If Astrology

ஜோதிடம் என்றால் என்ன? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் ‘டெலஸ்கோப்’ உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம்? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

1. அஸ்வினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதரை
7. புனர்ப்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்தம்
14. சித்திரை
15. ஸ்வாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம்? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

Every moment of life

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்: “வா மகனே…….

.நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது…….”

ஆச்சரியத்துடன் மனிதன் “இப்பவேவா?

இவ்வளவு சீக்கிரமாகவா?

என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?”

“மன்னித்துவிடு மகனே……..

உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது………”

“அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?”

“உன்னுடைய உடைமைகள்………”

“என்னுடைய உடைமைகளா!!!…….அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,………….?”

“இவை அனைத்தும் உன்னுடையது அல்ல…….. அவை பூமியில் நீ வாழ்வதற்கானது………”

“என்னுடைய நினைவுகளா?………….”
“அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது………அவை காலத்தின் கோலம்……..”

“என்னுடைய திறமைகளா?………..”
“அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது………

அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது…….”

“அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?……”
“மன்னிக்கவும்………..

குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி……….”

“அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?”

“உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது……… அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்…………”

“என் உடல்?………..”

“அதுவும் உன்னுடையது கிடையாது……….உடலும் குப்பையும் ஒன்று………”

“என் ஆன்மா?”

“இல்லை……..அது என்னுடையது……….”

மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்…….. காலி பெட்டியைக் கண்டு……….

கண்ணில் நீர் வழிய கடவுளிடம் “என்னுடையது என்று எதுவும் இல்லையா?” எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார், “அதுதான் உண்மை.

நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.

வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.

ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.

எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே……..”

— ஒவ்வொரு நொடியும் வாழ்

— உன்னுடைய வாழ்க்கையை வாழ்

— மகிழ்ச்சியாக வாழ மறக்காதே……

.அது மட்டுமே நிரந்தரம்…….

— உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது…

சூன்ய திதி சூன்ய ராசி

 

சூன்ய திதி சூன்ய ராசி சூன்ய

1. பிரதமை திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி
2. துதியை திதி தனுசு-மீனம் குரு
3. திருதியை திதி மகரம்-சிம்மம் சனி-சூரியன்
4. சதுர்த்தி திதி கும்பம்-ரிஷபம் சனி-சுக்கிரன்
5. பஞ்சமி திதி மிதுனம்-கன்னி புதன்
6. சஷ்டி திதி மேஷம்-சிம்மம் செவ்-சூரியன்
7. ஸப்தமி திதி தனுசு-கடகம் குரு-சந்திரன்
8. அஷ்டமி திதி மிதுனம்-கன்னி புதன்
9. நவமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்
10. தசமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்
11. ஏகாதசி திதி தனுசு-மீனம் குரு
12. துவாதசி திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி
13. திரயோதசி திதி ரிஷபம்-சிம்மம் சுக்கிரன்-சூரியன்
14. சதுர்த்தசி திதி மிதுனம்-கன்னி புதன்-குரு தனுசு-மீனம்