சரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி

https://youtu.be/oyl0b5bJ6a4

அனைவருக்கும் வணக்கம்.
அட்சய லக்ன பத்ததியில் இன்றைக்கு 7ம் பாவகம் பற்றி பார்கலாம்.
திருமணம் எப்போது நடக்கும்.திருமணம் சார்ந்த நிகழ்வுகள் எப்படி இருக்கும்.
நம்முடைய விருப்பத்திற்கு வரன் பார்க்கிறோம் என்பதைவிட நம்ம ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்கு அதற்கு தகுந்த மாதிரி வரன் பார்த்தால் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும். இதை எல்லாரும் புரிந்து கொள்ளனும்.

அந்த ஜாதகர் என்ன வரன் வாங்கி வந்திருக்கார்,
அவருக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும்,எப்படி அவருடைய வாழ்க்கை முறை இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு பின் பொருத்தம் பார்ப்பது நல்லா இருக்கும்.
வரன் பார்க்கக் கூடிய விஷயங்களில் கவனமாக இருங்கள்.
பொதுவாக ஜாதகத்தில் நல்ல வாழ்க்கை துணை அமையனும்னா அட்சய லக்னமும்,
அட்சய லக்னத்திற்கு 7ம் பாவகமும் நல்ல அமைப்பில் இருக்கனும்.

உதாரணமாக தனுசு லக்னம் அட்சய லக்னமாக இருக்கும்பொழுது , இந்த 10 வருட அதிபதி குருவாக இருப்பார்.இது ஒரு ஆண் ஜாதகமாக இருந்தால் பெண் ஜாதகம் எப்படி அமையும் என்று பார்க்கப் போகிறோம்.
பெண், இந்த 7ம் வீட்டினுடைய அதிபதி புதன்,
இந்த குருவும் புதனும் எப்படி இருக்காங்க என்பதை பொறுத்து தான் அவர்களுக்கு வாழ்க்கையில் எப்படிப்பட்ட வரன் அமையும்,?நல்லா இருக்குமா? இல்லை பிரச்சனையாக இருக்குமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
குருவும் புதனும் இந்த இடத்திலேயே இருந்தால் நல்ல தம்பதிகளாக 100% அந்த 10 வருட காலங்கள் ஒத்துப் போகும்.
அட்சய லக்ன அதிபதி குரு மீன லக்னத்தில் இருந்தால், புதன் 7வது வீட்டுக்கு 2வது இடத்தில் இருந்தால் அதாவது குரு ALP லக்னத்திற்கு 4ம் வீட்டில், 7ம் அதிபதி 7 க்கு 2ம் இடத்தில், ALP லக்னத்திற்கு 8ம் வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்.
ஜாதகர் நல்லாதான் இருக்கார், ஆனால் வரக்கூடிய பெண் வீட்டில் இருந்து பிரச்சனைக இருக்கும். ஏன்னா ? லக்னத்திற்கு இது 8ம் வீடு. சஷ்டாஷ்டகம் சம்பந்தப்படுவதால் எதிர்பார்க்கும் அளவு வரன் அமையாது.திருமணம் ஆவதில் பிரச்சனை இருக்கும்.

இதுவே ஜாதகருக்கு குரு 12ம் வீட்டில் இருந்தால், புதன் ALP லக்னத்திலேயே இருப்பதாக வச்சிக்கலாம்.இவருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும் ஆனால் ஜாதகருடைய குடும்பம் ஏத்துக்க மாட்டாங்க.

அட்சய லக்னத்தில் ஒவ்வொரு காலகட்டங்களையும் தனுசுலக்னம் ALPலக்னமாக போகும்பொழுது குரு புதன் 10 வருட காலத்தில் சஷ்டாஷ்டகத்தில் இருப்பதால் திருமணம் ஆவதிலேயே பிரச்சனை இருக்கும்.
எதிர்பார்க்கும் வரன் அமையாது.

அட்சய லக்னம் மகர லக்னமாக போகும் பொழுது மகர லக்ன அதிபதி
சனி பகவான், இங்கு 7ம் வீடு அதிபதியாக சந்திரன் போவார்.
சனியும் சந்திரனும் எப்படி இருக்கு என்பதை பொறுத்து தான் அடுத்த 10 வருடம் அவர்களுடைய திருமண வாழ்க்கை அமையும்.
சனியும் சந்திரனும் நல்ல அமைப்பில் இருந்தால் பிரச்சனை இருக்காது.
அதுவே லக்னத்திற்கு 2ம் வீட்டில் சனி பலமாகவும், 7ம் வீட்டிற்கு 2ம் இடத்தில் சந்திரனும் இருந்தால் பிரச்சனை இல்லை.
ஆனால் இந்த லக்னத்திற்கு 7ம் அதிபதி 8ம் வீடாகவும், இந்த வீட்டுக்கு 7ம் அதிபதி 8ம் வீடாகவும் இருப்பதால் அதனால் இது இரண்டுமே பிரச்சனைக்குரிய காலகட்டங்கள்.
இரண்டு பேருடைய பக்கத்திலும் பிரச்சனை இருக்கும்.
எப்படி வரன் பார்த்தாலும், 7ம் அதிபதியும், லக்னாதிபதியும் சனி சந்திரனாக வருவாங்க, ஜாதகத்தில் அவர்கள் சம சப்தமமாக இருந்தாலும்
பாவகத்திற்கு 8ல்
சஷ்டாஷ்டமாக வருவதால் அது பிரச்சனைக்குரிய திருமணமாக தான் இருக்கும்.
என்ன பொருத்தங்கள் நீங்கள் பார்த்து பண்ணினாலும் திருமண வாழ்க்கை இங்கு கேள்விக்குறியாக இருக்கும்.
அடுத்தவங்க பஞ்சாயத்து வைக்கக்கூடிய சூழ்நிலையை தான் தரும்.

இதற்கு APT Life Partner என்ற செயலி திரு.பொதுவுடைமூர்த்தி சார் கண்டுபிடிச்சிருக்காங்க. அந்த செயலியில் பெண்ணுடைய ஜாதகத்தையும், ஆணுடைய ஜாதகத்தையும் கொடுத்தால் அவர்களுக்கு எத்தனை வருடம் ஓத்துப் போகும் எத்தனை வருடம் ஒத்து போகாது ,எப்போதெல்லாம் அவங்க கவனமாக இருக்கணும், எப்போதெல்லாம் நல்லா இருக்கலாம் என்பது அதில் காட்டும்.அதில் உங்கள் ஜாதகத்தை போட்டு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி.

ALP யில் ஆய்வு செய்து யார் யார் எந்த மொபைல் உபயோகிக்கலாம்

வணக்கம்,
சின்ன குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை பிரிக்க முடியாத விஷயம் மொபைல் போன்தான்.
மொபைல் போனில் நிறைய கம்பெனி, பிராண்ட், மாடல் இருக்கு.
இதில் ALP யில் ஆய்வு செய்து யார் யார் எந்த மொபைல் உபயோகிக்கலாம் என்று கண்டுபிடித்து , பயன்படுத்தி பார்த்து இருக்கீங்களா.

இங்கு எல்லாமே பார்க்கலாம் என்பதுதான் விஷயம், எண்ணியல் அடிப்படையில் நம்முடைய வாழ்க்கையில் இந்த ஜாதகத்தில் இப்போ ALP லக்னம் மேஷம் போனால் அவருடைய கார் என்ன, மொபைல் என்ன , மொபைல் சம்பந்தப்பட்ட விஷயங்கள், கார் சம்பந்தப்பட்ட விஷயங்கள், காருடைய நிகழ்வு என்ன,
இப்ப மாருதி கார் வாங்கலாமா, வாங்கலாம்.

அதுவே உதாரணமாக மிதுனலக்னம் போகும்பொழுது மாருதி கார் வாங்கலாமா? வாங்க கூடாது. அப்படி மாருதி கார் வாங்கினால் இடிச்சிட்டு போய்தான் நிற்கும்.
யாருக்கு என்ன வாங்கலாம், என்ன வாங்க கூடாது என்ற அமைப்பை ALP லக்னத்தை வைத்து பெயருடைய அமைப்பு, எண்களுடைய அமைப்பு வீட்டு வாஸ்து முறைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே இதில் உள்ளே கொண்டு வருவோம்.

இப்ப அமெரிக்காவில் ஒரு வீடு இருக்கு, அதற்கு வீடு வாஸ்து பார்க்க முடியுமானா முடியாது. அதனால் இங்கிருந்து ஏதாவது ஒரு பொருளை மாற்றுங்க, ஏதாவது ஒரு விஷயத்தை மாத்துங்க, இந்த Color மாத்துங்க, இந்த பொருளை வைக்க முடியுமா இப்படி நம்முடைய கேள்விகளை கேட்கலாம்.

SAMSUNG Mobile எடுத்துகிட்ட இப்ப அதிகமாக வச்சிருக்காங்கனா,
ALP மேஷ லக்னம் வைச்சிருக்கலாம்.
மிதுன ALP வைச்சிருக்கலாம். மிதுன லக்கனக்காரர்கள் SAMSUNG Mobile வச்சிருக்கும் பொழுது கொஞ்சம் வாய்ப்பு நல்லா இருக்கும்.
அதே போல் சிம்ம லக்னகாரர்கள் வச்சிருந்தால் நல்லா இருக்கும்.
துலாம் லக்னகாரர்கள் வச்சிருந்தால் நல்லா இருக்கும்.
தனுசு லக்னம், மகர லக்னம் , கும்ப லக்னம், மீன லக்னம் இந்த 8 லக்னங்களுக்கு இந்த SAMSUNG Phone சப்போர்ட் பண்ணும்.
மீதம் 4 லக்னங்களுக்கு SAMSUNG Phone வச்சிருந்தால் Screen, display, Corner உடைந்து இருக்கும்.
இல்லை phone பேசினால் ஏதாவது net problem இருக்கும் , சில பேருக்கு காதில் விழாது. சில பேருக்கு பேசும்பொழுது கரடுமுரடாக சத்தம் வரும். இந்த மாதிரி இந்த 4 லக்னக்காரர்களுக்கு பிரச்சனைகள் வரும்.
எல்லாரும் phone vacirupanga.
இப்ப ALP லக்னம் தெரிந்தவர்களுக்கு இது தெரியும். ALP லக்னம் தெரியாதவர்கள் google Play Store ல் ALP astrology app பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம்.

இப்ப உதாரணமாக கடக லக்னம் போனால் எப்பொழுதும் ஒரு அழுத்தத்தை, சம்பந்தமே இல்லாமல் ஒரு phone ஒரு நாளில் வந்தால் அன்றைக்கு வேலையே கெட்டுவிடும். யார்? என்ன? ஏ ? எதுக்கு? பேசுனாங்கனு, திட்றாங்கனு தெரியாது இப்படி நடக்கும்.
Phone பேசும்பொழுது கடகம்,கன்னி, விருச்சிகம், ரிஷப லக்னமோ இதெல்லாம்
பார்த்தால் ஏதாவது ஒரு நிகழ்வு இப்படி நடக்கும். எல்லா Phone model க்கும் இந்த அமைப்பு உண்டு.
SAMSUNG அதிகமாக use பன்னுவதால் இவங்களுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும்.
எல்லாமே காரண காரியங்களோடுதான் நடக்குது.
நமக்கு தான் தெரியவில்லை.
ரிஷப லக்னத்திற்கு iphone இருந்தால் கண்டிப்பாக கடன் உண்டு.

நன்றி

 

 

 

 

உங்கள் ராசிக்கு பணவரவு எப்படி இருக்கும்

 

அனைவருக்கும் வணக்கம்.

இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.

இன்றைக்கு நிறைய பேர் கேட்கக்கூடிய கேள்வி எனக்கு எப்பொழுது எல்லாம் வருமானம் வரும்.

 

பொதுவாக அட்சய லக்னத்தில் 2ம் வீடு வருமானத்தை தரக்கூடிய வீடு.

உதாரணமாக கன்னி லக்னம் ஒருவருக்கு அட்சய லக்னமாக போனால்,

வருமானத்தை தரக்கூடிய கிரகம் சுக்கிர பகவான்.

சுக்கிரன் இருக்கக்கூடிய நிலையை பொருத்துதான் வருமானம் அந்த 10 வருடத்திற்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இப்ப சுக்கிரன் கன்னி லக்னம் வரக்கூடிய காலகட்டத்தில் சுக்ரன் நல்லா இருந்தால் வருமானம் நிறைய தருவார். அதனால் இந்த 10 வருடம் இவர்களுக்கு சிறப்பான பலனை தரும்.

அந்த கிரகத்தின் உடைய தன்மையை பொருத்தும் அந்த வருமானத்தை எடுத்துக்க முடியும்.

சுக்ரன் என்றால் இனிமையான கிரகம்,அதனால் எல்லா சுபபோகங்களையும் அந்த குடும்பம் மூலமாக வருமானத்தை கொடுக்கும்,

வருமானத்தை ஏற்படுத்திவிடும்.

 

2ம் வீடு என்பது வருமானம் மட்டும் இல்லை நம்முடைய பேச்சினால்தான் எந்த ஒரு நன்மைகளும் நம்மை தேடி வரும்.

2ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் ரொம்ப இனிமையாக பேசுவாங்க.அவங்களுடைய பேச்சிலேயே அவர்களுக்கு தேவையானது எல்லாரும் பண்ணி கொடுத்துடுவாங்க.

அதில் வருமானம் மட்டும் இல்லை அவங்களுக்கு கிடைக்கக்கூடிய எல்லா செயல்களும் வாக்குவன்மையால் கிடைத்து விடும்.

 

சுக்ரன் 3ம் வீட்டில் இருந்தால் வருமானத்திற்கான முயற்சிகள் மட்டும் இந்த காலகட்டத்தில் எடுக்க முடியும்.ஏன்னா? இந்த வீட்டிற்கு வருமானம் என்பது 12-ம் வீடாக போகும்.இந்த 10 வருட காலமும் வருமானத்திற்கான முயற்சிகளில் மட்டும் தான் ஈடுபட முடியும்.

முயற்சி செய்து அந்த வருமானம் அவருக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்றால் இந்த லக்னாதிபதி புதன் எங்கு இருக்கிறார் என்பதை பொறுத்துதான் இந்த முயற்சி அவருக்கு பலனாக மாறுமா?என்பதை

எடுத்துக்கொள்ள முடியும்.

எந்த லக்னமும் அதனுடைய லக்னாதிபதியும் 2ம் அதிபதியும் தொடர்பு பெறும் பொழுது நிச்சயமாக அவர்களுக்கு வருமானத்திற்கான காலம் உண்டு.

அதுபோல் வருமானம் எப்பொழுதெல்லாம் வரும் என்று சாப்ட்வேர் பொதுவடை மூர்த்தி சார் கொடுத்திருக்காங்க.

லக்னாதிபதி வருமானத்திற்கு அதிபதியான 2ம் அதிபதியுடன் இணைந்து எப்பொழுது எல்லாம் செயல்படுகிறதோ

அதாவது 1 வருடம், 1 மாதம், 10 நாள் என்பது ஒரு நட்சத்திர பாதத்தினுடைய அளவுகளாக குறிக்கப்படும்.

இந்த பத்து வருடத்தில் ஒன்பது நட்சத்திர பாதங்களாக பிரிக்கிறாங்க

இந்த 1 வருடம் ,1 மாதம், 10 நாள் அதிபதியோடு எப்பொழுதெல்லாம் இரண்டாம் அதிபதி சம்பந்தப்படுகிறது அப்பொழுது எல்லாம் அவர்களுக்கு வருமானத்திற்கான காலம்.

 

இந்த 1 வருடம், 1 மாதம் ,10 நாள் என்பது 405 நாட்களாகவும், அடுத்துஒரு உட்பிரிவு 45 நாட்களாகவும், அடுத்து ஒரு உட்பிரிவு 5 நாட்களாகவும் அடுத்து 13 மணி நேரம் 20 நிமிடமாகவும்,அடுத்து 1 மணி நேரம் 30 நிமிடமாகவும் அடுத்து 10 நிமிடமாகவும் எடுத்து இருக்காங்க. இதில் ALP சாப்ட்வேரில் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

லக்னத்தின் அதிபதியோடு 2ம் இடத்தின் அதிபதி சம்பந்தப்படும்போது உங்களுக்கு வருமானத்திற்கான காலம் இருக்கா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

புதனும், சுக்ரனும் 405 நாள் காலகட்டங்களில் சம்பந்தப்படுகிறதா, இல்லை 45 காலகட்டங்களில் சம்பந்தப்படுகிறதா என்பதை பார்த்தாலே எந்த காலகட்டங்களில் வருமானம் வரும் என்பதை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.

வருமானம் என்பது தொழிலில் மட்டும் இல்லை,அவர்களுடைய குடும்பத்திலிருந்து எதிர்பார்க்கலாம். இல்லை சகோதரர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்.இல்லை அவர்களுடைய வீடு , வண்டி ,வாகனம், வாடகை இதிலிருந்து வருமானம் எதிர்பார்க்கலாம்.குழந்தைகளிடமிருந்து வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

இந்த 13 மணிநேரம் 20 நிமிடத்தில் சுக்ரனும் புதனும் தொடர்பு பெறும் பொழுது அவர்களுக்கு வருமானத்திற்கான வாய்ப்பு உண்டு.

வங்கி கடனுக்கு இந்த 45 நாள் இந்த 2ம் இடத்தோடு சம்பந்தப்பட்டால் அந்த 45 நாளில் வங்கிகடன் கிடைக்கும்.

வருமானம் என்று எடுக்கும் பொழுது ஒவ்வொரு அட்சய லக்னத்திற்கும் இரண்டாம் பாவக அதிபதி லக்னாதிபதியோடு தொடர்பு பெறும்பொழுது மட்டுமே அவர்களுக்கு வருமானம் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும்.

 

நன்றி.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒரு லக்னம் 10

வணக்கம்

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒரு லக்னம் 10 வருடத்திற்கு
மேஷ லக்னத்திற்கு பார்த்தால் 6ம் பாவக அதிபதி அதாவது நோயினுடைய தன்மை, ஒரு டாக்டர் கிட்ட போனா Blood test எடுத்து பார்ப்போம் அதாவது இந்த நோயின் உடைய தன்மை இவ்வளவு இருக்கு என்று பகுத்து பார்த்தல்.அதாவது ஒரு மருந்து கொடுக்கும் முன்னாடி பகுத்துப் பார்ப்பாங்க.

அதுபோல் ஒரு ஜாதகர் ஒரு ஜோதிடரிடம் வரும் பொழுது இந்த காலகட்டத்தில் புதன் 6ம் அதிபதியாக லக்னத்தோடு தொடர்பில் இருந்தால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, ரத்தம் சம்பந்தப்பட்டதில் அழுத்தம் இருக்கு என்பதை முடிவு பண்ணனும்.
என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடித்தால்தான் 10 வருடத்திற்கு பிரச்சனை இருக்கா, இல்லை 4 வருடம், 5 மாதம் ,10 நாள் பிரச்சனை இருக்கா என்பதை மேலோட்டமாக பார்க்கும் பொழுது,
மேஷ லக்னத்தில் புதன் இருக்கக்கூடாது ,அப்படி மேஷ லக்னத்தில் புதன் இருந்தால் இந்த 10 வருடத்திற்கு ஜாதகருக்கு நோய்.
ஏதாவது ஒரு பிரச்சனை இவருக்கு வரும்.
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை,தலைவலி, மூக்கு, சைனஸ் சம்பந்தப்பட்டது, மூளை அழுத்தம் சம்பந்தப்பட்டது,சில பேருக்கு மூளை heat னால் நிறைய பேருக்கு ரொம்ப உருக்கி எடுக்கும்.நரம்பு சம்பந்தப்பட்டது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்,கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும்.
10 வருடத்திற்கும் இருக்கும் சில பேருக்கு தெரியும் சில பேருக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ரொம்ப அமைதியாக இருக்கனும்,ரொம்ப யோசிக்க கூடாது.
நடக்காத நிகழ்வுகளை நடக்கனும், நடக்கனும்னு இவர்களை அறியாமலே நிறைய நிகழ்வு போராட்டத்தை குறிக்கும்.

ரிஷப லக்னத்திற்கு சுக்ரன் , லக்னாதிபதி லக்னத்தில் இருக்கக்கூடாது.
நீங்கள் என்ன பண்ணாலும் சரி ,10 வருடத்திற்கு நோய் இருக்குமானா? வெவ்வேறு வகையில் வரும்.
6 மாதத்திற்கு உடம்பு வலிக்கும், 6 மாதத்திற்கு அலர்ஜியாக இருக்கும்,
6 மாதத்திற்கு மருத்துவ செலவு கை வலி, கால் வலி, மேல் வலி,தலையில் முடி கொட்டுவது, இப்படியே இந்த 10 வருட காலத்திற்கும் ஏதாவது ஒரு நோயை கொடுத்து விடும்.
அதனால் மேஷ லக்னத்திற்கு புதன் எப்படி இருக்க கூடாதோ அதேபோல் ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன் இருக்கக் கூடாது.

மிதுன லக்னத்திற்கு செவ்வாய் லக்னத்தில் இருக்கக் கூடாது.

அதேபோல் கடக லக்னத்திற்கு குரு உச்சமாக கூடாது. கடக லக்னத்திற்கு உச்சமானால் கை கால் மேல் எல்லா இடத்திலும் கொழுப்பு கட்டிகள் வரும்.
எப்பொழுதும் கொழுப்பு சம்பந்தப்பட்டது கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

அதேபோல் சிம்ம லக்னத்திற்கு சனி பகவான் லக்னத்தில் இருக்கக் கூடாது.

கன்னி லக்னத்திற்கும் சனிபகவான் லக்னத்தில் இருக்கக் கூடாது.

துலாம் லக்னத்திற்கு குரு பகவான் இருக்க கூடாது.

விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் இருக்க கூடாது .

தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் இருக்கக் கூடாது.

மகர லக்னத்திற்கு புதன் இருக்கக் கூடாது.

கும்ப லக்னத்திற்கு சந்திரன் இருக்கக்கூடாது

மீன லக்னத்தில் சூரிய பகவான் இருந்தால் 10 வருடத்திற்கு நீங்கள் ஒன்று கடன் ஆகணும்,இல்லை வழக்கு வரணும், இல்லை நோய் வரணும் இதில் ஏதாவது ஒன்று வரணும்.
இதில் முதன்மையாக நோய் அதிகமாக பாதிக்கும்.
இந்த 12 லக்னத்தில், உங்கள் லக்னத்தை ஆய்வு செய்து பாருங்கள்.

இப்படி வந்தால் அதை தடுக்க முடியுமா என்று கேள்வி வரும்.

ஒரு மருத்துவமனை போனால் அங்கு மருந்து மாத்திரைகள் இல்லாமல் ஏன் மருத்துவமனை போறோம்.
மருந்து மாத்திரை என்பது பரிகாரம் தான்.
நோய் வந்தால் அதை தடுப்பதற்கான வழி என்ன,இதை ஏதாவது ஒரு ஜோதிடரிடம் போகும் போது கண்டிப்பாக ஏதாவது ஒரு பரிகாரம் இருக்கும்,அவங்க சொல்ற பரிகாரத்தை அதை சரியாக செய்ய வேண்டும்.
ஆனால் பரிகாரத்தை யாரும் செய்வதில்லை,

இனிப்பு, புளிப்பு சாப்பிட்டால் உடம்பு வலிக்கும்.
நிறைய காரம், புளிப்பு சேர்ந்தால் மேல் வலிக்க ஆரம்பிக்கும்.
இனிப்பு சம்பந்தப்பட்டால் நிறைய மேல் வலிக்கும்.
அதே போல் நிறைய யோசிக்க வைக்கும்,
அப்போ இந்த உணவுகள் தான் ஒரு மனிதனை இயக்குகிறது.
லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் கண்டிப்பாக 10 வருடத்திற்கு நோய் வரும் அதனால் கவனமாக இருங்கள்.

பரிகாரம்:

உதாரணமாக லக்னத்தில் உங்களுக்கு மேல் வலிக்குதுனா இனிப்பு சம்பந்தப்பட்ட பொருளை முழுமையாக குறைத்து விடனும்.

இதுவே சிம்மம் லக்னத்தில் சனி இருந்தால் எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருளை தொடவே கூடாது.
கடக லக்கின காரர்களும் எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருளை தொடக்கூடாது சிம்மம் கடகம் லக்னக்காரர்கள் தன்னை அறியாமலேயே எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருளை சாப்பிடுவார்கள்.
காரம், உப்பு, புளிப்பு, இனிப்பு இந்த 4 விஷயங்களில் நீங்கள் கட்டுப்பாடாக இருந்தால் நோய் சம்பந்தப்பட்டது வரவே வராது.
இப்படி இருந்தால் சந்தோஷமாக வாழலாம்.
நோய்க்கு காரணம் யாருமில்லை,ஜாதகர் தான்.
ஆனால் நீங்கள் மாறலாம்.இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் இது எல்லாத்தையும் குறைத்துக் கொள்ளலாம்.

இருக்கக்கூடிய காலத்தில் சம்பாதிப்பது ரொம்ப ரொம்ப சந்தோஷம் சம்பாதித்ததை சேமிப்பது அவசியம். சேமிப்பு என்பது நீங்கள் விரயம் பண்ணாமல் இருந்தாலே அதுவே சேமிப்பு.விரயம் என்பது மருத்துவ செலவு.

இவர்கள் சாப்பிடாமல் தானம் கொடுக்கலாமா?

ரிஷப லக்னத்திற்கு Sweet தானம் கொடுக்கனும்.

மிதுனலக்னத்திற்கு Mixer சம்பந்தப்பட்டது தானம் கொடுக்கனும்.

சிம்ம லக்னத்திற்கு தயிர் சாதம் தானம் கொடுக்கணும். தானம் கொடுப்பது நல்லது. அதைவிட நமக்கு நாமே உணவில் குறைத்துக் கொண்டால் தானம் கொடுக்க வேண்டியது இல்லை.

உங்கள் லக்னத்தை பதிவு செய்து பாருங்கள் google Play Store ல்
ALP Astrology என்ற மென் பொருள் உள்ளது.
அதில் பதிவு செய்து பாருங்கள்.

நன்றி.

 

|

வசிஷ்டரின்_வாயால்_பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் #விசுவாமித்திரர்.

#வசிஷ்டரின்_வாயால்_பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் #விசுவாமித்திரர்.

 

ஆனால், அந்தப் பட்டம் அவருக்கு உடனே கிடைத்துவிடவில்லை. கடுமையான தவம் இயற்றிய பிறகே அவருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது.

 

விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற வரலாறு:

 

ஒரு நாட்டின் மன்னனாக இருந்த கௌசிகன் என்பவன், வேட்டையாடுவதற்காக படைபரிவாரங்களுடன் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடி விட்டு திரும்பும் வழியில், வசிஷ்டரின் ஆசிரமம் பக்கமாக வருகிறார். தன் ஆசிரமம் பக்கமாக வந்த கௌசிக மன்னனையும் படைபரிவாரங்களையும் உணவு தந்து உபசரிக்க விரும்பிய வசிஷ்டர், கௌசிகனிடம், ‘‘உங்களுக்கும் உங்களுடைய படையினருக்கும் நான் உணவு பரிமாறுகிறேன், நீங்கள் உணவு உண்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்று சொன்னாராம்.

 

அதற்கு கெளசிகர், ‘’எனக்கும் என் படை யினருக்கும் உங்களால் உணவு பரிமாற முடியாது, காட்டுப் பகுதியில் ஆசிரமத்தில் தனிமையில் இருக்கும் நீ எப்படி இத்தனை பேருக்கும் உணவு சமைத்து பரிமாற முடியும்?’’ என்று கேட்டார்.

 

வசிஷ்டர், ‘‘முடியும் மன்னா, நீங்களும் உங்கள் பரிவாரங்களும் சற்றே இளைப்பாற அமருங்கள். சற்றுநேரத்துக்குள் உங்களுக்கு அறுசுவை விருந்து தயாராகிவிடும்’’ என்றார்.

 

பிறகு வசிஷ்டர், ஆசிரமத்துக்குப் பின்புறம் இருந்த கோமாதாவிடம் சென்று, ‘‘வந்திருக்கும் அனைவருக்கும் அறுசுவை விருந்து தயார் செய்து, பணிப்பெண்கள் மூலம் பரிமாற வேண்டும்’’ என்றார். அப்படியே சற்றுநேரத்தில் அறுசுவை விருந்து தயாரா னது. பரிமாறுவதற்கு பணிப்பெண்களும் வந்தனர்.

 

வசிஷ்டரின் ஆசிரமத்தில் இப்படி ஒரு தெய்விகப் பசு இருப்பதைக் கண்ட கௌசிகன், ‘‘கேட்டதைத் தரும் அட்சய பத்திரமான கோமாதா, சாதாரண முனிவரான உன்னிடம் இருக்கக்கூடாது. நாட்டின் மன்னனான என்னிடம்தான் இருக்க வேண்டும்’’ என்று சொல்லி, அந்த தெய்விகப் பசுவைத் தனக்குத் தருமாறுக் கேட்டார். வசிஷ்டர் மறுத்தார்.

 

வசிஷ்டரின் மகிமை தெரியாத கௌசிகன், தன்னுடைய படையினரைப் பார்த்து, அந்தப் பசுவை இழுத்து வருமாறு கூறினான். படையினர் கோமாதாவை இழுத்து வரச் சென்றனர். அவர்கள் அனைவரையும் எரித்து சாம்பலாக்கும்படி சாபம் கொடுக்கிறார் வசிஷ்டர். அப்படியே படைவீரர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகி விடுகின்றனர்.

 

அப்போதுதான் வசிஷ்டரின் தவ வலிமையை உணர்ந்துகொண்ட கௌசிகன், ‘‘தங்களுக்கு எப்படி இந்த வலிமை கிடைத்தது? தங்களைப் போலவே நானும் பிரம்மரிஷி ஆகவேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?’’ என்று கேட்டான்.

 

‘‘கடுமையாகத் தவம் இயற்றினால் மட்டுமே பிரம்மரிஷி பட்டம் கிடைக்கும். சுகபோகங்களில் திளைத்த உன்னால் அப்படி கடும் தவம் புரியமுடியாது’’ என்று வசிஷ்டர் சொல்ல,

 

‘‘படைபரிவாரங்கள் இல்லாமல் நான் நாட்டுக்குப் போவதும் ஒன்றுதான். போகாமல் இருப்பதும் ஒன்றுதான். எனவே நானும் தங்களைப் போல் கடும் தவம் புரிந்து, உங்கள் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுகிறேன்’’ என்று சபதம் செய்வதுபோல் கூறிவிட்டு தவம் இயற்றச் சென்றுவிட்டார்.

 

தவத்தின் பயனாக அளவற்ற ஆற்றலும் பெற்றார். விசுவாமித்திரர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஆனால், தவப் பயனாகத் தான் பெற்ற ஆற்றலை, திரிசங்கு சொர்க்கம் அமைத்துக் கொடுத்ததால் இழந்துவிட்டார். இழந்த சக்தியைப் பெறுவதற்காக மீண்டும் தவம் இயற்றும் பொருட்டு வட திசையில் இருந்து தென் திசைக்கு வந்து சேர்ந்த இடம்தான் விஜயாபதி. விஜயாபதி கடற்கரைக்கு அருகில் லிங்கத்திருமேனியாக இறைவனையும், இறைவியையும் எழுப்பி பூஜை செய்து, ஓமகுண்டம் வளர்க்க ஆரம்பித்தார். அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை என்ற அரக்கி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தாள். தாடகையின் தொல்லையைப் பொறுக்கமுடியாமல், விசுவாமித்திரர், ராம லட்சுமணர்களை அழைத்து வருகிறார். ராமபிரான் தாடகையை அழிக்க அஸ்திரம் தொடுத்தார். ராமரின் அஸ்திரத்துக்கு பலியான தாடகை, அருகில் உள்ள மலையில் விழுந்து மடிகிறாள். தாடகை விழுந்து மடிந்த மலை, தாடகை மலை என்றே அழைக்கப்படுகிறது. (கன்னியாகுமரி மாவட்டம், தோவாளைக்கு அருகில் இருக்கும் தாழக்குடி என்ற இடத்துக்கு அருகில் உள்ள இந்த மலை, ஒரு பெண் படுத்திருப்பதைப் போலவே காட்சி தருகிறது).

 

யாகத்தின் முடிவில், இறைவனும், இறைவியும் விசுவாமித்திர மகரிஷிக்கு தம்பதி சமேதராகக் காட்சி கொடுத்து ’’இழந்த சக்திகளைப் பெற்று விட்டாய்., காசிக்குச் சென்று உன்னை சபித்த வசிஷ்டர் வாயாலேயே ரிஷிகளில் உயர்ந்த பட்டமான ‘பிரம்மரிஷி’ பட்டத்தைப் பெறுவாய். வசிஷ்டரே உனக்கு குருவானவர். மேலும் நீ தவம் புரிந்த இந்த இடத்துக்கு வந்து செல்பவர்களுக்கு தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை’’ எனச் சொல்லி அருளினர். விசுவாமித்திரரும் காசிக்குச் சென்று, வசிஷ்டர் வாயாலேயே பிரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார்.

 

’விஜயம்’ என்றால் வெற்றி, ’பதி’ என்றால் இடம். விஜயாபதி என்றால் ‘வெற்றிக்கான இடம்’ என்பதாகும். விசுவாமித்திரர் யாகம் செய்த இடமாதலாலும், இழந்த சக்திகளை மீண்டும் பெற்று விட்ட இடமாதலாலும் இங்கு இவருக்குத் தனிக்கோயில் உள்ளது. இந்தியாவிலேயே விசுவாமித்திர மகரிஷிக்கு தனிக்கோயில் இருப்பது விஜயாபதியில்தான். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது விஜயாபதி.

 

கடற்கரையை நோக்கி கையில் கமண்டலத் துடனும், கழுத்தில் ருத்திராட்ச மாலையுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் விசுவாமித்திர மகரிஷி. அருகிலேயே உள்ளது விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோயில். இறைவனை விசுவாமித்திரர் வழிபட்ட காரணத்தால், இத்தல இறைவனுக்கு விசுவாமித்திர மகாலிங்க சுவாமி என்றும், இறைவிக்கு அகிலாண்டேஸ்வரி என்றும் திருநாமம் வழங்கப்படுகிறது. இறைவனும், இறைவியும் தனித்தனி மண்டபத்தில் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சியளிக்கின்றனர். கோயிலின் தல விருட்சம் வில்வமரம்.

 

விசுவாமித்திரர் யாகம் செய்வதற்கு முன்னால், இங்குள்ள விநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் யாகம் செய்துள்ளார். அதனால், இந்த விநாயகருக்கு ஓமகுண்ட கணபதி என்று பெயர்.கணபதி சந்நிதிக்குள் வலப்புறம் ராமர், இடப்புறம் லட்சுமணர் உருவம் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரர் யாகம் செய்த ஓமகுண்டம் தற்போது கிணறு போல காட்சியளிக்கிறது. விசுவாமித்திரர் சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று யாகமும், மாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று தியானத்தையும் தொடங்கினாராம்.

 

விசுவாமித்திரரின் ஜன்ம நட்சத்திரம் விசாகம். ஒவ்வொரு மாதமும் அனுஷம், உத்திரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங் களிலும், பெளர்ணமி தினத்தன்றும் விசுவாமித்திரருக்கு சிறப்பு அபிஷேகமும் புஷ்ப அர்ச்சனையும் நடைபெறு கின்றன. இதில் கலந்து கொண்டால், பித்ருக்கள் சாபம் நீங்குவதாகச் சொல்லப் படுகிறது. கடலில் நீராடி, ஈர ஆடையுடனே ஓமகுண்ட கணபதிக்கு சிதறு தேங்காய் உடைத்து, விசுவாமித்திரருக்கு சிவப்பு வெள்ளை வஸ்திரம் அணிவித்து, அவருக்கு உகந்த ரோஜாப்பூ மாலை சாத்தி, 11 நெய் தீபமேற்றி, விசுவாமித்திரர் சந்நிதியை மூன்று முறைச் சுற்றி வந்து, மறுபடியும் ஒரு முறை விசுவாமித்திரரை தரிசனம் செய்துவிட்டுச் சென்றால் சில நாட்களிலேயே முன்னேற்றம் தெரிவதாகக் கூறுகின்றனர் பலன் பெற்றவர்கள்.

 

விசுவாமித்திர மகாலிங்க சுவாமிக்கு வெள்ளை வஸ்திரம், வெள்ளை அரளி மாலை அணிவித்து, அகிலாண்டேஸ்வரி அம்பிகைக்கு சிவப்பு நிறப் பட்டு, செவ்வரளி மாலை சாத்தி நெய் தீபமிட்டு வழிபட்டால் நினைத்த காரியம் ஸித்தியாகுமாம். தைமாதம் தைப்பூசத்தில் இறைவனையும், இறைவியையும் விசுவாமித்திரர் பிரதிஷ்டை செய்ததால், தைப் பூசத்தன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

 

அடைந்த தோல்வியை மாற்றி வெற்றியை அருளும் விஜயாபதி விசுவாமித்திரர் கோயிலுக்குச் சென்று, ஐயனையும் அம்பிகையையும் வழிபடுவதுடன், விசுவாமித்திரரையும் தரிசித்து வாழ்க்கையில் தோல்விகளைத் தவிர்த்து, எங்கும் எதிலும் வெற்றிகளே கிடைக்க பிரார்த்திப்போம்.

இவன்

அடியேன்

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 

(படித்ததில் பிடித்ததை இங்கு பதிவு செய்யபட்டுள்ளது.)