கட்டிக்குளம் சூட்டுகோல் மாயாண்டி சுவாமிகள்

கட்டிக்குளம் சூட்டுகோல் மாயாண்டி சுவாமிகள்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

நம்முடைய ஆன்மிகத் தேடலுக்கும் அடைய விரும்பும் பேரின்பத்துக்கும் நல்ல குரு ஒருவரே வழிகாட்ட முடியும் . ஒரு குருவை நாம் தேடிக் கண்டடையும் போது அவரின் திருமேனியைத் தரிசிப்பதும் அவருடைய திருநாமத்தைச் சொல்லுவதும் அவருடைய உபதேசத்தைக் கேட்பதும் அவருடைய திருவுருவை நம் மனதில் வைத்துத் தியானிப்பதும் ஞானத்தை அளிக்கும். நமக்கு நல்ல கொடுப்பினை இருந்தால் சிவனே குருவாக வந்து நமக்கு மெய்யுணர்வை அளிக்கிறார் என்று திருமூலர் கூறுகிறார் .

அதனால்தானோ என்னவோ சிவனாகவே மாறிவிட்ட மாயாண்டி சுவாமிகள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’ என்று ஒரு நல்ல குருவாக இருந்து பல சித்தர்களை உருவாக்கியிருக்கிறார் .

சிறுவனைச் சுற்றிய நாகம்

மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .

குத்துக்காலிட்டு மகன் தியானம் செய்துகொண்டிருப்பதையும் அவனுடைய உடலை நாகம் ஒன்று சுற்றிக்கொண்டு தலையின் மீது படம் எடுத்து நிற்பதையும் கண்டார் . “அய்யனாரப்பா என் மகனைக் காப்பாற்று” என்று குரல் எழுப்ப அந்தப் பாம்பு சட்டென்று மறைந்துவிட்டது. அதைக் கண்ட அவர் தம் மகன் சாதாரணப் பிறவியல்ல என்று உணர்ந்து கொண்டார்.

சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.

குரு செல்லப்ப சுவாமிகள்

மன்னார்குடியைச் சேர்ந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரான செல்லப்ப சுவாமிகள் இராமேசுவர யாத்திரை செல்லும் வழியில் கட்டிக்குளத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார் .

ஆசிர்வாதமும் வழிநடத்தலும்

ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .

ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .

ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார் .

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் .

சட்டையைக் கழற்றிவிடலாமா?

நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் .

சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார் .
நற்றுணையாவது நமச்சிவாயமே

ஓம் நமசிவாய
சிவாய நம ஓம்
கருணை அருணாசலம்
திருச்சிற்றம்பலம்.

பாரம்பர்ய ஜோதிடம் கூறும் சூட்சுமம்

பாரம்பர்ய ஜோதிடம் கூறும் சூட்சுமம்
★★★★★★★★★★★★★★★★★★

செப்பியதோர் லக்னாதி பலவானாகில் சேர்ந்த சுபருடன் கூடி ஆட்சியுச்சம்
தப்பில்லா கருமாதிபதி பாக்கியாதி
தான் கூடி யிருந்திடவே தாழ்வில்லாமல்
செப்பினோம் முலைமடவாய் தனமும் தானியம் திறமான அறங்கீர்த்தி
உடையோனாவான் அப்படியே பூரணமாய் வயதுமாகும் அறிந்தபடி இன்னங்கேளறிவாய் மானே.

மானே கேள் லக்கினாதிபதி நீசனாகில் மன்னுமுடல் சவுக்கியமே யில்லானாகு
தானாகும் சரராசி கடகம் மேடம்
தான் மகரம் துலாமோடு தவர்ந்துமற்ற
தானாகும் ராசிதனில் இருந்திட்டாலும்
தாயாகமாஞ் சடமில்லை சுகமில்லை
தேனாரும் சுபருடனும் பத்தாமாதி
சேர்நோக்கம் பிரகாச தேகங்காணே.

காணவே சென்மாதிபதிஅங்கிசத்தில் ஏறில் கருது சுகதேகியாந் தனமுடையவனாவான்
நீணவே நினைத்த காரிய முடிப்பன் சபையில் நிர்வாகி யிதமறிந்து நேராய் செல்வான்
பாணவே பூமிகள் விஸ்தாரமாகும்
பார்த்திடவே பிரசித்த கீர்த்திமானாம்
வாணவே நல்ல சுபருடனே கூடில்
வாழ்ந்த மற்றோருடன் கூடி வலஞ்சேர்வானே.

பொருள்:

இலக்கினாதிபதி பலம் பெற்று சுபருடன் கூடி,ஆட்சி உச்சம் பெற்று விளங்கினாலும் அல்லது ஒன்பது பத்தாம் அதிபதியுடன் கூடி நல்ல நிலையில் இருக்கப் பிறந்தவன் தனவானாகவும், தானியங்கள் நிறைந்தவனாய்,வலிமையான அறமும் புகழும் உடையவனாய்,தீர்க்கமான ஆயுள் உடையவனாக விளங்குவான்.

இலக்கினாதிபதி நீசம் பெற்று இருந்தால் உடலில் பலம் இல்லாதவனாகி சௌவுக்கிய குறைபாட்டுடன் இருப்பான். சர ராசியான மேசம் கடகம் துலாம் மகர ராசிதனை தவிர மற்ற ராசிகளில் இருந்தால் உடல் வலுவில்லாதவனாகவும் சுகமில்லாதவனாகவும் இருப்பான்.
ஆனால் இலக்கினாதிபதி சுபக்கிரகங்களுடனும் பத்தாம் அதிபதியுடனும் சேர்ந்தாலும் பார்வை பெற்று இருந்தாலும் ஒளிமயமான நல்ல உடலைப் பெற்றிருப்பான்.

இலக்கினாதிபதி தன் சுய அங்கிசத்திலேயே ஏறியிருந்தால் சுகமுடைய நல்ல தேகத்தை உடையவன். தனமுடையவன். சபைதனில் நினைத்த காரியத்தை செய்து முடிக்க வல்லவன்.
தனக்கு மேல் உள்ள உயர் அதிகாரியின் மனதை அறிந்து, உண்மை தன்மையை நேர்மையாக எடுத்துக்கூறும் மாண்புமிக்கவன். பல பூமிகளை உடையவனாகவும் மற்றவர்கள் பார்த்து பெருமைபடத் தக்க வகையில் புகழுடன் வாழ்வான்.இலக்கினாதிபதி சுபருடன் கூடி இருக்க,புகழ் பெற்று வாழ்ந்த மனிதர்களின் நட்பைப் பெற்று வளமான வாழ்வை அடைவான்.

குறிப்பு:

பாரம்பரிய சோதிடத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் ஒன்றை கொண்டு ஒன்பது வகையான பலாபலன்களை
ஒட்டுமெத்தமாக அறிவதால் மற்ற பாவக நிலைகளை கருத்தில் கொள்ளாமலேயே பலன் உரைக்கும் அற்புத ஆற்றலை பெறலாம்.

மேற்கண்ட பாடலின் வாயிலாக நாம் அறிவது இலக்கினாதிபதி சர ராசியில் இருந்தாலே நல்ல தேகத்தையும் புகழையும் நீண்ட ஆயுளையும் பெறலாம் என கூற காரணம் காலப்புருச ராசிக்கு 1-4-7-10 என்னும் கேந்திர பாவங்களில் அமர்வதால் , ஜனன இலக்கினாதிபதி காலப்புருடனுக்கு நல்ல நிலையில் அமரும் தன்மை நற்பலனை தரும் என்ற சூட்சமத்தை அறிந்து கொள்ளலாம்.

இலக்கினாதிபதி ஆட்சி உச்சம் பெற்று பாவருடன் கூடாமல் இருந்தால் நற்பலனை தரும்.

மேற்கண்ட வகையில் உங்கள்
இலக்கினாதிபதி காலப்புருச ராசிக்கு கேந்திரம் பெற்று இருப்பதும் ,இயற்கை சுபகிரகமான குரு சுக்கிரன் வளர்பிறை
சந்திரன் பாவியுடன் சேராத புதன் போன்ற சுபரின் சேர்க்கையை பெற்றிருக்க வேண்டும் என்பதை தெளிவாக அறியலாம்.

இலக்கினாதிபதி கேந்திரங்களில் பெரிதான பத்தாம் அதிபதியுடனும் திரிகோணங்களில் உயர்ந்த திரிகோணமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை பார்வை பெற்று இருந்தாலே மிக நற்பலன்களை பெறலாம் என்பதை அறியலாம்.இங்கு மட்டும் தான் இலக்கினத்திற்கு ராசயோக கிரகமான தர்மகர்மாதிபதி உடன் சேர்க்கை சிறப்பான பலன் தரும் என்பதை அறியலாம்.

இலக்கினாதிபதி சுய அங்கிசம் ஏறினால் மிகுந்த நற்பலனை பெறலாம் என பாடலின் வாயிலாக தெளிவாக அறியலாம். உதாரணத்திற்கு சிம்ம இலக்கினத்தில் பிறந்து இலக்கினாதிபதி மேசத்தில் இருந்தால் சுய அங்கிசம் பெறுவார்.

மேலும் மேற்கண்ட பாடலின் வாயிலாக
நாம் தீர்க்கமாக அறிவது என்னவென்றால்,
தீர்க்காயுளுக்கு எட்டாம் பாவம் கணக்கில் கொள்ளப்படவில்லை.

தனதான்ய மிக்கவனாக விளங்க இரண்டாம் பாவத்தை எடுத்துக் கொள்ளவே இல்லை.

பல விஸ்தார பூமிகளை பெற நான்காம் பாவம் கூறப்படவில்லை.

இலக்கினாதிபதி ஒன்பதாம் அதிபதி தொடர்பு நல்ல அறவாழ்வு உடையவன் என கூறப்பட்டுள்ளது.

இலக்கினாதிபதி பத்தாம் அதிபதி தொடர்பு புகழுடைய வாழ்வை பெறுவான் என பாடல் கூறுகிறது.

இலக்கினாதிபதி சுயஅங்கிசம் பெற்று இருந்தால் நினைத்த காரியத்தை அடையும் பாவமான 11 மிடம் குறிப்பிடப்படவில்லை.

இலக்கினாதிபதி சரராசியான 1-4-7-10 என்னும் காலப்புருச கேந்திரங்கள் கணக்கில் கொள்ளபடுகிறது.
அதுபோல் இலக்கின கேந்திரமும் கணக்கில் கொள்ளலாம்.

இலக்கினாதிபதி பத்தாம் அதிபதி சேர்க்கை பிரகாசமான தேகமுடையவன் என அறியலாம்.

இலக்கினத்தை கொண்டு தேக ஆரோக்கியமும் உடல் வலிமையையும் தெளிவாக அறியலாம் இங்கு ஆறாம் பாவம் உட்புகுந்துள்ளது.

மேற்கண்ட இலக்கினாதிபதியின் நிலையை வைத்தே 1,8,2,4,6,7,9,10,11 ஆம் ஒன்பது பாவகங்களின் நிலைகள் அனைத்தையும் அறிய வைப்பது தான் பாரப்பர்ய ஜோதிடம் உணர்த்தும் அதி சூட்சுமம் என்றால் அது மிகையாகாது.

இலக்கினாதிபதியின் நிலையை தீர்க்கமாய் அறிந்தால் உங்களின் விதிபயனை திறம்பட அறியலாம்.

பதியை அறிந்து விதியை அறியுங்கள்.

நன்றி

அன்புடன்

அஸ்ட்ரோ சக்திகுரு
நாமக்கல்.

முகநூலும் மூன்றாம் பாவமும்

முகநூலும்
**************
மூன்றாம் பாவமும்
************************
ஓர் அசத்தல் ஆய்வு –[ 1 ]
**************************

வணக்கம் ..

இன்றைய சூழலில் ரொம்ப பரபரப்பாக பேசப்படுற ஒரே விஷயம் முகநூல் தாங்க.

முகநூல் காரகத்துவம்
***************************
முன்ன பின்ன பழக்கம்
இல்லாத நபர்களிடம் நட்பு
நட்பு கொள்ள உதவும் ஒரு
வலைதளம் முகநூல்.

என்னடா முன்ன பின்னனு
இவ்வளவு மோசமாக எழுதறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்
அப்ப தான் நான் எடுத்துகொண்ட ஆய்வுக்கு ஒரு பஞ்ச் கொடுத்த மாதிரி இருக்குமுங்க.

அன்று பேனா மூலம் நட்பு
இன்று போன் மூலம் நட்பு

அட அதுவும் மூன்றாம் பாவம் தாங்க
இதுவும் மூன்றாம் பாவம் தாங்க.

மூன்றாம் பாவம் மறைவு
ஸ்தானத்திலேயே ரொம்ப
குறைந்த மறைவு பாவம்னு
சாஸ்திரம் சொல்லுது.

அது அன்று இருந்த பேனாநட்புக்கு ரொம்ப பொருத்தமா இருந்துச்சு.

கடிதம் மூலமாக நட்பை ஒருவரை
ஒருவர் பார்க்காமல் மறைவாக
வச்சு கிட்டோம்.யார் யாருக்கூட நட்பு
வச்சுகிட்டோம்னு யாருக்கும்
அவ்வளவா தெரியாது.
அதுதாங்க உண்மையாக
மூன்றாம் பாவத்தின் வேலை.

ஆனால் இன்று நம்ம யார்கிட்ட
நட்பு வச்சு இருக்கோம்னு உலகத்துலஇருக்கற முன்னபின்ன தெரியாத அத்தனை பசங்களும்
மறைமுகமாக,மறைவு பாவத்தில்
மிகப் பெரிய மறைவு பாவமான
12ம் பாவம் மூலமா விடிய விடிய
முழிச்சுகிட்டு பார்த்துக்கிட்டு
இருக்காங்கனா பாருங்க.

மூன்றாம் பாவகாரகங்கள்
*********************************
தொலைபேசி,தந்தி,
கடித போக்குவரத்து,
செய்தி போக்குவரத்து,
வானொலி செய்திகள்,
தொலைக்காட்சி நியூஸ்,
தபால் அலுவலகம்,
தந்தி செய்தி தொடர்பு,
தூதுவர்,
பிரசாரகர்,
செய்தி அனுப்புபவர்,
பத்திரிக்கை ஆசிரியர்,
பத்திரிக்கையாளர்,
எழுத்தாளர்கள்,வதந்திகள்,
கோள் சொல்பவர்கள்,
நூலகம்,
நூல்கள் சேகரிப்பவர்கள் ,
வீடு மாற்றம்,
தற்செயலாக
அறிமுகம் ஆகும்
நண்பர்கள்,
வலது காது,
தோள் பட்டைகள்,
தோள் எலும்புகள்,
கைகள்,
நரம்பு மண்டலம்,
மனகுழப்பம்,
காது,கழுத்து
,கையில் அணியும்
ஆபரணங்கள்,
சுத்தமான உணவு,
மத சம்பந்த கடமை,
ஆடை ஆபரணங்கள்,
மன உறுதி,
வீரம்,
இளைய சகோதரர்,சகோதரி
ஆளடிமை,
போர் வெல்லல்,
தேக பலம்,
எதிரியை வெற்றி கொள்ளல்,
போக சக்தி,
வீரிய ஸ்தானம்,
மாரக ஸ்தானம்,
சங்கீதம்,
தாயார் விசனம்,
வெற்றியை செல்வமாக
பெற்று வாழ்வதாம்.

மேற்கூறிய அனைத்தும் மூன்றாம் பாவக காரகத்துவங்கள் ஆகும்.

சரிங்க இனி விசயத்துக்கு
வருவோம்.

கம்பியூட்டர்,செல்போன்,
தகவல் தொடர் போன்ற
சாதனங்களை குறிக்கும்
பாவம் மூன்றாம் பாவம் தாங்க.
ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம்,தபால்,தந்தி,
தொலைபேசின்னு இருந்தது.
ஆனா இன்று இண்டர்நெட்,
ஈமெயில்,செல்போன்,
எஸ் எம் எஸ்,வாட்ஸ் அப்,
பேஸ் புக் னு இன்று எவ்வளவோ
வளர்ச்சிநிலையை நோக்கி சென்று கொண்டு உள்ளது உலகம்.
இது ஆக்கம் நோக்கி
செல்கின்றதா அழிவை
நோக்கியா ?இதில போய்
என்னங்க சந்தேகம்
மூன்றாம் பாவம் தான மாரக பாவம்.
அப்ப இதெல்லாம் அழிவை நோக்கி தான நம்மல கொண்டு போகுது.

ஆமாங்க என்னைக்கு
மனுஷன் சுகமா
இருக்கணும்னு நினைச்சானோ
அன்றே அழிவும் ஆரம்பம்
ஆயிருச்சிங்க .நான் சொல்றது என்னன்னா..

ஒருவரின் சுகஸ்தானம்
நான்காம் பாவம்.இந்த 4ம்
பாவத்தையே விரயம்
செய்யக் கூடிய பாவம்
தாங்க 3ம் பாவம்.
ஆக ஒருவர் இந்த
3ம் பாவத்தை கையில் எடுத்தா
அவரோட அத்தனை சுகமும்
கெட்டு போகுமுங்க.
ஆனா நம்ம இன்று அத தான கையில பிடிச்சுகிட்டே [செல்போன்] இருக்கோம்.

இனி மூன்றாம் பாவஅதிபதிய முகநூல் பாவாதிபதி ன்னு
சொல்லுவோமா….

முகநூல் பாவாதிபதி
[மூன்றாம் அதிபதி ]
பன்னிரு பாவங்களில்
இருப்பதால் ஏற்பப்படுத்தும் பலன்கள் :

1ம் பாவத்திலிருந்தால்
****************************
முகநூல முதன் முதல்ல
கண்டுபிடிச்சவங்க இவங்களா
தான் இருக்குமுங்க
முகநூலே கதி என்று இருப்பார்கள்.
பல புதிய புதிய செய்திகளை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம்
உடையவர்கள்.முகநூலில்
நிறைய நண்பர்களிடம் நட்பு
கொள்வதில் ஆர்வம் உடையவர்கள்.
நண்பர்களிடம் அதிகம் இன்பாக்ஸில் பேசுபவர்கள்,செல் போனில் பேசுபவர்கள் இவங்களாக தான் இருக்குங்க அதிகம் share,அதிகம் like,
அதிகம் comments இவங்க
தான் கொடுப்பாங்க இவங்கள
எப்பவும் உங்க நட்பு வட்டத்துலயே வச்சுகிட்டா like உங்களுக்கு தாங்க.
இவங்க மட்டும் முக நூல்ல
தன்னுடைய முகத்தை காட்டவே மாட்டாங்க,ஏன்னா மூன்றாம்
பாவம் குறுகிய மறைவு பாவதாங்க
அதனால அப்ப அப்ப
கொஞ்சம் காட்டுவாங்க

2ம் பாவத்திலிருந்தால்
****************************
முகநூல்ல குடும்பத்தோடு
போட்டோ போட்டு
இருக்காங்க அப்படின்னா
அது இவுங்களாக தான்
இருக்கும்.தன்னுடைய
குடும்பம் போல் முகநூல
நினைத்து,சொந்த குடும்பத்த
மறந்துவிடுவாங்க.குடும்ப சுபநிகழ்ச்சிகளை முகநூலில்
பகிர்ந்து கொள்வார்கள்.
முகநூல வச்சு பணம் சம்பாதிக்கனும்னாஅது
இவுங்க தாங்க. தன்னுடய
குடும்ப விஷயம்,பண விஷயம்,
பணம் எப்படி சம்பாதிக்கலாம்
என்பது பற்றி அதிகம் பகிர்ந்து கொள்வார்கள்.இவங்க
Comments பண்ணுனா யாரும்
எதிர் கேள்வி கேட்க முடியாது.கேட்கறவங்க
வாயை அடைசிடுவாங்க.
அப்ப வாதமும் இருக்கும்
விதண்டா வாதமும் இருக்கும்.

மூன்றாம் பாவத்திலேயே
*********************************
இருந்தால்
***************
முகநூல்ல கலக்குறது இவங்க
தாங்க.இவங்க முகநூல்ல
போஸ்ட் பண்ற,ஒவ்வொரு
விஷயமும்,முக்கியமானதா
தான் இருக்கும்.இவங்க பதிவு
எல்லாம் வீரமா,விவேகமா,
விளக்கமா,ஆன்மீகமா,
ஜோதிடமா,புராணமாகத் தான் இருக்குங்க.இவர்கள் தானாக
முகநூலில் பிரபலம்
ஆயிடுவாங்க.இவங்க
வித்தியாசமா போடுற
ஒவ்வொரு பதிவுக்கு
Like க அள்ளுவாங்க.
அதிகமாக share ஆகிறதுதும்
இவங்க பதிவு தாங்க.இதன்
மூலம் இவஙகளுக்கு பேர்
புகழ் அந்தஸ்து எல்லாம்
தானாதேடிவருமுங்க.
கொஞ்சம் இவங்களுக்கு வீரியம் அதிகம் அப்ப அப்ப கொஞ்சம் அந்த மாதிரி படமும் பார்ப்பார்கள்.இவங்க மட்டும் இல்லைங்க இத படிக்கிறநீங்களும்தான்.
முகநூல்னாலே மூன்றாம் பாவ தான பாவம் அப்புறம் நீங்க மட்டும் என்ன பண்ணுவிங்க.
சங்கீதம்,மல்யுத்தம்,கராத்தே,
நிலதரகர்கள்,வேத விற்ப்பன்னர்கள்,
ஜோதிடர்கள்,காது,மூக்கு
,தொண்டைமருத்துவர்கள்,
விற்பனை பிரதிநிதிகள்,
மேற்கண்ட துறையில் இருக்கும்
இவங்க எல்லாம்
முக நூலுக்கு வந்தா சீக்கிரம்
புகழ் வரும்,தொழில் முன்னேற்றம் ஏற்படுங்க அப்படியே உங்கள
விளம்பரத்த முகநூல்ல
விடுங்கஜெயிக்கபோறது நீங்க தாங்க

ஆய்வு தொடரும்….

நன்றி

SRE G.சக்திகுரு M.sc.,M.phil.,
(Astro )

Cell:96889 74555

நாமக்கல்