ஜோதிடம் கற்றுக்கொள்வது

ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி
—————————————————
புதிதாக ஜோதிடம் கற்றுக்கொள்பவர்கள் கீழ் கண்டவாறு ஒரு படிவம் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கீழ் கண்ட விவரங்களை தெரிந்துகொண்டு அவைகளை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும். குறைந்தது 100 பேர்களைப்பற்றிய தகவல்களை சேர்த்து வைத்துக்கொண்டால் அது ஜாதக ஆய்வுக்கு பெரிதும் உதவும்.
ஜாதக விவரம்
ஜாதகரின் பெயர்:
ஜாதகரின் பிறந்த தேதி:
ஜாதகரின் பிறந்த நேரம்:
ஜாதகரின் பிறந்த ஊர்:
ஜாதகரின் முக்கிய அங்க அடையாளங்கள் என்ன?
ஜாதகரின் குணம் எப்படி?
ஜாதகர் அவர் வீட்டில் எத்தனையாவது குழந்தை?
ஜாதகரின் ஆரம்பகல்வியில் பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு பணவருவாய் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு நல்ல பணவருவை வந்த காலம் எப்பொழுது?
ஜாதகருக்கு பணத்தகராரு உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு உடன்பிறப்புகள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் உடன் பிறந்தோர் எண்ணிக்கை எத்தனை?ஆண்,பெண் விவரம்.
ஜாதகருக்கு உடன் பிறந்தவர்களுடன் உறவு எப்படி?
ஜாதகருக்கு இடமாற்றம் ஏதாவது ஏற்பட்டதா?
ஜாதகர் பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் குடியேறியவரா?
ஜாதகரின் தாய் எப்படி?அங்க அடையாளம் மற்றும் குணம்.
ஜாதகருக்கு தாயுடனான உறவு நிலை எப்படி?சுமூகமா? விரிசலா?
ஜாதகரின் தாய்க்கு வருமானம் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தாய்க்கு நோய்கள் ஏதாவது உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தாய்க்கு சொத்துக்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தாய்க்கு கல்வித்தகுதி என்ன?
ஜாதகருக்கு அசையா சொத்து (நில புலங்கள்,வீடு) உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகர் சொத்து வாங்கிய காலம் எப்பொழுது?
ஜாதகருக்கு அசையும் சொத்து (வண்டி,வாகனம்) உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு சொத்து தகராரு உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் பள்ளிக்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் கல்லூரிக்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் கல்வித்தகுதி என்ன?
ஜாதகருக்கு காதல் அனுபவம் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு தெய்வ நம்பிக்கை உண்டா?(உண்டு/இல்லை)
ஜாதகருக்கு அரசியல் ஆர்வம் உண்டா?(உண்டு/இல்லை)
ஜாதகருக்கு கலை ஆர்வம் உண்டா?(உண்டு/இல்லை)
ஜாதகருக்கு குழந்தைபாக்கியம் உண்டா?(உண்டு/இல்லை)
ஜாதகருக்கு எத்தனை குழந்தைகள்? ஆண்,பெண் விவரம்.
ஜாதகருக்கு குழந்தை பிறந்த காலம் எப்பொழுது?
ஜாதகருக்கு குழந்தைகளால் நன்மை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் குழந்தைகளுக்கு நோய்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு குழந்தைகளுடனான உறவு நிலை எப்படி?சுமூகமா? விரிசலா?
ஜாதகருக்கு கடன் தொல்லை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு எதிரிகளால் தொல்லை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு யாரால் என்ன தொல்லை?
ஜாதகருக்கு நோய்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு திருமணம் ஆகிவிட்டதா? (ஆம்/இல்லை)
ஜாதகருக்கு திருமணம் நடந்த காலம் எப்பொழுது?
ஜாதகருக்கு நடந்த திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டதா? அல்லது காதல் திருமணமா?
ஜாதகரின் திருமண வாழ்க்கை எப்படி? மகிழ்ச்சியானதா?
ஜாதகரின் திருமண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமா?
ஜாதகரின் மனைவி அல்லது கணவன் எப்படி? அங்க அடையாளம் மற்றும் குணம்.
ஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு வருமானம் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு நோய்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு சொத்துக்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு அவமானம் ஏதாவது ஏற்பட்டதா?
ஜாதகருக்கு விபத்து ஏதாவது ஏற்பட்டதா?
ஜாதகருக்கு பயண சுகம் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் உயர்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தந்தையார் எப்படி?அங்க அடையாளம் மற்றும் குணம்.
ஜாதகருக்கு தந்தையுடனான உறவு நிலை எப்படி?சுமூகமா? விரிசலா?
ஜாதகரின் தந்தைக்கு வருமானம் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தந்தைக்கு நோய்கள் ஏதாவது உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தந்தைக்கு சொத்துக்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தந்தைக்கு என்ன தொழில்?
ஜாதகரின் தந்தைக்கு கல்வித்தகுதி என்ன?
ஜாதகரின் தந்தை பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் குடியேறியவரா?
ஜாதகருக்கு சொந்த தொழிலா? அடிமைத்தொழிலா?
ஜாதகர் என்ன தொழில் செய்கிறார்?
ஜாதகர் வேலைக்கு சேர்ந்த காலம் எப்பொழுது?
ஜாதகருக்கு உத்யோக உயர்வு கிடைத்த காலங்கள் எப்பொழுது?
ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட்ட காலங்கள் எப்பொழுது?
ஜாதகருக்கு தொழில் பிரச்சினை ஏதாவது உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு நண்பர்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு நண்பர்களால் உதவிகள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கிறதா?
ஜாதகரின் விருப்பங்கள் நிறைவேறுகிறதா?
ஜாதகருக்கு அதிருப்திகள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகர் வெளி நாடு பயணம் செய்துள்ளாரா?
ஜாதகருக்கு நன்றாக தூக்கம் வருகிறதா?
ஜாதகருக்கு எதிர்பாராத விரையங்கள் ஏற்பட்டுள்ளதா?
ஜாதகரின் வீட்டில் உள்ளவர்கள் யாராவது வெளி நாட்டில் வசிக்கிறார்களா?
ஜாதகரின் வீட்டில் யாருக்காவது விபத்து ஏற்பட்டுள்ளதா?
ஜாதகரின் வீட்டில் யாருக்காவது திருமணம் நடக்காமல் தடைபட்டுள்ளதா?
ஜாதகரின் வீட்டில் யாருக்காவது உடல் ஊனம் உள்ளதா?

https://m.facebook.com/groups/764342467017455?view=permalink&id=769393759845659

தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்……

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை…..
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்….
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்…..
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்…..
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்……
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்………
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்…….
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது………..
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது………
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்…..
கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்….
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்…
சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்…
காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்…
திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்…
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்…
சின்முத்திரை

19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்…
சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்…
ஸ்ரீசைலம்(ஆந்திரா)

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்…
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்….
திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்….
திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்….
பரணிதீபம் (அணையா தீபம்)

25. அருணாசலம் என்பதன் பொருள்…
அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை…
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்…
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு…
1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்…
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ….தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்…..
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்….
அனுமன்

33.நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?
அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்….
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்…
காரைக்காலம்மையார்

38.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
சங்கார தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்….
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….
களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்…
தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்….
காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்…
பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ….திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்…
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்…
மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்…
கஞ்சனூர்

53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12

54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்….
சுந்தரானந்தர்

55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்…
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)

56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி….
திலகவதி

57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்…
சேரமான் பெருமாள் நாயனார்

58.. “அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்’ என்ற அருளாளர்…
வள்ளலார்

59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை……
மங்கையர்க்கரசியார்

60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்

61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்…
மகேந்திரபல்லவன்

62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் …
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)

63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு

64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி

65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்

66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்…..
நமசிவாய

67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம

68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை…
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)

69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்

70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்….
ராமேஸ்வரம்

71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்…
தட்சிணாமூர்த்தி

72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12

73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்…
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்…
வில்வமரம்

75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி…
மானசரோவர்

76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81

77.பதிகம் என்பதன் பொருள்…
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்…
சிவஞானபோதம்

79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை….
டமருகம் அல்லது துடி

80.அனுபூதி என்பதன் பொருள்….
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை…..
மதுரை மீனாட்சி

82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்…..
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்….
தடாதகைப் பிராட்டி

84. பழங்காலத்தில் மதுரை ….. என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்

85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்…
கடம்ப மரம்

86. மீனாட்சி…. ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்

87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்….
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்…
குமரகுருபரர்

89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்….
மகாகவி காளிதாசர்

90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்…
சித்ராபவுர்ணமி

91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்…
ரோஸ் பீட்டர்

92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்

93. “நாயேன்’ என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்

94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்…
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)

95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்….
சூலைநோய்(வயிற்றுவலி)

96.அம்பிகைக்கு உரிய விரதம்….
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)

97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்….
தோணியப்பர்(சீர்காழி)

98.தாசமார்க்கம்’ என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்…
திருநாவுக்கரசர்

99.”தம்பிரான் தோழர்’ என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்……
சுந்தரர்

100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்…
சேக்கிழார்

101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்…
சேந்தனார்

102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்

103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்…
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)

104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்…
திருவானைக்காவல்

105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்….
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்

106.சிவசிவ என்றிட தீவினை மாளும்’ என்று கூறியவர்…
திருமூலர்

107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்….
காஞ்சிபுரம், திருவாரூர்

108. சிவாயநம என்பதை …. பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் “ஐந்தெழுத்து மந்திரம்’.

109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்…
பூசலார் நாயனார்

110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்….
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)

111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்…
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)

113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்….
அகத்தியர்

114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்….
தட்சிணாமூர்த்தி

115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்…
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்

116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்

117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்….
சேந்தனார்

118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்’ என்று இறைவனைக் குறிப்பிடுபவர்…
திருமூலர்

119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்….
திருஞானசம்பந்தர்

120. “நாமார்க்கும் குடியல்லோம்’ என்று கோபம் கொண்டு எழுந்தவர்…
திருநாவுக்கரசர்

121. “ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்’ என்று பாடியவர்….
சுந்தரர்

122. “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்று போற்றியவர்…
மாணிக்கவாசகர்

123. “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர்….
திருமூலர்

124. “உழைக்கும் பொழுதும் அன்னையே’ என்று ஓடி வரும் அருளாளர்….
அபிராமி பட்டர்

125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்…
குலசேகராழ்வார்

126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்….
இடைக்காட்டுச்சித்தர்

127. கோயில் என்பதன் பொருள்….
கடவுளின் வீடு, அரண்மனை

128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்….
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

129. சித்தாந்தத்தில் “சஞ்சிதம்’ என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்

130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்

131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்…
சாமவேதம்

132.நமசிவாய’ மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்…
ஆனாய நாயனார்

133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்

133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்…
திருவையாறு

134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்…
ராஜராஜசோழன்

135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்….
சோமாஸ்கந்தர்

136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்…
விநாயகர் அகவல்.

137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்….
மூர்த்திநாயனார்

138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..
காளஹஸ்தி

139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்…
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)

140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்…
மதுரை சொக்கநாதர்

141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்…
திருச்சி தாயுமானவர்

142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்…
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)

143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்…
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)

144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி

145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்…
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்

146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்…
திருவண்ணாமலை

147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்…
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)

148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்…..
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)

149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)

150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்….
சந்தியா தாண்டவம்

151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்…
கேதார்நாத்

152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)

153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்….
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்

154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது….
பிட்சாடனர்

155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்….
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)

156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்……
நமிநந்தியடிகள்( திருவாரூர்)

157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்….
திருவானைக்காவல்

158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்…..
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)

159.சிவன் “அம்மா’ என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்

160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்….
திருநாவுக்கரசர்

161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்…
திருக்கருக்காவூர்

162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்….
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்

163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்…
ருத்ராட்சம்

164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்….
சிவன்

165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை… என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)

166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்….
ருத்ரபசுபதியார்

167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்…
ருத்ரபசுபதியார்

168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)

169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை…..
14

170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்

171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்…..
பதஞ்சலி முனிவர்.

172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்…..
வியாக்ரபாதர், பதஞ்சலி

173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்………
சிவபெருமான்

174.நடராஜரின் தூக்கிய திருவடியை …. என்பர்
குஞ்சிதபாதம்

175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்……
ரத்தினசபாபதி

176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்….
சித்தாந்த அட்டகம்

177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்…..
கோமுகி

178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்

179. சிவனுக்கு “ஆசுதோஷி’ என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்…….
விரைந்து அருள்புரிபவர்

180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்…..
லிங்கோத்பவர்

181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64

182.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்….
சோமாஸ்கந்தர்

ஜாதக ஆய்வு:

ஜோதிட அன்பர்களுக்கு வணக்கம்
= = = = = = = = = = = = = = = = = = = =
29-4-2018 முதல்
கேள்வி – பதில் பகுதியில்
சேலம் சசி குமார் மகன் மகிபாலன்
ஜாதக ஆய்வு.

பிறந்த தேதி,
30-11-2007
5.36 PM . சேலம் .

நட்சத்திரம் – – -. மகம் (சிம்மம்)
திதி – – – – – – தேய்பிறை சப்தமி
யோகம் ——– ஜந்திரம்
கரணம் – – – – – – பத்திரை

ஜாதகருக்கு தற்காலம் நடப்பு
சுக்கிர திசையில் சந்திர புத்தி.

திசாநாதன் லக்கின அதிபதியாகி
மற்றொரு பாவகமான துலாமில் நிற்க்கின்றான்.

இருந்தாலும் யோகமில்லை.
காரணம் ,

சுக்கிரன் இந்த ஜாதகருக்கு அவயோக திசை.

மேலும்
புத்திநாதன சந்திரன்
| . திதி சூன்யாதிபதி,
2 வைநாசிகாதிபதி,

பலன்.
அவ யோகியான சுக்கிர திசை ஆரம்பிக்கும் பொழுது கன்னியில் சனி சஞ்சாரம் செய்த காலம் தகப்பனாருக்கு கண்டம் (or ) விபத்து ஏற்பட்டு இருக்கும்.

நடைபெற்ற காலம் ( 2013 ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை)

ஜாதகருடைய கேள்வி.
========== ========
வெளியில் ஹால்டலில் இருக்கலாமா?

தாராளமாக இருக்கலாம்.

இந்த ஜாதகருக்கு திதியினால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்யும் ஸ்தலம்

தஞ்சை அருகில் உள்ள திருகானுர் பட்டி
கரும்பீஸ்வரர்
வளர் பிறை சப்தமி திதியில்
சென்று தரிசிக்கவும்.

அவயோகி திசாநாதன் சுக்கிரன்
தன்னுடைய அவயோக பாதிப்பை குறைப்பதற்க்கு

திருபுவனை
தோதாத்ரி நாத பெருமாளை
மிருகசீரிடம், சித்திரை . அவிட்டம்
(or) செவ்வாய் கிழமையன்று தரிசனம் செய்து வாருங்கள்.

வாழ்க்கையில் வளமாள கால கட்டத்திற்க்கு சுக்கிர பகவான் உங்களை வழி நடத்துவார்.

ஜாதகர் ஜாதக ஆய்வைப் பற்றிய
கருத்தை பதியவும் .

பல நண்பர்கள் பிறந்த இடந்தை குறிப்பிடவில்லை.

பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம்,
இடம் குறிப்பிடவும்.

நன்றி
திருப்பூர் ஜோதிடர் தணிகாசலம்,
திதி, யோக, கரண ஆராய்ச்சியாளர்.

உள்ளம் அமைதி பெற

உள்ளம் அமைதி பெற 10 கொள்கைகள்:

1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.

நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ

அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம்.

இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது.

ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது.

எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார்.

உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம்.

நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது.

இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது.

இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர்.

அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் – அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால்.

ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள்.

இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்?

அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல!

நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல் (பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்

! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம்.

இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது.

நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது.

நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை.

பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்

. அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம்.

நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும்

. அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம்.

இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள்

. இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் – உள்மன ஆய்வு – மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும்.

தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம்.

அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம்.

ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன

. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.

உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது.

ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

“இது என்னால் முடியுமா? முடியாதா?” என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம்.

உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது.

உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம்.

சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது – மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர.

உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள்.

எதற்கும் வருத்தமடையாதீர்கள்.

எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

உறுதி கொள்..

வருவது எதுவானாலும்..

துணிந்து எதிர் கொள்..

ஸ்ரீ ரமணர்

பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ⛳

💐 1. நீ உன் சுவாசத்தை ஒரு முனைப்பாக கவனித்தால்

அது தானாகவே கும்பத்தில் {நிறுத்தல் } உன்னை கொண்டு சேர்த்து விடும்

இது பிராணாயாமம்

2. நீ எவ்வளவுக்கெவ்வளவு அடங்கி பணிவாக இருக்கிறாயோ

அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும்
உனக்கு நல்லது

3. மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு வேண்டுமானாலும் எந்தச் சூழ்னிலையிலும் இருக்கலாம்

4. உலகை கனவாக மட்டுமே கருத வேண்டும்

5. மனதை நீ வெளி விஷயங்களிலும், எண்ணங்களாலும்
திசைதிருப்ப விடக்கூடாது

வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர

மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும்

ஒரு கணமும் கவனக் குறைவிலோ, சோம்பலிலோ வீணாக்காதே

6. யாருக்கும் இம்மியும் தடையோ, தொந்தரவோ விளைவிக்காதே

தவிர உன் வேலைகளை எல்லாம் நீயே செய்துகொள்

7. விருப்பும், வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத்தக்கவை

8. எண்ணங்கள் அனைத்தையும் குவித்து ஒரு முகப்படுத்தி

தன்னுள் செலுத்தி தயங்காமல்

”நான் யார்“ விசாரணை
செய்ய வேண்டும்

ஒருமுனைப்பாக இதைச் செய்தால் சுவாசம் தானே அடங்கும்

இந்த மாதிரி கட்டுப்பாடாக சாதனை செய்யும் சமயம்

மனம் திடீரென்று கிளம்பும்

அதனால் கவனமுடன் விசாரத்தை தொடர வேண்டும்

“‘நான் யார்” என்று எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை

“‘நான் யார்” என்று எண்ணங்களின்றி இருத்தல் ஞானம்

“‘நான் யார்” என்று எண்ணங்களின்றி இருத்தல் மோட்சம்

“‘நான் யார்“ என்று எண்ணங்களின்றி இருத்தல் சகஜம்

அதனால் எண்ணங்களின் நிழல் கூட இல்லாமல் இருத்தலே
பரிபூரண நிலையாகும்

இது நிஜம்