காசு இல்லாதவன் பணக்காரனாக மாறுவது எப்படி

 

காசு இல்லாதவன் பணக்காரனாக மாறுவது எப்படி?

260 பில்லியன் கணக்கில் என்னுடைய நண்பர்களுக்கு அமெரிக்கா, லண்டனில் லாட்டரி சீட் விழுந்தது.அதாவது அந்த ஜாதகத்தை எடுத்து நான் ஆய்வு செய்தேன்.

ஒரு சில நட்சத்திரங்கள் அபரிவிதமான யோகத்தை கொடுத்திருக்கு.உதாரணமாக அனுஷம் நட்சத்திரம் 2ம் பாதம் ஒருவருக்கு 266 பில்லியன் டாலர் ஐரோப்பாவில் விழுந்திருக்கு.

ஒரு சில நட்சத்திர பாதங்களில் உடல் புள்ளி நகரும் போது, ஏன்னா? மனம் எங்கும் நகராது மனம் அப்படியே சுத்திட்டு தான் இருக்கும்,இந்த உடல் போனால் தான் மனம் சந்தோசமாகும்.
நான் அமெரிக்கா போகணும் என்றால் என்னுடைய மனம் போய்ட்டு வந்துடும், ஆனால் என்னுடைய உடல் போக வேண்டும் என்று இதற்கு பாஸ்போர்ட் எடுக்கனும் , ப்ளைட் டிக்கெட் எடுக்கனும்,
உடல் போக வேண்டும் என்றால் இவ்வளவு வழிமுறைகள் இருக்கு.
உடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும் என்றால் ,
அட்சய லக்னத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்.

அட்சய லக்னம் இன்றைக்கு நல்லா இருந்தால், அட்சய லக்ன புள்ளி நல்லா இருந்தால் உங்களுக்கு அந்த மாதிரி விபரீத ராஜயோகத்தை கொடுக்கும்.

ஒருவருக்கு அனுஷம் நட்சத்திரம் 2ம் பாதம் போனால் அவருக்கு தச நாதன்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி லோ, ஒரு சனியுடைய நட்சத்திரத்தில் சனி திசை நடந்தால் கண்டிப்பாக, சனி யோகத்தை செய்யக்கூடிய பாவகங்கள் இருந்தால்
கண்டிப்பாக மிகப்பெரிய யோகத்தை கொடுத்தே தீரும்.

அதேபோல் மூலம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்
நான் சொல்லக்கூடிய விஷயம் அட்சய லக்ன புள்ளியும்,
தசாநாதனுடைய புள்ளியும் ஒரே கோட்டில் பயணித்தால் உதாரணமாக மூலம் நட்சத்திரம் 3ம் பாதம் போய் அவருக்கு கேது திசை நடந்தால் விபரீத ராஜயோகத்தை கொடுக்கும்.
அதுவே கேது அசுப பாவகங்கள் இருந்தால் எதிர்பார்த்த மாதிரி கொடுக்காது.

உடல் நட்சத்திர புள்ளியும் , மனம் நட்சத்திர புள்ளியும்,
ஒரே நேர்கோட்டில் பயணிக்க கூடிய எந்த ஜாதகருக்கும் விபரீத ராஜயோகம் உண்டு.

அதேபோல் மகர லக்னம் இரண்டாம் அதிபதி சனி ,சனி உடைய நட்சத்திரம் பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி ஏதோ ஒரு நட்சத்திரத்தில் இந்த சந்திரன் பயணிக்கும் பொழுது ,சனி பயணிக்கும் போது 2ம் வீட்டில் குரு இருந்தால் இந்த குரு ஏதோ ஒரு பாவகத்தில் கோச்சார குரு பார்வையில் போகும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு பணம் வரும்.

நட்சத்திர புள்ளி நல்ல அமைப்பில் இருந்தால் கண்டிப்பாக விபரீத ராஜ யோகத்தை கொடுக்கும்.
உதாரணமாக திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம் திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
சுவாதி நட்சத்திரம் 1ம் பாதம் திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
அதுவே சுவாதி நட்சத்திரம் 3ம் பாதம் எதிர்பாராத திடீர் யோகத்தை கொடுக்கும்.
இந்த மாதிரி கிரக அமைப்புகள் எதிர்பாராத திடீர் யோகத்தை கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கு.
அதே போல் ரோகிணி நட்சத்திரம் 4ம் பாதம் வரக்கூடிய காலகட்டம் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கு.
அதே போல் பூரம் 3ம் பாதம் வரும் பொழுது எதிர்பார்காத அளவு பணம் வரும்.
பரணி, பூரம், பூராடம்,
பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம் இந்த 6 நட்சத்திரங்களில் உங்களுடைய உடல் புள்ளி , அதாவது அட்சயலக்ன புள்ளி
நல்ல நிலையில் இருந்தால் விபரீத ராஜயோகத்தை கொடுக்கும்.

சனியுடைய நட்சத்திரங்களும், கேதுவுடைய நட்சத்திரங்களும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுத்து விடும்.
சுக்கிரனுடைய நட்சத்திரம் கஷ்டப்பட்டு எதிர்பார்த்த அளவு இல்லை என்றால் கூட கொஞ்சமாக வரும்.

ஆனால் சனி கேது அப்படியில்லை பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பாங்க ஒண்ணுமே இருக்காது,வாழ்க்கையே வெறுத்துப் போச்சுபாங்க அவர்களுக்கு லாட்டரி சீட் விழும்.

புத்தி, அறிவு இந்த கிரகங்கள் நமக்கு ஏன் கொடுத்தது என்றால் நீ என்னவாக போற, நீ எப்படி இந்த உலகத்தில் பயன்படுத்திக்க போற, என்னவாக இருக்க போற,நீங்கள் யாரு உங்களுடைய உடல் புள்ளி எப்படி இருக்கு ,உடலுடைய நட்சத்திர புள்ளி எப்படி இருக்கு, 108 நட்சத்திரங்கள் வழியாக தான் இந்த உடல் பரவலாகும்.உடன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நட்சத்திரங்கள் வழி தான் இயங்குகிறது.

லக்னத்தில் இருந்து 9வது நட்சத்திர பாதம்
என்ன நட்சத்திரம் வருகிறதோ, அன்றைக்கு போய் கோவிலில் அர்ச்சனை பன்னுங்க.
சாமி கும்பிடுங்கள், வாழ்க்கையில் உங்களுக்கு கிடைக்காத பேர் புகழ் கிடைத்துவிடும்.
அட்சயலக்ன பத்ததி ஜோதிடத்தை உணருங்கள்.உங்கள் வாழ்க்கை மாறும்.

நன்றி.