Akshaya Lagna Paddhati

ASTROLOGY

Dr.S.Pothuvudaimoorthy, Ph.D.

2025ல் சனிப் பெயர்ச்சி உண்டா? இல்லையா? | Sani Peyarchi 2025 | ALP Astrology

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை

 

🌟 அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பில், அட்சய இல்லத்தில், 25 மார்ச் 2025 அன்று, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

 

🌟 🏹அட்சய லக்ன பத்ததியின்  தந்தை🙏 வாக்குயோகி 🙏

உயர்திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் - ஜோதிட ஆர்வலர்கள், கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் 👉 https://youtu.be/_4iobWHUIvQ?si=xq3Re9yiot_NGOXe

 

🌟 கலந்துரையாடல் நிகழ்வில் சில துளிகள்…….

 

ஐயா அவர்கள்: 

🌟 ஆன்மீக க்ளிட்ஸ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 🙏 🙏.

 

🌟 ஜோதிடமும் ஆன்மீகமும் ஒன்றுடன் ஒன்று இணைந்த நிகழ்வுகள் 🙏🙏🙏

 

🌟 முதன் முதலாக என் வாழ்க்கையில் ஜோதிடம் என்பது ஒன்பது வயதிலிருந்து ஆரம்பமானது.

 

🌟 தெரிந்தோ தெரியாமலோ, கிரகங்கள் - நட்சத்திரங்கள் - பாவகங்கள், இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பான நிகழ்வுகள் - பிரசன்னம் - சகுனம் - நிமித்தம்- ஆருடம் பற்றிய நிகழ்வுகளை கேட்டு வளர்ந்த சூழல் அமைந்தது.


 

🌟 சகுனத்தை பார்க்கும் பொழுது, என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பல.

 

🌟 என் மாமா ஜோதிடம் பார்க்கையில் - இன்று  மூன்று பேர் வருவார்கள் - அதில்  ஒருவர் நேரத்தை மாற்றி சொல்லுவார் என கூறுவார். 

 

🌟 அப்படியே நிகழும் போது -

இது எப்படி சொன்னார், என்ற எதிர்பார்ப்புகள் - கேள்விகள் - அதிக எதிர்பார்ப்புகளையும், அதிக தூண்டுதல்களையும், எனக்கு ஏற்படுத்தியது.

 

🌟 இன்று நாம் என்னென்ன தேவையோ அதை மட்டும் படித்துக் கொள்கிறோம். ஆனால் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பல.

 

🌟 நிலாவைச் சுற்றி கோட்டை எனில்,  பகலில் மழை, அகலக் கோட்டை எனில் வெறும் மழை, சின்னக் கோட்டை எனில் காற்றும் மழையும், தென்மேற்கிலிருந்து காற்று வரும் என வடகிழக்கு காற்று அடிக்கும் காலத்தில் சொல்வார்கள்.

 

🌟 சிறுவயதில் இருந்தே ஜோதிடத்தை கற்றுக் கொண்டே இருக்கிறேன். எழுதிக் கொண்டு இருக்கிறேன். இதுதான் அட்சய லக்னப் புள்ளியின் ஆரம்பம்.

 

 

🌟 வளரும் லக்னம் என்ற இறைவனுடைய வழியை, என்னை தேர்ந்தெடுத்து கொடுத்து உள்ளதற்கு ஆஞ்சநேயருக்கும், நீம் கரோலி பாபாவிற்கும், என்னை வளர்த்த ஆமை குளத்து அய்யனாருக்கும், என் தாய் பராசக்தி மாரியம்மனுக்கும், என்னை பிறக்க வைத்த 

பொதுவுடையாருக்கும் நன்றி சொல்லி இந்த நிகழ்வை ஆரம்பிக்கிறோம்.

 

🌟 இன்று ஜோதிடம் சம்பந்தப்பட்டதும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதுமான பல கேள்விகளை நம் நண்பர்கள் கூறப்  போகிறார்கள். நான் பதில் சொல்லப் போகிறேன்.

 

🌟 மிக முக்கியமாக, ஜோதிடத்தில் ஒரு கலந்துரையாடல் தேவை. நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும். எது தேவை, எது தேவையில்லை, என அறிவு பூர்வமாகவும், 

அறிவியல் பூர்வமாகவும், கணித பூர்வமாகவும், ஆயிரம் கேள்விகளுக்கு இந்த நிகழ்வு ஒரு பதிலைத் தரும் என நம்புகிறேன்.

 

🌟 முதல் கேள்வி கேட்டவர்: திரு. சிவானந்தம் :

 

🌟 சனி பெயர்ச்சி, இந்த வருடம்

உள்ளதா? இல்லையா?

 

 

🌟 ஐயாவின் விளக்கம்:

 

🌟 இந்த சனி பெயர்ச்சி பெரிய மாற்றத்தை 2025- 2026 ஏற்படுத்தப் போகின்றது. இந்த சனி பெயர்ச்சியின் தாக்கம் பற்றி பார்ப்போம்.

 

🌟 சில நேரங்களில், சில பெயர்ச்சிகள் ஆனது வக்ர கதியாகவும், ஸ்தம்பனமாகவும், அதிசாரமாகவும் இருக்கும் போது, வக்ர நிவர்த்திக்கான நேரம் மாறுபடுகிறது .

 

🌟 இந்த நேரம வித்தியாசமே, திருக்கணிதம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தில் வேறுபட்டு இருக்கும்.

 

🌟 திருக்கணிதமா அல்லது வாக்கிய பஞ்சாங்கமா, என்பதே ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.

 

இந்த இரு நிகழ்வுகளுமே உண்மைதான்.

 

🌟 திருக்கணிதமும் உண்மை. வாக்கியமும் உண்மை.

 

🌟 திருக்கணிதத்தை பின்பற்றுகிறோம், ஏனென்றால் இதை ஒரு சாப்ட்வேரில், கிரக நகர்வுகளின் அறிவியல் பூர்வ கணித முறையில்  பதிவு செய்கிறோம்.

 

🌟 வாக்கியம் என்பது அந்தக் காலத்தில் சித்தர்கள் பாடிய, எழுதி வைத்தது. வான்வெளி கிரக பெயர்ச்சியானது,  மக்களுக்கு எப்பொழுது பயன்படுகிறது, 

எப்படிப் பயன்படுகிறது, என்ற தாக்கங்களை வைத்து, ஒலி ஒளியின் நிகழ்வுகளை பொறுத்துதான் இந்த பெயர்ச்சிகள் நடக்கிறது, என்பர்.

வானத்தில் நடக்கக்கூடிய பெயர்ச்சிகள் ஒன்று மனிதனில் ஏற்படும் மாற்றங்கள் என்று கணக்கிடுவது.

 

 

🌟 வாக்கிய பஞ்சாங்கம் ஆனது, கோவில்களுக்கு, கோவில் நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள்,  பற்றி முடிவு எடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

 

🌟 இங்கிருந்து நான் ஒரு பந்தை வீசி விட்டேன். நான் வீசியது உண்மை.  ஆனால், நீங்கள் அதனை வாங்கவில்லை என்கிறீர்கள். கையில் வாங்கவில்லை என்பது உண்மை. இந்த இடைவெளி, ஒரு வருடத்தில் இருந்து 15 நாட்கள் வரை இருக்கும்.

 

🌟 29.3.2025ல் தான் சனிப் பெயர்ச்சி.

அதில், எந்த மாற்றமும் இல்லை.

 

🌟 ஐந்திறன் கணித முறைகள் என்று ஓர் அமைப்பு உள்ளது. அவர்களே பஞ்சாங்கத்தை வெளியிடுவர்.

 

🌟 ஜூலை 13, 2025 முதல்  நவம்பர் 28  2025 வரை உள்ள காலத்தில் மீனத்தில் உள்ள சனி பகவான் வக்ர கதியாக பின்னோக்கி கும்பத்துக்கு வருகிறார்.

 

🌟 இந்த கும்பத்துக்கு வருகின்ற சனி பகவான், மறுபடியும் மீனத்திற்கு செல்லும் பொழுது, மறுபடியும் கும்பத்திலேயே ஸ்தம்பனம் ஆகிறார். 

 

🌟 முன்னோக்கி, பின்னோக்கி நகர வேண்டும். நகராமல் அப்படியே இருப்பது ஸ்தம்பனம் .

 

🌟 நகராமல் நிற்கும் போது எப்படி இருக்கும் என்றால், சனி பகவானின்  சுழற்சியில், நேரம் மாறுதல் ஏற்படுகிறது. 

 

🌟 வக்ர நிவர்த்தியாகும் காலம் வேறுபாடு ஏற்படுகிறது.

 

🌟 சனி பெயர்ச்சி 2025 மார்ச் 29, மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும்.

 

🌟 அடுத்த கேள்வி, அடுத்த பதிவில்!!!

 

🌟 அட்சயம் வளரும் !!!

 

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology

Phone

+91 9786556156

Address

S.POTHUVUDAIMOORTHY
ALP ILLAM, No.18A Ganesh Nagar(First Right),
Old Perungalathur (NEAR LOTUS POND),
S.V Nagar Post, Chennai - 600063,
Tamil Nadu, India.

Email

alpastrologyoffice@gmail.com

alpastrology.org@gmail.com

Contact Us

© , ALP Astrology Created By Codriveit. All rights reserved