறுத்திட்டாங்க.

இவருக்கு எப்பொழுது மாற்றம் வரும்?

ALP லக்னம் மேஷ லக்னமாக வரும் பொழுது 10ம் வீட்டு அதிபதி சனி லக்னத்தில் இருக்கு, லக்னாதிபதி செவ்வாய் 5ம் வீட்டில் இருக்கு,

இப்பவும் இவருக்கு தொழில் செய்யக்கூடிய எண்ணங்கள் தான் அதிகமாக இருக்கும்.இப்பவும் தொழில் நல்லா நடத்த முடியாது,

ஏன்னா? இந்த லக்னத்தின் அதிபதி 5ம் வீட்டில் இருந்து தொழிலுக்கு 8ம் வீடாக இருப்பதால் ஜாதகருடைய எண்ணமும் ,செயலும் அவருக்கு எதிராக போய்டும்.

அதனால் தொழிலை சிறப்பாக செய்ய முடியாது.

மகர லக்னம் வரும்பொழுது குரு சம்பந்தப்பட்ட தொழில் எடுக்காமல், மற்ற கிரகங்களுடைய தொடர்பு மகர லக்னமாக வரும் பொழுது 2 வது வீடு சனீஸ்வரனாக இருந்து, அவர் 4 ல் இருந்து 10ம் வீட்டை பார்க்கும் பொழுது,

உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழில் செய்திருந்தால் அவருக்கு அந்த வருமானம் வந்திருக்கும்.

அடுத்து கும்ப லக்னம் வரும்பொழுது வருமானம் குரு, தொழிலுக்கு இது விரயமாக போனதால் தொழில் சார்ந்த இவர் நீடித்திருக்க கூடாது.வெளியில் இருந்து ஏதாவது கமிஷன் பேசிக் பண்ணிருந்தால் யோகத்தை கொடுக்கும். காரணம்? இங்கு வரும்பொழுது 2ம் வீட்டை சூரியனும் புதனும் பார்ப்பதால் கம்யூனிகேஷன் கமிஷன் பேசிக்கில் அவர் வருமானத்தை பார்த்திருக்கலாம்.

மேஷ லக்னம் வரும்போது தொழில் முதலீடு போடக்கூடாது.மேஷ லக்னத்திற்கு வருமானத்தின் அதிபதி சுக்கிரன் 7ம் வீட்டோடு தொடர்பில் இருப்பதால்,மனைவி சார்ந்த நிகழ்வுகள் மூலம் ஏதாவது வருமானத்தை தேடி கொள்ளலாம்.

நன்றி.

செவ்வாயும் காரமும்/சுக்கிரனும் இனிப்பும்

அனைவருக்கும் வணக்கம்,
அட்சய லக்னபத்ததி ஜோதிட முறையில் ஒரு நண்பர் கேள்வி கேட்டிருந்தார், ஜோதிடம் என்பது உணவே மருந்து அந்த மருந்தே வாழ்க்கையுடைய அடிப்படையாக இருக்கு,
உணவு சார்ந்த விஷயங்களையும்,ஜோதிடம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒப்பீடு செய்யுங்கள் என்று கேட்டாங்க.

கண்டிப்பாக எல்லாத்துடைய அடிப்படை மூலாதாரம் உணவு தான்.
இது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் நடக்கும், எவ்வளவு தூரம் புரியும் என்று தெரியவில்லை. இதை புரிந்து கொண்டால் கண்டிப்பாக நம்முடைய வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகளை மாற்ற முடியும்.

உதாரணமாக எப்பவும் இனிப்பு என்று சொல்லுவோம்.
இனிப்பு என்ற நிகழ்வைப் பொறுத்தவரையில் எப்பொழுதும் இனிப்பான விஷயங்கள் ,ரொம்ப இனிப்பா பேசுறாங்க என்று சொல்லுவோம்.அவங்களுக்கு சுக்கிரன் பலமாக இருக்கோ என்று சொல்வோம் இனிப்பு சம்பந்தப்பட்டது உணவு சம்பந்தப்பட்டது நிறைய கிடைத்தால் ,சாப்பாடு யோகமாக கிடைத்தால் சுக்கிரன் பலமாக இருக்கோ என்று சொல்லுவார்கள் பார்த்து பேசும் பொழுது அது உண்மைதான்.

சூரியனும் சுக்கிரனும் சம்பந்தப்படும்பொழுது, அதில் சுக்கிரன் பலப்படும் பொழுது இந்த இனிப்பு சம்பந்தப்பட்ட உணவு வகைகளை அதிகமாக பயன்படுத்துவார்கள்.
இனிப்பு என்பது கரும்பு ஸ்வீட் கிடையாது. நாம் சாப்பிடக்கூடிய அரிசி தான் இனிப்பு.
கிழங்குகள் கூட இனிப்புதான்.அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய மாவு பொருட்கள் எல்லாமே இனிப்போடு சம்பந்தப்பட்டது தான்.
உதாரணமாக இதனுடைய தாக்கம் குறையும்பொழுது,
இப்போ சுக்கிரன் பலமாக இருந்தால், அவருக்கு உணவு நல்லபடியாக அமைந்து இனிப்பு சம்பந்தப்பட்டது சமநிலை ஆகும்.

ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் நல்லா இருக்கா? நல்லா இல்லையா? என்பதை ஒரு ஜாதகரை பார்த்தால் கண்டுபிடிக்கலாமா?
என்று கேள்வி இருந்தால் கண்டுபிடிக்கலாம்.
ஒருவர் உடம்பை பொருத்தவரையில் அவருடைய அமைப்பு பலமாக இருக்கும். அதுவே சுக்கிரன் பலப்படவில்லை என்றால் எப்பொழுதுமே சோர்வு, இனிப்பு பொருத்தவரையில் எளிதாக சோர்வுதன்மை கொடுக்கக்கூடியது.
அதேபோல் இனிப்பு அதிகமானாலும் பிரச்சனை, குறைந்தாலும் பிரச்சனை.
கேரட் இனிப்பு சார்ந்த விஷயம், அதேபோல் அரிசி சாப்பிட்டுவிட்டு கடைசியாக கார்போஹைட்ரேட் அந்த எச்சில் முழுங்கும் பொழுது நாக்கை கவனித்து பார்த்தால் நல்லா இனிக்கும்.
சுக்கிரன் பலமாக பலமாக அதிகமாகும் பொழுது உடல் சோர்வு ஏற்படும்,
அதேபோல் குறையும் பொழுது உடல் சோர்வு ஏற்படும்.
சுக்கிரன் பலமாக இருந்தால் நம்முடைய உடம்பில் நிறைய விஷயங்களை பார்க்க முடியும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அமைப்பு இருக்கு.
செவ்வாய் என்றால் காரம், சுக்கிரன் என்றால் இனிப்பு
இதில் இனிப்பு என்றால் சுக்ரன் மட்டும் கிடையாது, புதன், சந்திரன், சூரியன் இது எல்லாமே இதனுடைய தொடர்புடைய நிகழ்வாக அமையும்.
பூமிக்கு கீழ் உள்ள கிழங்கு வகைகள் சாப்பிடும் பொழுது அதில் இனிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகமாக இருக்கும்.
சுக்ரன் பலமாகவோ பலவீனமாகவோ இருந்தால் கண்டிப்பாக இனிப்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் வரும். அதனால் கவனமாக இருக்கனும்.

உதாரணமாக ALP லக்னத்திற்கு 6,8,10,12ல் சுக்கிரன் இருந்தால் ,அப்பொழுது மாவு பொருட்கள், இல்லை அரிசி சம்பந்தப்பட்டது,
கிழங்கு வகைகளில் கேரட், உருளைக்கிழங்கு ,கரும்பு ,
அன்றாட நிகழ்வுகளில் இருக்கக்கூடிய பேக்கரியில் சாப்பிடக்கூடிய இனிப்பு பொருட்கள், வெள்ளை சீனி இது எல்லாமே எளிதாக உடம்பில் நேரடியாக ஒரு பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும்.
6, 8, 10, 12ல் சாப்பிட வைக்கும் அதுவே மற்ற இடத்தில் இருந்தால் குறைவாக லோ சுகர் அதனால் உடல் சோர்வு 1 நிமிடமோ, 5 நிமிடத்திலோ , இல்லை பதற்றமாகும் பொழுது,பயப்படும்பொழுது அந்த நிகழ்வை சுக்ரன் கொடுக்கும்.

உதாரணமாக ALP தனுசு லக்னம் போகும் பொழுது 6ம் அதிபதி சுக்ரனாக வரும் பொழுது கிழங்கு வகைகளை சாப்பிடும் பொழுது தன்னை அறியாமல் சாப்பிட வைக்கும்.உடல் பருமனாவது,
உடல் பருமனுக்கும் அதே கிழங்கு வகைகள் சுக்ரன் தான்,
உடல் இளைப்பதற்கும் அதே கிழங்கு வகைகள் சுக்ரன் தான்.
உங்கள் ஜாதகத்தில் ALP லக்னத்திற்கு சுக்கிர பகவான் எங்க இருக்கு?
எதற்கு தகுந்த மாதிரி 6, 8, 10, 12ல் இருந்தால் நீங்கள் உணவை கட்டுபடுத்தனும். சுக்ரன் பலகீனப்பட்டால் மன அழுத்தம் கொடுக்கும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இருக்கணும் என்றால் சுக்கிரன் பலப்பட்டு இருந்தால் கண்டிப்பாக சந்தோஷமாக இருக்கும்.
அதனால் உணவு வகைகளை பொறுத்தவரையில் அளவான சாப்பாடு சாப்பிடனும். சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் நல்லா இருந்தால் சந்தோஷமாக இருக்கும்.அதுவே 6, 8, 10, 12ல் இருந்தால் உணவுகளை கவனமாக பார்த்து சாப்பிடணும்.
கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை யோகமாக மாறும்.

நன்றி.