Akshaya Lagna Paddhati

ASTROLOGY

Dr.S.Pothuvudaimoorthy, Ph.D.

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை

FULL VIDEO 👉 https://youtu.be/j04MVC7Epb4?si=ubSY77Uw-PGp-RlV 

 

🌟 அட்சய லக்ன பத்ததியின் தந்தை உயர்திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களிடம், அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆசிரியர். திருமதி. சாந்தி

தேவி ராஜேஷ்குமார் அவர்கள் நடத்திய, படிப்பு பற்றிய கலந்துரையாடல்.

 🙏 திருமதி. சாந்தி தேவி ராஜேஷ்குமார்:

 அனைவருக்கும்

வணக்கம் 🙏 இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்🙏

 🌟 கல்வி - படிப்பு பற்றிய முக்கியமான நிகழ்வை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

 🌟 இன்றைக்கு நிறைய பேருக்கு படிப்பை பற்றிய கேள்வி தான் பெரிய கேள்வியாக இருக்கின்றது.

 🌟 நம்ம வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு எப்படி நகரப் போகின்றோம், என்பது தான் அவங்களுடைய பெரிய கேள்வியாக இருக்கு.

 🌟 இந்த படிப்பை பற்றி நிகழ்வுகள் நிறைய உள்ளது. விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் படிப்பு என்பதில் நிறைய துறைகள் உள்ளன.

 🌟 எதைத் தேர்ந்தெடுப்பது?

 🌟 எதைப் படித்தால் நம் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்?

 🌟 என்ன மாதிரியான ஒரு சூழ்நிலையில் படிக்கணும் ?

 🌟 செலவு பண்ணி படிக்கணுமா ?

 🌟 இல்ல செலவில்லாமல் படிக்கலாமா?

 🌟இப்படின்னு உங்க சார்பாக உங்களுக்கு எழக்கூடிய கேள்விகளை,  நாம் இன்றைக்கு அட்சய லக்கன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய

அட்சய லக்கன பத்ததி ஜோதிடத்தின் தந்தை. உயர்திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா கிட்ட கேள்வி கேட்கப் போகிறோம்.

 🌟உங்களுக்காக, இந்த கல்வியைப்  பற்றிய ஒரு நிகழ்வு .

🙏 உயர்திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்கள்:           

 வணக்கம்

 🌟 எல்லோருக்கும் கேள்வி என்ன என்றால், படிக்கணும்னுஆசை இருக்கும்.

 ஒரே ஒரு கேள்வி, இந்த வீடியோ பார்ப்பவர்களிடம் கேட்கிறேன். படித்த படிப்புக்கு தான் நான் வேலை பார்க்கிறேன் அப்படின்னு யாராவது  ஒருத்தர் சொல்லுங்க.

 2000 ஆம் ஆண்டில் கம்ப்யூட்டர் படிக்கணும்னு சொன்னால், கம்ப்யூட்டர்லாம் எதுக்கு. இதெல்லாம் உனக்கு வேலைக்காகாது. பெட்டியை தட்டி என்ன செய்ய போகிறாய்.

படிக்க வேண்டாம், என்றார்கள்.

 படிக்கவே விரும்பத்தகாத ஒரு  கல்வி இன்னைக்கு 2025 இல் கம்ப்யூட்டர் மற்றும் சிஸ்டத்தை தாண்டி - AI (ARTIFICIAL INTELIGENCE) எனும் பெயரில் பிரம்மாண்டமாக உருவெடுத்து உள்ளது.

 நீங்க ஒரு வீடியோ எடுக்க வேண்டும், ஒரு போட்டோ எடுக்க வேண்டும், ஒரு போட்டோ இமேஜ் உருவாக்க வேண்டும் என்றால், கிராஃபிக்ஸ் டிசைன் செய்வதற்கு ஒரு 20 மணி நேரம் அல்லது 30 மணி நேரம் ஆகும். ஒரு போட்டோ டிசைன் செய்வதற்கு, அப்படி இருந்த காலம் போய், இன்றைக்கு  என்ன செய்கிறது மில்லி செகண்ட் நேரத்தில், அதுவே வடிவமைத்து உருவாக்கி, நாம் எப்படி விரும்புகிறோமோ, அதனை AI உருவாக்கிக் கொடுக்கின்றது.

இன்றைய உலகில் டெக்னாலஜி வளர்ச்சி அபரிமிதமானது.

 நிறைய துறைகள் சார்ந்த படிப்புகள் இருக்கின்றது. அப்படி காலம் வளர்ச்சி மாற்றம் நோக்கி பயணிக்கும் போது  அதனை நோக்கிப் பயணிக்க வேண்டும். நாம்  எல்லோருமே படித்திருக்கின்றோம். படிப்புக்கு   ஏற்ற வேலை இருக்கா என்றால்,

அப்படி வேலை இல்லை. நாம் ஏதோ ஒன்று படிக்கிறோம்.

 ஆசைகள் என்று இருக்கிறது.விதிகள் என்று இருக்கிறது. இங்கு ஆசைகளும் விதிகளும் வெவ்வேறு விதமானது. இந்த விதிகள் சொல்வது என்னவெனில், எனக்கு விதிக்கப்பட்டது இதுதான் படிக்கணும் என்று  இருக்கும். நம்ம ஜோதிடம் மூலம் இதைத் தெரிந்து கொள்ள முடியும்.

 நான் டிப்ளமோ தான் படிக்க வேண்டுமென்பது விதி. ஆனால்,  என்னுடைய ஆசை என்னவாக இருக்கும்?

 மதியே  ஆசைகள் என்று சொல்றோம். நான் என்ன செய்கிறோம்? எனக்கு டிப்ளமோ படித்தால் கௌரவ குறைச்சலா இருக்கும். நான் டிப்ளமோ படிக்க மாட்டேன். நான் டிகிரி தான் படிப்பேன் என்று படித்து விட்டு வேலை வராது (கிடைக்காது). ஆசைப்பட்டதை ஆசையாய் படித்ததால் வேலை கிடைக்கவில்லை.

 விதிக்கப்பட்டதை படித்திருந்தால் வேலை கிடைத்திருக்கும். இதுதான் விஷயம்.

 இந்த காலகட்டத்தில் எல்லோரும் கம்ப்யூட்டர் படிப்பை நோக்கி செய்கின்றனர். சிலர் மெக்கானிகல் இன்ஜினியரிங் தேர்வு செய்வர். அதிலும் டிப்ளமோ இன் மெக்கானிகல் இன்ஜினியரிங் தேர்வு செய்தவர்கள் எளிதில் படித்து ஒரு CNC மிஷினை எப்படி இயக்குவது என கற்று, உலக நாடுகளில் வேலையில் சேர்வர்.

 ஒரு ஜோதிடர் என்றால், ஒரு கல்வியைப் பற்றி அடிப்படையான அறிவுகள் நமக்கு தேவைப்படும்.

 அன்றாட வாழ்க்கையில் AI, மெடிக்கல், இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெடிக்கல் காலேஜ் பற்றியும், தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

 மருத்துவம் எடுத்துட்டா பி பார்ம், டி ஃபார்ம், பிஎஸ்சி நர்சிங், நர்சிங் டிப்ளமோ, என்று பல துறைகள் இருக்கின்றது.

 ஆறாம் பாவகம் பலமாக இருக்கு. எனவே இரண்டு ஆறு சம்பந்தப்பட்டால், நீங்கள் டாக்டராக முடியும். டாக்டராக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால்  நீங்கள் நர்சிங் படிப்பை தேர்வு செய்தால், உங்களுக்கு அடுத்தடுத்து  பிஎஸ்சி நர்சிங் படித்து விட்டு, எம்எஸ்சி நர்சிங் படித்து விட்டு, உங்களுக்கு வேலை எளிதில் கிடைக்கும். சம்பளம் கிடைக்கும். உங்களுக்கு, அரைக்கல்வி தான் விதி. எனவே நர்சிங் நல்லது என பலன் கூறலாம்.

 உதாரணம் கும்ப லக்னம், நட்சத்திரப் புள்ளி அவிட்டம், 17 வயதில் நடக்கும் போது, டிப்ளமோ நர்சிங் படிங்க, நல்லா இருக்கும் .

 லக்னம் மீன லக்னம், ரேவதி நட்சத்திரம், எம்பிபிஎஸ் சீட்டு கிடைக்க வாய்ப்பு இருக்கும்.

 இது ஒரு விதி (Rule). படிக்கும் வயதில், 17-23 வயது செல்லும் போது, எந்த நட்சத்திரம் செல்கிறதோ, அதுவே நம் படிப்பை தீர்மானிப்பவை ஆகும்.

 🙏 திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார் :

 அம்மாவும் டாக்டர், அப்பாவும் டாக்டரா இருக்காங்க. பையனை டாக்டராக  பார்க்கணும்னு முயற்சி பண்றாங்க.

ஆனா, அங்க படிப்பு வர மாட்டேங்குது. என்ன செய்வது? இப்போது ஒரு கௌரவத்திற்காக, அவருக்கு ஏதாவது ஒரு நிகழ்வு செய்து கொடுக்கணும். அப்போ, அவங்க போய் நர்சிங் கோர்ஸ் எடுக்க முடியாது. அப்ப இவங்களுக்கு என்ன மாதிரியான கல்விகளை நம்ம சொல்ல முடியும்?

 உயர்திரு. பொதுவுடைமுர்த்தி ஐயா அவர்கள்:

 உத்திரட்டாதி - ரேவதி செல்லும் பொழுது, அப்பா - அம்மா படித்தது தான் பசங்க படிப்பாங்க என்பது விதி. 600 - 700 மார்க் எடுத்திருந்தாலும், வெளிநாட்டில் சைனா - ரஷ்யா போய்,  எக்ஸாம் எழுதி படிக்க வைத்து தேர்ச்சி பெறுகின்றனர்.

 ALP பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் செல்கையில் டாக்டரா படிப்பாங்க. டாக்டர் சம்பந்தமா, காசு செலவு செய்து   படிப்பாங்க. நீட் தேர்வு எழுதி, தேர்வாகி  பேமெண்ட் கோட்டாவில படிப்பார்கள்.

 சில நட்சத்திரப் புள்ளிகள் பணம் இல்லாமல் படிப்பார்கள். உதராணமா அவிட்டம் 3,4, பணம் இல்லாமல், நர்சிங் படித்தால் சூப்பராக இருக்கும்.

 நர்சிங் 10 லட்சம் கொடுத்து படிக்க கூடிய அமைப்பும் உள்ளது. 

🙏 திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்:

 நீட் தேர்வுல எழுதி தேர்வாகி படிக்க காசில்லாமல், படிக்க முடியாம நிறையப்  பேர் உள்ளனர்.

 உயர்திரு. பொதுவுடை மூர்த்தி அவர்கள்.

 எல்லோரும் டாக்டர், இன்ஜினியர் ஆகத்  தான் செல்ல வேண்டுமா? வக்கீல், போலீஸ், ஆடிட்டர், கம்யூட்டர் சயின்ஸ், விவசாயம் சம்பந்தமான படிப்பு, தோல் சம்பந்தமான படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு, டிப்ளமா, ஐ.டி.ஐ, வெல்டிங், 

ஆர்க் வெல்டிங் படித்தால் வெளிநாட்டுல அடுத்த வருஷம் வேலை இருக்கும். ஆறு வருடம் படித்து, அனுபவம், அதற்குத் தகுந்த வேலை எனத் தேடுகிறார்கள்.

 எல்லாருமே என்ன பண்றாங்க? ஆசைப்பட்டதை படித்து விட்டு, வேலை தேடும் போது, ஏதோ ஒரு வேலைக்கு போகும்போது தான் கஷ்டமாக இருக்கிறது.

 நான்  ஆசிரியர் பயிற்சி படித்துள்ளேன். வாத்தியார் வேலை வர வேண்டும். எனக்கு குடும்ப சூழ்நிலை, வாத்தியார் வேலை கிடைக்கவில்லை எனில்,வேறு ஏதோ வேலைக்கு செல்கிறேன் எனில்,  அங்கு ஆசைகள் அந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையைத் தடுமாற வைக்கிறது.

 நான் டிகிரி படிக்க வேண்டுமென்று ஆசை. ஆசைப்பட்டு டிகிரி படித்துவிட்டு, வேலைக்கு போகும் போது, ஏதோ ஒரு வேலைக்கு, கணக்கு போட, மளிகை பொட்டலம் போட, பேக்கிங் போட செல்ல வேண்டுமென்றால், படிக்க வேண்டிய அவசியம் இல்லை. 12 வது வகுப்பு முடித்துவிட்டு, அந்த வேலைக்குபோயிருக்கலாமே? இதற்கு மூன்று வருஷம் நேர விரயம், பண விரயம் ஏற்படுகிறது.www.alpastrology.com

 நானே டீச்சர் பிரெயினில் முடித்தேன். நான் படிக்கப் போகும் போது, பெரிய பொருள் செலவு இல்லை. ஆனால்,   நான் படித்ததற்க்கும், நான் இருக்கும்  துறைக்கும் சம்பந்தம் இல்லை.

 🙏 திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்:

 எங்களுக்கெல்லாம் நீங்கள் தான் ஆசிரியர், பேராசிரியர்.

 உயர்திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா  அவர்கள்:

 ஆசிரியர்  என்ற விஷயம், எனக்குப்  பிடித்த விஷயம். எனக்கு உபதேசம் பண்ணனும், சொல்லிக் கொடுக்கணும்னு ஆசை. அதே விஷயத்தை, நான் ஜோதிடத்துக்குள் கொண்டு வந்தது ஒரு ஆச்சரியமான விஷயம்.

 கல்விக்கும் வேலைக்கும் ஒரு தொடர்பு இருக்கணும். ஆனா என்ன பண்றாங்க?

 இவங்க கல்விக்கும், இவங்க வேலைக்கும், எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் பிபிஏ படிக்கிறேன். பிசிஏ, எம்பிபிஎஸ் படிக்கிறேன். எம்பிஏ படிக்கிறேன். அதுக்கு பார்த்தீங்கன்னா, வேற ஏதோ ஒரு அட்மின் வேலையை பார்ப்பார்கள்.

 🙏 திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்:

 எனக்கு தெரிஞ்ச ஒரு பையன். அவனுக்கு,பிஸினஸ் பண்ணனும்கிறது தான் ஆசை. எம்சிஏ படிச்சிட்டு, கட்டட வேலைக்கு, சித்தாள் வேலைக்கு போயிட்டு இருக்கான் .

 உயர்திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா  அவர்கள்:

 ஏதோ படிக்க வேண்டுமென்று, வெளிநாடு செல்கின்றோம். வேலை பார்க்கின்றோம். அங்கே சென்று பார்த்தால் தான் தெரிகிறது, பிபிஏ முடித்து விட்டு, ஐந்து வருஷம் முடித்து விட்டு, அவர்கள் வேற ஏதோ ஒரு வேலையில் இருப்பார்கள்.

 கல்லூரி படிப்பு படித்து, சுமார் பத்தாயிரம் பேர் ஒரு வருஷத்துக்கு வெளியில் வருகிறார்கள். எல்லோருக்கும் வேலை எப்படிக் கிடைக்கும்?

 இன்றைக்கு  திறமை இருக்கிறவங்க என்ன பண்றாங்க? ஒரு பத்து சதவீதம், ஒரு ஆயிரம் பேர் வெளியில வராங்கன்னா, ஒரு 100 பேருக்கு   திறமை இருக்கும். அவங்க பொறுப்பாக வேலைக்கு சேர்கின்றனர்.

 படிக்காதவங்க இருக்காங்க பாருங்க, ஏதோ காலேஜ் போய் படிச்சிட்டு, ஒரு சர்டிபிகேட் வாங்க வேண்டுமென்று  நினைச்சிருப்பாங்க. அவங்க 90% பேர், ஒரு மூன்று வருடம், ஐந்து வருடம் கழித்துத் தான், நாம் என்ன தவறு செய்தோம் என்று பத்து வருஷம் கழித்து, தவறை உணர்ந்து, அதன் பிறகு மறுபடியும் படிக்கச்  செல்கின்றனர். அப்புறம் ஒரு வேலைக்கு தேட செல்கின்றனர். அங்கே ஒன்றுமே நடக்காது.

 🌟 திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்:

 படிப்பை தேர்ந்தெடுக்கிறது பற்றி, எந்த வயதில் ஜாதகம் பார்த்தால் சரியாக இருக்கும், சார்.

 நிறைய பேருடைய கேள்வி, ஒரு பத்து வயசுக் குழந்தை எதிர்காலத்தில் என்ன படிப்பான், அப்படின்னு ஜாதகத்தை எடுத்து வந்து கேட்கிறார்கள்.

 பிறந்த குழந்தைக்கு இது.  எதிர்காலத்தில் என்னவாக படிக்க வைக்கலாம்? இப்ப  இருந்தே நாங்க

அதுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அப்படியான அளவுக்கு இருக்கு.

 உயர்திரு.பொதுவுடை மூர்த்தி ஐயா  அவர்கள்.

 10th முடிக்கும் போது, எந்தக் கல்வியை படிக்க வேண்டும் என்று முடிவு பண்ணனும். பத்தாவது முடித்து,  11 வது, 12 வது செல்லும் போது, ஒரு தெளிவான முடிவு இருக்கும்.

 பயாலஜி, கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம், கலைப் பிரிவு, என முடிவு எடுக்க வேண்டும்.

 நிறைய பேருக்கு, 12 வதில், என்ன படிக்கின்றோமோ, டிகிரி, டிப்ளமோ, அடுத்தது என்ன கல்வி படிக்க வைக்க வேண்டுமென, பத்தாவது (10th) படிக்கும் போதே முடிவெடுத்து விட்டோமென்றால் - நல்லது.

 இந்த பையன், இவ்வளவு தூரம் படிப்பான். மதிப்பெண் வரும், வராது என்று ஒரு 14-15 வயதில் அலைன்மென்ட்  சரியாக செய்ய முடியும்.

 உதாரணத்துக்கு 17 வயசு முடிஞ்சு, ஒரு பிஇ மெக்கானிக்கல் அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்துட்டார். அதன் பிறகு சம்பந்தமில்லாம ஏதாவது ஒரு வேலைக்குப் போவார்.

 எனவே ஜோதிடம் மூலம், நாம் முன் கூட்டியே, ஓரளவுக்கு நல்லா படிப்பார்கள், நல்லா படிக்க மாட்டார்கள் என, உங்களுக்கு படிப்பு வரும், படிப்பு வராது, உங்களுக்கு இந்த படிப்பு படிக்க ஆசை இருக்கு, இந்த படிப்பு படிக்க முடியாது, என்று பார்க்கலாம்.

 போன வாரம் சங்கீதத்துல படிக்கணும்னு ஆர்வம் இருக்கு, என்று வந்தார்கள். நீங்க என்ன படித்தாலும்,  அந்த வேலைக்கு போக மாட்டீர்கள் என்று நான் சொல்கிறேன். அவர்கள், கேட்கவேயில்லை.

 🙏 திருமதி சாந்திதேவி ராஜேஷ்குமார்:

 அவங்க நினைக்கின்றதை, ஜோதிடர்களாகிய நாம் சொல்லவேண்டுமென்று, எதிர்பார்க்கிறார்கள். உங்களுடைய பையன் உங்களைப் போல டாக்டராகி விடுவான் என்று கூறினால், மகிழ்ச்சி அடைகின்றனர்.

 உயர்திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா  அவர்கள்:

 அவர்கள் எதிர்பார்ப்பதை சொல்கிறீர்கள் எனில், நீங்கள் தான் சிறந்த ஜோதிடர்.

 ஜாதகத்தில் இருப்பதைத் தான் சொல்ல முடியும். பெற்றோர்கள், குழந்தைகளுக்காக, என் பையனுக்கு இசை பிடிக்கும், என குறுக்கிடுகின்றனர்.

 ‘இசை எனில் மேற்கத்திய இசை படியுங்கள், என்கிறேன். வீணை சம்பந்தப்பட்டது தான் படிக்கப் போகிறேன், என்று பதில் வருகிறது.

வீணைக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை. நீ கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கு. ஆனால் அது சம்பந்தமான வேலை கிடைக்காது என்று சொல்கிறேன்.

 அப்படி ஆச்சரியமான ஒரு விஷயம்,  அவர்கள் நினைத்ததை கடைசி வரைக்கும் சொல்ல வேண்டுமென்ற இடத்துலயே, நம்மை பிடியா பிடித்து நிற்கிறார்கள்.

 அம்மாவும், அப்பாவும், பிள்ளைகளைப்  படிங்க, படிங்க. 1 வதுல இருந்து அது எல்கேஜி யுகேஜி  முதல், 3 வயசுல இருந்து, இந்த 17 வயசு வரை இந்த பசங்க படுகின்ற பாடு இருக்கே, அப்பப்பா.

 🙏 திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்:

 நிறைய ஜாதகம் பார்த்துட்டேன். அப்பா சொல்கின்ற கல்வியை தேர்ந்தெடுக்கின்ற, அத்தனை பிள்ளைகளும் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு தான் இருக்காங்க.

 உயர்திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள்:

 திருமணத்துக்கு எப்படி அம்மா முடிவெடுக்க கூடாது அப்படி என்று சொல்கின்றோமோ, கல்வி படிக்கும் போது குழந்தைகளுக்கு அப்பா முடிவு எடுக்கக் கூடாது. இப்படித் தான் படிக்க வேண்டும், இது தான் படிக்க வேண்டும் என்று அப்பா  வழிகாட்டுவது சரியாக இருக்காது.

 முடிவு எடுக்கக்கூடிய இடத்தில, அம்மா முடிவெடுக்கட்டும். அந்த பையன் முடிவெடுக்கட்டும். பொண்ணு முடிவெடுக்கட்டும்.

 அப்பாவாகிய நான், என் பொண்ணு என்று நீங்கள் முடிவெடுத்தீர்கள் எனில்,  அது ஆபத்தாக தான் முடியும்.

 தன் பொண்ணை எம்பிபிஎஸ் படிக்க வைத்துவிட்டேன் என்று சொல்கிறார் எனில், உங்களுக்கு எம்பிபிஎஸ் என்பது ஒரு பெரிய லெவல்ல இருக்கு. அந்த  பெண், அவர்களாகப் படித்து, அம்மா சொல்கின்றதை சுயமாகப் படித்து இருந்தால், நாசாவில் விஞ்ஞானியாக - உலகத்தை ஆளக்கூடிய பெண்ணாக வந்திருப்பார்.

 நம்ம சுனிதா வில்லியம்ஸ் மாதிரி உலகத்தில் சாதிக்கக்கூடிய ஒரு பெண்ணாக வந்து இருக்கும்.

 விண்வெளியில், 268 நாள் தனியாக ஆய்வுகள் நடத்தி, வேலைகள் செய்து, உலகத்துல மறுபடியும் திரும்பி வந்து, அதுதான் பெரிய ஆச்சரியம்.

 அதாவது உலகத்துல இருந்து செல்வது  பெரிய விஷயம் இல்லை. அங்கே தங்கி, அந்த நிகழ்வுகளை ஆய்வு செய்வது பெரிய விஷயம். மறுபடியும் திரும்பி பூமிக்கு வர வேண்டும் பாருங்க. அதே மாதிரி வாய்ப்பு ஒருவருக்கு மட்டுமே அமையும்

 🙏 திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்:

 இந்த மாதிரி விண்வெளி ஆய்வுகள் எல்லாம் எந்த கிரகம்?

 உயர்திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா, அவர்கள்:

 ராகு தான்..

 ராகு பலமாக வந்து, ராகுவோட நட்சத்திரம் பலமாக செல்லும் போது, நாம் திருவாதிரை நட்சத்திரமோ, சுவாதி நட்சத்திரமோ, சதயம் நட்சத்திரமோ செல்கையில், இந்த ஆய்வு சம்பந்தப்பட்ட கல்விகள் நன்றாக இருக்கும். இந்தக் கல்வியிலேயே, கொஞ்சம் நாட்கள்ல இருக்கக் கூடிய மாறுதல்கள், நீங்க அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்த ராகுவோட பிரம்மாண்டம் படிக்கிறது பெரிய விஷயம்.

 தஞ்சாவூர்ல ஒரு பையன் பைலட் படித்துவிட்டார். மற்றுமொரு நண்பர் விண்வெளி பற்றிய ஆய்வு செய்தார். வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கின்றனர். அந்தக் காலகட்டத்தில் அவசர கதியில் படிக்கின்றனர். ஆர்வத்துல படிக்கின்றனர். அது படித்துவிட்டு மறுபடியும் போய் எங்கேயோ உட்கார்ந்து இருக்கிறார்கள்.

 எனவே தயவு செய்து எல்லோருக்கும் நான் சொல்வது என்னவெனில், கல்வி பற்றி அப்பா தயவுசெய்து முடிவு எடுக்காதீர்கள். நீங்கள்  முடிவெடுத்தீர்கள் எனில், முடிவு எடுத்துட்டு, உங்க பிள்ளையை ஜெயிக்க வைத்தேன் என்று நீங்கள்  நினைத்தீர்களெனில், உண்மையிலேயே உங்க பிள்ளையை - நீங்கதான் தோல்வியடைய வைத்துள்ளீர்கள், என்று அர்த்தம் .

 படிப்பு விஷயத்தில், அம்மா முடிவெடுக்கட்டும். அந்த பொண்ணோ,   பையனோ, முடிவு எடுக்கட்டும்.

 அப்பா வந்து எந்த இடத்திலும் வழிகாட்டலாம். அவர்களுக்கு சப்போர்ட்டா அவனுக்கு என்ன வேணுமோ, வா நான் வாங்கித் தருகிறேன். என்ன வேணுமோ, நான் உன்னை எந்த காலேஜ் பெஸ்ட்டான காலேஜோ, அங்கே நாம் போய் பார்ப்போம், என்று சொல்லலாம்.

 ஆனால் இந்தக் காலேஜ் என்று நீங்கள்  முடிவு செய்தீர்கள் எனில் அது அபத்தமாகத்தான் இருக்கும். இந்த கோர்ஸ் நல்லா இருக்கும்னு அப்பாவாகிய நீங்க முடிவு எடுத்தீர்களெனில், கண்டிப்பாக அப்பா எடுத்த முடிவுகள் அபத்தமாக தான் இருக்கும்.

 பல ஜாதக ஆய்வுகள் பார்த்துத் தான் இதைச் சொல்கிறோம். ஒரு ஆய்வு தளத்துல இறங்கி பேச வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். சிலர் இந்த நட்சத்திரம், இந்த ராசி, இந்த கிரகம், இந்த லக்னம், இந்த லக்னமா சூப்பர், அப்படின்னு சொல்லுவாங்க.

 புதனோட நட்சத்திரம், சூப்பரா படிப்பு வருங்க, என்று சொல்வர். புதன் பலமாய் இருந்து, எத்தனை பேர் படிக்காமல், பேசாமலேயே, எத்தனையோ பேர் சும்மா  இருக்கிறாங்க. பள்ளிக்கூடப் படிப்பை கூடத் தாண்டாது, நிறையப் பேர் இருக்காங்க.

 குருவோட அம்சம் நல்லா இருக்கு, சூப்பரா படிப்பார், சூப்பரா தொழில் பண்ணுவாரு அப்படீன்னு சொல்வாங்க. எட்டாவது தாண்டி இருக்க மாட்டார், ஆனால் தொழில் செய்வார்.

 உலகத்திலிலுள்ள வேஷ்டி நிறுவனங்களில் ஒன்றான, ராமராஜ் வேஷ்டி நிறுவன அதிபர்  திரு.ராமராஜன், அவர் ஒரு இடத்துல,  ஒரு இன்டர்வியூல சொல்லுவார். அவர் படிக்கவே இல்லை. ஆனால் உலகத்துல இருக்கக்கூடிய அத்தனை பேருக்குமே அவர் நிர்வாகத்தைப் பற்றிப் பேசுவார். பணத்தைப் பற்றி பேசுவார். ஆச்சரியமாக இருக்கு பாருங்களேன்.

 படித்தவர்கள் எல்லோருமே சம்பாதிப்பாங்க. படித்தவர்கள்  மட்டும் தான் சம்பாதிப்பாங்க என்ற எண்ணம் உள்ளது. அப்படியெல்லாம் இல்லை.

 சில பேருக்கு புதன் பலமாக இருக்கும். சில பேருக்கு குரு பலமாக இருக்கும். குரு பலம் அடைந்தவர்கள் நல்ல பணத்தை சம்பாதிக்க கூடிய திறமையானவர்களாக இருப்பார்கள்.அவர்கள் பணம் சம்பந்தப்பட்ட கல்விகளைத் தேர்ந்தெடுக்கணும்.

 உதாரணம், பூரட்டாதி நட்சத்திரம், புனர்பூசம் நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம் செல்லும்போது, நீங்க ஆடிட்டிங் சம்பந்தப்பட்டதோ, நிர்வாகம் சம்பந்தப்பட்டதோ, எம்பிஏ சம்பந்தப்பட்டதோ, பிசினஸ் சம்பந்தப்பட்டதோ, நல்லா படிங்க. அது உங்களுக்கு சாதகமாக வரும். அது சம்பந்தப்பட்ட துறைகளில்  நீங்க பயணிக்கலாம்.

 அடுத்தடுத்த காலங்கள், ஒவ்வொரு பத்து  வருடங்களுக்கும், ஒரு 20 அல்லது 30 வருடங்களுக்கும், அந்த குருவோட சம்பந்தம் எப்படி இருக்குன்னு பார்த்துகிட்டு, அதை முடிவு பண்ண முடியும்.

 சில பேருக்கு குரு ஆதிக்கம், 20 வருஷம் இருக்கும். மறுபடியும் வேற ஒரு கல்வி படிப்பார்.

 லாயரா இருப்பார். மறுபடியும் ஆடிட்டிங் முடிச்சு, ஆடிட்டராக வருவார். இப்படியும்,  புதனும் குருவும் சம்பந்தப்பட்டு,  துறையை மாற்றியமைப்பார்கள்.

 🙏 திருமதி சாந்திதேவி ராஜேஷ்குமார்:

 ஒரு கல்வி சம்பந்தப்பட்ட ஒரு கல்வியைத் தேர்ந்தெடுத்து, அதை பிடிக்கவில்லை என, அடுத்த சப்ஜெக்ட் மாற்றுவார்கள்.

 உயர்திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள்:

 கார்த்திகை நட்சத்திரம், மற்றும் மிருகசீரிஷம் நட்சத்திரம் செல்லும் போது, இவர்கள் எப்போது என்ன முடிவெடுக்கிறார்கள் என்று தெரியாது. ஆச்சரியமாக இருக்கும் .

 மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவங்க எல்லாம் பார்த்தீங்கன்னா, ஒரு கல்வியை பாதியில் விட்டுவிட்டு, இந்தக் கல்வி, அந்தக் கல்வி படிக்கலாமா என்று,   ரெண்டு வருஷத்துல, மூணு வருஷத்துல டிஸ்கன்டினியூ ஆகி, அதை மறுபடியும் திருப்பி வந்து படிப்பார்கள். ஒரு 60% பேர், ஒரளவு படித்து நல்லா இருப்பாங்க. ஒரு 40% பேர் வீணா  வருவாங்க. படிக்காமலேயே போயிடுவார்கள். குறிப்பாக பூரட்டாதியில் படிப்பு தடைப்படும் வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.

 எனக்கு ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம் மிருகசீரிஷமா இருக்கு,அப்படின்னு நினைக்காதீங்க. நீங்க ஜென்ம லக்னத்தில் இருந்து, ஜென்ம ராசியில் நினைச்சுக்கிட்டு, என் பிள்ளை மிருகசீரிஷம், என் பிள்ளை வந்து படிக்க மாட்டானா என்று கேட்காதீங்க.

 நாங்கள் சொல்லும் பலன் அட்சயலக்ன பத்ததி ஜோதிடம் ALP மற்றும் ARP பற்றி சொல்கிறோம்.

 நீங்கள் பார்க்கக்கூடிய நட்சத்திரம், ராசி வேறு, ALP ஜோதிடரும், ஜோதிடம் படித்தவர்களுக்கு மட்டும்தான் இது அழகாகப் புரியும் .

 நாங்க  சொல்றதெல்லாம் ALP &  ARP  பத்தி பேசிட்டு இருக்கோம் .

 தடைப்பட்ட கல்விக்கு காரணம், சில பேருக்கு உடல் உபாதைகள் வரலாம். சில பேருக்கு சூழ்நிலைகள். சில பேருக்கு, அப்பா அம்மாவுடைய நிலைகள் பொறுத்து மாறுபடும். வேலை காரணமாக, அப்பா வேற இடம்,  ஊர் மாறிக்கிட்டே இருப்பார். அம்மா சில இடத்தில் வேலை பார்ப்பாங்க. அவங்க மாற்றத்திற்காக இந்த மாதிரி இடம் விட்டு இடம் மாறி இருக்கும் .

 நம்ம ஊர்ல  நிறைய பேர் போராட்டம் ஆன ஒரு வாழ்க்கை வாழ்வோம். இந்த ஊரை விட்டு, இன்னொரு ஊருக்கு போனா மாற்றம் வரும்னு நெனச்சுக்கிட்டு, இடம் விட்டு இடம் மாறும் போது, இந்த குழந்தைகளோட,  பள்ளிக் கல்வி, நிறைய இடத்துல தடைபடும்.

 வறுமையோடு படிக்கக்கூடிய, காசு இல்லாத இடத்தில படிக்கிற மாதிரி,  ஒரு அமைப்பு இருக்கும் .

 🙏 திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்:

 முதல் வருஷம் பணம் கட்டி விட்டு, அடுத்த வருஷம் பணம் கட்ட முடியாத சூழ்நிலைகள் இருக்கும்.

 உயர்திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா  அவர்கள்.

 ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி,  படிப்பென்பது ரொம்ப பெரிய செலவுகள் ஆகவில்லை. இன்றைக்கு பெரும் செலவாக ஆகின்றது. பெரும் செலவு செய்தும், அந்த படிப்புகள் வந்து முழுமையாக்கப்படவில்லை என்பது  தான் இந்த இடத்துல நாங்கள் வைக்கக் கூடிய வாதமாக இருக்கும்.

 எனவே, எதிர்காலத்தை கணிக்கக்  கூடிய ஒரே ஒரு கருவி அல்லது ஒரு மொழி என்னவென்றால் அந்த கடவுளோட மொழி ஜோதிடம் மட்டும்தான்.

 படிக்கிறதுக்கான சூழ்நிலை , குழந்தைகளுக்கு உடலோட அமைப்பு தான் அறிவு கூர்மை, ஞாபகம், மறதி,  இவற்றிற்கு காரணமாக அமைகிறது. சில பேர் புரியவில்லை என்பர். உடல்வாகு காரணமாக புரிதலில் மாற்றம், ஞாபகத்திறனில் மாற்றம் நிகழ்கிறது.

 சில பேர், நிறைய சாப்பிட்டு விட்டு,  தூக்கம் தூக்கமா வரும். படிப்புங்கிற ஞாபகம் வராது. படித்த விஷயங்கள் மறந்து போகும்.

 🙏 திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்:  

 படிக்க கூடிய பிள்ளைகளுக்கு, நீங்க என்ன அறிவுரை சொல்கிறீர்கள்.

 உயர்திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்கள்.

 பிள்ளைகளின் உடல் நலனை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். படிக்கக் கூடிய பிள்ளைகள்,  சாப்பிட மாட்டார்கள். உடல் நலம், பாதிப்படையும். நாம் என்ன சொல்ல விரும்புகிறோம் எனில், பிள்ளைகளோட உடம்பை ரொம்ப கவனமாக கவனித்து,  சரியான நேரத்தில் சாப்பாடு,  உணவுகளைக் கொடுக்க வேண்டும். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள, சொல்ல வேண்டும்.

 நல்லா படிக்கக் கூடிய பிள்ளைகள் பார்த்தீங்கன்னா, சாப்பிடவே மாட்டாங்க. படிக்காத குழந்தைகள்,  நிறைய சாப்பிடுவார்கள். அவர்களுக்கு,  உணவை குறைந்த  அளவு கொடுங்க. பெற்றோரில் யாரேனும் ஒருவர் தனிப்பட்ட கவனம், செலுத்துங்கள். அப்போது தான் படிப்பு மேலோங்கும்.

குறிப்பாக, அம்மா கவனம் செலுத்தணும், அப்படிங்கறதுதான் இந்த நேரத்துல நான் சொல்லக்கூடிய வேண்டுதலாக, இருக்கும்.

 🙏 திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்:

 இன்று, நிறைய விஷயங்கள்,  கல்வியைப் பற்றி பார்த்திருக்கிறோம். இதெல்லாம் அட்சய லக்கன பத்ததி  மூலம், ஒவ்வொரு நட்சத்திர புள்ளிகள் நகரும் போதும், அந்தக்  கல்வியினுடைய தன்மைகளும் நிலைகளும் மாறுமா என்றால் கண்டிப்பாக மாறும். ஆனா, அதுக்காக அவனுடைய அடுத்த அடுத்த கிரக நிலைகளும் அவங்களுக்கு சாதகமாகவே இருந்தால், அவங்க தேர்ந்தெடுக்கிற அந்த ஒரே ஒரு கல்வியிலேயே, அவங்க தொடர்ந்து பயணிக்க கூடிய வாய்ப்புகளை நிறையவே கொடுக்கும்.

 இப்படி  நம்ம அட்சய லக்ன பத்ததியில்,   நான் முடிவெடுக்கின்றதை விட, நான் இன்னொருவரிடம் பார்த்து முடிவு எடுக்கின்றதை விட, எது சிறப்பாக இருக்கும்.

 அந்த ஜாதகத்தை, அந்தக் குழந்தையினுடைய ஜாதகத்தை, நான் புரிந்து கொள்ளும் போது, அதை படிக்கும் போது, இதனுடைய எதிர்காலத்துக்கு, இந்தக் கல்வியை தேர்ந்தெடுத்தால், இத்தனை வருஷத்துக்கு அப்புறம் கல்வி இப்படித்தான், அதனுடைய செயல்பாடுகள் இருக்கப் போகின்றது.  இப்படித்தான், அதனுடைய வருமானம் இருக்கப் போகின்றது, என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் .

 அப்போது, நீங்கள், இன்னொருவரை  நம்பி, என் குழந்தை என்ன படிக்க வேண்டுமென்று நீங்க கேள்வியை கேட்பதற்கு முன்னால், நீங்கள் படித்து விட்டு, நீ இப்படித்தான் வரப்போகிறாய், உனக்கு இப்படித்தான் அமைப்பு இருக்கு. இதை செய்ய வேண்டுமென்று, நீங்கள் சொன்னீர்களென்றால், அதுவே உங்களுடைய பிள்ளைகளுக்கு, ஒரு தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

 அதனால், அட்சய லக்கன பத்ததி ஜோதிடம் படிங்க.

 உங்க பிள்ளைகளுடைய கல்வியின் திறன் எப்படி இருக்கும்னு, நீங்களே பார்த்துக்கோங்க.

 மீண்டும், இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.

 நன்றி.

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology

Phone

+91 9786556156

Address

S.POTHUVUDAIMOORTHY
ALP ILLAM, No.18A Ganesh Nagar(First Right),
Old Perungalathur (NEAR LOTUS POND),
S.V Nagar Post, Chennai - 600063,
Tamil Nadu, India.

Email

alpastrologyoffice@gmail.com

alpastrology.org@gmail.com

Contact Us

© , ALP Astrology Created By Codriveit. All rights reserved