புனர்பூசம் நட்சத்திரம் 2ம் பாதம்:
அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.
அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:
என்னுடைய வாழ்க்கையில் ஏன் நடக்கவில்லை ஏன் நடக்கிறது இப்படி நிறைய கேள்விகளுக்கு விடை கொடுப்பது ஜோதிடம் தான்.
காலத்தின் கண்ணாடி,
காலத்தின் கணக்கு,
காலத்தின் வழிமுறைகள் என்று பார்த்தால் ஜோதிடம் தான்.
நம்முடைய வாழ்க்கையில் கணிக்கக் கூடிய ஒரு கணிதம், இயற்கை கொடுத்த, இந்த பிரபஞ்சம் கொடுத்த ஒரு முறை தான் ஜோதிடம்.
திருவள்ளுவர் திருக்குறளில்
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
வாழ்க்கை என்ற பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்கு இறைவன் காலடியை பற்ற வேண்டும் என்று முதல் அத்தியாயத்தில் அழகாக சொல்வார்.
அதுதான் இயற்கை.
இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் புனர்பூசம் நட்சத்திரம் 2ம் பாதம்.
புனர்பூசம் இரண்டாம் பாதம் கணவன்-மனைவிக்குள் பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது.
வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது.
பணம் சம்பந்தப்பட்டது,
வேலை சம்பந்தப்பட்டது,
கணவன் மனைவி உறவு சம்பந்தப்பட்டது,
இந்த கேள்விகள் எல்லாம் பிரச்சனையாக காலகட்டம்.
எதிர்பார்த்த அளவு யோகம் இருக்காது என்பதுதான் உண்மை.
கொஞ்சம் கவனமாக பயணம் செய்ய வேண்டும்.
நீங்கள் ஜெயிக்க வேண்டும்,
தோற்க வேண்டும் என்பது நீங்கள் எடுக்கக்கூடிய முடிவில் தான் உள்ளது.
உங்கள் வாழ்க்கை மாற வேண்டும் என்றால் கண்டிப்பாக பொறுமை வேண்டும்.
வீடு சம்பந்தப்பட்டது,
மனை சம்பந்தப்பட்டது,
குழந்தைகள் சம்பந்தபட்டது, குழந்தைகளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சிறிதாக செய்து வைப்பது,
கையில் பணம் இருந்தால் அதை பொருளாக மாற்றிக் கொள்வது,
அதாவது மறைபொருள் சம்பந்தப்பட்ட விஷயமாக மாற்றிக்கொள்வது.
7க்கு, 12 க்கு உடையவன்
சம்மந்தபடும்பொழுது புனர்பூசம் நட்சத்திரம் 2ம் பாதம் கண்டிப்பாக பொறுமையாக இருக்க வேண்டும்.
சிறிது சிறிதாக சேமித்து வைத்திருந்தாலும் அதை ஒரே நாளில் செலவு செய்யக்கூடிய வாய்ப்பை கொடுத்துவிடும்.
கடன் வாங்கி பொருளாக மாற்றி அதை லாக் செய்தால் கண்டிப்பாக விரய செலவு வராது.
பார்த்து செலவு செய்யவேண்டும்.
சுப விரயச் செலவுகள் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கை கண்டிப்பாக மாறும்.
புனர்பூசம் நட்சத்திரம் 2ம் பாதம்.
கண்டிப்பாக ஒவ்வொரு நட்சத்திரமும் பலமான ஒரு எதிர்பார்ப்பு,
ஒரு சந்தோஷமான சூழ்நிலையை குறிக்கும்.
அறம் கொடுத்தால் பொருள் கொடுக்காது.
பொருள் கொடுத்தால் இன்பம் கொடுக்காது.
இன்பம் கொடுத்த அறம் கொடுக்காது இப்படி ஒன்று மேலே ஒன்று கீழே ஏற்றம் இறக்கம் செய்யும்.
மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.