ரோகிணி நட்சத்திரம்

ஓம் நமசிவாய…. குரு வாழ்க …குருவே துணை…

…. ரோகிணி நட்சத்திரம்…..

…. செய்வன திருந்தச் செய்வான்….
…. சேயிழை யார்க்கு நல்லான்…
,…. மெய்யுற மணியும் பொன்னும்
,…. மகிழ்ச்சியாய் அணிய வல்லான்…
….. நெய்யுடன் பாலும் கூட்டி நிரம்பவே
.,….. உண்பன் கற்றோன்..
…. உய்யவே வகுத்திட்டு உண்ணும்
…. ரோஹிணி நாளினானோ ….

… ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்..
,. செய்யும் காரியங்கள் அனைத்தும்,,

… செம்மையாகவும் திருத்தமாகவும் செய்வார்கள்….

… பெண்கள் நட்பும் ,அவர்கள் மேல் நேசமும்,
.. அவர்களுக்கு நல்லவனாகவும்
இருப்பார்கள்..

… பொன்னும் ரத்தினமும் சேர்ந்த
அணிகலன்களை தன் அழகு
.. .. வெளிப்படும்படி அணிந்து
கொள்வார்கள்…

… நெய்யும் பாலும் கலந்த உணவை அதிகமாக உண்பார்கள்…

…. கிடைப்பவற்றை எல்லோருக்கும்
பகிர்ந்து கொடுப்பவர்கள்….

… மேலே உள்ள பாடலுக்கு , இதுதான்
பொருள்….

…27… நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ரோகிணி..****

… சுக்கிரனுடைய வீடான ரிஷப ராசியில் முழு நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் விளங்குவதால்….

… பெண்களை மிகவும் கவர்பவர்கள்…

…. ரோகிணி நட்சத்திரம் மரிச கோத்திரத்தைச் சேர்ந்த பெண் நட்சத்திரம்…

…. இது வான மண்டலத்தில்”” தேர் “” போன்ற உருவமுடைய நட்சத்திரம்….

… விருட்சங்களில் நாவல் மரமாகும்..

… மிருகங்களில் ஆண் நாகமாகவும்…

…. திசைகளில் கிழக்காகவும்….

….. பஞ்ச பூதங்களில் நிலமாகவும்…

…. உடலுறுப்புகளில் நெற்றியாகவும்…

…. கணங்களில் மனுச கணமாகவும்..

…ரோகிணி நட்சத்திரம் விளங்குகிறது…

…. ராஜஸ குணம் கொண்ட நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம்….

…. ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திர
பகவான்….

.,. வணங்க வேண்டிய தெய்வங்கள்…

… சரஸ்வதி…
……..பிரம்மா …
….மஹாலட்சுமி…
… கிருஷ்ணர்…

… ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம்….

…. திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்…

… இது ராகு பகவான் சிவபெருமானை
பூஜித்த திருத்தலம்…

… ராகு பகவான் பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது…

.,.. நவகிரக ஸ்தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ ஸ்தலம் என்ற பெருமையைப் பெற்றது…

…. இந்தக் கோவிலின் மூலவர் நாகநாதர்..

… சிறந்த சிவபக்தரான ராகு பகவான் எல்லா இடங்களிலும் மேன்மை பெற்று விளங்கிய போதும்….

…. இந்த ஸ்தலத்தின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில்…

…”” நாகவல்லி “” “” நாககன்னி “”
ஆகிய இரு தேவியர்களுடன் மங்கள ராகுவாக வீற்றிருப்பது இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது…!!!!

… பொதுவாக ராகு மனித தலை ,,
நாக உடலுடன்தான் காட்சி அளிப்பது வழக்கம்…!!!!

… ஆனால் இந்த ஸ்தலத்தில் மனித வடிவில் ராகு காட்சி அளிக்கிறார்….

… இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால்…

… அணிகின்ற ஆடை மட்டுமல்ல மட்டுமல்ல !!! ….

….இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது …

.தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது…

,..பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் இந்த கோவிலில்பார்க்கலாம்….!!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் அதிதேவதையாக திருநாகேஸ்வரம் நாகநாதர் உள்ளார்…!!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரபகவான்…!!!!!

… சந்திரன் பிரகாசத்தை கொடுக்கக்கூடியவர்….!!!!!

…. ஜோதிடரீதியாக ராகுவும் கேதுவும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் பகை கிரகங்கள்….!!!!

.. ஆனால் சூரியனும் சந்திரனும் திருநாகேஸ்வரம் வந்து சாபவிமோசனம் தீர நாகநாதரை வழிபட்டுள்ளனர்…!!!!

… இதனால் இங்கு வந்து வழிபடுபவர்களின் வாழ்க்கை பிரகாசமாக ஒளி நிறைந்ததாக இருக்கும்….!!!!

…. எதிரிகளின் தொல்லை விலகும்…!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் போது சந்திர தரிசனம் செய்தால்….

கண் கோளாறுகள் நீங்கும்…. முகம் பொலிவு பெறும்…!!!!

… ரோகிணியில் பிறந்தவர் கிருஷ்ண பகவான் என்பதால் …..

பெண்களிடம் காதல் வெளிப்படுத்த உகந்த நட்சத்திரம்…

…. பெண்கள் ,, ஆண்களை வசியம் செய்ய ஏற்ற நட்சத்திரம் ஆகும்….

…. ரோகிணியில் பிறந்த நாயன்மார்கள்…

…… திருநாவுக்கரசர்….
……. திருநாளைப் போவார்…
… நேசர்….
…… மங்கையர்க்கரசியார்..

…. ரோஹிணியில் பிறந்த ஆழ்வார்கள்…

…. கோட்டியூர் நம்பி…..
….. திருப்பாணாழ்வார்…
…. நம்பெருமாள்…
….. நைநாராச்சரம் பிள்ளை…
…. பெரியவாச்சான் பிள்ளை…

.. ரோகிணி நட்சத்திரத்தின் விருட்சம்
நாவல் மரம்….!!!!

… நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலங்கள்….!!!!

… திருச்சி …. திருவானைக்காவல்….
…. ஜம்புகேஸ்வரர் கோவில்…..

…. தஞ்சாவூர்…. திருநாகேஸ்வரம்…
….. உப்பிலியப்பன் கோவில்…….

…,. மதுரை ….பழமுதிர்சோலை…
… சுப்பிரமணியர் கோவில்…..

…. நாமக்கல் ….மோகனூர் …
……கருப்பசாமி கோவில்….

…. தூத்துக்குடி ….கழுகுமலை…
…. சம்புநாத ஈஸ்வரர் கோவில்….

…. மேற்கண்ட ஸ்தலங்களில் ….

..ஏதாவது ஒரு கோவிலுக்கு…

… வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று.

… அங்குள்ள நாவல் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வர, நம்முடைய வாழ்க்கை தரம் உயரும்….

…. ஓம் ப்ராஜா விருத்தியை ச வித்மஹே…
.. விச்வரூபாயை தீமஹி…
… தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்…

… தென்னாடுடைய சிவனே போற்றி..

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..

…. கடையவ னேனைக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட…
.. விடையவ னேவிட் டிடுதிகண் டாய் விறல் வேங்கையின் தோல்..
.. உடையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே….
… சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக்கொள்ளே…
.( மாணிக்கவாசகர் திருவாசகம் )..
… திருச்சிற்றம்பலம்..

… ஜோதிடத்தில் அடிப்படை கல்வி… உயர்நிலைக் கல்வி கற்றுத்தரப்படும்…!!!

.. அடுத்த மாதம் வகுப்புகள் ஆரம்பம்…!!!

… விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்…!!!

M.S. செல்வராஜ்.D.A.B.A. Astro..
.. நல்லூர் … திருப்பூர்…
… தொடர்பு எண்…
..9965742366..
…9360354122…

மன்மத வருட தமிழ் புத்தாண்டு

02-1425269516-manmatha-varudam11

 

அனைவருக்கும் மன்மத வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்…
நமது தமிழ் வருட பஞ்சாங்கங்களில் முதல் பக்கத்தில் அந்த வருடத்தின் நவ நாயகர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும், இதனை எவ்வாறு கணிதம் செய்கின்றனர் என்பது பெரும்பாலும் பஞ்சாங்க கணிதர்களுக்கும், பரம்பரை ஜோதிடர்களுக்கும் மட்டும் தெரிந்திருக்கும் விடயம்

மன்மத வருட- நவ நாயகர்கள்

இராஜா – சனி
மந்திரி – செவ்வாய்
சேனாதிபதி – சந்திரன்
அர்க்காதிபதி – சந்திரன்
ஸஸ்யாதிபதி – குரு
இரஸாதிபதி – சனி
தான்யாதிபதி – புதன்
மேகாதிபதி – சந்திரன்
நீரஸாதிபதி – குரு

இது போல ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் இராஜா,மந்திரி,சேனாதிபதி, அர்க்காதிபதி, ஸஸ்யாதிபதி, இரஸாதிபதி, தான்யாதிபதி, மேகாதிபதி, நீரஸாதிபதி ஆக சில கிரகங்கள் வருவார்கள் இவைகளை எவ்வாறு கணிதம் செய்கின்றனர் என்பதனை பார்ப்போம்.

1.ராஜா
ஒருவருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் வளர்பிறை பிரதமை திதி வரும் கிழமையின் அதிபதி , அடுத்த தமிழ் வருடத்தின் இராஜா ஆவார்.

ஜய வருஷம் பங்குனி மாதம் வளர்பிறை பிரதமை சனிக்கிழமை வருவதால் சனி பகவான் அடுத்து வரும் மன்மத வருஷத்தின் ராஜா ஆவார்.

2.மந்திரி
தமிழ் வருடத்தின் முதல் நாள் ( சித்திரை -1 ) என்ன கிழமையில் வருகிறது அதன் அதிபதி அந்த வருடத்தின் மந்திரி ஆவார்.

மன்மத வருஷம் சித்திரை 1ம் நாள் செவ்வாய்க்கிழமை வருவதால் செவ்வாய் இந்த வருஷ மந்திரி ஆவார்.

3.சேனாதிபதி
சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி சேனாதிபதி அந்த வருடத்தின் ஆவார்.

மன்மத வருஷம் ஆடி மாதம் 32ம் நாள் 16 நாழிகை, 02 வினாடிக்கு சூரியன் மகம் 1ம் பாதத்தில் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று திங்கள் கிழமை ஆதலால் மன்மத வருஷ சேனாதிபதி சந்திரன் ஆவார்.

4.அர்க்காதிபதி
மிதுன ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் அர்க்காதிபதி ஆவார்.

மன்மத வருஷம் வைகாசி மாதம் 32ம் நாள் 28 நாழிகை, 23 வினாடிக்கு சூரியன் மிருகசீரிசம் 3ம் பாதத்தில் மிதுன ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று திங்கள் கிழமை ஆதலால் மன்மத வருஷ அர்க்காதிபதி சந்திரன் ஆவார்.

5.ஸஸ்யாதிபதி
கடக ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் ஸஸ்யாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் ஆனி மாதம் 31ம் நாள் 15 நாழிகை, 10 வினாடிக்கு சூரியன் புனர்பூசம் 4ம் பாதத்தில் கடக ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று வியாழக்கிழமை ஆதலால் மன்மத வருஷ ஸஸ்யாதிபதி குரு ஆவார்.

6.இரஸாதிபதி
துலாம் ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் இரஸாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் புரட்டாசி மாதம் 30ம் நாள் 45 நாழிகை, 29 வினாடிக்கு சூரியன் சித்திரை 3ம் பாதத்தில் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார் .
அன்று சனிக்கிழமை ஆதலால் மன்மத வருஷ இரஸாதிபதி சனி பகவான் ஆவார்.

7.தான்யாதிபதி
தனுசு ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் தான்யாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் கார்த்திகை மாதம் 30ம் நாள் 20 நாழிகை, 29 வினாடிக்கு சூரியன் மூலம் 1ம் பாதத்தில் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று புதன்கிழமை ஆதலால் மன்மத வருஷ தான்யாதிபதி புதன் ஆவார்.

8. மேகாதிபதி
திருவாதிரை முதல் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் மேகாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் ஆனி மாதம் 7ம் நாள் திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிப்பதால் , மன்மத வருஷ மேகாதிபதி சந்திரன் ஆவார்.

9. நீரஸாதிபதி
மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் நீரஸாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் மார்கழி மாதம் 29ம் நாள் 45 நாழிகை, 41 வினாடிக்கு சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று வியாழக்கிழமை ஆதலால் மன்மத வருஷ நீரஸாதிபதி குரு ஆவார்.

12 ராசிகளின் ஆதாய விரய கணிதம் எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பது இனி வரும் பதிவுகளில்

நன்றி
அஸ்ட்ரோ கண்ணன்