ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
full video link : https://youtu.be/M7L7DWJjyLk?si=24I4ddqXlVjNcgV2
அனைவருக்கும் வணக்கம்.
ஒரு நண்பர் கேட்டாங்க. நட்சத்திரம் பலமாக வேலை செய்கிறதா அல்லது கிரகங்கள் பலமாக வேலை செய்கிறதா, என்று கேள்வியாக கேட்டார்கள்.
நட்சத்திரமா, கிரகமா என்று கேள்வி வந்தது என்றால், நட்சத்திரம் என்பது கிரகங்கள் மூலமாகத் தான் இயங்குகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தசா புத்தி என்பதை எல்லோரும் பார்ப்பார்கள். என்னுடைய பிறந்த நட்சத்திரம், உதாரணமாக ஒருவருக்கு ரோகிணி நட்சத்திரம் இருந்தால், அவர்களுக்கு சந்திர தசை நடக்கிறது. பிறந்த நட்சத்திரம் ரோகிணியாகவும், அதற்கு முன்னாடி சந்திர தசை என்பது அவர்களை இயக்குகிறது என்று சொல்கின்றீர்கள். சந்திரனை முதன்மைப்படுத்திக் கொண்டு, சந்திர தசை நடக்கிறது. அதற்குப் பிறகு, செவ்வாய் தசை நடக்கிறது. அதற்குப் பிறகு, ராகு தசை நடக்கிறது, அதற்குப் பின் குரு தசை நடக்கிறது, என்று கிரகங்களைத் தான் முதன்மை என்று சொல்கின்றோம். அதற்குப் பின்னாடி இயங்கக் கூடிய நட்சத்திரங்கள் நமக்கு தெரியாது என்பது தான் உண்மை. பிறந்த நட்சத்திரம் மட்டும் தான் நமக்கு எல்லோருக்கும் தெரியும். அதன் பின் எந்தெந்த நட்சத்திரங்கள் என்னை இயக்குகிறது, எந்த செயலுக்காக என்னை இயக்குகிறது, என்பது யாருக்கும் தெரியாது. இது போல, நாம் நிறைய பேசலாம். நட்சத்திரங்கள் இயங்காமல் எந்த ஒரு செயலும் கிடையாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சனி பெயர்ச்சி எல்லோருக்கும் தெரியும். கடக ராசிக்கு, அஷ்டமத்து சனி முடிந்து விட்டது. பிரச்சனை கிடையாது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்த கடக ராசிக்காரங்க அஷ்டமத்து சனி முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு, இப்போ நான் வீடு கட்டலாமா என்று வீடு கட்ட ஆரம்பித்தால், இவர்கள் தான் கடனில் மாட்டுவார்கள். பூச நட்சத்திரம் யாருக்கெல்லாம் போகிறதோ, பூசம் நட்சத்திரம் 2 ஆம் பாதம், 3 ஆம் பாதம், அதே போல, புதனுடைய நட்சத்திரப் புள்ளி யாருக்குப் போகிறது என்றாலும், இவர்கள் வீடு கட்ட ஆரம்பித்தால், பெரும் கடன் நீங்கள் வாங்கியே தீருவீர்கள்.
நான் சின்ன பிளாட்டா வாங்கப் போனேன். ஆனா பெரிய இடமாக அமைந்தது. பெரிய நிலமாக அமைந்து, அதுவும் ஹைவேஸ்ல தாரேன் அப்படின்னு சொன்னார்கள். ரொம்ப லாபமாக இருந்தது. போய் கை வைத்துப் பாருங்கள், நீங்கள் தான் முதல் கடன்காரர்கள்.
அந்த நிலத்திற்காக வாங்கக் கூடிய பணம் என்பதும், அந்த நிலம் என்பதும், அனுகூலமாக இருக்குமா என்றால், கண்டிப்பாக உங்களுக்கு இருக்காது. பிரச்சனைகளைக் கொடுக்கும்.
நீங்கள் இந்த சனி பகவானை வைத்து சொன்னால், எங்க உங்களுக்கு சனி பெயர்ச்சி முடிந்தது என்ற கேள்வி முதலில் கேட்பேன். கண்டிப்பாக, இந்த கடக ராசி சனி பெயர்ச்சி முடிந்ததற்கு பிறகு நான் வீடு வாங்க போகிறேன் என்று யாரெல்லாம் இறங்குகிறீர்களோ கொஞ்சம் கவனமாக இறங்குவது என்பது சிறப்பு. உங்கள் ஜாதகத்தை ALP ஜோதிடரிடம் கேட்டு, நீங்கள் வீடு வாங்குங்கள். எந்த மாதிரி வீடு வாங்கலாம், உங்களுடைய பட்ஜெட் என்ன அளவு, உங்களுடைய தன்மைகள் என்னது, கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருக்கிறது, அது எந்த வேலையை செய்யப் போகிறது என்று தெரிந்து கொள்வது நல்லது. இந்த வருடத்தில், அதாவது அடுத்த ஒரு வருடத்தில், உங்கள் கிரகம் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், வீட்டுக்காக அல்லது நோய் சம்பந்தப்பட்டது, கடனுக்காக அல்லது மருத்துவம் சம்பந்தப்பட்ட செலவு கொடுக்குமா என்றால், கொடுக்கும். நான் இது எதுவும் செய்யவில்லை வெளிநாட்டில் பணம் முதலீடு செய்யப் போகிறேன். எப்படி இருக்கும் என்று கேட்டால், கடலில் போட்ட உப்பு போல இருக்கும். www.alpastrology.com
முதலீடு செய்யலாமா என்றால், கண்டிப்பாக செய்யக் கூடாது. அது உங்களுக்கு பெரும் செலவு ஏற்படுத்துமா என்றால், கண்டிப்பாக ஏற்படுத்தும். அது கடனாக மாறுமா என்றால், வாங்கி ஒன்னு மாற்றிக் கொடுக்கும் போது, நான் உள்ளூரில் அந்த பணத்தை செலவு செய்யவில்லை வெளியூர் போய் கடனுக்காக கட்ட வேண்டிய ஒரு சந்தர்ப்பம் அல்லது பிரச்சனைக்கு உள்ளே மாட்டக் கூடிய சந்தர்ப்பம் கண்டிப்பாக இருக்கும். இது, கடக லக்னத்திற்கு மட்டுமா என்று கேட்டால் நாம் ஒவ்வொரு இடத்தையும் வைத்து 12 லக்னத்திற்குமே சொல்லலாம்.
இப்போது, மகர லக்னம் எடுத்துக் கொண்டால், மகர லக்னக்காரர்கள், நான் ஒரு நிலம் வாங்குகிறேன். நிலம் எனக்கு யோகமாக இருக்கும். நிலத்துக்குகாக முதலீடு செய்ய போகிறேன் என்று போனால் உங்களுக்கு தெரியும், நிலத்தினுடைய தன்மை என்னவென்று. கண்டிப்பாக நிலத்திற்காக செய்யக் கூடிய செலவு என்பது வீண் விரயமாக இருக்கும். நமக்கு அது பயன்படுமா என்றால் கண்டிப்பாக பயன்படாது. அந்தப் பணம் நமக்கு சேமிப்பாக, அந்த நிலம் எனக்கு யோகமாக இருக்குமா என்றால், இருக்காது. இது ஒரு உதாரணம் மட்டும்தான்.
சிம்ம லக்னம்: சிம்ம லக்னத்திற்கு எப்படி இருக்கும் என்று கேட்டால், சிம்ம லக்னத்திற்கு வெளிநாட்டு யோகம் என்பது இந்த காலகட்டத்தில் அதிகமாக இருக்கும். வெளிநாட்டிற்கு போகக் கூடிய நண்பர்கள், கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்களா என்றால், அவர்களுக்குள் அழுத்தம், போராட்டம் என்பது இருக்கும். அங்கு போனாலும் நிம்மதியானது இருக்காது. தன்னை வருத்திக் கொண்டு செய்யக் கூடிய செயல்கள். சாப்பிட மாட்டார்கள். வயிறு சம்பந்தப்பட்ட உபாதை, முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனை. தூங்க மாட்டார்கள். ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்பது உருவாகும். இவர்களுக்கு கடனாக மாறாது. நோயாக மாறும். இவர்களுடைய ஜாதக அமைப்பின்படி, இந்த சனி பகவானாக இருந்தாலும் சரி, அவர்களுடைய கிரக அமைப்பு எங்கு இருந்தாலும் சரி, இந்த பிரச்சனைகளை கொடுக்குமா என்றால், கண்டிப்பாக கொடுக்கும். இதில் எந்த மாற்றமும் கிடையாது.
துலாம் லக்னம்: துலாம் லக்னம் நல்லா இருக்கு. திருமணம் என்பது இந்த துலாம் லக்னத்திற்கு, இப்போது செய்யலாம் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்களோ, இப்போது ஒரு திடீர் காதல் திருமணம் ஆக இருக்கும். நல்லா இருக்கும். திடீர் யோகத்தை இந்த கிரகங்கள் கொடுக்குமா என்றால், கண்டிப்பாகக் கொடுக்கும். அதை யார் கொடுப்பார்கள் என்றால் துலாம் லக்னத்திற்கு ராகு பகவான் கொடுப்பார். காதல் திருமணத்தையும், இத்தனை நாட்கள் திருமணம் ஆகாத ஓரிடத்தில் இருந்து செயல்படுத்தக் கூடியது யார் என்றால், இந்த துலாம் லக்னம். அதுவும் இந்த ராகு உடைய நட்சத்திரம், ஸ்வாதி நட்சத்திரம் போகும்போது, இது நடக்குமா என்றால் நடக்கும். இவர்கள் விருப்பப்பட்ட திருமணத்திற்கு உரிய காலம். துலாம் லக்னத்திற்கு சரியா இருக்குமா என்ற கேள்வி. அதாவது அவர்கள் ஜாதகப்படி கிரகங்கள் எந்த நிலையில் இருந்தாலும், இந்த ஒரு வருட காலம், இந்த ராகு பகவானால் இவர்களுக்கு ஒரு திடீர் யோகத்தை கொடுக்கக் கூடிய தன்மை, இவர்களுக்கு இருக்கு. அதுவும் உள்ளூர் வரன் கிடையாது. வெளியூர் வரன் என்பதுதான் அமைப்பு. www.alpastrology.org
இந்த கிரகங்களை வைத்து, நட்சத்திரங்களின் அடிப்படையில் தான் கிரகங்கள் இயங்குகிறது. நாம் அதை தெரிந்து கொண்டு, அந்த கிரகத்திற்கு, அந்த கிரகத்திற்குரிய நட்சத்திர நாளில், அன்று நாம் ஒரு அர்ச்சனை செய்வதோ, அன்றைக்கு ஒரு விசேஷமான செயலை செய்வதோ சிறப்பு.
ஞாயிற்றுக் கிழமை தீபம் போடுகிறேன் என்றால், நல்லா இருக்கும் செய்யுங்கள். திங்கட்கிழமை விரதம் இருக்கிறேன், நல்லா இருக்கும் செய்யுங்கள்.
என்னுடைய லக்னம் கன்னி லக்னமாக இருக்கிறது என்றால், ஆயில்ய நட்சத்திரம் எனக்கு ரொம்ப சிறப்பாக இருக்குமா என்று கேட்டால் இந்த கன்னி லக்னக்காரர்களுக்கு, ஆயில்ய நட்சத்திரம் பெரும் லாபத்தை கொடுக்கும் என்பது, எத்தனை பேருக்குத் தெரியும்? ஆயில்ய நட்சத்திரம் அன்று, நாகராஜர், நாகர் எங்கு சம்பந்தப்படுகிறாரோ, அவருக்கு பாலும் மஞ்சள் பொடியும், ஒரு பால் பாயசம் வைத்துக் கொடுப்பது, சிறப்பான பலனைக் கொடுக்குமா என்றால், கண்டிப்பாக. இது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த நட்சத்திரத்தன்று வழிபாடு செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது தெரிந்து செய்வது சிறப்பு.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology
+91 9786556156
S.POTHUVUDAIMOORTHY
ALP ILLAM,
No.18A Ganesh Nagar(First Right),
Old Perungalathur (NEAR LOTUS POND),
S.V Nagar Post,
Chennai - 600063,
Tamil Nadu, India.
alpastrologyoffice@gmail.com
alpastrology.org@gmail.com