மென்பொருள்களில் (Softwares) கிரகங்களின்

மென்பொருள்களில் (Softwares) கிரகங்களின்
————————————————————————
ஸ்புடங்கள், நிலைகள் மாறுபடுவது ஏன்?
———————————————————————–
நேற்று Astro Rajasekaran எழுப்பிய கேள்விக்கு விடையாகவே இந்தப் பதிவை இடுகிறேன். எதிர்வரும் ஆகஸ்ட் 22 மற்றும் 24ம் தேதிகளில் புதன் குரு, செவ்வாய் சனி ஆகியோரது இணைவுகள் (Conjunction) ஏற்படுகின்றன. அதுபற்றிய அவரது பதிவில் அவரது மென்பொருள் குறிப்பிட்டிருக்கும் நேரத்திற்கும் நமது சபரி பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்கும் வித்தியாசம் வந்தது. இது எதனால்? மென்பொருட்கள் தவறான தகவல்களைத் தருகின்றனவா? என்ற அவரது கேள்விக்கு (கேள்வி அவருடையது என்றாலும் பதில் அனைவருக்கும் பயன்படும் என்பதால்) சில விளக்கங்களை இங்கே எனது டைம்லைனிலேயே தருகிறேன்.

மென்பொருட்களை உருவாக்கும்போது கீழ்க்கண்ட காரணிகள் அதன் துல்லியத்தை நிர்ணயிக்கின்றன. 1. எபிமெரிஸ் (Ephemeris Factor) 2. நேர வித்யாசம் (Time Factor)
3. இடமத்தியக் கொள்கை(Centric Factor)

1.எபிமெரிஸ் :
———————-
எபிமெரிஸ் என்பது கிரக நிலைகளைக் கணிப்பதற்கு பயன்படுவதாகும். இதில் பல அடிப்படை வகைகள் உள்ளன. Julian 1900, Bessalian 1950, Julian 2000 போன்றவை அவற்றில் குறிப்பிடத் தக்கவையாகும். இதில் அந்த மென்பொருள் எதை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படுகிறதோ அதற்கேற்றபடி ஸ்புடங்கள், கிரக நிலைகள் மாறுபடும். இவை ஒவ்வொன்றிற்கும் சில திருத்தங்கள் உண்டு. அதை செய்யாமல் விடுவதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.

2. நேர வித்யாசம் :
—————————–
நேர நிர்ணயத்தைப் பொருத்தவரை யுனிவர்சல் டைம், டெரஸ்டிரியல் டைனமிக் டைம், எபிமெரிஸ் டைம் முதலிய பல நேர நிர்ணயங்கள் உள்ளன. அவற்றிற்கென்று சில திருத்தங்களும் உண்டு. அதனைச் சரியாகத் தேர்ந்தெடுக்காததாலும் தவறுகள் ஏற்படுகின்றன.

3. இடமத்தியக்கொள்கை :
——————————————
எந்த இடத்தை மத்தியமாகக் கொண்டு ஸ்புடங்களைக் கணிக்க வேண்டும் என்பதில் சில கொள்கை முறைகள் உள்ளன. பௌமத்தியக் கொள்கை, பூமத்தியக் கொள்கை, குறிப்பிட்ட இடமத்தியக் கொள்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கொள்கையைப் பொருத்தும் ஸ்புடங்கள் மாறுபடும்.

இங்கே நான் சில தரவுகளைக் கொடுத்திருக்கிறேன். அதில் 22-08-2016ல் புதனும் குருவும் ஒன்றாக இணையும் நேரத்திற்கும், 24-08-2016ல் செவ்வாயும் சனியும் ஒன்றாக இணையும் நேரத்திற்கும் நமது சபரி பஞ்சாங்கம் மற்றும் மென்பொருளில் கணிக்கப்பட்ட ஸ்புடத்திற்கும் இதர முறைப்படி கணிக்கப்பட்ட ஸ்புடத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி அந்த நேரத்திற்கு நாசாவின் எபிமெரிசில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்புடங்களையும் கொடுத்திருக்கிறேன். நாசாவிற்கும் நமது கணிதத்திற்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பதைப் பார்த்தாலே நமது பஞ்சாங்கம் மற்றும் மென்பொருளின் துல்லியத்தை நீங்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.

https://m.facebook.com/story.php?story_fbid=609013162581933&id=100004197633275

திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.

காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.

முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.

பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.

பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.

அந்நேரத்தில் “”கௌசல்யா சுப்ரஜா ராம… என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார்.

பின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் “போக ஸ்ரீனிவாச மூர்த்தி” பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள்.

அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள்.

அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.

சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும்.
சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து “நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும்.
“விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு.

இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-.

மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

திருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும்.

ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள்.
(பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).

ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள்.

பின்னர் உத்தரணி (ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார்.

சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம்.

பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள்.

முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை.

மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள்.

பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.

சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள்.

குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள்.
இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.

இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

🙏சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும்.

அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள்.

பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார்.
ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார்.

ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார்.

இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும்.

பூ கட்டுவதற்கு என “யமுனாதுறை” என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும்.

காலை 3.45 மணிக்கு “தோமாலை சேவை” ஆரம்பமாகும்.

சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார்.

பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும்.

பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும்.

அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள்.

இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220.
இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த சேவை ராமானுஜர் காலத்தில், “தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது.

பின்னர் தெலுங்கில் “தோமாலா சேவா என மாறிவிட்டது.

🙏கொலுவு தர்பார்:
ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும்.

இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும்.

இதற்காக உள்ள “கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி” விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது.

இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர்.

ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர்.

பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து, அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார்.

அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர்.

மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு.

மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

🙏🔔முதல் மணி:
அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும்.

அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும்.

மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.

🙏🔔🔔இரண்டாவது மணி: இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும்.

அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது.

ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.

🙏சகஸ்ரநாம அர்ச்சனை:
கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும்.

விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது.

இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும்.

நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய்வார்கள்.

இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள்.

சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு “அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர்.

இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும்.

காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.

🙏சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும்.

இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம்.

அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.

🙏ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும்.
அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு “சாலிம்பு என்று பெயர்.

மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.

🙏கல்யாண உற்சவம்:
திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது.

அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும்.

பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள்.

சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும்.

ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார்.

விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும்.

கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும்.

திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000/-. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.

🙏ஊஞ்சல் சேவை:
மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை “டோலாத்ஸவம் என்பர்.

அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும்.

ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும்.

மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1833564313353126&id=100000987252226

வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. வாழ்க்கையில் எதுவும் நகரவில்லை. எல்லாம் முடங்கி கிடக்கிறது என நினைப்பவர்கள் தினமும் தங்கள் ஜென்ம நட்சத்திர குறியீட்டை பார்த்து வாருங்கள் வாழ்க்கை நகரத்தொடங்கிவிடும். உதாரணத்திற்கு ரோகிணி நட்சத்திர குறியீடு தேர். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தினமும் தேர் அல்லது தேர் படத்தை பார்த்து வரவேண்டும்.
#நட்சத்திர_வடிவம்

அஸ்வினி – குதிரைத்தலை
பரணி – யோனி, அடுப்பு, முக்கோணம்
கிருத்திகை – கத்தி, கற்றை, வாள், தீஜ்வாலை
ரோஹிணி – தேர், வண்டி, கோயில், ஆலமரம், ஊற்றால், சகடம்
மிருகசீரிடம் – மான் தலை, தேங்கைக்கண்
திருவாதிரை – மனித தலை, வைரம், கண்ணீர்துளி
புனர்பூசம் – வில்
பூசம் – புடலம்பூ, அம்புக்கூடு, பசுவின்மடி
ஆயில்யம் – சர்ப்பம்,அம்மி
மகம் – வீடு,பல்லக்கு,நுகம்
பூரம் – கட்டில்கால், கண்கள், அத்திமரம், சதுரம், மெத்தை
உத்திரம் – கட்டில்கால், கம்பு, குச்சி, மெத்தை
ஹஸ்தம் – கை
சித்திரை – முத்து,புலிக்கண்
ஸ்வாதி – பவளம்,தீபம்
விசாகம் – முறம்,தோரணம்,குயவன் சக்கரம்
அனுசம் – குடை, முடப்பனை, தாமரை, வில்வளசல்
கேட்டை – குடை,குண்டலம்,ஈட்டி
மூலம் – அங்குசம்,சிங்கத்தின் வால், பொற்காளம், யானையின் துதிக்கை
பூராடம் – கட்டில்கால்
உத்திராடம் – கட்டில்கால்
திருவோணம் – முழக்கோல், மூன்று பாதச்சுவடு, அம்பு
அவிட்டம் – மிருதங்கம்,உடுக்கை
சதயம் – பூங்கொத்து, மூலிகைகொத்து
பூரட்டாதி – கட்டில்கால்
உத்திரட்டாதி – கட்டில்கால்
ரேவதி – மீன், படகு.

https://m.facebook.com/story.php?story_fbid=1919836598047622&id=100000639026701

வீடு அமையும் யோகம்

வீடு (வாங்கும் / கட்டும் ) அமையும் யோகம்..∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

ஜோதிட விதி..
*****************
1.) நான்காம் பாவக அதிபதி உச்சம் ,ஆட்சி பெறுதல்.

2.) 4ம் அதிபதியை (நீசமாக இருந்தாலும் ) குரு பார்த்தல்.

3). சந்திரனும்,சுக்கிரனும் தொடர்பு கொள்வது.

4). 11ம் பாவக அதிபதி 4 மிடத்துடன் தொடர்பு கொள்வது.

5). 4ம் பாவக தெசையில்- குரு, or சுக்கிரன் or ,சந்திரன் புத்தியில்..

6). 8 -11 பாவக அதிபதி 4மிடத்தோடு தொடர்பு கொள்வது எதிர்பாராமல் வீடு அமையும்.

7) 4,7,8,11ம் பாவக அதிபதி சுக்கிரன் தொடர்பு கொள்வது மனைவி வந்த பின் வீடு அமையும்.

8). 3,4,11ம் பாவக அதிபதி செவ்வாய் தொடர்பு கொள்வது சகோதரர்களால் வீடு அமையும்

9), 4,5,8,9,11ம் பாவக அதிபதி கேது தொடர்பு இருந்தால் உயில் மூலம் சொத்து அமையும்.

10), 4,6,11ம்பாவக அதிபதி புதன் தொடர்பு கொள்வது வங்கியில் loan மூலம் வீடு அமையும்.

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

4ம் பாவக காரகங்கள் …
_______________________

1.வீடு, 2.கல்வி
3,தாய் 4,பயணம்.
5,வாகனம் , 6.நண்பர்கள் ,
7. ஆடை, 8.கிணறு,
9,திரவப்பொருள்
10.வேத சாஸ்திரம்
11, விலங்குகள்
12 , தானியம்.

*********************************************

சுக்கிரன் தோஷம்

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பருவகாலத்தில் மண முடிக்க குரு பலம் வந்து விட்டதா ஜோதிடர்கலிடம் கேட்பார்கள்.

குரு பலம் என்பது திருமணம் நடத்துவதற்கு ஏற்றகாலம் என்பது உண்மையாகும்.

இதே போன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்துவதற்கு முக்கிய கிரகம் சுக்கிரன் ஆகும்.

சுக்கிரன் ஜாதகத்தில் எவ்வாறு அமைந்ததோ அதற்கு எற்றவாறு வரன் அமையும்.

சுக்கிரன் தோஷம் உள்ளவர்கள், குறிப்பாக சுக்கிரன் பெண் கிரகமாவதால் கல்யாணம் ஆகாத கன்னிப்பெண்கள் சுக்க்ர தோஷம் நிவர்த்தி பண்ண விவரமுள்ள அருகே உள்ள ஜோதிடரிடம் கேட்டுக் அதன்படி செய்யவும். பொதுவாக சுக்கிரனுடைய ஸ்தலம் திருவரங்கம் ஆகும் (ஸ்ரீரங்கம்).

அங்கு சென்று கன்னிப்பெண்கள் சுக்ர சுலோகம் சொல்வதும் வெண்ணிற வஸத்திரம் விரித்து சுலோகம் சொல்வது சிறப்பாகும் வெண்ணிறம் சுக்கிரனுக்குடையது என்பது குறிப்பிடத்தக்கது கல்யாணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு கல்யாணம் ஆகும்.