எந்த கோவிலுக்கு போனால் நல்ல யோகத்தை பெறலாம்

 

வணக்கம்

நிறைய கோவில் இருக்கு, இதில் யோகத்திற்காக, அதிர்ஷ்டத்திற்காக நிறைய கோயில்கள் போய் வழிபாடு செய்கிறோம் அந்த வகையில் எந்த கோவிலுக்கு போனால் ஒரு நல்ல யோகம் கிடைக்கும்?

 

உதாரணமாக அட்சய லக்ன பத்ததி (ALP) லக்னம் ரிஷப லக்னம்,கன்னி லக்னம் , மகர லக்னம், இதில் சந்திரனுடைய ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தில் உங்கள் லக்ன புள்ளி போனால் அதாவது சந்திரனுடைய நட்சத்திரம் 3. இந்த 3 நட்சத்திரத்தில்

4 வருடம் 5மாதம் 10 நாள் போனால் குருவாயூர் கோவில் போகணும்.

ஒரு பரம திருப்தி. ஆத்மார்தமாக எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது.போக முடியுமா போக முடியாதா என்பது உங்களுடையது.

ஏன்னா? எல்லாருக்கும் எல்லா வழியும் கிடைப்பதில்லை.

 

இந்த வீடியோ பார்க்கும் நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் ALP மென்பொருள் உள்ளது அதில் உங்களுடைய பிறந்த நேரம்,பிறந்த தேதி, பிறந்த இடம் கொடுத்தால் உங்களுடைய ALP புள்ளி வரும்.

 

அதில் ஹஸ்தம், ரோகிணி, திருவோணம் வந்தால் கண்டிப்பாக நீங்கள் குருவாயூர் கோவில் போங்க. உங்கள் வாழ்க்கையில் யோகம் கிடைக்கும்.

 

இல்லை ARP சந்திர திசை, சந்திர புத்தி, சந்திர அந்திரம் இப்படி உங்களுடைய திசை உங்களுக்கு . அதில் சந்திர திசை நடந்தால் கண்டிப்பாக குருவாயூர் கோவில் போங்க.அங்கு ஆத்மார்த்தமாக இருந்துவிட்டு கோவிலில் இருந்து வெளியில்வரும் போது உங்கள் வாழ்க்கையில் இதுநாள்வரையில் பெறாத புகழ், எதிர்பார்க்காத நிகழ்வு, என் வாழ்க்கையில் அடுத்த நிலை,பணம், பேர், புகழ்,அங்கீகாரம் இதையெல்லாம் தாண்டி மற்றற்ற மகிழ்ச்சி,பேரானந்தம் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தக் கூடியதுதான் குருவாயூர். ஒரே ஒரு தடவை போய்ட்டு வாங்க. கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும்.சந்திர திசை 10 வருடம். உங்கள் வாழ்க்கை கண்டிப்பாக மாறும்.

 

எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படையான நிகழ்வு ,நாம் எல்லோரும் வாழ்க்கையில் வெற்றிபெற அடிப்படையான நிகழ்வு, நாம் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் பயணிக்கிறோம், எவ்வளவு தூரம் நல்லது, கெட்டது என்று கையில் நாம் google map பயன்படுத்துகிறோமோ, அதேபோல் ஒரு வீட்டிற்கு ஒரு ஜோதிடர். ஒவ்வொரு வீட்டிற்கு அடிப்படியான ஜோதிட நிகழ்வு தெரிந்திருந்தால் வாழ்க்கைப் பயணம் புலப்படும். பாதுகாப்பாக இருக்கும்.

ஒரு 100 கிலோமீட்டர் போயிட்டு அந்த road close ஆகியிருந்தால் திரும்ப வர முடியாது.இதுதான் வாழ்க்கை பயணம் கடன், வம்பு,வழக்கு, நோய் ,ஆரோக்கியம்,இதில் எல்லாம் மாட்டிக் கொண்டு அங்கிருந்து

வர முடியவில்லை என்ற பிரச்சனை எல்லோருக்கும் இருக்கு.

 

அதுவே இந்த தூரத்தில் கடன் பிரச்சனை இருக்கு என்று தெரிந்துகொண்டால், அதை தவிர்க்கலாம், அதை எப்படி கையாளுவது,என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஜோதிடர் வரணும்.

 

நன்றி, வணக்கம்.

https://youtu.be/_12tAvmv0

 

ஏமாற்றமாக அமைந்த திருமணம்

ALP முறையில் ஒரு நிகழ்வு.

ALP முறையில் ஒரு லக்னாதிபதி, ஒரு நட்சத்திரபாதம் இதை மட்டும் வைத்து எப்படி பார்க்கலாம் என்று பார்ப்போம்.
லக்னம் 5ம் வீடு,மனம் சம்பந்தப்பட்டது, உடல் சம்பந்தப்பட்டது ,இன்பம் சம்பந்தப்பட்டது, காதல் சம்மந்தப்பட்டது, குழந்தைகள் சம்பந்தப்பட்டது
யோக நிலைகளை குறிக்கக்கூடிய பாவகம்.
லக்னாதிபதி நல்லா இருக்கு, மூலம் நட்சத்திரம் 11ஆம் இடத்தில் இருப்பதால் இந்த காலகட்டங்கள் எதிர்பார்த்த யோகத்தை கொடுக்கும்.
ஒரு குறுகிய காலத்தில் குருவும் , கேதுவும் பார்வையில் இருக்கு,இது யோகத்தை கொடுக்குமா? கொடுக்கும்.
மூலம் நட்சத்திரம் 1, 2 பாதம் போனாலே எதிர்பாரத திடீர் திருமண வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்.
ALP முறையில் மூலம் நட்சத்திரம் 1ம் பாதம் திடீர் யோகம், காதல் திருமணம் எதிர்பாராத திடீர் வாய்ப்புகளை கொடுக்கக்கூடிய அமைப்பு உண்டு.
5ம் அதிபதியாக செவ்வாய் லக்னத்தில் இருக்கு.
1,2 ,4, 7 ,8 , 12 ல் செவ்வாய் இருந்தால் ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும்.
எதிர்பாராத திடீர் திருமணத்தில் அழுத்தத்தை கொடுக்கும்.
ஒரு போராட்டத்தை கொடுக்கும்.
ஆனாலும் எதிர்பாராத திடீர் திருமண வாழ்க்கை இந்த காலகட்டத்தில் கொடுக்கும்.

இந்த லக்னத்திற்கு அட்டமாதிபதி திசை 5லிருந்து நடக்கிறது.
5, 8 சம்பந்தப்பட்டது சித்த பிரம்மையான காலம்.
மனம் எதிர்பார்த்த அளவு இருக்காது.
புதன் அட்டமாதிபதி புத்தியில் எதிர்பாராத திடீர் திருமணத்தை அமைத்து வைத்திருக்கும்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் நடந்த நிகழ்களோடு ALP முறையை பொருத்திப் பார்க்கிறோம்.
ஜென்ம லக்னத்திற்கும், ALP லக்னத்திற்கும் பொருத்தம் பார்க்கும் பொழுது எது உங்களோடு அதிகமாக தொடர்பு பெறுகிறது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
எவ்வளவு தூரம் பயணிக்றோம், எப்படி பயணிக்கிறோம், வாழ்க்கையில் சந்தோஷமாக பயணிக்க போகிறோமா? என்பது பார்ப்பது தான் அட்சய லக்னம்.
தொடங்கிய இடத்திலிருந்து நான் எதை அனுபவிக்கப் போகிறேன் ,
எதை அனுபவிக்க முடியாது ,
எதை சந்தோஷமாக அமையப்போகிறது,

இந்த ஜாதகத்தில் திருமண வாழ்க்கை ஒரு பிரச்சனைக்குரிய வாழ்க்கையாக தான் அமைந்திருக்கும்.