இந்த ALP ஜாதகருக்கு வேலை, தொழில் எது சிறந்தது

 

அனைவருக்கும் வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் ஒரு உதாரண ஜாதகம் பார்ப்போம்.

ஜாதகருக்கு வேலை சிறப்பாக இருக்குமா? தொழில் சிறப்பாக இருக்குமோ?

அவருக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டது என்று பார்க்கலாம்.

இந்த ஜாதகருக்கு வயது 52, அவருடைய பிறப்பு லக்னம் துலாம், 2 வருடம் துலாம் லக்னத்தில் இருந்திருக்கு, 12 வயது வரையும் விருச்சிக லக்னம் ,பொதுவாக அட்சய லக்னத்தில் பிறப்பு லக்னம் என்பது குழந்தை பருவம் ஜாதகம் பார்க்க முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஏன்னா அந்த குழந்தைகள் தாய் தந்தையரை சார்ந்துதான் இயக்கும். 10 வருடம் காலம் வரையும் எடுத்துக்கலாம்.12 வயது வரை உள்ள பருவமும் அதற்குப்பின் உள்ள பருவமும் பெற்றோரை சார்ந்தது தான் இருக்கும்.

தனிப்பட்ட முறையில் அவர்களுடைய கல்வி தகுதிகள் 20, 22 வயதிலிருந்து பார்க்கலாம்.

அவர்களுடைய தனிப்பட்ட திறன் வேலை நல்லா இருக்குமா,

தொழில் நல்லா இருக்குமா,அவர்களுடைய 22 வயதிற்க்கு பிறகு இந்த ஜாதகத்தில் பார்க்கலாம்.

அடுத்து 22 வயதிலிருந்து 32 வயது வரை மகர லக்னம்,

லக்னாதிபதி சனி,பத்து வருடத்தை இயக்கக்கூடிய அதிபதி சனி, 4ம் வீட்டில் நல்ல அமைப்பில் தான் இருக்கார்.

சனீஸ்வரன் தன்மை நீச்சமாக இருந்தாலும் , லக்னாதிபதி 10ம் வீட்டை பார்ப்பதால் தொழில் சார்ந்த நோக்கத்தோடு தான் இருப்பார்.

வேலைக்கு போகக் கூடிய எண்ணம் இருக்காது.

அதில் 10ம் வீட்டு அதிபதி சுக்கிரன், 10ம் வீட்டில் பலமாக இருக்கு.

இவருக்கு வேலையை விட தொழில் நல்ல அமைப்பில் இருக்கு,

 ஏன்னா? 10ம் அதிபதி பலமாக இருக்கு.

குரு சந்திரன் 10ம் வீட்டில் இருக்கு, இருக்கலாமா?

7ம் வீட்டு அதிபதி சந்திரன் 10ம் வீட்டில் இருக்கலாம் ஏன்னா? கூட்டி தொழில் சார்ந்த நிகழ்வுகள் உண்டு, இது நல்லா இருக்குமா?

ALP லக்னத்திற்கு 12ஆம் அதிபதி குரு , 3ம் அதிபதி குரு 10ம் வீட்டில் இருக்கிறார். ஜாதகருடைய எண்ணங்கள், செயல்கள் எல்லாமே தொழிலை நோக்கி தான் போகும். இவருக்கு தொழில் செய்யக்கூடிய யோகமும் இருக்கு. ஆனால் இவருக்கு விரயாதிபதி தொழிற் ஸ்தானத்திலிருந்து குருவாக இருக்கிறார், அதனால் குரு சார்ந்த தொழிலை அவர் கையில் எடுக்கக் கூடாது எடுத்தால், அவருக்கு நஷ்டம் உண்டு.

ஆனால் இவர் குரு சார்ந்த தொழிலை செய்திருக்கிறார்.

பைனான்ஸ் சம்பந்தப்பட்ட தொழில், அதேபோல் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி இருக்காங்க.

10ம் இடத்தில் குரு இருக்கு அது சார்ந்து தொழில் எண்ணத்தை கொடுத்து இருக்கு,ஆனால் அவர் விரயாதிபதியாக இருந்ததால் அந்த தொழில் சார்ந்த நிகழ்வுகள் அவருக்கு சிறப்பை கொடுத்து இருக்காது.

1993 ல் ஆரம்பித்து 2015 வரையும் நஷ்டத்தோடே இந்த தொழிலை செய்ததாக சொன்னாங்க.

ALP லக்னம் கும்ப லக்னம் வரும்பொழுது லக்னாதிபதி சனி 3ம் இடத்தில்,

தொழிற் ஸ்தானத்தின் அதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 7ம் வீட்டில்,

அதனால் இங்கு தொழில் சார்ந்த நிகழ்வுகள் 7ல் இருந்து நடத்தி இருப்பதால் ஒர் அளவு தொழில் செய்து இருக்காங்க.

ஒருவருடைய சப்போர்ட் மூலமாக தான் இவர் தொழில் செய்து இருக்கிறார் காரணம் என்னவென்றால் ஜாதகர் தொழிலுக்கு 8ம் வீட்டில் இருந்து விட்டார்.

அதனால் ஜாதகர் தனிப்பட்ட முறையில் தொழில் சார்ந்த நிகழ்வுகளில் இருக்க முடியவில்லை.பார்ட்னர்ஷிப் மூலம் அந்த தொழில் ஓரளவு போனது.

  ALP லக்னம் மீன லக்னம் வரும்பொழுது ,2015 ல் தான் அந்த பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்ட, பினான்ஸ் சம்பந்தப்பட்ட நஷ்டம் அதிகமாக ஏற்பட்டு அந்த பள்ளிக்கூடம் மூடுறாங்க.

இது எதனால் இங்கு வரும் பொழுது நடந்தது,

லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 8ம் வீட்டில் , 8ம் வீட்டில் குரு தொடர்பு பெறும் பொழுது பிரச்சனைக்குரிய காலம் இங்கு ஆரம்பித்தது.

5ம் அதிபதியும் 8ம் இடத்தில் இருப்பதால் மனசு ஒரு நிலையில் இருக்காது.

தொழில் சார்ந்த நிகழ்வுகள் இவருக்கு யோகத்தை தராது.

லக்னாதிபதியும் 8ம் வீட்டில், 10ம் வீட்டு அதிபதியும் 8ம் வீட்டில் இருப்பதால்,

இந்த இடத்தில் தொழில் சார்ந்த விஷயங்களை சமாளிக்க முடியவில்லை.

இந்த ஜாதகத்தில் இன்றுவரையும் இந்த கஷ்டம் தொடர்ந்துட்டு தான் இருக்கு, கடன் அதிகமாக இருக்கு, ஏன்னா?

இந்த லக்னத்திற்கு 6ம் அதிபதி சூரியன் 7ம் வீட்டில் இருக்கு ,

7ம் வீட்டில் இருந்து 7ம் அதிபதியோடு சேர்ந்து லக்னத்தை பார்க்கிறார்,

அதனால் இங்கு பார்ட்னர்ஷிப் மூலம் முயற்சி செய்து பார்த்து இருக்காங்க, ஆனால் முடியவில்லை.இவருக்கு நஷ்டம் என்பது 7ம் வீட்டிற்கு லாபமாக முடிந்தது.அதனால் அந்த பள்ளிக்கூடம் நிறுத்திட்டாங்க.

இவருக்கு எப்பொழுது மாற்றம் வரும்?

ALP லக்னம் மேஷ லக்னமாக வரும் பொழுது 10ம் வீட்டு அதிபதி சனி லக்னத்தில் இருக்கு, லக்னாதிபதி செவ்வாய் 5ம் வீட்டில் இருக்கு,

இப்பவும் இவருக்கு தொழில் செய்யக்கூடிய எண்ணங்கள் தான் அதிகமாக இருக்கும்.இப்பவும் தொழில் நல்லா நடத்த முடியாது,

ஏன்னா? இந்த லக்னத்தின் அதிபதி 5ம் வீட்டில் இருந்து தொழிலுக்கு 8ம் வீடாக இருப்பதால் ஜாதகருடைய எண்ணமும் ,செயலும் அவருக்கு எதிராக போய்டும்.

அதனால் தொழிலை சிறப்பாக செய்ய முடியாது.

மகர லக்னம் வரும்பொழுது குரு சம்பந்தப்பட்ட தொழில் எடுக்காமல், மற்ற கிரகங்களுடைய தொடர்பு மகர லக்னமாக வரும் பொழுது 2 வது வீடு சனீஸ்வரனாக இருந்து, அவர் 4 ல் இருந்து 10ம் வீட்டை பார்க்கும் பொழுது,

உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழில் செய்திருந்தால் அவருக்கு அந்த வருமானம் வந்திருக்கும்.

அடுத்து கும்ப லக்னம் வரும்பொழுது வருமானம் குரு, தொழிலுக்கு இது விரயமாக போனதால் தொழில் சார்ந்த இவர் நீடித்திருக்க கூடாது.வெளியில் இருந்து ஏதாவது கமிஷன் பேசிக் பண்ணிருந்தால் யோகத்தை கொடுக்கும். காரணம்? இங்கு வரும்பொழுது 2ம் வீட்டை சூரியனும் புதனும் பார்ப்பதால் கம்யூனிகேஷன் கமிஷன் பேசிக்கில் அவர் வருமானத்தை பார்த்திருக்கலாம்.

மேஷ லக்னம் வரும்போது தொழில் முதலீடு போடக்கூடாது.மேஷ லக்னத்திற்கு வருமானத்தின் அதிபதி சுக்கிரன் 7ம் வீட்டோடு தொடர்பில் இருப்பதால்,மனைவி சார்ந்த நிகழ்வுகள் மூலம் ஏதாவது வருமானத்தை தேடி கொள்ளலாம்.

நன்றி.

செவ்வாயும் காரமும்/சுக்கிரனும் இனிப்பும்

அனைவருக்கும் வணக்கம்,
அட்சய லக்னபத்ததி ஜோதிட முறையில் ஒரு நண்பர் கேள்வி கேட்டிருந்தார், ஜோதிடம் என்பது உணவே மருந்து அந்த மருந்தே வாழ்க்கையுடைய அடிப்படையாக இருக்கு,
உணவு சார்ந்த விஷயங்களையும்,ஜோதிடம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒப்பீடு செய்யுங்கள் என்று கேட்டாங்க.

கண்டிப்பாக எல்லாத்துடைய அடிப்படை மூலாதாரம் உணவு தான்.
இது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் நடக்கும், எவ்வளவு தூரம் புரியும் என்று தெரியவில்லை. இதை புரிந்து கொண்டால் கண்டிப்பாக நம்முடைய வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகளை மாற்ற முடியும்.

உதாரணமாக எப்பவும் இனிப்பு என்று சொல்லுவோம்.
இனிப்பு என்ற நிகழ்வைப் பொறுத்தவரையில் எப்பொழுதும் இனிப்பான விஷயங்கள் ,ரொம்ப இனிப்பா பேசுறாங்க என்று சொல்லுவோம்.அவங்களுக்கு சுக்கிரன் பலமாக இருக்கோ என்று சொல்வோம் இனிப்பு சம்பந்தப்பட்டது உணவு சம்பந்தப்பட்டது நிறைய கிடைத்தால் ,சாப்பாடு யோகமாக கிடைத்தால் சுக்கிரன் பலமாக இருக்கோ என்று சொல்லுவார்கள் பார்த்து பேசும் பொழுது அது உண்மைதான்.

சூரியனும் சுக்கிரனும் சம்பந்தப்படும்பொழுது, அதில் சுக்கிரன் பலப்படும் பொழுது இந்த இனிப்பு சம்பந்தப்பட்ட உணவு வகைகளை அதிகமாக பயன்படுத்துவார்கள்.
இனிப்பு என்பது கரும்பு ஸ்வீட் கிடையாது. நாம் சாப்பிடக்கூடிய அரிசி தான் இனிப்பு.
கிழங்குகள் கூட இனிப்புதான்.அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய மாவு பொருட்கள் எல்லாமே இனிப்போடு சம்பந்தப்பட்டது தான்.
உதாரணமாக இதனுடைய தாக்கம் குறையும்பொழுது,
இப்போ சுக்கிரன் பலமாக இருந்தால், அவருக்கு உணவு நல்லபடியாக அமைந்து இனிப்பு சம்பந்தப்பட்டது சமநிலை ஆகும்.

ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் நல்லா இருக்கா? நல்லா இல்லையா? என்பதை ஒரு ஜாதகரை பார்த்தால் கண்டுபிடிக்கலாமா?
என்று கேள்வி இருந்தால் கண்டுபிடிக்கலாம்.
ஒருவர் உடம்பை பொருத்தவரையில் அவருடைய அமைப்பு பலமாக இருக்கும். அதுவே சுக்கிரன் பலப்படவில்லை என்றால் எப்பொழுதுமே சோர்வு, இனிப்பு பொருத்தவரையில் எளிதாக சோர்வுதன்மை கொடுக்கக்கூடியது.
அதேபோல் இனிப்பு அதிகமானாலும் பிரச்சனை, குறைந்தாலும் பிரச்சனை.
கேரட் இனிப்பு சார்ந்த விஷயம், அதேபோல் அரிசி சாப்பிட்டுவிட்டு கடைசியாக கார்போஹைட்ரேட் அந்த எச்சில் முழுங்கும் பொழுது நாக்கை கவனித்து பார்த்தால் நல்லா இனிக்கும்.
சுக்கிரன் பலமாக பலமாக அதிகமாகும் பொழுது உடல் சோர்வு ஏற்படும்,
அதேபோல் குறையும் பொழுது உடல் சோர்வு ஏற்படும்.
சுக்கிரன் பலமாக இருந்தால் நம்முடைய உடம்பில் நிறைய விஷயங்களை பார்க்க முடியும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அமைப்பு இருக்கு.
செவ்வாய் என்றால் காரம், சுக்கிரன் என்றால் இனிப்பு
இதில் இனிப்பு என்றால் சுக்ரன் மட்டும் கிடையாது, புதன், சந்திரன், சூரியன் இது எல்லாமே இதனுடைய தொடர்புடைய நிகழ்வாக அமையும்.
பூமிக்கு கீழ் உள்ள கிழங்கு வகைகள் சாப்பிடும் பொழுது அதில் இனிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகமாக இருக்கும்.
சுக்ரன் பலமாகவோ பலவீனமாகவோ இருந்தால் கண்டிப்பாக இனிப்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் வரும். அதனால் கவனமாக இருக்கனும்.

உதாரணமாக ALP லக்னத்திற்கு 6,8,10,12ல் சுக்கிரன் இருந்தால் ,அப்பொழுது மாவு பொருட்கள், இல்லை அரிசி சம்பந்தப்பட்டது,
கிழங்கு வகைகளில் கேரட், உருளைக்கிழங்கு ,கரும்பு ,
அன்றாட நிகழ்வுகளில் இருக்கக்கூடிய பேக்கரியில் சாப்பிடக்கூடிய இனிப்பு பொருட்கள், வெள்ளை சீனி இது எல்லாமே எளிதாக உடம்பில் நேரடியாக ஒரு பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும்.
6, 8, 10, 12ல் சாப்பிட வைக்கும் அதுவே மற்ற இடத்தில் இருந்தால் குறைவாக லோ சுகர் அதனால் உடல் சோர்வு 1 நிமிடமோ, 5 நிமிடத்திலோ , இல்லை பதற்றமாகும் பொழுது,பயப்படும்பொழுது அந்த நிகழ்வை சுக்ரன் கொடுக்கும்.

உதாரணமாக ALP தனுசு லக்னம் போகும் பொழுது 6ம் அதிபதி சுக்ரனாக வரும் பொழுது கிழங்கு வகைகளை சாப்பிடும் பொழுது தன்னை அறியாமல் சாப்பிட வைக்கும்.உடல் பருமனாவது,
உடல் பருமனுக்கும் அதே கிழங்கு வகைகள் சுக்ரன் தான்,
உடல் இளைப்பதற்கும் அதே கிழங்கு வகைகள் சுக்ரன் தான்.
உங்கள் ஜாதகத்தில் ALP லக்னத்திற்கு சுக்கிர பகவான் எங்க இருக்கு?
எதற்கு தகுந்த மாதிரி 6, 8, 10, 12ல் இருந்தால் நீங்கள் உணவை கட்டுபடுத்தனும். சுக்ரன் பலகீனப்பட்டால் மன அழுத்தம் கொடுக்கும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இருக்கணும் என்றால் சுக்கிரன் பலப்பட்டு இருந்தால் கண்டிப்பாக சந்தோஷமாக இருக்கும்.
அதனால் உணவு வகைகளை பொறுத்தவரையில் அளவான சாப்பாடு சாப்பிடனும். சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் நல்லா இருந்தால் சந்தோஷமாக இருக்கும்.அதுவே 6, 8, 10, 12ல் இருந்தால் உணவுகளை கவனமாக பார்த்து சாப்பிடணும்.
கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை யோகமாக மாறும்.

நன்றி.

SASTI TV LIVE

12 மணிநேர தொடர் நேரலை

அனைவருக்கும் வணக்கம்
அட்சய லக்ன பத்ததி என்ற புதிய ஜோதிட முறையில் ஒரு #புதுமுயற்சியாக இந்த #ALP ஜோதிட முறை பலருக்கும் பயன்படும் வகையில் #12மணிநேரம் #தொடர்நேரலை #sasti_TV https://youtu.be/uqpRDDoIMdY யில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆய்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்,அனுபவங்கள் மற்றும் நேயர்கள் பலருடைய ஜோதிட சந்தேகத்திற்கான விளக்கங்களை #அட்சயலக்னபத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய திரு சி.#பொதுவுடைமூர்த்தி அவர்களும் ALP Astrologer திருமதி #சாந்திதேவிராஜேஷ்குமார் அவர்களும் கலந்துரையாடல் மூலம் பலன் அளிக்க இருக்கிறார்கள், ஜோதிட நண்பர்களும், ஜோதிட ஆர்வலர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும். இந்த அரிய வாய்பினை நீங்கள் மற்றும் உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களுடைய ஜாதகத்திற்கான கேள்விகளை #12 மணிநேர நேரலையில் உங்களோடு.

Please share

அட்சய லக்ன பத்ததி நூல்

அட்சய லக்ன பத்ததி பாகம் 2 நூல் கிடைக்கும் இடங்கள்.

புலம் பதிப்பகம் #சென்னை +919840603499.

7373737742

விஜயா பதிப்பகம் #கோவை #காந்திபுரம் #04222234615.

விஜயா பதிப்பகம் #கோவை #04222573614.

விஜயா பதிப்பகம் #திருப்பூர் #04212242614.

விஜயா பதிப்பகம் #திருச்செங்கோடு #04288252614.

விஜயா பதிப்பகம் #பொள்ளாச்சி #04259231614.

விஜயா பதிப்பகம் #கருர் #04324232614.

விஜயா பதிப்பகம் #பழனி #04545243614.

ஈரோடு வள்ளலார் புத்தக நிலையம்.

சேலம் வள்ளலார் புத்தக நிலையம்.

மதுரை மீனாட்சி புத்தக நிலையம்.

udumalai.com #7373737742

நன்றி.

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?
————————————————————
1. ஜோதிட ஆலோசனை பெற விரும்புபவர்கள் ஜோதிடரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதே சால சிறந்தது. உங்களுக்கு நேரமில்லை, நேரில் சந்திக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கும்வரை உங்கள் வாழ்க்கையில் தடைகள் தொடரும்.
2. ஜோதிட ஆலோசனை பெறும்போது தன் சொந்த சோகக் கதைகளை மூச்சு விடாமல் சொல்லி ஜோதிடர் தன் பணியை செய்யவிடாமல் செய்து, ஜோதிடர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது பெரும் தவறு. உங்களுக்கு உரிய ஆலோசனை அப்பொழுது கிடைக்காது. நவக்கிரகங்கள் உங்களுக்கு நல்வழி காட்ட மாட்டார்கள்.
3. ஜோதிடரை கீழே உட்கார வைத்து விட்டு , நீங்கள் உயரத்தில் உட்கார்ந்து கொண்டு , காலாட்டிக்கொண்டு அதிகார தோரணையில் பலன் கேட்டால் உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக்கொள்கிறீர்கள் என்று பொருள். இது நவ கிரகங்களையே அவமதிக்கும் செயல்.
4. ஜோதிட ஆலோசனையின் போது நக்கல், நையாண்டியாக பேசுவது அல்லது மிரட்டுவதுபோல் பேசுவது எல்லாம் ஜோதிடரின் மூலம் நவகிரக சாபத்தை பெறுவதற்கு வழி வகுக்கும். நல்ல மனமும் ,குணமும் உள்ள ஜோதிடர்களிம் இவ்வாறு நடந்துகொள்பவர்களுக்கு நிச்சயம் இது நடக்கும்.
5. ஜோதிட ஆலோசனை கேட்பவர் மௌனமாக அமைதியாக இருந்து ஜோதிடர் சொல்வதை மட்டும் கேட்கவேண்டும். அலட்சிய மன போக்கை தவிர்க்க வேண்டும். ஜோதிடர் ஏதாவது கெடு பலன் சொன்னால் பரிகாரம் ஏதாவது உண்டா என கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். சண்டைக்குப்போகக்கூடாது. வாக்கு வாதத்தில் ஈடுபடக்கூடாது.
6. ஜோதிடர் சொன்ன ஆலோசனையில் திருப்தியில்லையென்றால் அல்லது பிடிக்கவில்லையென்றால் அமைதியாக திரும்பி வந்துவிடவேண்டும்.
7. ஒரு ஜோதிடர் சொன்ன விசயங்களை இன்னொரு ஜோதிடரிடம் சொல்லக்கூடாது. ஜோதிடர்களை ஒப்பிட்டு பேசக்கூடாது. இது ஜோதிடருக்குள் வெறுப்புணர்ச்சியை தூண்டும். இதனால் உங்களுக்கு உரிய ஆலோசனையை அவர் வழங்க மாட்டார்.
8. ஜோதிடரிடம் சென்று எனக்கும் ஜோதிடம் தெரியும் , சும்மா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என பார்க்க வந்தேன் என்று சொல்லக்கூடாது. இப்படி சொல்வதால், ஜோதிடருக்கு உங்கள் மீது வெறுப்பு உணர்ச்சி தோன்றி எதையும் சரியாக பார்க்க மாட்டார். நவ கிரகங்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
9. தேவை இருந்தால் மட்டும் ஜோதிட ஆலோசனை பெறுங்கள். பொழுது போக்கிற்காக ஜோதிடரை பார்க்காதீர்கள். இது வம்பை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.
10. ஜோதிடர்களுக்கு தட்சிணை வழங்குவது என்பது நீங்கள் அவர்களின் நேரத்தை எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ஜோதிடர்களை பிச்சைக்காரர்களாக கருதாதீர்கள்.
11. வா வா என கூவி அழைக்கும் ஜோதிடர்களை தவிர்த்து, சத்தமில்லாமல் செயல்படும் நல்ல ஜோதிடர்களை தேடிப்போய் ஆலோசனை பெறுங்கள். குறிப்பாக உங்களுக்கு தெரிந்த நபர்கள் பரிந்துரை செய்யும் ஜோதிடர்களைப்போய் பாருங்கள்.
12. ஜோதிட ஆலோசனைப் பெறும்போது சொந்தக்காரர்களையோ அல்லது நெருங்கிய நண்பர்களையோ உடன் அழைத்து செல்லாதீர்கள்.

https://www.facebook.com/100000003671108/posts/2244207202256047/