முன் ஜென்ம ஜாதகம் இருக்கும் அதை ஆய்வு பண்ண முடிவு செய்தேன்.

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களையும் பெற வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான சந்தோஷங்கள், நல்லது கெட்டது, மகிழ்ச்சி, இன்பம் , துன்பம்இது எல்லாம் கிரகங்களின் அமைப்பு.

அட்சய லக்ன பத்ததி யில் என்னுடைய அடுத்த கட்ட ஆய்வுகள் என்ன?

இப்பொழுது உள்ள ஜாதகருடைய முன்ஜென்ம ஜாதாக அமைப்புகள் பற்றிதான் என்னுடைய ஆய்வுகள்.

இந்த ஜாதகத்தை உடைய தொடர் நிகழ்வுகளை நான் உருவாக்கி இருக்கேன்.

சில ஜாதகர்களுக்கு யோகமான ஜாதகமாக பார்த்திருப்போம். ஆனால் உண்மையில்அந்த ஜாதகர் எப்பொழுதும் வறுமையிலும் துன்பத்திலும்,நோய்நொடி யான வாழ்க்கை நடத்துவர்.ஆனா ஒண்ணுமே இல்லாத ஜாதகம் அதாவது அவர் கோடான கோடி வாழ்க்கை வாழ்வார்,இதைப் பற்றி ஆய்வு பண்ணும் போதுதான் கண்டிப்பாக இதற்கு முன் ஜென்ம ஜாதகம் இருக்கும் அதை ஆய்வு பண்ண முடிவு செய்தேன்.

அந்த ஜாதகத்திற்கும் இந்த ஜாதகத்திற்க்கும் இன்றைக்கு உள்ள தொடர்பு எப்படி இருக்கும்னா?

ஒரு நண்பர் வந்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்காது அந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன?என்பதை உணரும் பொழுது அதிர்ச்சியும் பேரின்பமும் ஒரு பயம் எனக்குஉருவானது.

வெளியிட முடியாத சூழ்நிலையில இருக்கேன்

அதை வெளியிடும்பொழுது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

ஒரு ஜாதகர் மீன லக்னம்,மீன லக்கனத்தில் 2 ,5,8 ,11 சம்பந்தப்படும்போது சுய கர்மா இயங்கும் சுய கர்மா என்பது நான் செய்த யோகங்கள் அவயோகங்களையும் குறிக்கும்.உண்மையாவே இயங்குதா னு ஆய்வு பண்ணும்போதுஅந்த ஜாதகத்தை எடுத்து பார்க்கும் பொழுது இரண்டாம் வீட்டில் மீன லக்னத்துல இருந்து சனிபகவான் இயக்குறாரு.முன்ஜென்ம ஜாதகத்தில அதே லக்கனத்திலிருந்து சனி பகவான் இயக்குறாரு இதே உத்திரட்டாதி நட்சத்திரம். 2ம் சுய கர்மா 5ம் சுயகர்மா இது எப்படி இயங்குது.இதை உணரும் போது இந்த விஷயங்கள் நிறைய விதமான ஆச்சரியங்களை உண்டாக்கியது.நான் சொல்லக்கூடிய விஷயங்கள் நான் பதிவு பன்ற விஷயங்கள் ஏன் சொல்ல வரனா?ஆய்வு பண்ணி பார்த்தால் 2 வருடம் கழித்தோ 5 வருடம் கழித்து இல்ல 10 வருடம் கழித்து 100 வருடம் கழித்து இந்த விஷயத்தை உணர்வாங்க.கண்டிப்பாக கூடிய விரைவில் வெளியிட வேண்டிக்கிறேன்.

அட்சய லக்ன பத்ததி யில் இன்றைக்கு ஒரு ஜாதகத்தை பார்ப்போம்.இப்பொழுது பார்க்கக்கூடிய ஜாதகம்,இந்த ஜாதகருடைய லக்கனம் விருச்சிகம் ALP லக்கனம் கும்பம்,இந்த ஜாதகருடைய கேள்விகுழந்தைகள் பற்றி. 1, 2, 3, 4, 5,      5-ம் வீடுபுதனுடைய வீடுஇந்த லக்னத்துக்கு இரண்டு அட்டமத்திலே போறாரு அதாவது இரண்டு ஆதிபத்திய தன்மைய செய்வது. 5க்கு அதிபதியுமான 2க்கு அதிபதியான புதன் அட்டமத்தில் உள்ளது.பத்தில் ஒரு பாவி இருந்தாலும் குழந்தை பாக்கியம் உண்டு.ஐந்தாம் அதிபதி அட்டமாதிபதி செயல்படும் பொழுது அந்த ஜாதகர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.மருத்துவ செலவுகள் சம்பந்தப்பட்டு இந்த ஜாதகர் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.விரயாதிபதி லக்னத்தில் உள்ளது.10 ல் சனி சம்பந்தப்படுவதால் இந்த ஜாதகத்திற்கு தத்து குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது.புதன் பகவானுடைய நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரம் விரயத்தில் லக்னாதிபதி உள்ளது. புதனும் சனியும் சம்பந்தப்படும்போது இந்த ஜாதகர் மருத்துவ செலவுகள் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.குழந்தைகள் பற்றிய அமைப்பில் குரு பகவான் பலமாக இருக்க வேண்டும். 2க்கும் 11-க்கும் அதிபத்தியத்தில் இருக்கக் கூடிய குருபகவான் பன்னிரண்டில் விரயத்தை உருவாக்கும்.யோகத்தைக் கொடுக்கும் ஆனா? யோகத்தை கொடுக்கல.கண்டிப்பாக இவருடைய முயற்சிக்கு தகுந்த மாதிரி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்.துர்க்கை அம்மன் உடைய வழிபாடு இந்த காலகட்டத்தில் யோகமாக இருக்கும்.சதய நட்சத்திரம் முடிந்து அடுத்து வரக்கூடிய பூரட்டாதி நட்சத்திரத்தில் ஒரு வாய்ப்பு உண்டு.குரு நட்சத்திரத்தில் இருந்தால் வாய்ப்பு உண்டு.2021 ஜனவரி 31ஆம் தேதிக்கு அப்பறம் யோகத்தை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.ஐந்தாம் அதிபதி அஷ்டமத்தில் குரு இருப்பதால் அங்கு பிரச்சனைகள் உருவாகும்.கும்ப லக்னத்திற்கு ஏழாம் வீடு சிம்மம்.சிம்ம லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான்.அவரே 6 விடாய் போவதால் பிரச்சனை உண்டு.எட்டுக்குடி முருகன் கோவிலில் குழந்தைகள் சார்ந்த அமைப்பு உள்ளது.செவ்வாய் அட்டமத்துல3க்கு உடையவன் அட்டமத்துல.முருகனை பலமாக கும்பிடுவதால் இந்த ஜாதகருக்கு ஒரு வாய்ப்பு உண்டு.

நல்லதொரு நிகழ்வேஅமையட்டும் மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம்.

நன்றி, வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி பாகம் 2

அனைவருக்கும் வணக்கம் இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும்

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

கடந்த வருடம் அட்சய லக்ன பத்ததி பாகம்-1 நூல் வெளியீட்டு விழா பிள்ளையார்பட்டியில் ஸ்ரீ கற்பக விநாயகரின் பேரருள் பெருங்கருணையினால் சுற்றமும், நட்பும், ஜோதிட நண்பர்கள் சூழ மிகச் சிறப்பாக நடைபெற்றது

ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் , உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஒரு வருட காலமாக நான் எதிர்பார்த்த மிகப்பெரிய அட்சய லக்ன பத்ததி பாகம்2 ஆம் நூலை எழுதுவதற்கு காலம் எடுத்துக் கொண்டேன்

நீண்ட தூரப் பயணத்தில் என்னுடைய சிறு முயற்சி. நான் பெற்றதை, நான் அறிந்ததை, கடவுள் எனக்கு கொடுத்ததை என்னுடைய சமூகத்திற்கும், ஜோதிட சொந்தங்களுக்கும் இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்

அட்சய லக்ன பத்ததி பாகம் 1 வளரும் லக்கனம் அல்லது வயது லக்கனம் நடப்பு லக்னம் இது சார்ந்த விஷயங்களை நகரும் தன்மைகளை கணக்கீடு செய்யும் முறைகளைப் பார்த்தோம்.

அதேபோல் இரண்டாம் நூல் ராசிகள் நகரும் விதம் அதன் தன்மை மற்றும் அட்சய லக்னத்திற்கு, அட்சய ராசி அமையும் விதம் அதுசார்ந்த பலன்களை எடுத்துரைப்பது இந்த நூலாகும்.

அட்சய லக்ன பத்ததி பாகம்-2 நீண்ட காலமாக நான் எதிர்பார்த்த கருத்துக்களை கொடுக்க, இறைவன் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கூறுகிறேன்.

நான் எழுதிய நூல் வளரும் ஜோதிடர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அட்சய லக்னம், அட்சய ராசி இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்நூல் ஒரு மாற்றத்தையும், துல்லியமான பலன்களையும் கொடுக்கும் என்றால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.

அட்சய லக்ன பத்ததி பாகம்2

சார்வரி வருடம் ஆனி மாதம் 6ம் தேதி 20/06/2020 சனிக்கிழமை காலை சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா உக்கிர பிரத்யங்கிரா தேவி சர்வ சக்தி பீடத்தில் எளிய முறையில் இந்த நூலை வெளியீடு செய்கிறேன்.

இக்கட்டான சூழ்நிலையில் புத்தத வெளியிட்டிற்கு ஜோதிட நண்பர்களை அழைக்க முடியாதயதற்கு வருந்துகிறேன். ஆனாலும் எங்கு இருந்தாலும் ஜோதிட நண்பர்களின் ஆசியோடு இந்நூல் வெளிவருகிறது.

மீண்டும் இனியதொரு நன்னாளில் நண்பர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு அட்சய லக்ன பத்ததி பாகம் 3 வெளியிடப்படும் என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொள்கிறேன்.

நன்றி

ரோகிணி நட்சத்திரம்

ஓம் நமசிவாய…. குரு வாழ்க …குருவே துணை…

…. ரோகிணி நட்சத்திரம்…..

…. செய்வன திருந்தச் செய்வான்….
…. சேயிழை யார்க்கு நல்லான்…
,…. மெய்யுற மணியும் பொன்னும்
,…. மகிழ்ச்சியாய் அணிய வல்லான்…
….. நெய்யுடன் பாலும் கூட்டி நிரம்பவே
.,….. உண்பன் கற்றோன்..
…. உய்யவே வகுத்திட்டு உண்ணும்
…. ரோஹிணி நாளினானோ ….

… ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்..
,. செய்யும் காரியங்கள் அனைத்தும்,,

… செம்மையாகவும் திருத்தமாகவும் செய்வார்கள்….

… பெண்கள் நட்பும் ,அவர்கள் மேல் நேசமும்,
.. அவர்களுக்கு நல்லவனாகவும்
இருப்பார்கள்..

… பொன்னும் ரத்தினமும் சேர்ந்த
அணிகலன்களை தன் அழகு
.. .. வெளிப்படும்படி அணிந்து
கொள்வார்கள்…

… நெய்யும் பாலும் கலந்த உணவை அதிகமாக உண்பார்கள்…

…. கிடைப்பவற்றை எல்லோருக்கும்
பகிர்ந்து கொடுப்பவர்கள்….

… மேலே உள்ள பாடலுக்கு , இதுதான்
பொருள்….

…27… நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ரோகிணி..****

… சுக்கிரனுடைய வீடான ரிஷப ராசியில் முழு நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் விளங்குவதால்….

… பெண்களை மிகவும் கவர்பவர்கள்…

…. ரோகிணி நட்சத்திரம் மரிச கோத்திரத்தைச் சேர்ந்த பெண் நட்சத்திரம்…

…. இது வான மண்டலத்தில்”” தேர் “” போன்ற உருவமுடைய நட்சத்திரம்….

… விருட்சங்களில் நாவல் மரமாகும்..

… மிருகங்களில் ஆண் நாகமாகவும்…

…. திசைகளில் கிழக்காகவும்….

….. பஞ்ச பூதங்களில் நிலமாகவும்…

…. உடலுறுப்புகளில் நெற்றியாகவும்…

…. கணங்களில் மனுச கணமாகவும்..

…ரோகிணி நட்சத்திரம் விளங்குகிறது…

…. ராஜஸ குணம் கொண்ட நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம்….

…. ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திர
பகவான்….

.,. வணங்க வேண்டிய தெய்வங்கள்…

… சரஸ்வதி…
……..பிரம்மா …
….மஹாலட்சுமி…
… கிருஷ்ணர்…

… ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம்….

…. திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்…

… இது ராகு பகவான் சிவபெருமானை
பூஜித்த திருத்தலம்…

… ராகு பகவான் பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது…

.,.. நவகிரக ஸ்தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ ஸ்தலம் என்ற பெருமையைப் பெற்றது…

…. இந்தக் கோவிலின் மூலவர் நாகநாதர்..

… சிறந்த சிவபக்தரான ராகு பகவான் எல்லா இடங்களிலும் மேன்மை பெற்று விளங்கிய போதும்….

…. இந்த ஸ்தலத்தின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில்…

…”” நாகவல்லி “” “” நாககன்னி “”
ஆகிய இரு தேவியர்களுடன் மங்கள ராகுவாக வீற்றிருப்பது இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது…!!!!

… பொதுவாக ராகு மனித தலை ,,
நாக உடலுடன்தான் காட்சி அளிப்பது வழக்கம்…!!!!

… ஆனால் இந்த ஸ்தலத்தில் மனித வடிவில் ராகு காட்சி அளிக்கிறார்….

… இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால்…

… அணிகின்ற ஆடை மட்டுமல்ல மட்டுமல்ல !!! ….

….இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது …

.தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது…

,..பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் இந்த கோவிலில்பார்க்கலாம்….!!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் அதிதேவதையாக திருநாகேஸ்வரம் நாகநாதர் உள்ளார்…!!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரபகவான்…!!!!!

… சந்திரன் பிரகாசத்தை கொடுக்கக்கூடியவர்….!!!!!

…. ஜோதிடரீதியாக ராகுவும் கேதுவும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் பகை கிரகங்கள்….!!!!

.. ஆனால் சூரியனும் சந்திரனும் திருநாகேஸ்வரம் வந்து சாபவிமோசனம் தீர நாகநாதரை வழிபட்டுள்ளனர்…!!!!

… இதனால் இங்கு வந்து வழிபடுபவர்களின் வாழ்க்கை பிரகாசமாக ஒளி நிறைந்ததாக இருக்கும்….!!!!

…. எதிரிகளின் தொல்லை விலகும்…!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் போது சந்திர தரிசனம் செய்தால்….

கண் கோளாறுகள் நீங்கும்…. முகம் பொலிவு பெறும்…!!!!

… ரோகிணியில் பிறந்தவர் கிருஷ்ண பகவான் என்பதால் …..

பெண்களிடம் காதல் வெளிப்படுத்த உகந்த நட்சத்திரம்…

…. பெண்கள் ,, ஆண்களை வசியம் செய்ய ஏற்ற நட்சத்திரம் ஆகும்….

…. ரோகிணியில் பிறந்த நாயன்மார்கள்…

…… திருநாவுக்கரசர்….
……. திருநாளைப் போவார்…
… நேசர்….
…… மங்கையர்க்கரசியார்..

…. ரோஹிணியில் பிறந்த ஆழ்வார்கள்…

…. கோட்டியூர் நம்பி…..
….. திருப்பாணாழ்வார்…
…. நம்பெருமாள்…
….. நைநாராச்சரம் பிள்ளை…
…. பெரியவாச்சான் பிள்ளை…

.. ரோகிணி நட்சத்திரத்தின் விருட்சம்
நாவல் மரம்….!!!!

… நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலங்கள்….!!!!

… திருச்சி …. திருவானைக்காவல்….
…. ஜம்புகேஸ்வரர் கோவில்…..

…. தஞ்சாவூர்…. திருநாகேஸ்வரம்…
….. உப்பிலியப்பன் கோவில்…….

…,. மதுரை ….பழமுதிர்சோலை…
… சுப்பிரமணியர் கோவில்…..

…. நாமக்கல் ….மோகனூர் …
……கருப்பசாமி கோவில்….

…. தூத்துக்குடி ….கழுகுமலை…
…. சம்புநாத ஈஸ்வரர் கோவில்….

…. மேற்கண்ட ஸ்தலங்களில் ….

..ஏதாவது ஒரு கோவிலுக்கு…

… வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று.

… அங்குள்ள நாவல் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வர, நம்முடைய வாழ்க்கை தரம் உயரும்….

…. ஓம் ப்ராஜா விருத்தியை ச வித்மஹே…
.. விச்வரூபாயை தீமஹி…
… தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்…

… தென்னாடுடைய சிவனே போற்றி..

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..

…. கடையவ னேனைக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட…
.. விடையவ னேவிட் டிடுதிகண் டாய் விறல் வேங்கையின் தோல்..
.. உடையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே….
… சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக்கொள்ளே…
.( மாணிக்கவாசகர் திருவாசகம் )..
… திருச்சிற்றம்பலம்..

… ஜோதிடத்தில் அடிப்படை கல்வி… உயர்நிலைக் கல்வி கற்றுத்தரப்படும்…!!!

.. அடுத்த மாதம் வகுப்புகள் ஆரம்பம்…!!!

… விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்…!!!

M.S. செல்வராஜ்.D.A.B.A. Astro..
.. நல்லூர் … திருப்பூர்…
… தொடர்பு எண்…
..9965742366..
…9360354122…

லால் கிதாப்

12 இராசிகளுக்கும் அதிஷ்டம் அளிக்க கூடிய பண்டைய கால லால் கிதாப் மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள்

12 இராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள்:
இந்த நூல் வடஇந்தியாவில் பலருக்கும் மிகப் பிரசித்தம்.இந்திய ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரத்தைப் பற்றிய பண்டைய நூலான இதில் சில எளிய மற்றும் சிறந்த பலன்களைத் தரும் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
இந்திய மட்டுமின்றி பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹிந்துக்கள் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களும் பின்பற்றிப் பலன் பெறுகின்றனர்.ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள் :-

1.எந்தப் பொருளையும் இலவசமாக வாங்கதிர்கள்.ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .
2.சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.
3.பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும்.பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
4.ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது .இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.
5. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.
6.தாய்,குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.
7.உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்

ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.ஆடையில் நல்ல வாசனைத் திரவியம் ( சென்ட் ) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தைப் பேருக்கும்.
2.சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.
3.மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு, மன உளைச்சல் ,பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்.கவனம் தேவை.
4.மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிறப் பூக்களைப் போடச் சொல்லலாம்.இது தம்பதிகளுக்குத் தோஷ நிவாரணமாகவும் அன்யோன்யத்தைப் பெருக்குவதாகவும் அமையும்.
5.பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்குப் பசுமாடு தானம் தரலாம்.
6.பட்டு,நைலான் ,பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் அதிர்ஷ்டமானவை.
7.ஜனவரி ,பிப்ரவரி மாதங்களில் புதிதாகச் செருப்பு,ஷூ வாங்க வேண்டாம். இது துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
8.நீடித்த நல்வாழ்விற்கு :-
உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மனைவியைத் தினமும் ஏதாவது ஏழைகளுக்குப் பணம்,உணவு என்று முடிந்ததைத் தானமாக வழங்கலாம். யாரும் பிச்சை கேட்டால் இல்லை என்று சொல்லாமல் ஒரு ரூபாயாவது போடுங்கள்.இது நிறைந்த செழிப்பான வாழ்வைத் தரும்.

மிதுன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.படிகாரத்தூள் கொண்டு அல்லது படிகாரத்தூள் சேர்த்த பற்பொடி பற்பசை கொண்டு பல்துலக்குவது அதிர்ஷ்டம் தரும்.
2.முடிந்த போது மீனுக்குப் பொரி அல்லது இரை போடுவது நன்மை பயக்கும்.
3.புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பால், அரிசி தானமாக வழங்கலாம்.
4.உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்கள் வாங்கித் தரலாம்.
5.12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் திட்டக்கூடாது.அவர்களை புதன்கிழமை அன்று வணங்கி ஆசி பெறுவது நன்மை தரும்.
6.பச்சை நிற ஆடைகள் அணியக் கூடாது.துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
7.வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கக் கூடாது.
8.பச்சை நிறப் பாட்டிலில் கங்கை நீர் நிரப்பி அந்த பாட்டிலை இறுக்கமாக மூடி விடவும்.ஒரு வயலில் கொஞ்சம் நெருப்பு மூட்டி அதில் அந்த பாட்டிலைப் போட்டு விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்

கடக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.செம்பு நட்டு,போல்ட் போடப்பட்ட கட்டிலில் உறங்குவது நல்லது.
2.வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டு வரும்.
3.நீங்கள் மருத்துவர்களாக அல்லது ஹீலராக இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக சேவை செய்வது நன்மை தரும்.
4.எப்பொழுதும் வெறும் காலுடன் கோயிலுக்கு செல்லவேண்டும்.
5.ஆன்மீக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் முடிந்த தொண்டாற்ற வேண்டும்.
6.பௌர்ணமி அன்று தாயிடம் இருந்து ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசியை ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வாங்கி அதை எப்போதும் பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்திருந்தால் என்றும் வறுமை ஏற்படாது.
7.சிறு வெள்ளித் துண்டு (SILVER BRICK) வாங்கி அதை வீட்டின் முன் வாசலில் வைத்து எரித்து விடவும்.இதுவும் வறுமை கடன் ஏற்படாது தடுக்கும்

சிம்ம ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.முக்கியமான நிகழ்ச்சிகள்,இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.
2.மனைவியின் சகோதரர்கள்,மருமகன்கள் ,தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள்.
3.ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது செல்வ நிலையில் ,தொழில் மற்றும் வேளையில் உயர்வு தரும்.
4.கண்பார்வையற்ற 10 பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு பண்டம் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.
5. உங்கள் ப[பொருளாதார நிலைக்கேற்ப ஏதேனும் ஒரு சேவை நிலையம் ,அன்னதான மன்றத்திற்கு அரிசி,பால் வழங்கலாம்.
6.யாரேனும் அன்பளிப்பாக ஏதாவது தந்தால் பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும்.
7.மது மாமிசம் உண்பதை அறவே தவிர்ப்பது நல்லது.
8. 7 வகைத் தானியங்களை வாங்கி ஒரு சிகப்புத் துணியில் முடிந்து தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் காலையில்,அதை எறும்புகளுக்கு உண்ணக் கொடுத்தால் பித்ரு தோஷம் தீரும்.சுப காரியத் தடைகள் நீங்கும்.இதை சனிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.
9.உண்மையே பேச முயற்சியுங்கள்.நன்கு யோசித்த பின் வாக்குறுதி கொடுங்கள் அப்படிக் கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்

கன்னி ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மூக்குத்தி அணிவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும்.
2.மழை பெய்யும் பொழுது மொட்டை மாடி அல்லது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
3.வீட்டில் வழிபாடு செய்யும் இடத்தை அடிக்கடி மாற்றக் கூடாது.
4.புத்தாடை அணியும் முன் அவற்றில் கொஞ்சம் கங்கா ஜலம் அல்லது தீர்த்தாகர்ஷண மந்திரம் ஜெபிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆடையில் சிறிது தெளித்த பின் அணிந்து வர என்றும் ஆடை ,அணிகலன்களுக்குக் குறை இருக்காது.
5.சனிக்ரஹ சாந்தி செய்து கொள்ளவும்.
6.மது,புகையிலை,புகை போன்ற போதைப் பழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பது வாழ்வில் உயர்வு தரும்.
7.புதன்கிழமை அன்று ஒரு மண் மூடியில் அகல் விளக்கு வைத்து அதை ஓடும் நீர் அல்லது கடலில் விடவும்.
8.புதன்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.மேலும் அன்று யாரையும் சபிக்கவோ யாருக்கும் வாக்குறுதி (PROMISE) அளிக்கவோ கூடாது.
9.பச்சை நிற கர்ச்சீப் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்

துலாம் ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்.
2.கோயில் அல்லது தானங்களுக்கு வெண்ணை,தயிர்,உருளைக்கிழங்கு தானமாக அளிக்கலாம்.
3.வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கோமியம் ( பசுமூத்திரம் ) தெளித்து வர செல்வம் பெருகும்.
4.மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வு தரும்.
5.நீங்கள் ஆண் என்றால் மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது ஏதேனும் ஒரு பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம் தரும்.
6.வீட்டுப்பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் போது செருப்பு அணிந்து நடக்கச் சொல்ல வேண்டும்.
7.நீங்கள் ஆண் என்றால் பெண்களை மதிப்பாகவே பேசுங்கள்.அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்.
8.பெற்றோர் தேர்ந்தெடுத்தவரையே திருமணம் செய்து கொள்வது நல்லது.
9. வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன் விட்டு வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்.
10.தானமாக எதையும் பெறாதீர்கள்.அது வறுமையை ஏற்படுத்தும்

விருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.வீட்டில் மண்ணால் செய்யப்பட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாக்கும்.
2.தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.
3.அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது.
4.செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
5.சிகப்பு நிற கர்ச்சீப் ,டை அதிர்ஷ்டம் தரும்.
6.பால் காய்ச்சும் பொழுது பொங்கி வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
7.இனிப்பு ரொட்டி செய்து சாதுக்கள்,மகான்களுக்கு வழங்கலாம்.
8.யாரிடம் இருந்தும் எந்தப் பொருளும் இலவசமாகப் பெறாதீர்கள்.அப்படிப் பெற்றால் அதற்குப் பதில் ஒரு பொருளேனும் கொடுத்து விடவும்.
9.செவ்வாய்க்கிழமை அன்று தேன், குங்குமம் சிகப்பு ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
10.செவ்வாய்க் கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்குச் சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது வாழ்வில் வளம் சேர்க்கும்.
11.சகோதர்களின் மனைவியுடன் சண்டை இல்லமால் பார்த்துக் கொள்ளுங்கள்.
12.மூத்த சகோதரரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் .
13.செவ்வாய்க் கிழமைகளில் ஹனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை,கடன்,நோய்கள் நீங்கிய நல்வாழ்வு கிட்டும்

தனுசு ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
2.தந்தையின் படுக்கை,ஆடைகள்,உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை.
3.பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தர்மம் செய்யவும்.
4.திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய்,தயிர்,அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்.
5.வீட்டின் முன்பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
6.வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம்,வழிபாடு நன்மை தரும்.
8.யாரையும் ஏமாற்றவோ ,பொய் சாட்சி கூறவோ கூடாது.
9. வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் சென்று கங்கையில் குளித்து தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்ள அப்படியே நடக்கும்

மகர ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள்,யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்பு,ஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள்,எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.
2.ஆண் / பெண் யாராக இருந்தாலும் கணவன் /மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ ,அதற்காக முயற்சிக்கவோ கூடாது.இது பிற்கால வாழ்வில் கொடிய தரித்திரத்தை உண்டாக்கும்.
3.பாலும் சீனியும் கலந்து ஆல மர வேரில் விடவும்.அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள செல்வவளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.
4. கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும்.
5.48 வயதுக்கு பின் வீடு கட்டுவது நாளது.அதற்கு முன் வீடு கட்டுவது அதிர்ஷ்டமல்ல.
6.கருப்பு,நீலம் ,ரோஸ் நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.
7.ஏதேனும் ஒரு சனிக்கிழமை கொஞ்சம் பால்,மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடவும்.இது துரதிர்ஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும்.
8.கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது

கும்ப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.கையிலோ கழுத்திலோ தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும்.
2.குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றியில் திலகம் இட்டு வர நிறைந்த செல்வத்துடன் வாழலாம்.
3.மாதம் ஒரு முறை குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால் பீடைகள் நீங்கும்.
4.சதுரவடிவமான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்துக் கழுத்தில் அணிந்தால் வேலை அல்லது தொழில் உயர்ந்த நிலை கிட்டும்.
5.வெள்ளியை உருக்கி 4 சிறு உருண்டைகளாகச் செய்து அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டைப்பையில் வைத்திருந்தாள் செல்வம் பெருகும்.
6.ஏழைகள் அலல்து கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்யலாம்.
7.ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவருக்கு மது படைக்கலாம்.ஆனால் அதை அருந்தக்கூடாது.
8.வீட்டின் மேல்பகுதி அல்லது மொட்டைமாடியில் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் வைக்கக் கூடாது.
9.விரதம் இருப்பதாக இருந்தால் சனிக்கிழமை இருக்கவும்.
10.மது மாமிசம் உண்பதைத் தவிர்க்கவும்

மீன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.
2.பிறர் முன்னையில் குளிக்கக் கூடாது.
3.மொட்டை போட்டால் முழுக்க மொட்டையடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும்.
4.ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.
5.வீட்டில் துளசி வளர்க்கக் கூடாது.
6.வீட்டின் வழிபாட்டு அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் கலந்து கொள்வது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம் மற்றும் வழிபாடு நன்மை பயக்கும்.
8. யாரிடம் இருந்தும் தானமாக எதையும் பெறக்கூடாது.
9.வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
10.தொழில் சார்ந்த முடிவுகளில் மனைவியைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.
11.பணப்பெட்டி அல்லது பீரோவில் தங்கக் கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க செல்வம் பெருகும்.
12.கோழிக்குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.
13.குருமார்களுடன் தொடர்ந்த தொடர்பில் இருத்தல் நன்று.

(அனைவரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்)