கொடுங்கள்… பெறுவீர்கள்!….

கொடுங்கள்.. பெறுவீர்கள்!….
=====================
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன.

1) ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

2) அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

​ஒரு மகாபாரத பதிவு

ஒரு மகாபாரத பதிவு
கலியின் ஆரம்பம்.
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, “குதிரை என்ன விலை? என்று கேட்டான்.
குதிரையின் உரிமையாளரோ,
 “ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்” என்றார். சகாதேவன் உடனே, “சரி கேள்வியைச் சொல்லுங்கள்” என்றான்.
குதிரையின் உரிமையாளர், “நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்!
ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.
இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்” என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.
சற்று நேரத்தில்…. சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.
குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். “ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.
துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?” என்றார்.
நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.
அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.
“ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்? 
பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்” என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, “தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!” என்றார்.
பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், “அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?” எனக் கேட்டார்.
அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான். 
அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள்  எல்லாரும் திகைத்தார்கள். 
“அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?” எனக் கேட்டார்கள்.
தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்…..
“தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்…..” என்று விரிவாகக் கூறினார்.
“உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.
அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைக்த்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
அடுத்து மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான், வேலி அப்படியே இருக்க,  பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.
படித்ததில் பிடித்தது

பரிகார முறைகள்

20 பரிகார முறைகள்
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.
(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
(9) 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.
(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.

வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.
(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..
(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்

போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்
(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .
(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

18.வில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:

வீட்

டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று
(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:

ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்
(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

மீள் பதிவு. நன்றி.

​பாவக தொடர்பான கேள்விகள் 

​பாவக தொடர்பான கேள்விகள் 
1ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. தெய்வசிந்தனையுடனும் நல்லொழுக்கங்களுடனும் வாழ்வேனா?

2. சமூகத்தில் மதிப்பும் மரியாதையுடன் நடந்து கொள்வேனா?

3. நல்ல ஒழுக்கத்துடன் சமூகத்தில் விளங்குவேனா?

4. நல்ல சிந்தனையுடன் விரைந்து செயல்படுவேனா?

5. எப்பொழுதும் சந்தோஷத்துடன் வாழ்க்கை நடத்துவேனா?

6. என்றும் இளமையுடனும் அழகுடனும் விளங்குவேனா?

7. நான் நினைத்து எல்லாம் நிறைவேறுமா?

8. என்னுடைய சுயமுயற்சியால் நான் வெற்றியடைவேனா?

9. என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்?

10. என்னுடைய கௌரவம், அந்தஸ்து எப்படி அமையும்?

11. என்னுடைய வாழ்க்கைப்பாதை எவ்வழியில் செல்லும்?

12. என்னுடைய ஆயுள் எப்படியிருக்கும்?

13. சட்டத்திற்கும், பிறருக்கும் கட்டுபட்டு வாழ்வேனா?

14. பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு உடன் சிறந்து விளங்குவேனா?

15. வெற்றி தோல்விகள் மாறிமாறி அமையுமா?

16. எனது பிறந்த நேரம் சரியானது தானா?

17. எனது பெயரை பெயர் மாற்றம் செய்யலாமா?

18. எனக்கு நல்ல நேரம் வரும் என்பதை எப்படி அறியலாம்?

19. உடலில் மருமச்சம் ஏதேனும் ஏற்படுமா?

20. நான் சன்னியாசியாக மாறுவேனா?

21. கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவேனா?

22. ஒருவர் உயிருடன் இருப்பதை அறிய முடியுமா?

23. காணாமல் போனவர்கள் எப்பொழுது திரும்ப வருவார்கள் என்று அறிய முடியுமா?
2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. என்னுடைய வாக்கு வன்மை எப்படி இருக்கும்?

2. எல்லோரிடத்திலும் இனிமையாக பேசிப் பழகுவேனா?

3. அந்நிய பாஷை அல்லது அந்நிய மொழி நன்கு பேச வாய்ப்பு அமையுமா விதியுண்டா?

4. கஷ்டப்பட்டு பொருள் சேர்ப்பேனா?

5. சுய வருவாய் மூலம் பொருள் சேர்ப்பேனா?

6. நேர்வழியில் சம்பாதிப்பேனா அல்லது குறுக்கு வழியில் சம்பதிப்பேனா?

7. பொய் பேசுவேனா? உண்மையே பேசுவேனா அல்லது சமயத்திற்கேற்ப பேசுவேனா?

8. பல குரலில் பேசுவேனா? அதன் மூலம் பொருள் ஈட்டுவேனா?

9. அந்நிய நாட்டிலிருந்து பணம் வருமா?

10. கொடுத்த பணம் திரும்ப கிடைக்குமா?

11. நல்ல வாசனைத் திரவியங்களை உபயோகிப்பேனா?

12. நல்ல நவரத்ன கற்கள் எனக்கு கிடைக்குமா?

13. நல்ல அறுசுவை உணவு எனக்கு தொடர்ந்து கிடைக்குமா?

14. எனது பத்திரங்கள் என்னிடம் பத்திரமாக இருக்குமா?

15. சரியாக வாய் பேச வருமா? பேச வரதா?

16. கடைசி வரை ஊமையாகவே இருப்பேனா?

17. எனது முகத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா?

18. வலது கண்ணில் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா?

19. மாலைக்கண் நோய் ஏதேனும் வருமா?

20. பூனைக் கண்ணாகவே வாழ வாய்ப்பு ஏற்படுமா?

21. பிறவிக் குருடனாகவே வாழ்க்கை முழுவதும் அமைந்து விடுமா?

22. எதிர்பாராத அதிர்ஷ்ட தனவரவுகள் உண்டா?

23. கையில் எப்பொழுதும் ரொக்கமா பணம் இருக்குமா?

24. எப்பொழுதும் வங்கியில் மட்டுமே நகை பணம் இருப்பு இருக்குமா?

25. மாற்றத்தக்க பங்கு பத்திரங்கள் எப்பொழுதும் கைவசம் வைத்திருப்பேனா?

26. மற்றவர்களுக்கு அடிக்கடி பணம் கடன் கொடுப்பேனா?

27. பிறவியிலேயே ஏழையாய் பிறந்து ஏழையாகவே வாழ்ந்து விடுவேனா?

28. எனக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுமா?
3ம் பாவகத் தொடர்பான கேள்விகள் 

1. எனக்கு இளைய சகோதர சகோதரிகள் உண்டா?

2. இளைய சகோதர சகோதரிகள் என்னிடம் பிரியமுடன் நடந்து கொள்வார்களா?

3. இளைய சகோதர் சகோதரிகளால் எனக்கு நன்மையா? தீமையா?

4. நான் எழுத்துத் துறையில் பிரகாசிப்பேனா?

5. நான் பத்திரிக்கை ஆசிரியராக வர வாய்ப்பு உண்டா?

6. நான் சிறுபத்திரிக்கை நடத்தலாமா?

7. அறிவிப்பாளராக வர வாய்ப்பு உண்டா?

8. தூதரக அதிகாரியாக வர வாய்ப்பு உண்டா?

9. தொலைத் தொடர்புத் துறையில் சேவை செய்ய வாய்ப்புக் கிட்டுமா?

10. என் கையெழுத்து அழகாக அமையுமா?

11. எனது இல்லத்திலேயே நூலகம் அமைக்க வாய்ப்பு ஏற்படுமா?

12. அடிக்கடி வீடு மாறுவேனா? வாடகை வீட்டில் வசிப்பேனா?

13. அடிக்கடி குறுகிய தூரப் பயணம் மேற்கொள்வேனா?

14. அடிக்கடி விமானப்பயணம் மேற்கொள்வேனா?

15. எல்லாவகை வாகனங்களையும் ஓட்டிப் பழகுவேனா?

16. பத்திர எழுத்தராக வர வாய்ப்பு உண்டா?

17. என்னைப் பற்றி வதந்திகள் அல்லது கிசுகிசுக்கள் ஏதேனும் பரப்பப்படுமா?

18. கல்வி, இலக்கியம், கதை, கட்டுரை, ஆன்மீகம், காதல், சினிமா, நோய், துப்பறிதல், இவற்றில் எதை அதிகமாக எழுதுவேன்?

19. நான் எதிர்பார்த்த ஒப்பந்தம் நிறைவேறுமா?

20. குத்தகை எடுக்க வாய்ப்பு அமையுமா?

21. புரோக்கர் தொழில் நன்கு அமையுமா?

22. நல்ல மொழி பெயர்ப்பாளராக வர வாய்ப்பு உண்டா?

23. புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவேனா?

24. நல்ல இயற்கையான அறிவு, ஞாபக சக்தியோடு வாழ வழி ஏற்படுமா?

25. கணிதத்தில் புலமை பெற்று விளங்குவேனா?

26. நல்ல இரத்த ஓட்டத்துடன் நடைப்பயணம் வாழ்க்கை முழுவதும் அமைய வாய்ப்பு உண்டா?

27. தகவல் தொடர்பு சாதனங்களை அதிக அளவில் கையாளுவேனா?

28. வேலைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால் பிரச்சினை ஏற்படுமா?

29. எப்பொழுதும் தைரியம் உள்ளவனாக/உள்ளவளாக இருப்பேனா?

30. படிக்கும் ஆர்வம் எப்பொழுதும் அதிகரிக்குமா?

31. அடிக்கடி தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வேனா?

32. எனக்கு வரும் தகவல்கள் எப்பொழுதும் உண்மையாக இருக்குமா? அல்லது பொய்யாகவே அமையுமா?

33. வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கலாமா?

34. அரசு வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா? அல்லது தனியார் வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா?

35. உள்நாட்டில் உள்ள வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா?

36. வெளிநாட்டில் அந்த நாட்டு வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா?

37. செக்புக் வாங்கலாமா? ஏ.டி.எம். கார்டு வாங்கலாமா?

38. செக்கில் அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாமா?

39. அடிக்கடி எனது தகவல் தொடர்பு சாதனங்களை மாற்றிக் கொண்டேயிருப்பேனா?

40. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வேனா?

41. போக்குவரத்து துறையில் ஈடுபடலாமா?

42. வாகனம் ஓட்டிப் பழகலாமா?

43. எனது நகைகளை அடிக்கடி அடகு வைப்பேனா?

44. அண்டை அயலாருடன் நட்புடன் பழகுவேனா?

45. உறவினர்களுடன் அன்புடன் நடந்து கொள்வேனா?

46. எனது சொத்து பிரிவினை ஆகுமா?

47. கெடாத புது உணவை எப்பொழுதும் சாப்பிட முடியுமா?

48. எனது சிறுவியாபாரம் எப்படி இருக்கும்?

49. நல்ல பெண் வேலையாட்கள் கிடைப்பார்களா?

50. எனது நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்தேறுமா?
4ம் பாவகத் தொடர்பான கேள்விகள் 

1. எனக்கு நன்கு கல்வி வருமா?

2. எப்படிப்பட்ட கல்வி அமையும்?

3. ஆரம்பக் கல்வியா? தொடக்க கல்வியா? இளங்கலையா?

4. எந்தத் துறையில் படிப்பு அமையும்?

5. இளங்கலைப் படிப்பா? முதுகலைப் படிப்பா? ஆராய்ச்சிப் படிப்பா?

6. கலைத்துறையா, மருத்துவத்துறையா, பொறியியல் துறையா?

7. கலைத்துறை என்றால் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படிக்க எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?

8. மருத்துவத் துறை என்றால் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படிக்க எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?

9. பொறியியல் துறை என்றால் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படிக்க எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?

10. கடன் வாங்கி கல்வி பயில வாய்ப்பு ஏற்படுமா?

11. உள்நாட்டில் படிக்க வாய்ப்பு ஏற்படுமா? அல்லது அந்நிய நாட்டில் படிக்க வாய்ப்பு ஏற்படுமா?

12. தபால் மூலம் கல்வி ஏற்படுமா? அல்லது ஆன்லைன் மூலம் கல்வி கற்க வாய்ப்பு அமையுமா?

13. சரியான கல்வி பயில சரியான குரு கிடைக்கப் பெறுவேனா?

14. போட்டித் தேர்வில் வெற்றி பெறுவேனா?

15. நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற முடியாது போவதற்கு என்ன காரணம்?

16. படிப்புக்கு முன்னே திருமணம் நடக்குமா?

17. படித்து முடித்த உடன் வேலைக்குச் செல்ல சந்தர்ப்பம் அமையுமா?
4ம் பாவகத் தொடர்பான கேள்விகள் ( வீடு, சொத்து, நிலம் ) 

1. எனக்கு சொந்த வீடு வாங்க அமைப்பு உண்டா?

2. உண்டு என்றால் எந்தக் காலகட்டத்தில் வாங்குவேன்?

3. எப்படிப்பட்ட வீடு வாங்க வாய்ப்பு அமையும்?

4. எப்படிப்பட்ட ஊரில் வாங்க வாய்ப்பு அமையும்?

5. அல்லது பணிபுரியும் ஊரில் வாங்க வாய்ப்பு அமையுமா?

6. நிலம் வாங்கி அதில் வீடு கட்டுவேனா?

7. அல்லது கட்டிய வீடு வாங்குவேனா? அல்லது ஒத்தி வீடு வாங்குவேனா?

8. கடன் வாங்கி வீடு வாங்குவேனா?

9. சேமிப்பில் அல்லது உழைப்பில் அல்லது கணவன் அல்லது மனைவி மூலம் வீடு வாங்குவேனா?

10. சொந்த நாட்டில் வாங்குவேனா? அலல்து அடுக்குமாடி குடியிருப்பில் வாங்குவேனா?

11. தனி வீடு வாங்குவேனா? அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வாங்குவேனா?

12. ஆடம்பரமான வீடு அமையுமா? அல்லது நடுத்தரமான வீடு அமையுமா? 

13. பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்குவேனா?

14. பரிசு மூலம் வீடு கிடைக்க வாய்ப்பு அமையுமா?

15. அரசாங்கம் கட்டிய வீடு அமையுமா? அல்லது தனியார் கட்டிய வீடு அமையுமா?

16. முன்னோர்கள் சொத்துகள் மூலம் வீடு வாங்க வாய்ப்பு அமையுமா?

17. எந்த திசையில் வீடு கட்ட வீடு வாங்க யோகம் கூடும்?

18. என் சொத்து என் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் போய்ச் சேருமா?

19. அல்லது வேறு எவரேனும் என் சொத்தை அனுபவிக்க வாய்ப்பு ஏற்படுமா?

20. எப்படிப்பட்ட ஊரில் வீடு அமையும்? கிராமத்திலா நகரத்திலா?

21. எப்படிப்பட்ட சூழ்நிலையில் வீடு அமையும்? எதிர்பாராத சொத்து கிடைக்குமா?

22. எப்படிப்பட்ட சூழ்நிலையில் வீடு அமையும்? எதிர்பாராத சொத்து கிடைக்குமா?

23. எப்படிப்பட்ட வீடு கட்டுவேன் மணலா? செங்கல்லிலா? சிமெண்ட்டிலா? கான்கீரிட்டலா? கீற்றுக் கொட்டகையாலா? மூங்கிலிலா அல்லது பேப்பரில்லா?

24. எனது வீடு, நிலம் இவற்றில் நிலத்தடி நீர் நன்கு கிடைக்குமா?

25. என் வீடு நினைவுச் சின்னமாக அமையுமா?

26. தோட்டம் அல்லது எஸ்டேட் வாங்க வாய்ப்பு அமையுமா?

27. பண்ணைகள் அல்லது பழத்தோட்டங்கள் எனக்கு அமையுமா?

28. பள்ளி அல்லது கல்லூரி இவைகள் கட்ட வாய்ப்பு ஏற்படுமா?

29. தியேட்டர் மற்றும் ஸ்டுடியோ கட்ட வாய்ப்பு கிட்டுமா?

30. லாட்ஜ் அல்லது உல்லாச விடுதி, மால் அல்லது திருமண மஹால் கட்டுவேனா?

31. சமுதாயக் கூடம், தொழிற்சாலை, கிட்டங்கி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்றவைகளைக் கட்ட வாய்ப்பு கிட்டுமா?

32. எனக்கு புதையல் கிடைக்குமா?

33. எனது புது வீட்டிற்கு ஆட்கள் வாடகைக்கு வருவார்களா?

34. கல்லறை மற்றும் குகைகளில் வசிக்க வாய்ப்புண்டா?

35. எனது தாய் என்னுடனே இருப்பார்களா?

36. எனது தாய் பாசமுடன் என்னிடம் இருப்பார்களா?

37. நான் என் தாயிடம் பிரியமுடன் இருப்பேனா?

38. கடைசி வரை அம்மாவின் அன்பும் அரவணைப்பும் கிட்டுமா?

39. மனைவி பேச்சைக் கேட்டு தாயை உதாசீனப்படுத்துவேனா?

40. ரகசிய சாஸ்த்திர ஆராய்ச்சிகளில் ஈடுபடுவேனா?

41. எனது அந்தரங்க வாழ்க்கை எப்படி இருக்கும்?

42. எனது உற்பத்தித் தொழில் சிறப்பாக இருக்குமா?
4ம் பாவகத் தொடர்பான கேள்விகள் (வண்டி, வாகனம்) 

1. எனக்கு சொந்த வாகன யோகம் உண்டா?

2. உண்டு என்றால் எந்தக் காலக் கட்டத்தில் வாங்க சந்தர்ப்பம் அமையும்?

3. புதிய வாகனம் வாங்குவேனா ? பழைய வாகனம் வாங்குவேனா?

4. ரொக்கத்திற்கு வாங்குவேனா? அலல்து கடன் மூலம் வாங்குவேனா?

5. சொகுசான வாகனம் வாங்குவேனா? அல்லது சுமாரான வாகனம் வாங்குவேனா?

6. எனது சுயசம்பாத்தியம் மூலம் வண்டி, வாகனம் வாங்குவேனா?

7. கணவன், மனைவி, உறவினர்கள், நண்பர்கள் உதவியால் வாங்குவேனா?

8. என்ன மாதிரியான வண்டி, வாகனம் அமையும்?

9. இரு சக்கரமா? நான்கு சக்கரமா அல்லது பலகால் சக்கரம் உள்ள வாகனம் அமையுமா?

10. அரசு வாகனம் உபயோகிக்க வாய்ப்பு அமையுமா? அல்லது தனியார் கம்பெனி வாகனம் உபயோகிக்க வாய்ப்பு அமையுமா?

11. உள் நாட்டில் கார் வாங்குவேனா? அலல்து வெளிநாட்டில் கார் வாங்குவேனா?

12. என்ன கலரில் எந்த எண்ணில் வாங்குவேன்?

13. விபத்துக்குள்ளான கார் வாங்குவேனா? அல்லது அடிக்கடி ரிப்பேர் ஆன கார் வாங்குவேனா?

14. என் வாகனம் விபத்துக்குள்ளாகுமா?

15. நானே கார் ஓட்டுவேனா? அல்லது உதவியாளர் வைத்து கார் ஓட்டுவேனா?

16. விபத்துக்குள்ளாகுமென்றால் எதன்மூலம் விபத்து ஏற்படும்? எப்படிப்பட்ட விபத்து ஏற்படும் ? எந்தக் காலங்களில் ஏற்படும்.

17. சைக்கிள், ஸ்கூட்டர், பைக், டிராக்டர், டிரக், ஜீப், கார், லாரி, பஸ், டேங்கர், ஹெலிகாப்டர், கப்பல், விமானம் இவற்றில் எது வாங்குவேன்?
5ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. எனக்கு வாழ்க்கையில் குழந்தைப் பாக்கியம் உண்டா?

2. உண்டு என்றால் எந்தக் காலக்கட்டத்தில் குழந்தைப் பாக்கியம் கிட்டும்?

3. ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா?

4. நல்ல அறிவும் ஆற்றலுமிக்க குழந்தை பிறக்குமா?

5. குழந்தைகளால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிம்மதியும் உண்டா?

6. அல்லது அவர்களால் வாழ்க்கை முழுவதும் போராட்டமாக அமையுமா?

7. குழந்தை நன்கு படிக்குமா அல்லது சரியாகப் படிக்காதா? எந்த மாதிரியானத் துறையில் குழந்தையை படிக்க வைக்கலாம்?

8. குழந்தைக்கு வேலை கிடைக்குமா? அரசுத் துறையிலா? தனியார் துறையிலா?

9. குழந்தைக்கு நல்ல வரன் அமையுமா? எப்பொழுது திருமணம் நடக்கும்?

10. குழந்தை வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையுமா? குழந்தை தாய், தந்தையாரை நன்கு கவனித்துக் கொள்ளுமா?

11. குழந்தைகளால் முதியோர் இல்லம் செல்ல வாய்ப்பு அமையுமா?

12. குழந்தை நன்கு விளையாடுமா ? கலைத்துறையில் பிரகாசிக்குமா?

13. குழந்தை ஏதேனும் அங்கஹீனத்துடன் பிறக்குமா? 

14. தத்துப்பிள்ளை எடுக்க வேண்டி வருமா? வரும் என்றால் எந்த குழந்தையை தத்தெடுக்க? ஆண் அல்லது பெண் குழந்தையா?

15. கலைத்துறையில் ஈடுபட வாய்ப்பு அமையுமா? சிற்பம், ஜோதிடம், ஆன்மீகம், சினிமா, சங்கீதம், நடனம், நாட்டியம், இசை, யோகாசனம் இவற்றில் எதில் சிறப்படைவேன்?

16. லாட்டரி சீட்டு மூலம் பணம் வருமா?

17. பங்குச் சந்தை லாபகரமாக அமையுமா?

18. உழைக்காமலே எனக்கு வருமானமும், புகழும் வருமா?

19. குதிரைப்பந்தயம், சூதாட்டம், இவற்றால், எனக்கு லாபம் உண்டா?

20. அரசியலில் ஈடுபட்டு பெயர், புகழ் பெறுவேனா?

21. விளையாட்டுத் துறையில் பெயர், புகழ், பெறுவேனா?

22. மந்திர உச்சாடனம் எனக்கு சித்தி வருமா?

23. இரண்டுமே ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்குமா?

24. அல்லது ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை பிறக்குமா?

25. எதிர்காலத்தை அறியும் சக்தி உண்டாகுமா?

26. பாவ புண்ணியம் வாழ்க்கையில் பார்த்து நடப்பேனா?

27. சமயத்தைப் பற்றிய நல்அபிப்ராயமும் சிந்தனையும் ஏற்படுமா?

28. அன்னதானம் போன்ற அறப்பணிகளில் ஈடுபடுவேனா?

29. நல்ல அறிவுடனும் ஆற்றலுடனும் விளங்குவேனா?

30. நல்ல கற்பனை வளத்துடன் விளங்குவேனா?

31. பழமையான வைதீகப் பழக்கங்களில் நம்பிக்கையுடன் இருப்பேனா?

32. மந்திர ஜெபம் எடுக்கலாமா?

33. மந்திர உபதேசம் பெறலாமா?

34. சூதாட்ட கிளப் வைத்து நடத்துவேனா?

35. அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபடுவேனா?

36. குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கு பெறுவேனா?

37. போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவேனா?

38. கற்பழிக்கப்படுவேனா அல்லது கற்பை இழக்க வேண்டி வருமா?

39. விபசாரத்தில் ஈடுபட்டு அவமானப்பட நேரிடுமா?
6ம் பாவகத் தொடர்பான கேள்விகள் (நோய்)

1. எனது உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?

2. எனக்கு ஏதேனும் நோய் ஏற்படுமா?

3. ஏற்படும் எனில் எந்தக் காலகட்டத்தில் நோய் வரும்? உடலின் எந்தப் பாகத்தில் நோய் ஏற்படும்?

4. என்ன மாதிரியான நோய் ஏற்படும்?

5. அந்த நோய் தீர்க்கக்கூடியதா? அல்லது தீர்க்க முடியாததா?

6. எந்த விதமான மருத்துவ முறையைப் பின்பற்ற வேண்டும்?

7. ஆங்கில மருத்துவமா? சித்தாவா? ஹோமியோபதியா?

8. தன்வந்தரியா? யுனானியா? அக்குபஞ்சரா? 

9. உடனடியாக நோய் தீருமா, சற்று காலம் தாழ்ந்து தீருமா?

10. தீரும் என்றால் எந்த காலகட்டத்தில்?

11. அறுவை சிகிச்சை செய்ய சந்தர்ப்பம் அமையுமா? அல்லது மருந்து மாத்திரைகளின் மூலம் சரியாகுமா?

12. உள்நாட்டில் மருத்துவம் பார்க்க முடியுமா? அல்லது வெளிநாட்டில் மருத்துவம் பார்க்க வேண்டி வருமா?

13. மருத்துவ விடுப்பு அடிக்கடி எடுக்க வேண்டி வருமா?

14. அரசு மருத்துவமனைகயில் சிகிச்சை எடுக்கலாமா?

15. அல்லது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கலாமா?

16. மருத்துவ காப்பீட்டின் மூலம் பயன் அடைய முடியுமா?

17. உள்நாட்டு மருத்துவ காப்பீடு அவசியமா? அல்லது வெளிநாட்டு மருத்துவ காப்பீடு அவசியமா?

18. வெளியே கூற முடியாத கடினமான மனநோய் ஏற்படுமா?
6ம் பாவகத் தொடர்பான கேள்விகள் (கடன்)

1. நான் கடன் வாங்குவேனா?

2. கடன் வாங்குவேன் என்றால் எதற்காக கடன் வாங்குவேன்?

3. கல்விக்காக அல்லது மேற்படிப்புக்காக கடன் வாங்குவேனா?

4. வேலைக்காக கடன் வாங்குவேனா?

5. திருமணத்திற்காக கடன் வாங்குவேனா?

6. வீடு நிலம், கார் வாங்க கடன் வாங்குவேனா?

7. தொழில் செய்வதற்காக கடன் வாங்குவேனா?

8. சுபகாரியங்கள் செய்வதற்காக கடன் வாங்குவேனா?

9. நோய் மற்றும் இதரக் காரியங்களுக்காக கடன் வாங்குவேனா?

10. எதன் மூலமாக கடன் வாங்குவேன்?

11. வங்கியின் மூலமா? தனி நபர் மூலமா? உறவினர் மூலமா? நண்பர்கள் மூலமா?

12. கடனை உரிய காலத்தில் அடைத்து விடுவேனா?

13. கடனால் அவமானப்பட்டு நிம்மதியிழப்பேனா?

14. உள்நாட்டில் கடன் வாங்குவேனா? வெளிநாட்டில் கடன் வாங்குவேனா?

15. கொடுத்த கடன் திரும்ப வந்து சேருமா?

16. கடனை அடைக்க முடியாமல் சொத்து ஏலத்திற்கு வருமா?
6ம் பாவகத் தொடர்பான கேள்விகள் (பொதுவானவை) 

1. எனது தாய் மாமனால் ஆதாயம் உண்டா?

2. தாய் மாமன் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்களா?

3. போட்டித் தேர்வில் வெற்றி பெறுவேனா?

4. எனது வழக்கு வெற்றி பெறுமா?

5. உதவிச் சம்பளம் பெறமுடியுமா?

6. நன்கொடை மூலம் பணம் வசூலாகுமா?

7. நல்ல ஆண் வேலையாட்கள் கிடைக்கப் பெறுவேனா?

8. நல்ல வீட்டு வளர்ப்புப் பிராணிகள் வளர்க்க வாய்ப்பு உண்டா?

9. நல்ல புதிய ஆடைகள் அணிய வாய்ப்பு உண்டா?

10. உணவுப் பழக்கங்கள் எப்படி அமையும்? 

11. அடிக்கடி அறுசுவை உணவு உண்பேனா?
7ம் பாவகத் தொடர்பான கேள்விகள் (திருமணம்)

1. எனக்கு வாழ்க்கையில் திருமணம் உண்டா?

2. உண்டு என்றால் எப்பொழுது திருமணம் நடைபெறும்?

3. இளவயதில் திருமணம் நடக்குமா? அல்லது சற்று காலந்தாழ்ந்த திருமணம் நடைபெறுமா?

4. எப்படி அத்திருமணம் நடக்கும்?

5. உறவில் திருமணமா? அல்லது அந்நியத்தில் திருமணம் அமையுமா?

6. உறவில் என்றால் அத்தை மகளா, மகனா அல்லது மாமன் மகனா, மகளா ?

7. அல்லது நெருங்கிய அல்லது தூரத்து உறவு முறையில் திருமணமா?

8. அந்நியத்தில் என்றால் ஊர், பெயர், தெரிந்தவரா?

9. காதல் திருமணமா? அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா? அல்லது கலப்புத் திருமணமா?

10. காதல் திருமணம் என்றால் உறவில் காதலா, அல்லது அந்நியத்தில் காதலா?

11. காதல் திருமணம் எனில் பெற்றோர் சம்மதத்துடனா? அல்லது பதிவுத் துறையிலா? அல்லது கோயிலிலா?, அல்லது நண்பர்கள் முன்னிலையிலா?

12. நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் உறவிலா? அல்லது அந்நியத்திலா?

13. கலப்புத் திருமணம் எனில் வேறு மதமா? அல்லது வேற்று ஜாதியா?

14. வரும் கணவர்/மனைவி உள்ளூரில் அமைவார்களா?

15. வேலை பார்க்கும் கணவன்/மனைவி அமைவார்களா?

16. சுயதொழில் புரியும் கணவன்/மனைவி அமைவார்களா?

17. நன்கு படித்த சொத்து உள்ள கணவன்/மனைவி அமைவார்களா?

18. கணவன்/மனைவி உள்ளூரில் அமைவார்களா?

19. அல்லது வெளியூரில் அமைவார்களா?

20. அல்லது வெளிநாட்டில் அமைவார்களா?

21. உள்ளூரில் என்றால் நாம் வசிக்கும் ஊரிலா? அல்லது பஸ் ஏறிப்போகும் தூரத்திலா?

22. வெளியூர் என்றால் நீண்டதூரம் பஸ் அல்லது ரயில் அல்லது விமானப் பயணமாக அமையுமா?

23. வெளிநாடு என்றால் உத்தேசமாக எந்த நாடாக அமையும்?

24. நல்ல வரதட்சனையுடன் மனைவி அமைய வாய்ப்புண்டா?

25. அன்பும், பாசமும் உள்ள கணவன்/மனைவி அமைய வாய்ப்பு உண்டா?

26. தாய், தந்தை, உடன்பிறப்புகளை மற்றும் உறவினர்களை அனுசரித்து போகும் கணவன்/மனைவி அமைவார்களா?

27. பேராசை பிடித்த கணவன்/மனைவி அமைவார்களா?

28. உண்மையும், ஒழுக்கமும், தெய்வபக்தியும் உடைய கணவன்/மனைவி அமைய வாய்ப்புண்டா?

29. நல்ல ஆயுள் உள்ள கணவன்/மனைவி அமைவார்களா?

30. அல்லது வாழ்க்கை முழுவதும் நோயுடன் கூடிய கணவன்/மனைவி அமைவார்களா?

31. மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம் நடைபெறுமா?

32. விதவைத் திருமணம் அமையுமா?

33. பலதார விவாகம் உண்டா?

34. இரண்டாம் தாரமாக வாழ வாழ்க்கை அமையுமா?

35. விவகாரத்து ஆனவர்களுடன் திருமணம் நடக்குமா?

36. நல்ல கணவனாக இருக்க வாய்ப்புண்டா? அல்லது துணைவனாக இருக்க வாய்ப்புண்டா?

37. நல்ல மனைவியாக இருப்பேனா? அல்லது நல்ல துணைவியாக இருப்பேனா?

38. விவாகரத்துக்குப் பின் அதே கணவர்/மனைவியோடு சேர்ந்து வாழ வாய்ப்பு ஏற்படுமா?

39. அல்லது வேறோரு ஆட்களுடன் சேர்ந்து வாழ சந்தர்ப்பம் அமையுமா?

40. திருமணம் திடீரென்று நின்று விடுமா?

41. நின்று விடும் என்றால் எதனால் நிற்கும்?

42. ரகசியத் தொடர்புகளால் வேறோரு ஆண் அல்லது பெண்ணுடன் வாழ வாய்ப்பு ஏற்படுமா?
7ம் பாவகத் தொடர்பான கேள்விகள் (சுயதொழில்)

1. சுயதொழில் செய்வேனா? அல்லது வியாபாரம் செய்வேனா?

2. சுயதொழில் என்றால் உற்பத்தி செய்து தொழில் செய்வேனா அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருளை விற்று சுயதொழில் செய்வேனா?

3. சொந்தமாக தொழில் செய்வேனா ? அல்லது கூட்டாளியுடன் சுய தொழில் செய்வேனா?

4. சுயதொழில் உண்டு என்றால் என்ன மாதிரியான சுய தொழில் அமையும்?

5. சுயதொழில் உள்ளூரிலா? உள்நாட்டிலா? வெளிநாட்டிலா?

6. ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வாய்ப்பு ஏற்படுமா?

7. என்ன மாதிரியான தொழில் அல்லது வியாபாரம் செய்ய லாபம் ஏற்படும்.

8. கொடுக்கல் வாங்கல் தொழில் செய்யலாமா?

9. கண்ணாடி, பீங்கான், பிளாஸ்டிக், பேன்சி ஸ்டோர், பெண்கள் அணியும் அழகு சாதனப் பொருட்கள் விற்கலாமா?

10. அழகு நிலையம் வைத்து நடத்தலாமா?

11. கமிஷன், ஏஜென்ஸி, புரோக்கர் தொழில் ஒத்து வருமா?
7ம் பாவகத் தொடர்பான கேள்விகள் ( பொதுவானவை)

1. எனது பொருள் திருடு போகுமா?

2. திருடன் ஆணா? அல்லது பெண்ணா?

3. வீடு அல்லது அலுவலகத்தில் திருடு போகுமா?

4. வீட்டு வேலைக்காரர்களால் திருடு போகுமா?

5. விலைமதிப்புள்ள பொருள்கள் திருடு போகுமா?

6. திருடன் உள்ளூரா? அல்லது வெளியூரா?

7. திருடு போன பொருள் திரும்ப கிடைக்குமா?

8. எனது பொருள் உள்நாட்டில் திருடு போகுமா? அல்லது வெளிநாட்டில் திருடு போகுமா?

9. எனக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுமா?

10. நான் வளர்ப்பு பிள்ளை எடுத்து வளர்க்கலாமா?

11. எனது பயணம் தடையில்லாமல் நடைபெறுமா?

12. நல்ல வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பேனா?

13. வெற்றிலை, பாக்கு போடுவேனா?

14. பொதுக்கூட்டங்களில் அடிக்கடி கலந்து கொள்வேனா?

15. வெளிநாட்டில் கௌரவம், அந்தஸ்து, புகழ் கிட்டுமா?
8ம் பாகவத் தொடர்பான கேள்விகள்

1. உயில் மூலம் சொத்துக்கள் கிடைக்குமா?

2. எதிர்பாராத வெகுமதிகள், அன்பளிப்புகள், நன்கொடைகள் கிடைக்குமா?

3. உதவிப் பணம் கிடைக்குமா?

4. இன்சூரன்ஸ் பணம் எப்பொழுது கிடைக்கும்?

5. ஞாபக சக்தி குறைபாடு கிடைக்குமா?

6. உடலில் இரத்த ஓட்டம் எப்படி இருக்கும்?

7. பெண்களால் அவமானங்கள் ஏற்படுமா?

8. தீராத பழியும் கெட்ட பெயரும் வந்து சேருமா?

9. ஆபரேசன் ஏதேனும் செய்ய வேண்டியது இருக்குமா?

10. நான் தற்கொலை செய்து கொள்வேனா?

11. விபத்துகள் ஏதேனும் ஏற்படுமா? எப்பொழுது?

12. திருடர்களால் தொல்லைகள் ஏற்படுமா?

13. அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவேனா?

14. எனது இறப்பு எப்படிப்பட்டதாக இருக்கும்?

15. நெருப்பு, வெள்ளம், நிலநடுக்கம், பூகம்பம் இவற்றால் எனக்கு பாதிப்பு வருமா?

16. வருமான வரித்துறையினால் பிரச்சினை ஏற்படுமா?

17. எப்பொழுதும் ஏதேனும் பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டேயிருப்பேனா?

18. எனது ஆயுள் எவ்வளவு காலம் இருக்கும்?

19. எனது மரணம் இயற்கை மரணமா? செயற்கை மரணமா?

20. செயற்கையானது என்றால் நோயா? விபத்தா?

21. உடல் உறுப்புகள் ஏதேனும் தேசமடையுமா?

22. தொற்று நோய் ஏதேனும் ஏற்படுமா?

23. தீராத வியாதிகள் வந்து சேருமா?

24. பகைவரால் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா?

25. உள்நாட்டில் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? அல்லது வெளிநாட்டில் ஏற்படுமா?

26. திருடு, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவேனா?

27. எப்பொழுதும் கவலையுடனும் துன்பத்துடனும் இருப்பேனா?

28. வீணாகப் பொழுது போக்கி காலத்தைக் கழிப்பேனா?

29. எப்பொழுதும் சோம்பேறியாகவே இருப்பேனா?

30. பற்றாக்குறை வாழ்க்கை வாழ்வேனா?

31. பட்ஜெட்போட்டு வாழ்க்கை வாழ்வேனா?

32. எனது சொத்துக்கு அதிக வரி விதிக்கப்படுமா?

33. அரசு எனது சொத்துக்களை ஜப்தி செய்யுமா?

34. வளர்ப்புப் பிராணிகளை வெட்டும் தொழில் செய்வேனா?

35. வேலைக்குச் செல்லும் பெண் அமைவாளா?

36. மனைவியால் தனவரவு, பொருள் வரவு கிட்டுமா?

37. நல்ல வரதட்சனையுடன் மனைவி அமைவாளா?

38. திருடு போன பொருள் திரும்ப கிடைக்க வாய்ப்பு அமையுமா?

39. போரில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையுமா?

40. பென்சன் கிராஜ்வேட் தொகை கிடைக்குமா?
9ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. எனக்கு குலதெய்வ அனுகூலம் உண்டா?

2. கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வேனா?

3. கோவில் குருக்களாகும் யோகம் உண்டா?

4. குருவாக அதாவது ஆசிரியராகும் யோகம் உண்டா?

5. மதத்தின் மேல் நம்பிக்கை உள்ளவனாக விளங்குவேனா?

6. மடாதிபதியாக வர வாய்ப்பு உண்டா?

7. மதப்போதகராக வரும் வாய்ப்பு உண்டா?

8. அடிக்கடி நீண்டதூர ஆலய தரிசனம் செய்ய முடியுமா?

9. எனக்கு ஜோதிடம் நன்கு வருமா?

10. நல்ல கனவுகள் வாழ்க்கையில் வந்து போகுமா?

11. அருள்வாக்கு மற்றும் குறி சொல்ல வாய்ப்பு உண்டா?

12. நாடி ஜோதிடம் பார்க்கும் காலம் வருமா?

13. ஏட்டுச் ஜோதிடம் படிக்கும் காலம் எப்பொழுது வரும்?

14. நான் தந்தையாகும் வாய்ப்பு உண்டா?

15. என் தந்தை என்னிடம் பிரியமுடன் நடப்பாரா?

16. நான் என் தந்தையிடம் பற்றுடன் இருப்பேனா?

17. எனது குலதெய்வம் எதுவாக இருக்கும்?

18. பெரிய பதிப்பகம் வைத்து நடத்த வாய்ப்பு அமையுமா?

19. பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிட்டுமா?

20. எதிர் பார்க்கும் கௌரவப் பதவி கிடைக்குமா?

21. வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படுமா?

22. பருத்த எனது உடல் எப்பொழுது குறையும்?

23. எனக்கு தெய்வ அனுகூலம் எப்படி இருக்கும்?

24. நல்ல ஞானம் ஏற்படுமா?

25. சமய சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுவேனா?

26. நல்ல தியான வாழ்க்கை அமையுமா?

27. பக்தி சிரத்தையுடன் ஆன்மீக வாழ்க்கை வாழ்வேனா?

28. அடிக்கடி கோவில், சர்ச், மசூதி, குருத்துவார் செல்ல வாய்ப்பு அமையுமா?

29. சித்தர்கள், மகான்கள், ஞானிகள், யோகிகளின் தரிசனம் கிடைக்குமா?

30. ஆவிகளுடன் தொடர்பு கொள்வேனா?

31. ஆராய்ச்சி அல்லது விஞ்ஞானி ஆக முடியுமா?

32. அதிர்ஷ்டம் எப்பவும் என்பக்கம் இருக்குமா?

33. விசுவாசமுள்ளவர்கள் எனக்கு அமைவார்களா?

34. முன்யோசனையுடன் எப்பொழுதும் செயல்படுவேனா?

35. நிதிநிறுவனம் கிளைகள் வைத்து நடத்துவேனா?

36. பணப்புழக்கம் உள்ள இடத்தில் எப்பொழுதும் இருப்பேனா?

37. சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேனா?

38. உள்நாட்டு, வெளிநாட்டு போக்குவரத்து அமையுமா?

39. தூரதேச பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையுமா?

40. கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையுமா?

41. ஆன்மீக நூல்கள், ஜோதிட நூல்கள் வெளியிடுவேனா?

42. தவம், தியானம், யோகா இவற்றில் ஈடுபடுவேனா?
10ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. எனக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டா?

2. கிடைக்கும் என்றால் எந்தக் காலக்கட்டத்தில் கிடைக்கும்?

3. அரசுத் துறையிலா? அல்லது தனியார் துறையிலா?

4. அரசுத்துறை என்றால் மத்திய அரசா? அல்லது மாநில அரசா? அல்லது பொதுத்துறையா?

5. தனியார் துறை என்றால் பெயர் போன பெரிய கம்பெனியா? அல்லது சிறிய அளவிலான கம்பெனியா?

6. வேலை சொந்த மாநிலத்திலா அல்லது வேறு மாநிலத்திலா அல்லது வேறு நாட்டிலா?

7. அந்நிய நாடு என்றால் அந்த நாட்டு அரசுத்துறையிலா அல்லது தனியார் துறையிலா?

8. வேலை எப்பொழுது நிரந்தரம் ஆகும்?

9. நிர்ணயித்த காலம் வரை வேலை பார்ப்பேனா? அல்து விருப்ப ஓய்வில் வருவேனா? அல்லது பணி நீக்கம் செய்யப்படுவேனா?

10. விருப்ப ஓய்வு என்றாலும் பணி நீக்கம் என்றாலும் எந்த காலக்கட்டத்தில் அது நடக்கும்?

11. வேலையில் பிரச்சினை ஏற்படுமா? அதனால் அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவேனா?

12. பார்க்கும் வேலையினால் அரசாங்கத்தால் ஆதாயமும், வெகுமதியும், பரிசும் கிடைக்குமா?

13. வேலை அடிக்கடி மாறிக் கொண்டேயிருப்பேனா?

14. வேலையில் ஊக்கத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவேனா அல்லது மகிழ்ச்சியில்லாமல் வேலையைப் பார்ப்பேனா?

15. பார்க்கும் வேலையில் எதிர்பார்த்த பொருளாதார நிலை சீரடையுமா? வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுமா?

16. நான் அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவேனா?

17. ஏதேனும் விருதுகள் கிடைக்க வாய்ப்புண்டா?

18. விருது மத்திய அரசு மூலம் கிடைக்குமா? அல்லது மாநில அரசு மூலம் கிடைக்குமா?

19. பொது வாழ்க்கையில் மதிப்பும், பெயரும், புகழும் கிட்டுமா?

20. அதிகாரம் கௌரவத்துடன் சிறந்து விளங்குவேனா?

21. நான் மந்திரி ஆவேனா?

22. மந்திரி ஆவேன் என்றால் மத்திய அரசிலா? அல்லது மாநில அரசிலா?

23. சேவை மற்றும் தியாக மனப்பான்மையுடன் வாழ்வேனா?

24. எப்பொழுதும் எஜமானாகவே இருப்பேனா?

25. நீதித்துறையில் படிக்க வாய்ப்பு அமையுமா?

26. நல்ல நீதிபதியாக வாழ்க்கையில் இருப்பேனா?

27. திருடரால் எனது எந்தப் பொருட்கள் திருடப்படும்?

28. நான் தத்துப்புத்திரனாக வருவேனா?

29. ஏதாவது வளர்ப்பு மகளை எடுத்து வளர்க்கலாமா?

30. எனது மந்திர உச்சாடனம் சித்தி பெறுமா?

31. தாயத்து மந்திரித்து உடம்பில் அணியலாமா?
11ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. உண்மையான நண்பர்கள் அமைவார்களா?

2. அவர்களால் வாழ்க்கையில் நன்மை அல்லது தீமைகள் ஏற்படுமா?

3. அரசாங்கத்தால்; எதிர்பார்த்த நன்மை கிடைக்குமா?

4. அரசு அதிகாரிகள் நண்பர்களாவார்களா?

5. என்னுடைய விருப்பம், ஆசை அபிலாஷை பூர்த்தி ஆகுமா?

6. வாழ்க்கையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா?

7. வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சிகரமாக அமையுமா?

8. எனது செல்வம், செல்வாக்கு, அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்?

9. ஆன்மீக வாழ்வில் திருப்தி ஏற்படுமா?

10. நல்ல ஆலோசகர்கள் கிடைப்பார்களா?

11. நல்ல ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் அமைவார்களா?

12. நெருங்கிய உறவினர்களால் நன்மையேற்படுமா?

13. எனது மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மையேற்படுமா?

14. எனது இடதுகை, காது, கால் இவைகள் நன்கு வேலை செய்யுமா?

15. எனது நோயிலிருந்து விடுபடுவேனா?

16. எனது தொழில் எதிர்பார்த்த லாபத்துடன் இயங்கி வருமா?

17. எனது கம்பெனி நல்ல அபிவிருத்தியுடன் லாபகரமாக அமையுமா?

18. நான் கொடுத்த பணம் வட்டியோடு சேர்த்து வருமா?

19. வீட்டிற்கு நல்ல மருமகன், மருமகள் வருவார்களா?

20. பஞ்சாயத்து, நகரசபை தேர்தலில் வெற்றி பெறுவேனா?

21. மாகாண சட்டசபை தேர்தலில் ஜெயிப்பேனா?

22. பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெறுவேனா?

23. அமைச்சர் பதவி கிடைக்குமா?

24. சங்கச் செயல்பாடுகளில் ஈடுபடலாமா?
12ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. ஆராய்ச்சிப் படிப்பு படிக்க வாய்ப்புண்டா?

2. அரசாங்கத்தால் ஏதேனும் தொல்லைகள் ஏற்படுமா?

3. அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவேனா?

4. அரசு கடன் பாக்கி ஏதேனும் செலுத்த வேண்டி வருமா?

5. ரகசிய சட்ட ஆலோசனையில் ஈடுபடுவேனா?

6. தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியது வருமா?

7. சதிவேலையில் ஈடுபட்டு சிறைவாசம் செல்வேனா?

8. சிறையிலிருந்து எப்பொழுது விடுதலையாவேன்?

9. முன் ஜாமின் கிடைக்க வாய்ப்பு அமையுமா?

10. பினையத் தொகையில் விடுதலையாவேனா?

11. சட்டரீதியாக முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படுமா?

12. சட்டத்திற்குட்பட்டு செலவு செய்ய வேண்டியது வருமா?

13. ஊரை விட்டு ஓட வேன்டிய சூழ்நிலை வருமா?

14. மிருகங்களால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா?

15. தற்கொலை செய்யும் எண்ணம் ஏற்படுமா?

16. உடம்பில் ஏதேனும் அவயவங்கள் வெட்டுப்படுமா? அல்லது வெட்டப்படுமா?

17. வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு கிட்டுமா?

18. வெளிநாட்டில் முதலீடு செய்வேனா?

19. எனக்கு இறப்பிற்குப்பின் மோட்சம் கிட்டுமா?

20. புதிய பொருட்கள் ஏதேனும் கண்டுபிடிப்பேனா?

21. வெளிநாட்டில் செய்யும் ஆராய்ச்சி வெற்றி பெறுமா?

22. வெளிநாட்டில் வாழ்க்கை எப்படி அமையும்?

23. வெளிநாட்டில் ஏதேனும் விபத்து ஏற்படுமா?

24. மற்றவர்களை மோசம் செய்வேனா?

25. பிறர் பொருள்களை கொள்ளையடிப்பேனா?

26. கள்ளக்கடத்தலில் ஈடுபடுவேனா?

27. ராஜத்துரோகம், தேசத்துரோக செயலில் ஈடுபடுவேனா?

28. ஒற்றர் வேலை அல்லது உளவு வேலை பார்ப்பேனா?

29. அடிக்கடி கோபப்பட்டு மற்றவர்களுடன் தகராறு செய்வேனா?

30. அடிக்கடி பணக்கஷ்டம் ஏற்படுமா?

31. கூட்டுக்குடும்பத்தை விட்டு பிரிந்து விடுவேனா?

32. வரவுக்கு மேல் செலவு செய்ய வேண்டியது வருமா?

33. நிம்மதியான படுக்கை வசதி கிட்டுமா?

34. எப்பொழுதும் ஆழ்ந்த தூக்கம் வருமா?

35. வீடு, அலுவலகத்தை திடீர் சோதனை நடத்துவார்களா?

36. எனது இறப்பிற்குப் பின்னும் புகழ் பெறுவேனா?

WhatsApp

மீள்பதிவு.

வாழ்வியல் நீதி

​எமதர்மராஜன் ஒரு குருவியை 

வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். 
அடடா… இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த 

கருடபகவான், 
உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு 

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.
அந்த பொந்தில் வசித்து வந்த 

ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் 

அந்த குருவியை விழுங்கிவிட்டது. 
குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த 

குருவிக்கே எமனாகி விட்டோமே என்று நினைத்து

கருடபகவான், 
குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.
“நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்”
நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், 
“அந்த குருவி சில நொடிகளில் 

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் 

வசித்த ஒரு பாம்பின் வாயால் 

இறக்க நேரிடும்” என எழுதப்பட்டிருந்தது; 
அது எப்படி நிகழப் போகிறது? 

என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன். 
அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார்.
*_”வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம் என்பதே வாழ்வியல் நீதி!”_*

படித்ததில் பிடித்தது.