01.02.2017இந்த நாள் இனிய நாள்.

 

 

இந்த நாள் இனிய நாள்.
01.02.2017
புதன் கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – குடும்ப உறுப்பினர்களின் விவாதம் வேண்டாம்.
பரணி – பணவரவு, வாகனம், வீடு சார்ந்த பேச்சுவார்த்தை அமையும், மகிழ்ச்சி, கோவில் வழிபாடு, குலதெய்வ வழிபாடு.
கார்த்திகை – வீண் வார்த்தையால் விபரிதம், கணவன் மனைவி இருவரும் பொறுமையாக இருத்தல், விரயம் , கவனம் தேவை.
ரோகிணி – லாபம்.
மிருகசீரிடம் – தொழில் முன்னேற்றம் உண்டு, லாபமும் உண்டு.
திருவாதிரை – கணவன் மனைவி வீண் விவாதம் வேண்டாம்.
புனர்பூசம் – பொறுமை மிகவும் அவசியம், அவசரபட வேண்டாம்.
பூசம் – திடிர் அதிர்ஷ்மான செய்தி உண்டு.
ஆயில்யம் – கடன், உடல்நிலை கவனம், விரயம்.
மகம் – மகிழ்ச்சி.
பூரம் – புதிய வாய்ப்பு பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்துதல்.
உத்திரம் – மறக்க முடியாத நாள், கவனம் .
அஸ்தம் – சொந்த தொழில் மேன்மை உண்டு, கடன் வாங்குதல், விரயமான காலம் கவனம் .
சித்திரை – மகிழ்ச்சி, லாபம்.
சுவாதி – பதவி, புகழ், வெற்றி மகிழ்ச்சி.
விசாகம் – ஆன்மிக பயணம், மக்கள் தொடர்பு விஷயங்களிள் பங்களிப்பு.
அனுசம் – தன வரவு .
கேட்டை – வாகனத்தில் கவனம் .
மூலம் – பயணம், முன்னோர்கள் வழிபாடு, அரசு தொடர்பான நபரை சந்தித்தல், லாபம்.
பூராடம் – மன உளைச்சல்.
உத்திராடம் – பணம் சார்ந்த பிரச்சினை தலையிட வேண்டாம், அருகில் உள்ள ஐயனார் கோவில் வழிபடவும்.
திருவோணம் – எதோ பயம் வாட்டி வதைக்கும்.
அவிட்டம் – வாகனத்தில் கவனம், அலைச்சல், குழம்ப்பமான மனநிலை ஒரு முடிவும் எடுக்க முடியாது.
சதயம் – வெற்றி.
பூராட்டாதி – அரசு வகையில் லாபம், மன உளைச்சல்
உத்திரட்டாதி – தொழில் மேம்படும்.
ரேவதி – குலத்தொழில், சொந்த தொழில் மேம்பாடு ,பயணம், புதிய நபரை சந்தித்தல் .
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

வள்ளலார் பெருமான்

மூன்று மந்திரங்கள்.

தனித்திரு என்பதற்கு ஏகாந்தமாய்

இரு என்பது பொருளாகும்.ஏகாந்தமாக
இருந்து இறைவனை மனதில்
இருத்தி வழிபடவேண்டும்.அதன் மூலம்
மோட்சம் கிட்டும்.

உடலால் தனித்திருந்து பழகினால் உள்ளத்தால்
தனித்து நின்று வாழும் மனோபக்குவம்
உண்டாகும்.இவ்வாறு இறைவனை சதாகாலமும்
சிந்தித்து தனிமையில் இருப்பதே பெரும்
சுகமாகும்.

விழித்திரு

தூங்காமல் தூங்குவதே சித்தர்
வாக்காகும்.அதாவது இறை சிந்தனையில்
ஆழ்ந்து பேரின்பக் களிப்பில்
மூழ்குவதே உண்மையான இன்பம்
தரும்.தூங்காமல் தூங்கி அறிதுயிலாய் நிற்கும்
அன்பர்கள் சிவனையும் சிவ உலகையும்
தம்முன்னே காண்பர்.ஆகாரம்
அரை,நித்திரை அரைக்கால்
என்பர்.சாவாநிலை பெற்ற சித்தர்கள் தூக்க
மொழிந்தவர்களாய் சதா பேரின்பத்தில்
ஆழ்ந்திருப்பார்கள்.அதனால்தான் சாகாக்
கலையின் இரண்டாவது மந்திரமாக
விழித்திரு என்று வள்ளலார் கூறுகின்றார்.

மனிதன் உறக்க நேரத்தில் 48 அங்குல சுவாசம்
வெளியே பாய உள்ளே 24 அங்குலம்
மட்டுமே மூச்சாக இழுக்கப்படுகிறது.இந்த
சுவாசமே விழிப்பு நேரத்தில்
சமமானதாகவோ அல்லது வெளிவிடும்
மூச்சு அளவு குறைவானதாகவோ இருக்கிறது.
நம் உடலின் ஆயுள் சுவாசத்தால்
கணக்கிடப்படுகிறது.விழிப்பு நிலையே நம்
ஆயுளை அதிகரிக்கச் செய்யும்
வழியாகும்.மகா சிவராத்திரியன்றும் வைகுண்ட
ஏகாதசியன்றும் கண்விழிக்கச் சொல்லும்
ரகசியமும் இதுவே.

உறக்கத்தைச் சுத்தமாக ஒழித்த
நிலையே தேவர்நிலை. அதனால்தான்
தேவர்களை இமையை மூடாதவர்e
என்று புராணங்கள் சுட்டுகின்றன. ஆனால் இந்த
உறக்கமற்றநிலை தவம் செய்வோரின்
இறுதி முயற்சியாகும். ஆரம்ப
கட்டநிலைகளுக்கு பயன் விளைவிக்காது.
3மணிநேர உறக்கம் போதுமானது என்கிறார்
வள்ளலார் பெருமான்.

பசித்திரு

அதிக உணவும் அடிக்கடி உண்பதும்
நோய்க்கு வித்திடும்.குறைந்த உணவும்
சத்தில்லாத உணவும்
நோய்க்கு அடிகோலிடும் .எனவே பட்டினியால்
இறந்தவரைக் காட்டிலும் அதிக
உணவு உண்டு நோய்வாய்ப்பட்டு சீக்கிரத்தில்
மடிந்தவரே அனேகர்.

“ஆகாரம் அரை : நித்திரை அரைக்கால்:
மைதுனம் வீசம்: பயம் பூஜ்யம்” வள்ளலார்.
அதாவது அரை வயிறு உணவு உண்ணவேண்டும்.கால்
வயிறு நீர் பருக
வேண்டும்.கால்வயிறு காலியாக
காற்று சென்று உணவைக் கூழாக்க இடம்
தரவேண்டும். வள்ளலார் உபதேசித்த
இம்மந்திரங்களை தாயுமானவரும்
கடைபிடித்தார் என்பதை அவரது பாடலின்
வாயிலாக அறியலாம். ஓம் சிவாய நம!