Akshaya Lagna Paddhati

ASTROLOGY

Dr.S.Pothuvudaimoorthy, Ph.D.

செவ்வாய் தோஷம்

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை

full video👉 https://youtu.be/_4iobWHUIvQ?si=zG4t74W4wOKN52EP

 

அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பில், அட்சய இல்லத்தில், ஆன்மீக கிளிட்ஸ் யூ-ட்யூப் சானலில், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தின் தந்தை. வாக்கு யோகி. உயர்திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள்,  ஜோதிட ஆர்வலர்கள் கேட்ட  கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

கலந்துரையாடல் நிகழ்வில் சில துளிகள்…….

ஜோதிட ஆர்வலர் திரு. கோபிநாத் அவர்களின் கேள்வி: 

வணக்கம் ஐயா. கிரக தோஷம் என்று சொல்கிறார்கள். அதனை ALP முறையில் எப்படிப் பார்க்கிறீர்கள்? அதற்கு ALP முறையில் பரிகாரங்கள் எப்படி இருக்கும்? இவ் விஷயத்தில், ALP முறைக்கும், மற்ற ஜோதிட முறைகளுக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்ன? இதனை, ALP முறையில் நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?     

ஐயாவின் பதில் :

நல்லது. நாம் இப்போது தோஷங்கள் என்று சொல்வது, செவ்வாய் தோஷம் என்கிறோம், ராகு - கேது தோஷம் என்று சொல்கிறோம். இப்போது, குரு, சனி, சூர்யன், சுக்ரன் என்று எல்லாவற்றையும் கொண்டு வந்தாகி விட்டது.

ஒரு பெண்ணிற்கு திருமணம் நடைபெறவில்லை எனில், 7-ல் சுக்கிரன் உள்ளது, அதனால் திருமணம் நடக்கவில்லை. 7-ல் செவ்வாய் உள்ளது, அதனால் திருமணம் நடக்கவில்லை, என்கின்றனர்.

7-ல் செவ்வாய் இருக்கு என்பதை கரக்ட்டுன்னு சொல்லிக்கலாம். ஆனால், சுக்கிரன் இருக்கு, சூரியன் இருக்கு, சனி இருக்கு, குரு இருக்கு, என்கிறார்கள். எனக்குத் தெரிந்த வரைக்கும், புதனை மட்டும் தான் இன்னும் சொல்லவில்லை. மற்ற எல்லா கிரகங்களையும் சொல்லி விட்டனர். 

 

 

 

இதில் என்னவென்றால், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை

 

பாரம்பரியத்தில் கிரகங்கள், லக்னத்துக்கு 1 - 2 - 4 - 7 - 8 - 12 - ல் இருந்தால் தோஷம். இப்போது தான் லக்னமே பெயர்ச்சி ஆகின்றதே. லக்னம் மூன்று கட்டம் தள்ளி வருகின்றதே. 

ப்ராக்டிகலாக ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லி விடுகிறேன். 21 வயதில் இருந்து 30 வயது வரை உடலும், மனமும் சரியாக இருக்கும். இந்த கால கட்டங்களில், நீங்கள் கவனமாக, ஒரு பதட்டம் இல்லாமல், பயமில்லாமல், போராட்டம் இல்லாமல் வாழ்க்கையை வாழ வேண்டும், என்று சொல்வது தான் செவ்வாய். 

இப்போது 21 வயதில் கோபப்பட்டு பேசுவோம். 30 வயதில் கொஞ்சம் புரிதல் வரும். இது தவிர மற்றபடி ஒன்றும் இல்லை.

ஆனால், இவர்கள் எல்லாம், செவ்வாய் என்று கிரகத்தை சொல்கிறார்கள். நாம் ALP -ல் என்ன சொல்கிறோமெனில், நட்சத்திரங்கள் என்று ஒன்று உள்ளன. மிருகசீரிஷ நட்சத்திரம் ஒருவருக்கு செல்லும் கால கட்டத்தில், அதுவும் 21 - 30 வயதில் சென்றால் மட்டுமே, திருமணத்தில் தடை பண்ணும்.

அதுவும் இரண்டு வருடம் தான், அதாவது மிருகசீரிஷம் 1, 2, அல்லது  மிருகசீரிஷம் 3, 4, அதிகபட்சம் 4 வருடம் கவனமாக இரு. அடுத்தது, சித்திரை 1, 2 செல்கையில் கவனமாக இரு. சித்திரை 3, 4 செல்கையில் கவனமாக இரு. அவிட்டம் 1, 2, செல்கையில் கவனமாக இரு. அவிட்டம் 3,4, செல்கையில் கவனமாக இரு. 20 - 30 வயதில், 4 வருடம் கால கட்டம் கவனமாக இரு. அதாவது ரிஷப லக்னம் ALP ஆக செல்லும் போது அல்லது மிதுன லக்னம் ALP ஆக செல்லும் போது மட்டும் கவனமாக இரு. இல்லையென்றால், செவ்வாய் 1-ல், 2-ல் இருக்கும் போது கல்யாணம் நடக்கவே இல்லையா? செவ்வாய் தோஷமுள்ள எத்தனையோ பேருக்கு கல்யாணம் சூப்பராக நடந்துள்ளது. அழகாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். செவ்வாய் தோஷத்தால் திருமணம் நடக்கவில்லை என்கின்றனர். ஆனால் ஜாதகத்தை பார்த்தால், வேறு ஒரு பிரச்சனையாக இருக்கும். ஏதோ ஒரு கிரக அமைப்பால் திருமணம் தடைபடும். அவர்கள் செவ்வாய் எதிர்பார்த்த மாதிரி இல்லை, என்பார்கள். செவ்வாய் அவர் பாட்டுக்கு பேசாமல் இருக்கிறார். அந்த செவ்வாயின் நட்சத்திரங்கள் செல்லும்போது மட்டும், தாக்கம் அதிகமாக இருக்கும். 

செவ்வாய் தோஷத்துக்கு பரிகாரம்:

 

 

ஞாயிற்றுக்கிழமை, மஞ்சள் தண்ணீர் வைத்து, பெண் என்றால் வீட்டு  கிழக்கு முற்றத்தில் உட்கார வைத்து, அந்தப் பெண்ணுக்கு அபிஷேகத்தை பண்ணுங்கள். அல்லது கால்-கை அலசச் சொல்லுங்கள். செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகிவிடும். இது செவ்வாய்க்கு செய்யும் பரிகாரம். 

 

பையனுக்கு, தனி பிள்ளையார் கோயிலில் அல்லது குளத்துக்கரை பிள்ளையாருக்கு 27 தடவை  சுற்றி வர, செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகிவிடும்.

இல்லையென்றால், ஞாயிற்றுக் கிழமை, மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு வைக்க வேண்டும். மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்தால், வேண்டுதல் வைத்தால், செவ்வாய் தோஷம் சரியாகி விடும். 

கோவிலுக்கு சென்று சாமி கும்பிட வேண்டும், அவ்வளவு தான். www.alpastrology.com

இது என்னவென்றால், வாழ்க்கையை நீ புரிந்து கொள். செவ்வாய் என்பது கோபம் வரும். செவ்வாய் என்பது அகங்காரம் வரும். செவ்வாய் என்பது கர்வம் இருக்கும். செவ்வாய் என்பது பொறுமையே இருக்காது. செவ்வாய் என்பது பதட்டப்படுவது. பதட்டப்பட்டால், பதறிய காரியம் சிதறும் அல்லவா? அதனால் தான் சொல்கிறோம். செவ்வாய் என்பது என்ன செய்யும் என்றால் கோபப்பட வைக்கும். எனவே கோபப்படாதே. ALP ஜோதிடம் படிங்க, புரிந்து கொள்ளுங்கள், என்று சொல்கிறோம். வேறு ஒன்றுமில்லை. 

மிருகசீரிடம் 50 வயதில் வந்தால்,  கோபம் உங்களுக்கு புரிதலாகிவிடும். 20 வயதில் வாட்ட சாட்டமாக இருக்கும் போது கையை, காலை ஓங்குவீர்கள். அது தான் வித்தியாசம். கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். வேறு ஒன்றும் இல்லை.

1 -  2 - 4 - 7 - 8 - 12, ஆறு கட்டம் போய்விட்டது. மீதி ஆறு கட்டம் தான் உள்ளது. எப்படி வாழ்க்கை வாழ்வார்கள்? 21 - 30 வயதில் ஒரு பெண்ணுக்கு இப்படி ஆறு கட்டம் என்றால், மீதமுள்ள 6 கட்டத்தில் எப்படிங்க வாழ்க்கை வாழ்வார்கள்? 

 

செவ்வாய் ஒன்றில் இருந்தால் தோஷம், இரண்டில் இருந்தால் தோஷம், நான்கில் இருந்தால் தோஷம், ஏழில் இருந்தால் தோஷம், எட்டில் இருந்தால் தோஷம், பன்னிரெண்டில் இருந்தால் தோஷம். ஆறு கட்டத்தில் செவ்வாய் உள்ளது. பிறக்கும் போது அந்த 12  கட்டத்திற்குள் தானே இருக்க முடியும். இப்படி,  ஒவ்வொரு கட்டத்தையும் பார்த்தால்,  எப்படி திருமணம் நடைபெறுவது, வாழ்க்கை வாழ்வது?

செவ்வாய், 

 

 

- ஒன்றிலிருந்தால் ஜாதகர் தலைக் கனம் படைத்தவர்.

- இரண்டில் இருந்தால், படபடன்னு பேசுவார்.

- நான்கில் இருந்தால், என் பையனுக்கு சொத்து இருக்கு, சுகம் இருக்கு, இத்தனை ஏக்கர் சொத்து உள்ளது,  என்று அம்மா பேசுவார். பெண்ணைத் தானே கல்யாணம் செய்யப் போகிறீர்கள். சொத்தையா கல்யாணம் செய்யப் போகிறீர்கள். ஏம்மா இப்படி பண்றீங்க? 

- ஏழில் இருந்தால், எதிர் கட்டத்தில் இருக்கும் அந்தப் பெண், நான் உயரமாக இருக்கிறேன். கட்டையாக இருக்கிறேன், என அந்தப் பெண் பேசும். உருவத்தைப் பற்றி பேசும். 

- எட்டில் இருந்தால், அந்தப் பெண்ணின் படிப்பு பிரச்சனையை தரும்.

- பன்னிரெண்டில் இருந்தால், இதெல்லாம் சரிப்பட்டு வராது, ஒத்தே வராது என்று ஒதுங்கும். 

இப்போது 6 கட்டம் முடிந்து விட்டது. மீதமுள்ள ஆறு கட்டத்தில் இருந்தால், எப்போது கல்யாணம் ஆகும்? எப்போது குடும்பம் நடத்தும்? 

செவ்வாய் தோஷம் என்றால், மிருகசீரிஷம் நட்சத்திரம் சென்றால், சித்திரை நட்சத்திரம், அவிட்ட நட்சத்திரம், சென்றால் மட்டும், அதுவும் ALP நட்சத்திரப் புள்ளி செல்லும் போது, அந்த இடத்தில், அதுவும் அந்த வயதில் சென்றால் மட்டும், கவனமாக இருக்க வேண்டும். மற்ற இடங்களில் பார்க்க வேண்டிய அவசியமில்லை. 

நன்றி. www.alpastrology.org

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology

Phone

+91 9786556156

Address

S.POTHUVUDAIMOORTHY
ALP ILLAM, No.18A Ganesh Nagar(First Right),
Old Perungalathur (NEAR LOTUS POND),
S.V Nagar Post, Chennai - 600063,
Tamil Nadu, India.

Email

alpastrologyoffice@gmail.com

alpastrology.org@gmail.com

Contact Us

© , ALP Astrology Created By Codriveit. All rights reserved