முன் ஜென்ம ஜாதகம் இருக்கும் அதை ஆய்வு பண்ண முடிவு செய்தேன்.

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களையும் பெற வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான சந்தோஷங்கள், நல்லது கெட்டது, மகிழ்ச்சி, இன்பம் , துன்பம்இது எல்லாம் கிரகங்களின் அமைப்பு.

அட்சய லக்ன பத்ததி யில் என்னுடைய அடுத்த கட்ட ஆய்வுகள் என்ன?

இப்பொழுது உள்ள ஜாதகருடைய முன்ஜென்ம ஜாதாக அமைப்புகள் பற்றிதான் என்னுடைய ஆய்வுகள்.

இந்த ஜாதகத்தை உடைய தொடர் நிகழ்வுகளை நான் உருவாக்கி இருக்கேன்.

சில ஜாதகர்களுக்கு யோகமான ஜாதகமாக பார்த்திருப்போம். ஆனால் உண்மையில்அந்த ஜாதகர் எப்பொழுதும் வறுமையிலும் துன்பத்திலும்,நோய்நொடி யான வாழ்க்கை நடத்துவர்.ஆனா ஒண்ணுமே இல்லாத ஜாதகம் அதாவது அவர் கோடான கோடி வாழ்க்கை வாழ்வார்,இதைப் பற்றி ஆய்வு பண்ணும் போதுதான் கண்டிப்பாக இதற்கு முன் ஜென்ம ஜாதகம் இருக்கும் அதை ஆய்வு பண்ண முடிவு செய்தேன்.

அந்த ஜாதகத்திற்கும் இந்த ஜாதகத்திற்க்கும் இன்றைக்கு உள்ள தொடர்பு எப்படி இருக்கும்னா?

ஒரு நண்பர் வந்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்காது அந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன?என்பதை உணரும் பொழுது அதிர்ச்சியும் பேரின்பமும் ஒரு பயம் எனக்குஉருவானது.

வெளியிட முடியாத சூழ்நிலையில இருக்கேன்

அதை வெளியிடும்பொழுது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

ஒரு ஜாதகர் மீன லக்னம்,மீன லக்கனத்தில் 2 ,5,8 ,11 சம்பந்தப்படும்போது சுய கர்மா இயங்கும் சுய கர்மா என்பது நான் செய்த யோகங்கள் அவயோகங்களையும் குறிக்கும்.உண்மையாவே இயங்குதா னு ஆய்வு பண்ணும்போதுஅந்த ஜாதகத்தை எடுத்து பார்க்கும் பொழுது இரண்டாம் வீட்டில் மீன லக்னத்துல இருந்து சனிபகவான் இயக்குறாரு.முன்ஜென்ம ஜாதகத்தில அதே லக்கனத்திலிருந்து சனி பகவான் இயக்குறாரு இதே உத்திரட்டாதி நட்சத்திரம். 2ம் சுய கர்மா 5ம் சுயகர்மா இது எப்படி இயங்குது.இதை உணரும் போது இந்த விஷயங்கள் நிறைய விதமான ஆச்சரியங்களை உண்டாக்கியது.நான் சொல்லக்கூடிய விஷயங்கள் நான் பதிவு பன்ற விஷயங்கள் ஏன் சொல்ல வரனா?ஆய்வு பண்ணி பார்த்தால் 2 வருடம் கழித்தோ 5 வருடம் கழித்து இல்ல 10 வருடம் கழித்து 100 வருடம் கழித்து இந்த விஷயத்தை உணர்வாங்க.கண்டிப்பாக கூடிய விரைவில் வெளியிட வேண்டிக்கிறேன்.

அட்சய லக்ன பத்ததி யில் இன்றைக்கு ஒரு ஜாதகத்தை பார்ப்போம்.இப்பொழுது பார்க்கக்கூடிய ஜாதகம்,இந்த ஜாதகருடைய லக்கனம் விருச்சிகம் ALP லக்கனம் கும்பம்,இந்த ஜாதகருடைய கேள்விகுழந்தைகள் பற்றி. 1, 2, 3, 4, 5,      5-ம் வீடுபுதனுடைய வீடுஇந்த லக்னத்துக்கு இரண்டு அட்டமத்திலே போறாரு அதாவது இரண்டு ஆதிபத்திய தன்மைய செய்வது. 5க்கு அதிபதியுமான 2க்கு அதிபதியான புதன் அட்டமத்தில் உள்ளது.பத்தில் ஒரு பாவி இருந்தாலும் குழந்தை பாக்கியம் உண்டு.ஐந்தாம் அதிபதி அட்டமாதிபதி செயல்படும் பொழுது அந்த ஜாதகர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.மருத்துவ செலவுகள் சம்பந்தப்பட்டு இந்த ஜாதகர் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.விரயாதிபதி லக்னத்தில் உள்ளது.10 ல் சனி சம்பந்தப்படுவதால் இந்த ஜாதகத்திற்கு தத்து குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது.புதன் பகவானுடைய நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரம் விரயத்தில் லக்னாதிபதி உள்ளது. புதனும் சனியும் சம்பந்தப்படும்போது இந்த ஜாதகர் மருத்துவ செலவுகள் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.குழந்தைகள் பற்றிய அமைப்பில் குரு பகவான் பலமாக இருக்க வேண்டும். 2க்கும் 11-க்கும் அதிபத்தியத்தில் இருக்கக் கூடிய குருபகவான் பன்னிரண்டில் விரயத்தை உருவாக்கும்.யோகத்தைக் கொடுக்கும் ஆனா? யோகத்தை கொடுக்கல.கண்டிப்பாக இவருடைய முயற்சிக்கு தகுந்த மாதிரி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்.துர்க்கை அம்மன் உடைய வழிபாடு இந்த காலகட்டத்தில் யோகமாக இருக்கும்.சதய நட்சத்திரம் முடிந்து அடுத்து வரக்கூடிய பூரட்டாதி நட்சத்திரத்தில் ஒரு வாய்ப்பு உண்டு.குரு நட்சத்திரத்தில் இருந்தால் வாய்ப்பு உண்டு.2021 ஜனவரி 31ஆம் தேதிக்கு அப்பறம் யோகத்தை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.ஐந்தாம் அதிபதி அஷ்டமத்தில் குரு இருப்பதால் அங்கு பிரச்சனைகள் உருவாகும்.கும்ப லக்னத்திற்கு ஏழாம் வீடு சிம்மம்.சிம்ம லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான்.அவரே 6 விடாய் போவதால் பிரச்சனை உண்டு.எட்டுக்குடி முருகன் கோவிலில் குழந்தைகள் சார்ந்த அமைப்பு உள்ளது.செவ்வாய் அட்டமத்துல3க்கு உடையவன் அட்டமத்துல.முருகனை பலமாக கும்பிடுவதால் இந்த ஜாதகருக்கு ஒரு வாய்ப்பு உண்டு.

நல்லதொரு நிகழ்வேஅமையட்டும் மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம்.

நன்றி, வணக்கம்.

தொழில் ரீதியாக எவ்வுளவு அடைந்தாலும் அதை அனுபவிக்க முடியாத காலகட்டம்

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லாவளமும் பெற வேண்டும்.

ஜாதகருடைய லக்கனம் ரிஷப லக்கணம்.ரிஷப லக்கனத்திற்கு லக்னாதிபதி சுக்ரன் சந்திரன் சேர்கை இருப்பதால் 11-ல், லக்னாதிபதி 11-ல இருக்காரு, 6ம்அதிபதி 11 -ல் இருக்காரு. இந்த ஜாதகததின் நட்சத்திரபுள்ளி ரோகினியும் 11-ம் வீட்டுல பலமா இருக்கு. ஜாதகருக்கு 4ம் வீடு தொழில் சம்மந்தப்பட்டது, வேலை சம்மந்தப்பட்டது. ரிஷப லக்கனத்திற்கு 10ம் வீடு சனி பகவான். ரிஷப லக்கனத்திற் அட்டமத்துல செவ்வாய் சனி. 7-ம் அதிபதி , 9 அதிபதி, 10ம் அதிபதி , செவ்வாய் சனி அனைத்தும் அட்டமத்தில் இருப்பதால் கார்த்திகை நட்சத்திரம் 2ம்பாதம் ,3ம் பாதம், 4ம் பாதம்ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் இதனால் ஜாதகருக்கு 4 வருடம் 5 மாதம் ஜாதகருக்கு வேலை சம்பந்தப்பட்ட தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். 8 – வருமானத்தை கொடுக்கும்.வேலையில் மாற்றத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்

இந்த ஜாதகம். ஒரு ஜாதகத்தில் 5 , 9மிகமுக்கியமான ஒரு விஷயம்.இந்த லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி 9ம் வீட்டில் இருக்கிறார்.

அப்ப9-ம் அதிபதி 9 க்கு 12 ல விரயத்தில் இருக்காரு.அதனால் ஜாதகருக்கு எதிர்பாராத யோகத்தை கொடுத்தாலும் அடைய முடியாது.

லக்னாதிபதியும் விரயத்தில் உள்ளதால் தொழில் ரீதியாக எவ்வுளவு அடைந்தாலும் அதை அனுபவிக்க முடியாத காலகட்டம்.ஆனால் இவருடைய முயற்சியால் இவருக்கு யோகமுண்டு.

ALPலக்கனத்திற்கு பனிரெண்டில் இருக்கக்கூடிய குருபகவான் நமது குருமார்களை, முன்னோர்களை அதாவது தாத்தாவை பலமாக கும்பிட்டால் ஜாதகருக்கு ஒரு மாற்றம் உண்டு.

தன்னுடைய அம்மா , அப்பா வை வணங்கலாம் அதில் யோகம் உண்டு. துர்க்கை அம்மனையும்வணங்குவது பெரிய யோகத்தை கொடுக்கும். இந்த காலத்தில் ஜாதகருக்கு வேலை உண்டானா?

வேலையில் பிரச்சனை இருக்கும். எந்த வேலை வேணாலும் வரும், இதுதான் வேலைனு சொல்ல முடியாது. 10-ம் வீட்டில் இருக்கக்கூடிய கிரகம் சூரியன் ராகு இருப்பதால் எதிர்பார்த்த யோகத்த கொடுக்கும்

இந்த ஜாதகத்துக்கு இப்ப நடக்கக்கூடிய திசை கேது திசை, கேது திசை ALP லக்கனத்தில் இருக்கக்கூடிய அஸ்வினி நட்சத்திரத்திற்கு கேது திசை12-ல் இருக்கக்கூடியது .

கேது 12-ம் வீட்டில அஸ்வினி நட்சத்திரத்தில் இயங்கும். இதனால் கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம்

இது. 10-ம் அதிபதி சூரியன் சனி பார்வையில் இருப்பதால் கஷ்டமான காலம்தான் தொழில் பிரச்சனை உருவாகும்.

இருக்கக் குடிய விஷயத்தை வச்சே சரி பன்னக்கூடிய காலம். இதனால் வேலை முதலில் ,அதற்கு அப்பறம் தொழில் தொடங்கலாம்.

4 வருடம் 5 மாதம் காலங்கள் இந்த ஜாதகருக்கு பிரச்சனை உண்டு அப்புறம் யோகமானநிலை உண்டு.

மீண்டும் ஒரு நல்லதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி வணக்கம்.

ஜாதகர் ஜெயில்க்கு போயிருக்காரு. என்ன காரணம்னு கேட்டாரு.

அனைவருக்கும் வணக்கம்,

இந்த நாள் இனிய நாள். வாழ்வில் எல்லோரும் எல்லா வரமும் பெறவேண்டும்.

அட்சய லக்ன பத்ததியில்நிறைய ஜோதிடர்கள்,ஜோதிட ஆய்வாளர்கள் நம்முடன் பயணித்திருக்கிறார்கள். ஜாதகருடைய லக்கனம் துலாம் லக்கனம், ALPலக்கனம் அவிட்ட நட்சத்திரம் இரண்டாம் பாதம்.

ஒரு நல்ல நிலையில் உள்ள ஜாதக ஆய்வாளர் ஒருதேதியை கொடுத்து 4.5.2017ஜாதகர் ஜெயில்க்கு போயிருக்காரு. என்ன காரணம்னு கேட்டாரு.

அவருடைய லக்கனம் துலாம் லக்கனம் ,ALP மகரம். மகரத்தில் திருவோணம் மூன்றாம் பாதம் 6ம் வீட்டை குறிக்கும்.திருவோணம் 1 திருவோணம் 2 திருவோணம் 3 மிதுனத்தை காட்டிக் கொடுக்கும். மகரம் 6ம்வீட்டைகாட்டிக்கொடுக்கும்.அதனால் ஜாதகருடையஅண்ணனுக்கும் அதேபிரச்சனை.மகரத்திற்கு மூத்த சகோதரன் விருச்சிகம்.விருச்சிகத்திற்கு மிதுனம் அட்டமாதிபதி வீடு.அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஜெயிலுக்கு போய் இருக்காங்க.

அவர்கிட்ட சொன்னதும் ஆமா அப்டினு சொன்னார். மகரத்தின் 9ம் அதிபதி புதன்,புதனுடன் 6ம் வீடாய் மிதுனம் வருது.ஒன்பதாம் வீட்டுக்கு அது பத்தாம் வீடு,9 10 சம்பந்தப்படும்போது அவருடைய அப்பாவோட கர்மமும் அங்க இணையிது.அப்ப மூணுபேரும் ஜெயிலுக்கு போயிருக்காங்க.

உங்களுடைய ஜாதகத்தில் அவிட்டம் நட்சத்திரம் 3-வது பாதத்தில் உங்களுக்கு திருமணம் நடைபெறும். 11ம் அதிபதி 4ம் அதிபதி சம்பந்தப்படுவதால்அவிட்டம் நட்சத்திரம். 3, 10 சம்பந்தப் படும்போது எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் கொடுத்தே தீரும்.

ஏன்னா கும்ப லக்னத்திற்கு 4ல இருந்து 7ம் வீட்டயும் 11-ம் வீட்டயும் பார்பாரு. 10ம் வீட்டையும் 11 ம் வீட்டையும் பார்பாரு.

அதனால் திடீர்யோகத்தைக் கொடுக்கும்,

திருமணம் நடக்கும்.இந்த ஜாதகர் பாம்பாட்டி சித்தர் கோவிலில் சரணாகதி அடைந்தால்இந்த ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.

அறம், பொருள், இன்பம்
இருக்கக்கூடிய சந்தோஷத்தையும் இருக்கக்கூடிய பொருட்களை வைத்துக்கொண்டு சந்தோஷமாக குடும்பத்தோடு வாழ்வது தான் மூன்று காலங்களும் நமக்கு உணர்த்தும் ,

அதாவது அறம் ,பொருள் ,இன்பம்.பத்தாம் அதிபதி வலுவடைந்தால் 4-ம் அதிபதி வலுவிலக்கும்.ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு லக்கனமும் ஒன்றுக்கு மேற்பட்ட யோகத்தை கொடுக்குமானா? கொடுக்காது.அதுவே 3ம் வீடு வலுவா இல்லனா 9ம் வீடு பலமாக இருக்கும்.தன்னுடைய முயற்சி இருந்தால் 3ம்பாகம் வலுவாக இருக்கும் 9ம் பாகம் வலுவிலக்கும். 2ம் வீடு பலமாக இருந்துச்சுன்னா திடீர்னு 8ம் வீடு அதாவது வம்பு ,வழக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் உருவாகும்.

அதாவது ஒவ்வொரு பாகத்திற்கும் எதிர் பாவகம் வேலை செய்யும்.

மீண்டும் ஓர் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்

நன்றி வணக்கம்.

படிப்பு தடைபடும்.எதை சார்ந்த படிப்பு என்றால்

அனைவருக்கும் வணக்கம்,

இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும்.

அட்சய லக்ன பத்ததியில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்,உங்களுடைய கருத்துக்கள்,இதையெல்லாம் பதிவு பண்றேன் இதைப் பார்க்கக் கூடிய நண்பர்கள் உங்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது அதற்கான காரணத்தை பதிவு பண்ணுங்க.

இப்ப இந்த ஜாதகத்தில் லக்கனம் துலாம் லக்கனம், ALP லக்கனம் தனுசு லக்கனம்.

தனுசு லக்னத்தில் அதிபதி அஷ்டமத்தில் குரு உச்சம்.அதாவது ஜாதகர் எது செய்தாலும் அது ஜாதகருடைய உடல் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாக்கும்.

அடுத்தது படிப்பு குரிய அதிபதி இரண்டாம் அதிபதி. 2ம் வீட்டு அதிபதி சனி பகவான்.லக்கனத்துக்கு 7ல் சூரியன் சனியோட சேர்ந்திருக்கு.ஆனால் ஆனா 2ம் வீட்டுக்கு 6ம் வீட்டுல இருக்கு.லக்னாதிபதி பார்வையில் இருக்கக்கூடிய குருபகவான் மகர த்தபார்க்குது.இந்த ஜாதகருக்கு படிப்பு உண்டா அப்படினா ?காலம் கடந்த படிப்பு.

லக்கனத்தை இயக்கக்கூடிய லக்கனபுள்ளி கேது.

கேது உடைய நட்சத்திரம் மூல நட்சத்திரம் அந்த ஜாதகருக்கு படிப்பு உண்டா?படிப்பு தடைபடும்.எதை சார்ந்த படிப்பு என்றால் 2ம் அதிபதி 6ம் வீட்டில் இருக்கும்.மகரத்திற்கு அதிபதி சனி 6ல் இருப்பதினால் பாவகத்திற்கு பாவகம்.சனி பகவான் ராகுவோடு சம்பந்தப்பட்டு திருவாதிரை சம்பந்தப்பட்டு,மனம் சம்பந்தப்பட்ட கேள்வி, புத்தி சம்பந்தப்பட்ட கேள்வி ,அறிவு சம்பந்தப்பட்ட கேள்வி,உளவியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதாவது மருத்துவத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு படிப்பு.ஆனால் பிற்காலத்தில் இந்த ஜாதகருக்கு மிகப்பெரிய யோகம் உண்டு .

மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.நல்ல நிலையில் வரக்கூடிய ஜாதகம் .தற்சமயத்தில்கஷ்டமான காலம்.இதற்கு முன்னாடி விருச்சிக லக்கனம், விருச்சிக லக்கனத்தின் லக்னாதிபதி செவ்வாய் 4ல் இருக்கு.ஆனால் 2ம் அதிபதி படிப்பு இரண்டாம் வீட்டுக்கு அட்டமத்தில் இருக்கு.அதனால் படிப்பில் கஷ்டமான நிலை உருவாகும்.

10 ,12 வகுப்புகள் மிகவும் கஷ்டம் ஆனால் பிற்காலத்தில் நல்ல நிலைக்கு வரக்கூடிய ஜாதகம்.

இந்த ஜாதகத்தில் நிறைய விஷயங்கள், நிறைய கேள்விகள் கண்டிப்பாக அனைத்திற்கும் பதில். யாரெல்லாம் நேரலையில் பேச விருப்படுறிங்களோ கண்டிப்பா பின்னோட்ட பதிவுகளை பதிவு பன்னுங்க. ஜோதிடர்களாகவோ ஜோதிட ஆய்வாளர்களாகவோ இருந்த இன்னும் சந்தோஷமாக இருக்கும்.இந்த ஜாதகத்திற்கு மூல நட்சத்திரம் 1ஆம் பாதம் 2ம்பாதம் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும். நல்லதொரு நிலையை அடைவார் .

இந்த ஜாதகர் ரமணன் மகரிஷியை பலமாக நேசித்தாலோ சரணாகதி அடைந்தலோ கண்டிப்பாக மிகப்பெரிய யோகமுண்டு.

நல்ல நிலையை அடையக்கூடிய ஒரு ஜாதகர், தற்சமயம் கஷ்டமான நிலை.

மீண்டும் ஒர் நல்லதுதொரு நிகழ்வில் சந்திப்போம்.

 

இது ஒரு ஜோதிடரின் ஜாதகம்.

அனைவருக்கும் வணக்கம்,

அட்சய லக்ன பத்ததியில் இன்றைக்கு இந்த ஜாதக ஆய்வை பார்ப்போம்.

இது ஒரு ஜோதிடரின் ஜாதகம்.

அட்சய லக்ன பத்ததி லக்கனம் கும்பலக்கனம். கும்ப லக்னத்திற்கு லக்னாதிபதி சனி பகவான் 9-ம் வீட்டில் உள்ளார்.

இந்த ஜாதகருக்கு என்ன கேள்வினா?

லக்னத்திற்கு அட்டமத்தில் புதன்,அஷ்டம அதிபதியாக இருப்பதால் ஜாதகருக்கு ஒருவிதமான பதட்டம் பயம்உருவாகும்.

பயம் ஏன்?

கும்ப லக்கினத்தின் ஐந்தாம் அதிபதி புதன். அட்டமாதிபதி 5, 8 சம்பந்தப்படுவதால் மன சங்கடங்கள் உருவாகும்.

லக்கின புள்ளி பூரட்டாதி நட்சத்திரம்.3 வருடம் 4 மாதம் 2021 பிப்ரவரியில் இதுமுடியும்.

லக்னத்தை இயக்கக்கூடிய லக்ன புள்ளி , நட்சத்திர புள்ளி,அட்சய லக்கன புள்ளி குருவோட நட்சத்திரம் பூரட்டாதி நட்சத்திரம் அதனால் குரு ஆறில் நீச்சம் பெறுகிறது.இதனால் மன பயம் உண்டாகும்.

கடன் கொடுக்கும் வழக்குகொடுக்கும்,

தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும்.அட்டமத்தில் புதன் இருப்பதால் ஜாதகருக்கு மனபயம் உருவாகும்.

அட்டமத்தில் புதன் இருப்பதால் பிரச்சனைகள் இல்லை ஆறில் குரு பகவான் விஷயத்தில் பிரச்சனைகள் உருவாகும்.ஏன்னா இரண்டாம் அதிபதி கடன் ,குடும்பாதிபதி கடன் ,பதினோராம் அதிபதி கடன்அதனால் 3 வருடம் 4 மாத காலம் அனைத்தும் இருந்தும் எதையும் இயக்க முடியாது சூழ்நிலை உருவாகும்.

இந்த ஜாதகருக்கு ஐந்தாம் அதிபதி அட்டமத்தில் செல்வதால் தான் பயம் உருவாகும்.மூன்று வருடம் நான்கு மாத கால நிலை முடிவடைந்தது ஏன்னா குருவோட நட்சத்திரத்துக்கு முன்னாடி ராகுவோடநட்சத்திரம் செவ்வாய் ராகு 11ல் இருந்திருக்கு.அடுத்தது லக்னத்திற்கு நட்சத்திர புள்ளி சதய நட்சத்திரம் ராகுபலமா இருந்திருக்கு அதனால் எந்த பயமும் இல்லை ஆனால் குருவோட நட்சத்திரம் வரும் பொழுது பயம் உருவாகி இருக்கும். உடலளவிலும் மனதளவிலும் இந்த ஜாதகருக் பயம் உண்டாகும்.

2021 பிப்ரவரிக்கு அப்புறம் ஜாதகர் யோகமான நிலையை அடைவார்.அட்டமாதிபதி புதன் திசைஎன்பதால்ஜாதகர்அதிகமாக பயப்பட வேண்டிய நிலை உருவாகும். 5ம் அதிபதி அட்டமத்தில் அட்டமாதிபதிபுதன் சனியுடன் சம்பந்தப்படுவதால் ஜாதகர் அதிகமாக பயப்படக்கூடிய சூழ்நிலை இருக்கு.2020 நவம்பர் மாதத்துடன் இந்த புதன் திசைமுடிவடைகிறது.எல்லா கிரகங்களும் எல்லா சுப அசுப தன்மைகளைகொடுத்துக் கொண்டுதான் இருக்கும்.

நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களுடைய பங்களிப்பை இந்த கிரகங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் இந்த ஜாதகருக்கு எதிர்பாராதவிஷயங்கள் ஏன் வந்திருக்கு?அட்டமத்தில் உள்ள புதன் சித்திரை நட்சத்திரத்தில் இருக்கு,அதே புதன் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்தால் இந்த ஜாதகருக்கு அதிகமான பிரச்சனை கொடுத்திருக்கும்.

சித்திரை நட்சத்திரம்இந்த லக்னத்துக்கு11 ல்இருக்கக்கூடிய நட்சத்திர பாதம்.அதாவது 3 , 10க்கு உடையவர்சாரத்தை பெற்று, 11ல்இருக்கக்கூடிய செவ்வாய் சாரத்தை பெற்றதால்புதன், திசைபெற்றிருப்பதால் ஜாதகர் பயப்பட வேண்டிய நிலை இருக்கும்.

2020நவம்பர் நல்ல நிலையை கொடுக்கும்.புதன்உத்திரத்தில் இருந்தால், 7ம் அதிபதியான சூரியன் அட்டமத்துல வருவதால் தேவையில்லாத சண்டைகள் ,கணவன்-மனைவி பிரச்சினைகளை உருவாக்கும்.புதன் செவ்வாயோட நட்சத்திரம் ,சித்திரை நட்சத்திரத்தில் மிகப்பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும்.நல்லதொரு வாய்ப்பே இந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும்.அடுத்தது பூரட்டாதி நட்சத்திரம் 2021பிப்ரவரி மாதம் முடிகிறது .லக்கனம் மீன லக்கனம்,மீன லக்கனத்திற்கு பத்து வருஷத்தை இயக்கக்கூடிய லக்னாதிபதி குரு பகவான்.லக்னத்திற்கு 5ல இருக்காரு.

ஜாதகர் பலமா இருக்காரு.உத்திரட்டாதி நட்சத்திரம் 5 வரும்பொழுது ஜாதகருக்கு 4 வருடம் 5 மாதம் பிரச்சனையாக இருக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும்.ரேவதி நட்சத்திரம், புதன் 7-ல் உள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் கொஞ்சம் கவனமாக இருக்க கூடிய காலக்கட்டம் .

மீண்டுமொரு இனிய நிகழ்வில் சந்திப்போம்.

நன்றி, வணக்கம்.