ஹோரைகள்

ஹோரைகள் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட ஒரு நாளின் ஒரு மணி நேர கால அளவு ஆகும்.

ஒரு வாரத்தில், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் நேரம் தொடங்கி ஏழு நாட்கள் உள்ளன. ஒரு மணிக்கு ஒரு கிரகம் வீதமாக இந்த ஒவ்வொரு நாளையும் (24 மணி நேரம்) ஏழு கிரகங்கள் ஆட்சி செய்கின்றன.

ஆளும் கோள்களின் தன்மையைப் பொறுத்து ஹோரைகள் பல்வேறு பணிகளுக்கு பொருத்தமானதாகவோ அல்லது பகையானதாகவோ உள்ளன. இதன் மூலம் ஒரு காரியம் செய்யப் பொருத்தமான நேரத்தைனைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தலாம். பின்வரும் ஹோரைகள் விளக்கப்படம், ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்தெந்த கோள்கள் ஆளுகின்றன எனக் காட்டுகிறது.

ஹோரைகளைக் பார்க்கும் போது, உங்கள் இடத்தின் அன்று சூரிய உதயம் நேரம் அறிந்து அதிலிருந்து முதல் 1 மணி நேரத்தினைக் கணக்கிட்டுக் கொள்ளவும். சூரிய உதய நேரத்தை பஞ்சாங்கம் மூலமாகவோ. பத்திரிகைகள் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம்.

சுப கிரக ஹோரைகள் : சந்திரன், புதன், குரு, சுக்கிரன்

பாப கிரக ஹோரைகள் : சூரியன், செவ்வாய், சனி ஹோரைகள் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட ஒரு நாளின் ஒரு மணி நேர கால அளவு ஆகும்.

ஒரு வாரத்தில், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் நேரம் தொடங்கி ஏழு நாட்கள் உள்ளன. ஒரு மணிக்கு ஒரு கிரகம் வீதமாக இந்த ஒவ்வொரு நாளையும் (24 மணி நேரம்) ஏழு கிரகங்கள் ஆட்சி செய்கின்றன.

ஆளும் கோள்களின் தன்மையைப் பொறுத்து ஹோரைகள் பல்வேறு பணிகளுக்கு பொருத்தமானதாகவோ அல்லது பகையானதாகவோ உள்ளன. இதன் மூலம் ஒரு காரியம் செய்யப் பொருத்தமான நேரத்தைனைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தலாம். பின்வரும் ஹோரைகள் விளக்கப்படம், ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்தெந்த கோள்கள் ஆளுகின்றன எனக் காட்டுகிறது.

ஹோரைகளைக் பார்க்கும் போது, உங்கள் இடத்தின் அன்று சூரிய உதயம் நேரம் அறிந்து அதிலிருந்து முதல் 1 மணி நேரத்தினைக் கணக்கிட்டுக் கொள்ளவும். சூரிய உதய நேரத்தை பஞ்சாங்கம் மூலமாகவோ. பத்திரிகைகள் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம்.

சுப கிரக ஹோரைகள் : சந்திரன், புதன், குரு, சுக்கிரன்

பாப கிரக ஹோரைகள் : சூரியன், செவ்வாய், சனி

பணம் சேர

 

images (14)

 

1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.
2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே  கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.

3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ  அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .

4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.

5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச்  சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.

6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

நவ கிரகங்களில் புதனும் பரிகாரமும்

நவ கிரகங்களில் புதனும் பரிகாரமும்

நவகோள்களில் சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கிரகம் புதனாகும். புதன் சந்திரனின் புதல்வராக கூறப்படுகிறார். ஒருவருடைய பேச்சாற்றல், எழுத்தாற்றல், கல்வித் திறன், ஞாபக சக்தி போன்றவை சிறப்பாக அமைய புதன் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.

கல்வி காரகன், அறிவு காரகனாகிய புதன் மிதுனத்தில் ஆட்சியும், கன்னியில் ஆட்சி உச்சமும் பெறுகிறார். ரிஷபம், கடக ராசிகள் நட்பு ராசிகளாகும். மீனத்தில் நீசம் பெறுகிறார் .. புதனுக்கு சூரியன், சுக்கிரன் இருவரும் நண்பர்கள். செவ்வாய், சனி சமமானவர்கள். சந்திரன் பகையாவார். புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்கு புதன் அதிபதியாவார். புதன் ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு செல்ல 1 மாதம் ஆகிறது. ஒரு நட்சத்திரத்தில் பாதத்தை கடக்க 3 நாள், 20 நாழிகை ஆகிறது. புதன் சரியாக சூரியனுக்கு 11 பாகையில் அஸ்தங்கள் அடைகிறது. 3 மாதங்களுக்கு ஒருமுறை வக்ரம் அடைகிறார். சூரியனுக்கு 14 டிகிரியில் இருக்கும்போது வக்ரம் பெற்று 20 டிகிரியில் வக்ர நிவர்த்தி அடைவார். பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தி போன்ற திதிகளில் புதன் திதி சூன்ய தோஷம் பெறுகிறார்.

புதனின் காரகத்துவங்கள்,

புதன் பகவான் தாய்மாமன், கல்வி, ஞானம், விஷ்ணு, கணக்குத் தொழில், வங்கியில் கணக்காளர், உத்தியோகம், வாக்கு சாதுர்யம், கதை, கட்டுரை, காவியம் புனைதல், ஜோதிடம், பத்திரிகையாளர், சிற்பதொழில், நாட்டியம், இசை ஞானம், சகலகலைகளிலும் திறமை, புத்திர பாக்கியத்தடை, மரகதம், பச்சை இலைகள், பாசிப் பயிறு, வெந்தயம் போன்றவற்றிக்கு காரகம் வகிக்கிறார்.

புதனால் உண்டாகும் நோய்கள்,

வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மனநிலைபாதிப்பு விஷத்தால் கண்டம், வேகமாக பேசும் நிலை, முளை பாதிப்பு, தோல் வியாதி, மஞ்சள் காமாலை, கனவால் மனநிலை பாதிப்பு, வெண்குஷ்டம், ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி, வாதநோய், சீதளம் போன்ற நோய்கள் உண்டாகும்.
புதனின் திசை வடக்கு, பஞ்சபூதங்களில் மண், அறுசுவையில் உவர்ப்பு, தானியம் பச்சை பயிறு, தேவதை மஹா விஷ்ணு, மலர் வெண்காந்தம், நவரத்தினம் மரகத பச்சை, சுவை பல்சுவை, நிறம் பச்சை, குணம் ராஜஸ, திசை வடக்கு, வாகனம் குதிரை.

புதன் ஓரையில் செய்யக்கூடியவை

கல்வி கற்க ஆரம்பித்தல், ஜோதிடம், கணிதம் பத்திரிகை தொழில், கமிஷன் வியாபாரம், தேர்வு எழுத நல்லது.

புதனால் உண்டாகும் யோகங்கள்,

பத்திரயோகம் நிபூனா யோகம், பதாதித்ய யோகம்

பத்திர யோகம்,

புதன் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரம் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், மற்றவர்களால் பாதிக்கப்படும் உன்னதமான சிங்கம் போல வாழும் அமைப்பு உண்டாகும்.

புதாதித்ய யோகம்,

புதனும் சூரியனும் சேர்க்கைப் பெற்றிருப்பது புதாதித்ய யோகமாகும். இதனால் கல்வியில் மேன்மை, பெரியவர்களின் ஆசி, வியாபாரத்தில் ஈடுபாடு, அரசு வழியில் அனுகூலம் ஏற்படும்.

நிபூனா யோகம்,

சூரியனும் புதனும் சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்திற்கு 1,4,8 ஆகிய இடங்களில் அமையப் பெறுவது, இதனால் உயர் பதவிகள் தேடி வரும். அரசியலில் முன்னேற்றம் கொடுக்கும்.புதன் ஒரு அலிகிரகமாவார். ஒருவரின் ஜாதகத்தில் புதன் சுபகிரகத்தோடு சேர்ந்திருந்தால் சுபபலனையும், பாவ கிரகத்தோடு சேர்ந்திருந்தால் பாவப்பலனையும் தருவார். யாரோடு சேராதிருந்தால் சுப பலனையும் தருவார்.

புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சுபகிரகங்களோடு சேர்ந்திருக்கும் போது புதனின் தசா அல்லது புக்தி நடைபெற்றால் ஜாதகருக்கு உன்னதமான உயர்வுகள் உண்டாகும். கல்வி, அறிவு, ஞாபகசக்தி, பெரியோர்களின் நட்பு, சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும் யோகம் ஏற்படும். புதனும் சனியும் சேர்க்கைப் பெற்றாலும் சனியின் சாரத்தில் புதன் அமையப் பெற்றாலும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் கெடுபலன்கள் உண்டாகும். ஒருவர் மந்திர சித்தியில் வல்லவராக திகழ ஜென்மலக்னத்திற்கு 5 ம் வீட்டில் புதன், சுக்கிரன், செவ்வாய் அமைந்து குரு பார்வையும் பெற்றிருந்தால் போதும். அவர்
மந்திர சித்தியில் வல்லவராக திகழ்வார்.

புதனுக்குரிய ஸ்தலங்கள்,

திருவெண்காடு, மதுரை

திருவெண்காடு,
புத்திக்கும் வித்தைக்கும் காரகனாகிய புதன் தனி சன்னதி கொண்டு வீற்றிருக்கிறார். இத்தலம் சீர்காழியிலிருந்த 15 கி.மீ. தொலைவில் தென்கிழக்கில் உள்ளது.

புதன் ஈஸ்வரர்களை பூஜித்து வணங்கி துதித்து நவகோள்களில் தானம் இடம் பெற்ற இடங்களில் மற்றொன்று மதுரை. ஆலவாய் என அழைக்கப்படும் அழகான மதுரையில் சோமசுந்தரேஸ்வரக் கடவுள் நிகழ்த்திய அறுபத்தி நான்கு திருவிளையாடல்களும் சிறப்பு பெற்றவை.

புதனை வழிபடும் முறைகள்,

விஷ்ணு பகவானை புதன் கிழமைகளில் விரதமிருந்து வழிபடுவது புதன் வழிபாடாக கருதப்படுகிறது.
விஷ்ணு சகஸ்கர நாமத்தை ஜெபிப்பது.
புதன் துதிகளை சூரிய உதயத்துக்கு 2 மணி நேரம் கழித்து கூறுவும்.
சுதர்சன ஹோமம் செய்வது, சுதர்சன எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது.
10 முக ருத்ராட்சம் அணியவும்.
பச்சை பயிறு, பூசணிக்காய், பச்சைநிற ஆடை போன்றவற்றை மதிய வேளையில் ஏழை மாணவனுக்கு தானம் செய்யவும்.
வெண் காந்தல் பூவால் அர்ச்சனை செய்வது,
குருவாயூர் சென்று தரிசனம் செய்வது,

மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வது நல்லது.
பச்சை நிற ஆடை, கைக்குட்டை உபயோகித்தல்,
தந்தத்தினால் ஆன பொருட்கள் ஆடை, அணிகலன்களை பயன்படுத்துவது நல்லது.

விவாஹ பொருத்த விவரங்கள்

YUIY
தினப் பொருத்தம் வதூ நட்சத்திரத்திலிருத்து, வரன் நட்சத்திரம் வரை எண்ணி, 9 ஆல் வகுக்க மீதி 3,5,7 நல்லதல்ல. மற்றவை சுபம் எனக் கொள்க. வதூ வரன் (நௌரொ – நௌரி) நட்சத்திரம் ஏக நட்சத்திரமாக வரும் எனில், ரோகிணி, திருவாதிரை, மகம், ஹஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம். அசுபதி, காரத்திகை, மிருகசீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம். மற்றவை கூடாது. (குறிப்பாக ஏக நட்சத்திரம் எனும் போது, கோள்சார கெடுபலன்களான – ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ஏகதிசை காலம், திசா சந்தி ஆகியவை ஒன்றாக வரும் வாய்ப்பு உள்ளதால் மிக கவனம் கொள்ள வேண்டும்)
கணப்பொருத்தம் நட்சத்திரங்களில் தேவகணம். மனுஷ கணம், ராட்சஸ கணம் என மூன்று பிரிவுகள் உள்ளன. தேவ கணம் உயர்ந்த குணம், மனுஷ கணம் வளைந்து செல்லும் சராசரி குணம், ராட்சஸ குணம் கோப குணங்களுடன் வளையாத குணமும் கொண்டவர்களாக இருப்பர். வதூ, வரர் ஏக கணத்தில் அமைவது விசேஷம். தேவ, மனுஷ கணம் கொண்ட வதூ எந்த கணம் கொண்ட வரனுடனும் ஒத்துப் போவார். ராட்சஸ கணத்தில் பிறந்த வதூ மனுஷ கணத்தில் பிறந்த வரனுடன் ஒத்துப் போக வழியில்லை. (குறிப்பு எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த கணம் என பஞ்சாங்கத்தில் காணலாம்)
மாஹேந்திர பொருத்தம் வதூ நட்சத்திரத்திலிருந்து வண்ணி வரும் வரன் நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வந்தால் உத்தமம். மற்றவை உத்தமமல்ல. இது குழந்தைப்பேறு தடையின்றி கிடைக்கவும் – சுகப்பிரசவத்திற்கும் துணை நிற்கிறது.
ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் வதூ நட்தசதிரத்திலிருந்து, எண்ணும் போது வரன் நட்சத்திரம் 13 க்கு மேல் வந்தால் உத்தமம். ரக்கு மேல் மத்திமம். 7 க்குள் வந்தால் அதமம்.
யோனிப் பொருத்தம் இல்வாழ்க்கையில், இல்லற – தாம்பத்திய ஒற்றுமைக்குரிய பொருத்தம். வரன் நட்சத்திரம் ஆண் மிருகமாகவும், வதூ நட்சத்திரம் பெண் மிருகமாகவும் வருவது விசேஷம். மாறி இருந்தால் மத்திமம். மிருகங்கள் ஒன்றுக்கொன்று பகையாக இருக்கக் கூடாது. சிங்கம், புலிக்கு – குதிரை, யானை, ஆடு, எருது, பசு, மான் ஆகியன பகையாகும், குதிரைக்கு – எருமையும், குரங்குக்கு – ஆடும், மானுக்கு – நாயும், பாம்பு, பூனைக்கு – எலியும், நாய்க்கு – பூனையும் பகையாகும். (குறிப்பு எந்தெந்த நட்சத்தரம் எந்தெந்த மிருகம் என்பதை பஞ்சாங்கத்தில் காண்க)
ராசிப் பொருத்தம் வதூ ராசியிலிருந்து – வரன் ராசி எண்ணும் போது, 6 க்கு மேல் இருந்தால் உத்தமம். 8 வது ராசி கூடாது. (சஷ்ட அஷ்டகம் என்னும் 6 வது 8 வது ராசிகள் இல்லாமல் இருப்பது விசேஷம்)
ராசி அதிபதி பொருத்தம் வதூ ராசிக்குரிய அதிபதியும், வரன் ராசிக்குரிய அதிபதியும் நட்பாகவோ, அல்லது சமமாகவோ இருத்தல் நன்று. பகையாக இருத்தல் கூடாது. ஒவ்வொரு கிரகத்திற்குமுரிய நட்பு, சம, பகைக்கிரகங்களின் விவரம்
கிரகம்
நட்பு
சமம்
பகை
சூரியன்
சந்திரன், செவ்வாய், குரு
புதன்
சுக்கிரன், பகை
சந்திரன்
சுக்கிரன், புதன்
செவ், குரு, சுக், சனி
சத்ரு இல்லை
செவ்வாய்
சூரியன், சந்திரன், குரு
சுக்கிரன், சனி
புதன்
புதன்
சூரியன், சுக்கிரன், சனி
செவ்வாய், குரு
சந்திரன்
வியாழன்
சூரியன், சந்திரன், செவ்வாய்
சனி
புதன், சுக்கிரன்
சுக்கிரன்
புதன், சனி
செவ்வாய், குரு
சூரியன், சந்திரன்
சனி
புதன், சுக்கிரன்
வியாழன்
சூரியன், சந்திரன், செவ்

குறிப்பு மேஷ, விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய்,
ரிஷப, துலா ராசிகளுக்கு அதிபதி சுக்கிரன்,
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன்,
கடக ராசிக்கு அதிபதி சந்திரன்
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன்
தனுசு மீனம் ராசிக்கு அதிபதி குரு
மகரம் கும்ப ராசிக்கு அதிபதி சனி என்று அறிக.
8 வசிய பொருத்தம் வதூ ராசியும், வரன் ராசியும் ஒன்றுக்கொன்று வசியமுடையதாக இருத்தல் வேண்டும்.
மேஷம் பெண் ராசி எனில் ஆண் ராசி சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் பெண் ராசி எனில் ஆண் ராசி கடகம், துலாம்
மிதுனம் பெண் ராசி எனில் ஆண் ராசி கன்னி
கடகம் பெண் ராசி எனில் ஆண் ராசி விருச்சிகம், தனுசு
சிம்மம் பெண் ராசி எனில் ஆண் ராசி துலாம்
கன்னி பெண் ராசி எனில் மிதுனம், மீனம்
துலாம் பெண் ராசி எனில் கன்னி, மகரம்
விருச்சிகம் பெண் ராசி எனில் கடகம்
தனுசு பெண் ராசி எனில் மீனம்
மகரம் பெண் ராசி எனில் மேஷம், கும்பம்
கும்பம் பெண் ராசி எனில் மேஷம்
மீனம் பெண் ராசி எனில் மகரம் வசியம் என்று அறியவும்.
ரஜ்ஜூ பொருத்தம் ரஜ்ஜூ என்னும் மாங்கல் பொருத்தம் வதூ, வரர்க்கு ஓரே ரஜ்ஜூவாக வரக்கூடாது. மாறி வந்தால் நல்லது.
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் – சிரசு ரஜ்ஜூ
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் மற்றும்
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய வை – கண்ட ரஜ்ஜூ
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மற்றும்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை – வயிறு ரஜ்ஜூ
பரணி, பூரம், பூராடம் மற்றும்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை – துடை ரஜ்ஜூ
அசுபதி, மகம், மூலம் மற்றும்
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – பாத ரஜ்ஜூ
குறிப்பு விவாஹ பொருத்தத்தில் மிக முக்கியமான இந்த ரஜ்ஜூப் பொருத்தம் சரியான முறையில் அனுசரிக்கப்பட வேண்டும். இதில் தவறும் பட்சத்தில், வதூ-வரர் நட்சத்திரங்கள் சிரசு ரஜ்ஜூவில் இருந்து இணைந்தால் – கணவர் மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், கண்ட ரஜ்ஜூவில் வந்தால் மனைவி மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், வயிறு ரஜ்ஜூவில் வந்தால் புத்திர தோஷத்திற்கு சமமான பிரச்சனைகளும், துடை ரஜ்ஜூவில் வந்தால் ஒற்றுமைக் குறைவுகளும், பாத ரஜ்ஜூவில் வந்ததால், நோய் நொடிகளும் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது ஜோதிட நூல்களின் அற்புத கருத்தாகும்.
வேதைப் பொருத்தம் வதூ நட்சத்திரமும், வரன் நட்சத்திரமும் ஒன்றுக்கொன்று வேதையாக இருத்தல் கூடாது. வேதையாக இல்லாவிட்டால் பொருத்தம் உத்தமம்.
அசுபதி – கேட்டை, பரணி – அனுஷம், கார்த்திகை – விசாகம்,
ரோகிணி – சுவாதி, திருவாதிரை – திருவோணம் புனர்பூசம் – உத்திராடம்
பூசம் – பூராடம், ஆயில்யம் – மூலம், மகம் – ரேவதி
பூரம் – உத்திரட்டாதி உத்திரம் – பூரட்டாதி, ஹஸ்தம் – சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ஒன்றுக் கொன்று வேதை என அறியவும்.

மேற்காண் தசவித பொருத்தங்களுடன், பாபசாமீயம் என்னும், அசுபக்கிரகங்களான, சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவை 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களின் நின்றவாறு, அரைக்கால், கால், அரை, முக்கால், முழு பாபம் என்ற அளவில் சூட்சம கணக்கின் பிரகாரம் கணக்கெடுத்து பார்ப்பதுடன், செவ்வாய் கிரகமானது, லக்னத்திலிருந்து, சந்திரனிலிருந்து, சுக்கிரனிலிருந்து 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களில் இருந்ததால் ஏற்படும் செவ்வாய் தோஷ பாபசாமீயமும் இணைத்துப் பார்த்து, திசா சந்தி, ஏக திசை காலம் இல்லாமல் பொருத்தும் பொருத்தங்களின் அடிப்படையில் அமையும் திருமணங்கள் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு இப்புவியில் தம்பதியாய் வாழ்ந்து, அதன் வெளிப்பாடாக நற்புத்திரப்பேறு பெற்று , வரலாற்றுச் சாதனை செம்மல்களாக வாழ்ந்தும், எந்நாளும் புகழ் பெற்று நித்திய ஜீவன் பெறுவார்கள் என்பது திண்ணம். சுபம்.

முருகன் வழிபாடு

 

images (2)

 

முருகன் வழிபாடு என்பது ஒரு பிரசித்திபெற்ற வழிபாடு இதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களுக்கு முருகனின் பெருமைப்பற்றி தெரியும்.பொதுவாக தமிழர்களின் குலதெய்வமாக பெருமையானவர்களுக்கு முருகன் தெய்வமாக இருக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள் கூட முருகனை குலதெய்வமாக எண்ணி வழிபட்டு வருவார்கள். முருகனின் கோவிலுக்கு நான் செல்லுவதே அவரின் அழகை தரிசனம் செய்வதற்க்கு மட்டுமே. அந்தளவுக்கு ஒரு அழகானவர். முருகன் என்றால் அழகு தானே. தொடர்ச்சியாக செவ்வாய்கிழமை தோறும் முருகன் கோவில் சென்று வருபவர்கள் நமது பதிவில் கூட அதிக நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் என்னிடம் பகிர்ந்துக்கொண்டுள்ள முருகனின் அருள் மெய் சிலிர்க்க வைக்கும். ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் அதிகப்பட்சம் ஒன்பது செவ்வாய்கிழமையில் அதன் பலனை அனுபவித்துவிடுவார்கள். முருகனின் வழிப்பாட்டை இதுவரை கடைபிடிக்காத நண்பர்கள் ஏதாவது ஒரு வழிபாட்டை முருகனுக்கு கடைபிடித்து வாருங்கள்.