பஞ்சாட்சரம்

11013458_862145247182111_6925839214100243754_n

மூன்று வகை பஞ்சாட்சரம்

நமசிவய – ஸ்தூல பஞ்சாட்சரம்

சிவயநம – சூட்சும பஞ்சாட்சரம்

சிவசிவ – காரணபஞ்சாட்சரம்

நமசிவய – ஸ்தூல பஞ்சாட்சரம்

நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை

ந – நிலத்தைக் குறிக்கிறது,

ம – நீரைக் குறிக்கிறது

சி – நெருப்பைக் குறிக்கிறது

வ – காற்றைக் குறிக்கிறது,

ய – ஆகாயத்தைக்குறிக்கிறது

ந – கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது,மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி

ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது,கருப்பு நிறம், அத்திரி மகரிஷி

சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது,புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி

வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது,பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி

ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது,சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி

சிவயநம – சூட்சும பஞ்சாட்சரம்

சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”

“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”

திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”

“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால் அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே…”

சிவசிவ – காரணபஞ்சாட்சரம்

சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்

சிவ சிவ என்கிலார் தீவினையாளர்

சிவ சிவ என்றிடத் தேவருமாவர்

சிவ சிவ என்னச் சிவ கதி தானே”

“திருச்சத்திமுத்தம்”

கும்பகோணம்., பட்டிஸ்வரம் அருகிலுள்ளது திருச்சக்திமுற்றம் ஸ்ரீ சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இவ்வாலயத்தில் உள்ள சிவனை பார்வதிதேவி பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் “திருச்சத்திமுத்தம்” என பெயர் பெற்றது. மூலஸ்தானத்திற்கு அருகில் அம்மன் சிவலிங்கத்தை கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலத்தை இன்றும் தரிசிக்கலாம்.

 

qqqqqqqqqqqqq

 

 

 

 

 

 

 

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்jfvjடிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

– இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

நன்றி மாலைமலர்.

ருத்ராட்சமும் ஜோதிடமும்

ருத்ராட்சமும் ஜோதிடமும்

  1. அஸ்வினி – ஒன்பது முகம்.images(2)
  2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
  3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.
  4. ரோஹிணி – இரண்டு முகம்.
  5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.
  6. திருவாதிரை – எட்டு முகம்.
  7. புனர்பூசம் – ஐந்து முகம்.
  8. பூசம் – ஏழு முகம்.
  9. ஆயில்யம் – நான்கு முகம்.
  10. மகம் – ஒன்பது முகம்.
  11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
  12. உத்திரம் – பனிரெண்டு முகம்
  13. ஹஸ்தம் – இரண்டு முகம்.
  14. சித்திரை – மூன்று முகம்.
  15. ஸ்வாதி – எட்டு முகம்.
  16. விசாகம் – ஐந்து முகம்.
  17. அனுஷம் – ஏழு முகம்.
  18. கேட்டை – நான்கு முகம்.
  19. மூலம் – ஒன்பது முகம்.
  20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்.
  21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.
  22. திருவோணம் – இரண்டு முகம்.
  23. அவிட்டம் – மூன்று முகம்.
  24. சதயம் – எட்டு முகம்.
  25. பூரட்டாதி – ஐந்து முகம்.
  26. உத்திரட்டாதி – ஏழு முகம்.
  27. ரேவதி – நான்கு முகம்.

 

சாதகப் பொருத்தம்

101

சாதகரீதியான பொருத்தம் பார்ப்பதில் முக்கியமாக ஒரு விதிவிலக்கு பாடலை இங்கு நினைவுகூறுகிறோம் .”ஏகாதிபத்யே மைத்ரேவ சமசபதம ஏவச்ச  ரஜ்ஜீ தோஷ,ராசிதோஷ ,கணம் தோஷ ,நவித்யதே ” இதன் அடிப்படையில் ஆண்ட,பெண் இருவருக்கும் இராசி அதிபதிகள் ஒரு ராசி இருந்தாலும் ,நண்பர்களாக இருந்தாலும் எந்த தோஷமும் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என்று தெளிவுப்படுகிறது .ஆகவே ஆண்,பெண் இருவருடைய ராசியும் ,நண்பர்களாக இருப்பது மிக மிக முக்கியமாகும்.முதல் வகை மேஷம் ,கடகம்,சிம்மம்,விருச்சிகம்,தனுஷ் ,மீனம்,ஆகிய இந்த ஆறு ராசிகளும் தங்களுக்குள் நண்பர்களாக இருக்கும்.அதே போல் ரிஷபம், மிதுனம,கன்னி,துலாம்,மகரம்,கும்பம்,இந்த ஆறு இராசிகளும்தங்களுக்குள் நண்பர்களாக அமைந்தால்,வாழ்கையில் எத்தனை சண்டைகள் வந்தாலும்,மனதளவில் ஓன்று படக்கூடிய அமைப்பு நிச்சயமாக இருக்கும்,அப்படி இல்லாமல் மாறுப்பட்ட ராசி அமைப்புகள் இலக்கனங்களாக இருக்கும் பொழுது ,சண்டைகள் ஏற்படின்மனதளவில் பிரிவு எண்ணங்களையே அதிகப்படியாக தோற்றிவிக்கும் .இதனால் இலக்கின அதிபதிகள் நண்பர்களாக இருப்பது மிக மிக நல்லதாகும்.ஒரே இலக்கினமாக இருப்பதுஅதைவிட நல்லதாகவும் இருக்கும்.