ஜாதகத்தில் தொழிலை பற்றி பார்க்கலாம்

அனைவருக்கும் வணக்கம்,

இந்த ஜாதகத்தில் தொழிலை பற்றி பார்க்கலாம் ஜாதகருக்கு வயது 40 முடிந்து 10 மாதம் ஆகுது, லக்னம் ரிஷபலக்னத்துல பிறந்திருக்காரு. இன்றைக்கு இவருடை அட்சயலக்னம் கன்னிலக்கனம். உத்திரம் நட்சத்திரம் இப்ப தான் ஆரம்பமாயிருக்கு. இதற்கு முன்னாடி சிம்மலக்கனம் அட்சய லக்கனமாக செல்லும் பொழுது லக்னாதிபதி 10 வருடத்தை இயக்கக்கூடியது சூரியன், சூரியன் எங்க இருக்குனா 2-ம் இடத்துல. லக்னாதிபதி 2 – ல குடும்பத்துக்கு வருமானம் சார்ந்த விஷயங்கள் நல்லா இருக்கும் தொழில் பார்க்கும்பொழுது 10-ம் அதிபதி சுக்ரன். லக்னாதிபதியும் 2ம் இடத்துல சுக்ரன் 2ம் இடத்துல வருமானம் உண்டு, ஆனால் சுக்ரன் அமைப்பு அஸ்தம் நட்சத்திரம் சந்திரனுடையசாரத்தில் இருக்காரு.லக்னத்தில் மூன்று நட்சத்தி பாதங்கள் இயங்கிருக்கும் , மகம் நட்சத்திரம் வரும் பொழுது

இந்த காலகட்டத்தில் மகம் கேதுவுடைய நட்சத்திரம், இந்த லக்கனத்திற்கு 7-ம்இடத்துல இருக்காரு. 7-ம் இடத்தின அதிபதி சனிஸ்வரன் லக்னத்துல இருக்காரு இந்த காலகட்டத்துலகுடும்பத்தில் பிரச்சினைகள் உண்டாகிருக்கும் என்ன காரணம்னா மகம் நட்சத்திரம் சூரியனுக்கு 6 -ம் இடத்துல கேதுவுக்கு 8-ம் இடத்துல.4 – வருடம் 5 – மாதம் காலங்கள் சூரியன் – கேது இணைவு என்னவென்றால சஷ்டாஸ்டகம். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகும். இதற்கு அடுத்து பூரம் நட்சத்திரம், இது சுக்ரனுடைய நட்சத்திரம். இந்த சுக்கிரனுடைய நட்சத்திரகால கட்டங்களில் 10-ம் அதிபதி 3ம் அதிபதி, தொழில் ஜாதகருடைய முயற்சியால் அமைந்திருக்கும். சுக்ரன் 10-ம்இடம் சம்மந்தப்படும் பொழுது ஜாதகர் வண்டி வாகன தொழிலை ஆரம்பித்திருப்பார். விரயாதிபதி சாரத்தை வாங்கியதால் விரயம் ஏற்பட்டிருக்கும். இந்த ஜாதகத்தில் இன்னொரு தன்மையை ஆய்வு பன்னுபொழுது இந்த லக்னத்தில் எப்படி இருந்திருப்பாரு, இந்த லக்கனத்தில் குரு ,சந்திரன் ,ராகு, சனி 5 ,8க்கு அதிபதி குரு, அவர் லக்கனத்திலேயே இருக்காரு. 12 க்கு அதிபதியான சந்திரன் லக்னத்திலேயே இருக்காரு, 6, 7க்கு அதிபதியான சனி லக்னத்திலேயே இருக்கு, ராகு லக்னத்திலயே இருக்கு,சனி சந்திரன் ராகு என்பது ஒரு மதிமயக்கம்.இந்த காலகட்டங்களில் ஜாதகர் சுய சாரம் வாங்கி இருக்கிறார்ஆனால் இந்த லக்னத்தில் அட்டமாதிபதி லக்னத்திலேயே ,ஆறாம் அதிபதியும் லக்னத்திலேயே விரையாதிபதி லக்னத்திலேயே,அப்ப லக்னத்தில் 6 8 12 தொடர்பு உள்ளதால் ஜாதகர் சிறப்பாக இல்லை.விரயாதிபதியான சனி சந்திரன் ராகு சேர்க்கை மதி மயக்கத்தைக் உண்டாக்கும்.பன்னிரண்டாம் அதிபதி சனி சந்திரன் நீர் சம்பந்தப்பட்டது அதனால் மதி மயக்கம்உண்டாகும்.அதாவது குடிபோதைக்கு அடிமையாவார்.விரையாதிபதி சம்பந்தப்பட்ட தொழில் ஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்சம் பெறுவதால் நீச்சபங்க ராஜயோகத்தை அடைந்ததால் நீச்ச பங்கம் அவருக்கு வேலை கொடுத்திருக்கும்.குடும்பத்திற்கு பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும்இப்பொழுது கன்னி லக்னம் இந்த காலகட்டத்தில் முதல் மூன்று வருடம் நான்கு மாத கால கட்டங்கள் உத்திர நட்சத்திரத்தில் லக்ன புள்ளி செல்லும்.உத்திர நட்சத்திர அதிபதி சூரியன் விரையாதிபதியும் ஆதிபத்யம் வாங்கிஇருப்பதால் மூன்று வருடம் நான்கு மாத கால கட்டங்கள் விரையம் ஆகத்தான் இருக்கும்.ஆனால் இந்த கன்னி லக்கினத்தில் புதன் பலமாக உச்சம் பெற்றிருப்பதால்எதிர்பாராத யோகம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.லக்னத்தோடு நீச்சபங்க ராஜயோகத்தின் கிரகங்கள் செயல்படும்போது நீச்சபங்க ராஜயோகம் அவர்களுக்கு உருவாகும்.இந்த லக்னத்தில் விரை யாதிபதியான சூரியன், லக்னாதிபதியும் இருக்காரு இரண்டுக்கும் 9-க்கு அதிபதியாக சுக்ரனும் இதில் இருக்காரு,விரையாதிபதி இருப்பதனால ஜாதகர் வெளிநாட்டில் வேலை பார்த்தார் இந்த குடும்பத்திற்குவிரயம் இருக்காது.குடும்பத்தின் அதிபதி லக்னத்தில் இருப்பதால் விரயம் உண்டாகும் சூழ்நிலை உருவாகும்.பத்து வருஷம் யோகத்தைக் கொடுக்கும் ஆனால் பத்து வருஷம் யோகமாக அமையும் னா? அமையாது.லாபாதிபதி இந்த லக்னத்திற்கு 12இல் விரயத்தில் உள்ளார். அதனால் வெளியூர் வெளியிடம் வெளிமாநிலம் போனால்தான் இவருக்கு யோகம்.அடுத்த ஜாதகத்தில் பார்க்கும்வரை நன்றி வணக்கம்.

கேள்விகள் என்ன, குறிகோள் என்ன, இலக்குகள் என்ன

அனைவருக்கும் வணக்கம்,

ஒவ்வொரு ஜாதகமும் எதற்கு பார்க்கிறோம்னா இந்த அட்சய லக்ன பத்ததில நிறைய விஷயங்களை ஆய்வு செய்யணும். இதற்கான மென்பொருளை கூகுளில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
இன்றைக்கு லக்கனம், அட்சய லக்னப்புள்ளி , தசாபுத்தி பார்த்தாலே போதும். அட்சயலக்னபுள்ளி பார்தாலே போதும் ஜாதகருடைய கேள்விகளுக்கு பதில்களை உணரமுடியும். ஜாதகம் ஆய்வு பண்ணும்போது கேள்வி என்ன என்பதை கேட்டுட்டே பதில் சொல்லலாம். கேள்வி என்னனு கேட்டுட்டு பதில் சொன்ன நம்மதெளிவான பதில்களை கூற முடியும். அட்சய லக்ன பத்ததியில் நம்முடைய கேள்விகள் என்ன, குறிகோள் என்ன, இலக்குகள் என்ன என்பது நம்முடைய வாழ்கையில் மிக முக்கியமான விஷயம். ஜோதிடர்கள் வந்திருக்க கூடிய கேள்வி என்ன?ஜாதகத்துக்கு ஒத்துப்போகுதா?உண்மையிலே இந்த கேள்விகளுக்கு பதில் சரியானதா? என்பதை உணர முடியும்.இந்த ஜாதகர் குழந்தைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு வந்திருக்காரான்னு பார்போம். இந்த ஜாதகர் 4 ம் வீட்டுல போகுது.இப்ப 4-ம் வீட்ல சுபம், சொத்து ,வாகனம், வண்டி, கேள்விகள் சம்மந்தப்பட்டது. ஆனால் நட்சத்திரம் பார்திங்கனா இந்த ஜாதகருடைய லக்னாதிபதி அட்டமத்துல இருக்காரு அதனால் வதை பட வேண்டும். அவரே காரணம், இந்த லக்னத்தின் அதிபதி ஜென்மலக்கனம் 2, 5, 8,11அட்சய லக்ன பத்ததி 2,5,8, 11-ல அட்டமத்துல இருக்கும்பொழுது இந்த ஜாதகர்அனுபவிக்க வேண்டிய விஷயங்களை அனுபவிக்கிறார். 10 வருட காலங்கள் ஜாதகருக்கு பிரச்சனை உண்டு. விசாக நட்சத்திரம் இந்த லக்னத்திற்கு 3, 6க்கு அதிபத்தியம் ஆகிறார். 3-முயற்சி 6-கடன்.அப்ப கடன்,வம்பு, வழக்கு,நோய் நொடியை பெறக்கூடியகாலங்கள். யாருக்குன்னா குரு. அப்படினா குழந்தைகளுக்காக, 5-ம் வீட்டுக்கு அதிபதி சனிபகவான் 11இந்த லக்னத்துக்கு பலமா இருக்காரு. ஆனால் இந்த லக்கனத்துக்கு 5-ம் வீட்டுல கும்பத்துல ராகு இருக்கு அதனால குழந்தைகளுக்கு பிரச்சினை உண்டு. அடுத்து 10-ம் வீட்டுஅதிபதி 12ல் இருக்கு. அதனால், ஜாதகருக்கு குழந்தைகள் பிரச்சனை உண்டு. 5- இந்த முதல்குழந்தைக்கு 10-ம் அதிபதி அட்டமத்துல சந்திரன். குருபகவான் பலமாஇருக்காரு. இப்ப விசாகம் நட்சத்திர 2-ம்பாதம் ஜாதகர் வதை பட வேண்டும். முதல் குழந்தையால் இந்த ஜாதகருக்கு தேவையில்லாத உடல் உபாதைகள் உண்டா? உண்டு. இந்த ஜாதகருக்கு விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதக்திற்குள்ள ஒரு குழந்தை உண்டாகணும்.இந்த லக்கனம் முடிந்து 5-ம் அதிபதியாருனா குரு பகவான் 6-ம் வீட்டுக்கு போய்டுவாரு. விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் ஜாதகர் கடன்பட வேண்டும் ,வதைபட வேண்டும்’ மருத்துவ செலவுகள் செய்யவேண்டும். குழந்தைகளை பெற்றெடுத்துக் கொள்ள வேண்டும். விசாகம் 3-ம் பாதத்துக்குள்.இல்லைன எட்டுகுடிமுருகன் கோவில்ல போய் சரணாகதிஅடைந்து குழந்தைகளை பெற்றெடுத்து கொள்ளலாம். குழந்ததை பாக்கியம் பெரிய அளவில் கிடையாது. விசாகம் 3ம்பாதம் யோகத்தை தரக்கூடி காலமாகும். அடுத்த நிகழ்வில் சந்திப்போம்.

முன் ஜென்மஜாதகம். நிகழ்காலத்தில் இவர் வாழ்ந்திட்டு இருக்காரு

அனைவருக்கும் வணக்கம்,

இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும்பெறவேண்டும்.

அட்சய லக்ன பத்ததில அடுத்தகட்ட நிகழ்வு நோக்கி பயணிக்கிறோம்
இங்க பார்கக்கூடிய ஜாதகம் ஒரு முக்கியமான ஜாதகம் , ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒருவலிமை உண்டு. நிகழ்காலத்தில் இருக்கக்கூடிய ஒரு நபருடைய ஜாதகம் ஆனால் போன ஜென்ம ஜாதகம்.
இந்த ஜாதகருடைய வலிமையை பாருங்களேன். இப்ப சுவாதி நட்சத்திரம் ஆரம்பமாயிருக்கு. இதற்கு முன்னாடி சித்திரை நட்சத்திரம் 1,2. 2க்கும் 7 க்கும் உடையவன் 5 -ல் இருக்காரு செவ்வாய், அப்பவும் இந்த ஜாதகர் பலமாக இருந்திருக்காரு .அடுத்தது அஸ்தம் நட்சத்திரம் 11ம் வீடு 11-லஇருத்திருக்காரு அப்பவும் இந்த ஜாதகர் நல்லா இருந்திருக்காரு.உத்திரம் நட்சத்திரம் 4-ம் பாதம் அதுலயும் நல்லா இருந்திருக்காரு விரையாதிபதியா 4-ல் இருந்திருக்காரு’ அதன் பிறகு உத்திரம் நட்சத்திரம் 1,2,3,4 பாத்திங்கனா 1 – 5ல இருந்திருக்காரு 2,3,4- 4 ல் இருந்திருக்காரு.
அடுத்து வரக்கூடியது பூரம் நட்சத்திரம் 1, 2, 3, 4 இருந்திருக்கு. பூர நட்சத்திற்கு முன்னாடி கேதுவோட நட்சத்திரம் 10 – ல இருந்திருக்கு இந்த ஜாதகர்எப்படி இவ்வளவு வலிமையான ஜாதகர் ,நிகழ்காலத்தில் மிகப்பெரிய வலிமை பெற்ற ஒரு நபரா இருக்காரே ,எப்படி இவருக்கு ஒரு வாய்பு கொடுத்திருக்கும். அவருடைய ஜாதகத்திலே வாய்ப்பு இருக்கும். ஆனால் இந்த ஜாதகத்தில் எப்படி இவருக்கு ஒரு வாய்ப்புனு ஆய்வு செய்யும் போதுதான் என்னால் உணரமுடிஞ்சது. யார் என்பதை வரக்கூடிய அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இந்த ஜாதகரை பத்தின நிகழ்வுகளை விவரிக்கிறேன். போன ஜென்மத்தில் இந்த ஜாதகர் முன் ஜென்மஜாதகம். நிகழ்காலத்தில் இவர் வாழ்ந்திட்டு இருக்காரு தமிழ்நாட்டில் இல்ல, இந்தியாவில் இல்ல மிகப் பெரிய ஒரு மனிதரா இருக்கக்கூடிய ஒரு நபர். நல்லது கெட்டது அவருடைய
சுயவாழ்க்கைஅவருடைய பேர் புகழ் பற்றி நிறைய விஷயங்கள இருக்கும், இந்த லக்னத்தின் 10-ம் அதிபதி பலமா இருக்கு, லக்னத்தின் 11-ம் அதிபதி 3-ம்வீட்டுலஇருக்கு.அப்ப9-ம் அதிபதி 3-ம் வீட்டுல இருக்கு இரண்டாம் இடத்தில் சுக்ரன் ராகு இருக்கு இதனால் பொன், பொருள், நகை, நட்டு எல்லாமே சேர்க்கை உண்டு. 2ம் அதிபதி 5-ம் வீட்டுல இருக்கும் அவருடைய வாக்குவன்மைகள், பேர் புகழ் எல்லாமே பலமாக இருக்கும்.
இந்த ஜாதகருடைய நிகழ்வுகள் ,இது எப்படி இயங்குவது இந்த ஜாதகருக்கு அட்டமத்துல ராகு இருக்கு அதனால் பிரச்சனைகள் வரும். இது எவ்வளவு வலிமையான ஜாதகம் என்பதைஅக்டோபர் மாதம் முதல் வாரத்தில் விவரிக்கிறேன். இந்த ஜாதகருக்கு லக்னாதிபதி 2ல்,அட்ட மதிபதி-2ல் ராகுவோட சேர்க்கை உண்டு.2-ம் அதிபதி 5ல் , 7ம் அதிபதி 5ல் , 3ம் அதிபதி 4 ல், 7ம் அதிபதி 4ல், 3- வீட்டுல பாத்திங்கன 11-ம் அதிபதி 3ல் ,9ம் அதிபதி 3ல் விரையாதிபதி 3ல் இந்த லக்கனத்திற்கு 6ல் போய் உட்கார் திருக்காரு. போராட்டமான வாழ்கை தான். 7ம்அதிபதி செவ்வாய் 5 ல இருக்கு, 10ம்அதிபதி 10 -ல இருக்கு
இவர் எது செஞ்சாலும் அவருடைய கர்மத்தை பொருத்தது. 11-ம் அதிபதி 3ல்,12-ம் அதிபதி 3-ல் இனால் இவருக்கு பேர், புகழ், சொத்து அதிகாரம், செல்வாக்கு எல்லாமே உண்டு எதற்காக சொல்கிறேன் என்றால் ஒரு ஜாதகத்துடையமுன்வினை கர்மம் எப்படி இயங்குகிறது. இந்த கேள்விகளுக்கெல்லாம்அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இந்த நிகழ்வுகளை விவரிக்கிறேன், மீண்டும் ஒரு இனிய நிகழ்வில் சந்திப்போம்.

ஐந்து நிமிடத்தில் ஜாதகத்தை ஆய்வு செய்வது.

அனைவருக்கும் வணக்கம்

ஐந்து நிமிடத்தில் ஜாதகத்தை ஆய்வு செய்வது.

இன்றைக்கு ஜாதகருடைய லக்னம் கன்னி லக்னம் தற்சமயம் அக்ஷய லக்னம் மூல நட்சத்திரம் மூன்றாவது பாதம்.தனுசு லக்னத்தை ஏற்கக்கூடிய 10 வருஷ அதிபதி குருபகவான்பாக்கியாதிபதியாக லக்னத்தில் உள்ளார் .பாக்கியாதிபதியான சூரியன் லக்னத்தில் உள்ளார். பஞ்சம் அதிபதியான செவ்வாய் ,விரயாதிபதியான செவ்வாய், அட்டமதிபதியானசந்திரன் லக்னத்தில் உள்ளார். 7,10க்குஅதிபதியான புதன் லக்னத்தில் உள்ளார். அங்கே ராகுவும் உள்ளது.ஜாதகருடைய பத்து வருட பலன்கள் எப்படி இருக்கும் அப்படினா ஜாதகர் பாக்கியத்திற்கு நல்ல இடத்தில் உள்ளார்.ஆனால் ஜாதகரை சுற்றி சூரியன் ,செவ்வாய், புதன் ,சந்திரன், ராகு இவரை இந்த ஐந்து பேரும் இயக்குகிறாங்க.ஜாதகருடைய தனிப்பட்ட முறையில் அவருடைய அமைப்பு நல்ல நிலையில் உள்ளது.சனி பலமாகஇருப்பதால் வருமானத்தில்பிரச்சனைகள் இல்லை.தொழில் ஸ்தானத்தின் அதிபதி லக்னத்தில் உள்ளார். தொழில் பிரச்சினைகளும் இல்லை.அட்டம் அதிபதியான சந்திரன் லக்னத்தில் உள்ளார் .நாலாம் இடத்தின் அதிபதி குரு,குரு 4 க்கு ஆறாம் இடத்தில் உள்ளார்.இந்த ஜாதகத்தில் சந்திரன் காரகத்துவத்தையும் பார்க்கணும் பாகதத்துவத்தையும் பார்க்கவும்.நான்காம் இடமான பாகதத்துவத்துக்குஅதிபதியான கிரகம் ஜாதகருக்கு நல்லா இருக்கும் .ஆனால் 4 க்கு ஆறாம் இடத்தில் உள்ளது.இந்த சந்திரன் அட்டம் அதிபதியாக உள்ளார். இந்த ஜாதகருக்கும் அம்மாவுக்கும்கொஞ்சம் மனஸ்தாபங்கள் ஏற்படும் சூழ்நிலைஉண்டு. 7க்கும் 10க்கும் அதிபதியான புதன் ,அடுத்து இந்த ஜாதகரை மனைவி இயக்குறாங்க.பூர்வ புண்ணியம் ஐந்து 12-க்கு அதிபதியான செவ்வாய் இருக்கும், பூர்வபுண்ணிய தன்மைஇவரை இயக்குகிறது இந்த கிரகங்களின் கூட்டு அவரை இயக்குகிறது ஐந்தாம் இடத்தின் அதிபதி லக்னத்தில் உள்ளார் தேவை இல்லாத மன சஞ்சலங்கள் உருவாகும் அவரை 12 க்கு அதிபதியாகி கிரக சேர்க்கை தன்மைகள் அவருக்கு சில சஞ்சலங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் இருக்கும்.ஜாதகருக்கு சஞ்சலமான சஞ்சலம் தேவையில்லாத எண்ணங்கள் , சிந்தனைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை இந்த காலகட்டங்களில் கொடுகும். மூல நட்சத்திரம் மூன்றாவது பாதம் என்பது கேதுடைய நட்சத்திரம். கேதுக்கு அதிபத்திய வீடுகள் கிடையாது. ராகு கேது வரும் பொழுது நிற்கக் கூடிய இடத்தை பலமாக எடுத்துக்கனும். மூல நட்சத்திரத்தின் அதிபதி கேது.கேது 7ஆம் இடத்தில் உள்ளார் .கேதுவுக்கும் குருவுக்கும் உள்ள சம்பந்தம் எப்படி இருக்கும் .கேது 7ல் நல்லா இருக்காரு, ஆனால் லக்னத்துக்கு அதிபதியாக குரு 11-ஆம் இடத்தில் உள்ளார்.கேது உடைய நட்சத்திரம் வர காலகட்டங்களில் 4 வருடம் ஐந்துமாத காலங்கள் எப்படி இருக்கும்னா,கேது 7ம் இடத்தில் உள்ளதால் மனைவி ரீதியான சில பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும் .ஆனால் ஜாதகருக்கு பிரச்சனை இல்லை. மூல நட்சத்திரம் 3ஆம் பாதம் லக்னத்திற்கு 7-ம் வீட்டு லக்னத்தை தொடும் பொழுது 1,4,7 சம்பந்தப்படும்போது எதிர்பார்த்த யோகங்கள் தரும்.
7-ம் இடத்தை லக்னப்புள்ளி தொடக் கூடியக்காலகட்டத்தில் இவருக்கு சுப பலன் களுக்கான வாய்ப்புகள் உள்ளது .இடம், வீடு ,வண்டி ,வாகனங்கள் வாங்கலாம்பாக்கியத்தில் குரு இருப்பதால் எதிர்காலத்தில் லாபமாக நினைக்கக்கூடிய எந்த விஷயங்களாக இருந்தாலும் மூல நட்சத்திரம் மூன்றாவது புள்ளி காலகட்டங்களில் மட்டும் இதை பயன்படுத்தலாம்.
அடுத்து வரக்கூடிய 4-வது புள்ளிஅட்டம ஸ்தானத்தில் வரும்.லக்னத்திற்கு எட்டாம் இடத்தை தொட்டுச்செல்லும் எட்டாம் அதிபதி கேது சந்திரன் பார்வை வரும் அப்பொழுது பிரச்சனைகள் மன சங்கடங்கள் இன்னும் அதிகமான சூழ்நிலை உருவாகும் மன உளைச்சல் அதிகமாகும்.
மூல நட்சத்திரம் 4 – வது பாதம் கவனமாக கடக்கக்கூடிய காலகட்டம். லக்க ததை இயக்கக்கூடிய 10வருஷத்தின்அதிபதி பலமாக இருக்கும். இதில் உள் சூட்சமமாக இயங்கக்கூடிய கேது ,சுக்கிரன், சூரியன் இந்த பத்து வருசத்தை எப்படி அனுபவிக்க போகிறார் என்பதை குறியிட்டு காமிக்கும். கேது ஓரளவுக்கு பரவாயில்லை. சுக்கிரன் 6-ம் 11 ம் இடத்திற்கு அதிபதியாகி அவர் 12ம் இடத்துல் உள்ளார்.இது கடன்பட கூடிய காலமாக அமையும். பூராட நட்சத்திரம் லக்கன புள்ளி வரக்கூடிய காலகட்டத்தில் இவருடைய ஜாதகத்தில் 6, 11 க்கு அதிபதி சுக்கிரன் போய் 12 ம் வீட்டில் உள்ளார்.12-ல் உள்ளதுசிறப்பு, அதற்காக கடன் வாங்கி லாபத்தை அடைவதற்கு விரயம் பண்ணுவதற்கான சூழ்நிலை உருவாகும். ஜாதகர் செலவு பண்ணக்கூடியசூழ்நிலையை கொடுக்கும்.

 

முன் ஜென்ம ஜாதகம் இருக்கும்

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களையும் பெற வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான சந்தோஷங்கள், நல்லது கெட்டது, மகிழ்ச்சி, இன்பம் , துன்பம்இது எல்லாம் கிரகங்களின் அமைப்பு.அட்சய லக்ன பத்ததி யில் என்னுடைய அடுத்த கட்ட ஆய்வுகள் என்ன??இப்பொழுது உள்ள ஜாதகருடைய முன்ஜென்ம ஜாதாக அமைப்புகள் பற்றிதான் என்னுடைய ஆய்வுகள்.இந்த ஜாதகத்தை உடைய தொடர் நிகழ்வுகளை நான் உருவாக்கி இருக்கேன்.சில ஜாதகர்களுக்கு யோகமான ஜாதகமாக பார்த்திருப்போம். ஆனால் உண்மையில்அந்த ஜாதகர் எப்பொழுதும் வறுமையிலும் துன்பத்திலும்,நோய்நொடி யான வாழ்க்கை நடத்துவர்.ஆனா ஒண்ணுமே இல்லாத ஜாதகம் அதாவது அவர் கோடான கோடி வாழ்க்கை வாழ்வார்,இதைப் பற்றி ஆய்வு பண்ணும் போதுதான் கண்டிப்பாக இதற்கு முன் ஜென்ம ஜாதகம் இருக்கும் அதை ஆய்வு பண்ண முடிவு செய்தேன்.அந்த ஜாதகத்திற்கும் இந்த ஜாதகத்திற்க்கும் இன்றைக்கு உள்ள தொடர்பு எப்படி இருக்கும்னா?ஒரு நண்பர் வந்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்காது அந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன?என்பதை உணரும் பொழுது அதிர்ச்சியும் பேரின்பமும் ஒரு பயம் எனக்குஉருவானது. வெளியிட முடியாத சூழ்நிலையில இருக்கேன் அதை வெளியிடும்பொழுது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.
ஒரு ஜாதகர் மீன லக்னம்,மீன லக்கனத்தில் 2 ,5,8 ,11 சம்பந்தப்படும்போது சுய கர்மா இயங்கும் சுய கர்மா என்பது நான் செய்த யோகங்கள் அவயோகங்களையும் குறிக்கும்.உண்மையாவே இயங்குதா னு ஆய்வு பண்ணும்போதுஅந்த ஜாதகத்தை எடுத்து பார்க்கும் பொழுது இரண்டாம் வீட்டில் மீன லக்னத்துல இருந்து சனிபகவான் இயக்குறாரு.முன்ஜென்ம ஜாதகத்தில அதே லக்கனத்திலிருந்து சனி பகவான் இயக்குறாரு இதே உத்திரட்டாதி நட்சத்திரம். 2ம் சுய கர்மா 5ம் சுயகர்மா இது எப்படி இயங்குது.இதை உணரும் போது இந்த விஷயங்கள் நிறைய விதமான ஆச்சரியங்களை உண்டாக்கியது.நான் சொல்லக்கூடிய விஷயங்கள் நான் பதிவு பன்ற விஷயங்கள் ஏன் சொல்ல வரனா?ஆய்வு பண்ணி பார்த்தால் 2 வருடம் கழித்தோ 5 வருடம் கழித்து இல்ல 10 வருடம் கழித்து 100 வருடம் கழித்து இந்த விஷயத்தை உணர்வாங்க.கண்டிப்பாக கூடிய விரைவில் வெளியிட வேண்டிக்கிறேன்.
அட்சய லக்ன பத்ததி யில் இன்றைக்கு ஒரு ஜாதகத்தை பார்ப்போம்.இப்பொழுது பார்க்கக்கூடிய ஜாதகம்,இந்த ஜாதகருடைய லக்கனம் விருச்சிகம் ALP லக்கனம் கும்பம்,இந்த ஜாதகருடைய கேள்விகுழந்தைகள் பற்றி. 1, 2, 3, 4, 5, 5-ம் வீடுபுதனுடைய வீடுஇந்த லக்னத்துக்கு இரண்டு அட்டமத்திலே போறாரு அதாவது இரண்டு ஆதிபத்திய தன்மைய செய்வது. 5க்கு அதிபதியுமான 2க்கு அதிபதியான புதன் அட்டமத்தில் உள்ளது.பத்தில் ஒரு பாவி இருந்தாலும் குழந்தை பாக்கியம் உண்டு.ஐந்தாம் அதிபதி அட்டமாதிபதி செயல்படும் பொழுது அந்த ஜாதகர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.மருத்துவ செலவுகள் சம்பந்தப்பட்டு இந்த ஜாதகர் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.விரயாதிபதி லக்னத்தில் உள்ளது.10 ல் சனி சம்பந்தப்படுவதால் இந்த ஜாதகத்திற்கு தத்து குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது.புதன் பகவானுடைய நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரம் விரயத்தில் லக்னாதிபதி உள்ளது. புதனும் சனியும் சம்பந்தப்படும்போது இந்த ஜாதகர் மருத்துவ செலவுகள் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.குழந்தைகள் பற்றிய அமைப்பில் குரு பகவான் பலமாக இருக்க வேண்டும். 2க்கும் 11-க்கும் அதிபத்தியத்தில் இருக்கக் கூடிய குருபகவான் பன்னிரண்டில் விரயத்தை உருவாக்கும்.யோகத்தைக் கொடுக்கும் ஆனா? யோகத்தை கொடுக்கல.கண்டிப்பாக இவருடைய முயற்சிக்கு தகுந்த மாதிரி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்.துர்க்கை அம்மன் உடைய வழிபாடு இந்த காலகட்டத்தில் யோகமாக இருக்கும்.சதய நட்சத்திரம் முடிந்து அடுத்து வரக்கூடிய பூரட்டாதி நட்சத்திரத்தில் ஒரு வாய்ப்பு உண்டு.குரு நட்சத்திரத்தில் இருந்தால் வாய்ப்பு உண்டு.2021 ஜனவரி 31ஆம் தேதிக்கு அப்பறம் யோகத்தை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.ஐந்தாம் அதிபதி அஷ்டமத்தில் குரு இருப்பதால் அங்கு பிரச்சனைகள் உருவாகும்.கும்ப லக்னத்திற்கு ஏழாம் வீடு சிம்மம்.சிம்ம லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான்.அவரே 6மவிடாய் போவதால் பிரச்சனை உண்டு.எட்டுக்குடி முருகன் கோவிலில் குழந்தைகள் சார்ந்த அமைப்பு உள்ளது.செவ்வாய் அட்டமத்துல3க்கு உடையவன் அட்டமத்துல.முருகனை பலமாக கும்பிடுவதால் இந்த ஜாதகருக்கு ஒரு வாய்ப்பு உண்டு.நல்லதொரு நிகழ்வேஅமையட்டும் மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

https://youtu.be/oBcfuzphwyg
https://youtu.be/oBcfuzphwyg