அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். குழந்தையின்மை என்ற கேள்வி இன்று மக்கள் பெரும்பாலும் ஜாதகம் பார்க்கிறார்கள். இதற்கு அடிப்படையான காரணம் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வில்லை என்பதுதான். உடலையும் மனதையும் கெடுத்து நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோஷம் ஆரோக்கியம் மறந்து ஏதோ ஒரு இயந்திர வாழ்க்கையில் பயணிக்கிறோம். பெண்கள் கோலம் ஏன் போடுகிறார்கள் என்றால் குனிந்து கோலம் போடுவதால் கர்ப்பப்பை அதனுடைய தன்மையை பாதுகாக்கும். குழந்தை இல்லை என்றால் கண்டிப்பாக பெண்கள் கோலம் போட வேண்டும். காலையில் எழுந்து கோலம் போடும் பொழுது உடல் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். குழந்தை இல்லை என்ற விஷயத்திற்கு குரு பகவான் பலமாக இருக்க வேண்டும். 5ம் வீடு குழந்தை. 5ம் வீடு முக்கியமாக இருக்க வேண்டும். குருபகவான் முக்கியமாக இருக்க வேண்டும். கண்டிப்பாக அந்த வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான நிலை உண்டு. ஆனால் அட்சய லக்னத்தில் 5ம் பாவக நட்சத்திர புள்ளியும், 5ம் பாவக அதிபதியும் எங்கு இருக்கு என்பதை பார்க்க வேண்டும். பொதுவாக குரு பகவான் நீசம் ஆனால் குழந்தைகள் மூலமாக தொந்தரவு வரும். குழந்தைகள் மூலமாக ஒரு யோகத்தைக் கொடுக்க முடியாது. கண்டிப்பாக குரு பகவான் பலமாக அமைந்தால்தான் வாழ்க்கையில் வழிகாட்டுதல் யோகமாக அமையும். குரு நீசமானால், குரு 6 ,8 , 10, 12 ல் இருந்தால் கண்டிப்பாக யோகத்தை கொடுக்காது. குருபகவான் நீசமானால் சொல்வதை கேட்க மாட்டார்கள். நன்றி.
#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்
#ஜோதிடம்
#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்
#அட்சய_லக்ன_பத்ததி_pdf
#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156