அட்சய லக்ன பத்ததி பாகம் 2

அனைவருக்கும் வணக்கம் இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும்

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

கடந்த வருடம் அட்சய லக்ன பத்ததி பாகம்-1 நூல் வெளியீட்டு விழா பிள்ளையார்பட்டியில் ஸ்ரீ கற்பக விநாயகரின் பேரருள் பெருங்கருணையினால் சுற்றமும், நட்பும், ஜோதிட நண்பர்கள் சூழ மிகச் சிறப்பாக நடைபெற்றது

ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் , உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஒரு வருட காலமாக நான் எதிர்பார்த்த மிகப்பெரிய அட்சய லக்ன பத்ததி பாகம்2 ஆம் நூலை எழுதுவதற்கு காலம் எடுத்துக் கொண்டேன்

நீண்ட தூரப் பயணத்தில் என்னுடைய சிறு முயற்சி. நான் பெற்றதை, நான் அறிந்ததை, கடவுள் எனக்கு கொடுத்ததை என்னுடைய சமூகத்திற்கும், ஜோதிட சொந்தங்களுக்கும் இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்

அட்சய லக்ன பத்ததி பாகம் 1 வளரும் லக்கனம் அல்லது வயது லக்கனம் நடப்பு லக்னம் இது சார்ந்த விஷயங்களை நகரும் தன்மைகளை கணக்கீடு செய்யும் முறைகளைப் பார்த்தோம்.

அதேபோல் இரண்டாம் நூல் ராசிகள் நகரும் விதம் அதன் தன்மை மற்றும் அட்சய லக்னத்திற்கு, அட்சய ராசி அமையும் விதம் அதுசார்ந்த பலன்களை எடுத்துரைப்பது இந்த நூலாகும்.

அட்சய லக்ன பத்ததி பாகம்-2 நீண்ட காலமாக நான் எதிர்பார்த்த கருத்துக்களை கொடுக்க, இறைவன் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கூறுகிறேன்.

நான் எழுதிய நூல் வளரும் ஜோதிடர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அட்சய லக்னம், அட்சய ராசி இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்நூல் ஒரு மாற்றத்தையும், துல்லியமான பலன்களையும் கொடுக்கும் என்றால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.

அட்சய லக்ன பத்ததி பாகம்2

சார்வரி வருடம் ஆனி மாதம் 6ம் தேதி 20/06/2020 சனிக்கிழமை காலை சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா உக்கிர பிரத்யங்கிரா தேவி சர்வ சக்தி பீடத்தில் எளிய முறையில் இந்த நூலை வெளியீடு செய்கிறேன்.

இக்கட்டான சூழ்நிலையில் புத்தத வெளியிட்டிற்கு ஜோதிட நண்பர்களை அழைக்க முடியாதயதற்கு வருந்துகிறேன். ஆனாலும் எங்கு இருந்தாலும் ஜோதிட நண்பர்களின் ஆசியோடு இந்நூல் வெளிவருகிறது.

மீண்டும் இனியதொரு நன்னாளில் நண்பர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு அட்சய லக்ன பத்ததி பாகம் 3 வெளியிடப்படும் என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொள்கிறேன்.

நன்றி

ரோகிணி நட்சத்திரம்

ஓம் நமசிவாய…. குரு வாழ்க …குருவே துணை…

…. ரோகிணி நட்சத்திரம்…..

…. செய்வன திருந்தச் செய்வான்….
…. சேயிழை யார்க்கு நல்லான்…
,…. மெய்யுற மணியும் பொன்னும்
,…. மகிழ்ச்சியாய் அணிய வல்லான்…
….. நெய்யுடன் பாலும் கூட்டி நிரம்பவே
.,….. உண்பன் கற்றோன்..
…. உய்யவே வகுத்திட்டு உண்ணும்
…. ரோஹிணி நாளினானோ ….

… ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்..
,. செய்யும் காரியங்கள் அனைத்தும்,,

… செம்மையாகவும் திருத்தமாகவும் செய்வார்கள்….

… பெண்கள் நட்பும் ,அவர்கள் மேல் நேசமும்,
.. அவர்களுக்கு நல்லவனாகவும்
இருப்பார்கள்..

… பொன்னும் ரத்தினமும் சேர்ந்த
அணிகலன்களை தன் அழகு
.. .. வெளிப்படும்படி அணிந்து
கொள்வார்கள்…

… நெய்யும் பாலும் கலந்த உணவை அதிகமாக உண்பார்கள்…

…. கிடைப்பவற்றை எல்லோருக்கும்
பகிர்ந்து கொடுப்பவர்கள்….

… மேலே உள்ள பாடலுக்கு , இதுதான்
பொருள்….

…27… நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ரோகிணி..****

… சுக்கிரனுடைய வீடான ரிஷப ராசியில் முழு நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் விளங்குவதால்….

… பெண்களை மிகவும் கவர்பவர்கள்…

…. ரோகிணி நட்சத்திரம் மரிச கோத்திரத்தைச் சேர்ந்த பெண் நட்சத்திரம்…

…. இது வான மண்டலத்தில்”” தேர் “” போன்ற உருவமுடைய நட்சத்திரம்….

… விருட்சங்களில் நாவல் மரமாகும்..

… மிருகங்களில் ஆண் நாகமாகவும்…

…. திசைகளில் கிழக்காகவும்….

….. பஞ்ச பூதங்களில் நிலமாகவும்…

…. உடலுறுப்புகளில் நெற்றியாகவும்…

…. கணங்களில் மனுச கணமாகவும்..

…ரோகிணி நட்சத்திரம் விளங்குகிறது…

…. ராஜஸ குணம் கொண்ட நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம்….

…. ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திர
பகவான்….

.,. வணங்க வேண்டிய தெய்வங்கள்…

… சரஸ்வதி…
……..பிரம்மா …
….மஹாலட்சுமி…
… கிருஷ்ணர்…

… ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம்….

…. திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்…

… இது ராகு பகவான் சிவபெருமானை
பூஜித்த திருத்தலம்…

… ராகு பகவான் பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது…

.,.. நவகிரக ஸ்தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ ஸ்தலம் என்ற பெருமையைப் பெற்றது…

…. இந்தக் கோவிலின் மூலவர் நாகநாதர்..

… சிறந்த சிவபக்தரான ராகு பகவான் எல்லா இடங்களிலும் மேன்மை பெற்று விளங்கிய போதும்….

…. இந்த ஸ்தலத்தின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில்…

…”” நாகவல்லி “” “” நாககன்னி “”
ஆகிய இரு தேவியர்களுடன் மங்கள ராகுவாக வீற்றிருப்பது இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது…!!!!

… பொதுவாக ராகு மனித தலை ,,
நாக உடலுடன்தான் காட்சி அளிப்பது வழக்கம்…!!!!

… ஆனால் இந்த ஸ்தலத்தில் மனித வடிவில் ராகு காட்சி அளிக்கிறார்….

… இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால்…

… அணிகின்ற ஆடை மட்டுமல்ல மட்டுமல்ல !!! ….

….இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது …

.தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது…

,..பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் இந்த கோவிலில்பார்க்கலாம்….!!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் அதிதேவதையாக திருநாகேஸ்வரம் நாகநாதர் உள்ளார்…!!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரபகவான்…!!!!!

… சந்திரன் பிரகாசத்தை கொடுக்கக்கூடியவர்….!!!!!

…. ஜோதிடரீதியாக ராகுவும் கேதுவும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் பகை கிரகங்கள்….!!!!

.. ஆனால் சூரியனும் சந்திரனும் திருநாகேஸ்வரம் வந்து சாபவிமோசனம் தீர நாகநாதரை வழிபட்டுள்ளனர்…!!!!

… இதனால் இங்கு வந்து வழிபடுபவர்களின் வாழ்க்கை பிரகாசமாக ஒளி நிறைந்ததாக இருக்கும்….!!!!

…. எதிரிகளின் தொல்லை விலகும்…!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் போது சந்திர தரிசனம் செய்தால்….

கண் கோளாறுகள் நீங்கும்…. முகம் பொலிவு பெறும்…!!!!

… ரோகிணியில் பிறந்தவர் கிருஷ்ண பகவான் என்பதால் …..

பெண்களிடம் காதல் வெளிப்படுத்த உகந்த நட்சத்திரம்…

…. பெண்கள் ,, ஆண்களை வசியம் செய்ய ஏற்ற நட்சத்திரம் ஆகும்….

…. ரோகிணியில் பிறந்த நாயன்மார்கள்…

…… திருநாவுக்கரசர்….
……. திருநாளைப் போவார்…
… நேசர்….
…… மங்கையர்க்கரசியார்..

…. ரோஹிணியில் பிறந்த ஆழ்வார்கள்…

…. கோட்டியூர் நம்பி…..
….. திருப்பாணாழ்வார்…
…. நம்பெருமாள்…
….. நைநாராச்சரம் பிள்ளை…
…. பெரியவாச்சான் பிள்ளை…

.. ரோகிணி நட்சத்திரத்தின் விருட்சம்
நாவல் மரம்….!!!!

… நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலங்கள்….!!!!

… திருச்சி …. திருவானைக்காவல்….
…. ஜம்புகேஸ்வரர் கோவில்…..

…. தஞ்சாவூர்…. திருநாகேஸ்வரம்…
….. உப்பிலியப்பன் கோவில்…….

…,. மதுரை ….பழமுதிர்சோலை…
… சுப்பிரமணியர் கோவில்…..

…. நாமக்கல் ….மோகனூர் …
……கருப்பசாமி கோவில்….

…. தூத்துக்குடி ….கழுகுமலை…
…. சம்புநாத ஈஸ்வரர் கோவில்….

…. மேற்கண்ட ஸ்தலங்களில் ….

..ஏதாவது ஒரு கோவிலுக்கு…

… வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று.

… அங்குள்ள நாவல் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வர, நம்முடைய வாழ்க்கை தரம் உயரும்….

…. ஓம் ப்ராஜா விருத்தியை ச வித்மஹே…
.. விச்வரூபாயை தீமஹி…
… தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்…

… தென்னாடுடைய சிவனே போற்றி..

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..

…. கடையவ னேனைக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட…
.. விடையவ னேவிட் டிடுதிகண் டாய் விறல் வேங்கையின் தோல்..
.. உடையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே….
… சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக்கொள்ளே…
.( மாணிக்கவாசகர் திருவாசகம் )..
… திருச்சிற்றம்பலம்..

… ஜோதிடத்தில் அடிப்படை கல்வி… உயர்நிலைக் கல்வி கற்றுத்தரப்படும்…!!!

.. அடுத்த மாதம் வகுப்புகள் ஆரம்பம்…!!!

… விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்…!!!

M.S. செல்வராஜ்.D.A.B.A. Astro..
.. நல்லூர் … திருப்பூர்…
… தொடர்பு எண்…
..9965742366..
…9360354122…

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?
————————————————————
1. ஜோதிட ஆலோசனை பெற விரும்புபவர்கள் ஜோதிடரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதே சால சிறந்தது. உங்களுக்கு நேரமில்லை, நேரில் சந்திக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கும்வரை உங்கள் வாழ்க்கையில் தடைகள் தொடரும்.
2. ஜோதிட ஆலோசனை பெறும்போது தன் சொந்த சோகக் கதைகளை மூச்சு விடாமல் சொல்லி ஜோதிடர் தன் பணியை செய்யவிடாமல் செய்து, ஜோதிடர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது பெரும் தவறு. உங்களுக்கு உரிய ஆலோசனை அப்பொழுது கிடைக்காது. நவக்கிரகங்கள் உங்களுக்கு நல்வழி காட்ட மாட்டார்கள்.
3. ஜோதிடரை கீழே உட்கார வைத்து விட்டு , நீங்கள் உயரத்தில் உட்கார்ந்து கொண்டு , காலாட்டிக்கொண்டு அதிகார தோரணையில் பலன் கேட்டால் உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக்கொள்கிறீர்கள் என்று பொருள். இது நவ கிரகங்களையே அவமதிக்கும் செயல்.
4. ஜோதிட ஆலோசனையின் போது நக்கல், நையாண்டியாக பேசுவது அல்லது மிரட்டுவதுபோல் பேசுவது எல்லாம் ஜோதிடரின் மூலம் நவகிரக சாபத்தை பெறுவதற்கு வழி வகுக்கும். நல்ல மனமும் ,குணமும் உள்ள ஜோதிடர்களிம் இவ்வாறு நடந்துகொள்பவர்களுக்கு நிச்சயம் இது நடக்கும்.
5. ஜோதிட ஆலோசனை கேட்பவர் மௌனமாக அமைதியாக இருந்து ஜோதிடர் சொல்வதை மட்டும் கேட்கவேண்டும். அலட்சிய மன போக்கை தவிர்க்க வேண்டும். ஜோதிடர் ஏதாவது கெடு பலன் சொன்னால் பரிகாரம் ஏதாவது உண்டா என கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். சண்டைக்குப்போகக்கூடாது. வாக்கு வாதத்தில் ஈடுபடக்கூடாது.
6. ஜோதிடர் சொன்ன ஆலோசனையில் திருப்தியில்லையென்றால் அல்லது பிடிக்கவில்லையென்றால் அமைதியாக திரும்பி வந்துவிடவேண்டும்.
7. ஒரு ஜோதிடர் சொன்ன விசயங்களை இன்னொரு ஜோதிடரிடம் சொல்லக்கூடாது. ஜோதிடர்களை ஒப்பிட்டு பேசக்கூடாது. இது ஜோதிடருக்குள் வெறுப்புணர்ச்சியை தூண்டும். இதனால் உங்களுக்கு உரிய ஆலோசனையை அவர் வழங்க மாட்டார்.
8. ஜோதிடரிடம் சென்று எனக்கும் ஜோதிடம் தெரியும் , சும்மா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என பார்க்க வந்தேன் என்று சொல்லக்கூடாது. இப்படி சொல்வதால், ஜோதிடருக்கு உங்கள் மீது வெறுப்பு உணர்ச்சி தோன்றி எதையும் சரியாக பார்க்க மாட்டார். நவ கிரகங்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
9. தேவை இருந்தால் மட்டும் ஜோதிட ஆலோசனை பெறுங்கள். பொழுது போக்கிற்காக ஜோதிடரை பார்க்காதீர்கள். இது வம்பை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.
10. ஜோதிடர்களுக்கு தட்சிணை வழங்குவது என்பது நீங்கள் அவர்களின் நேரத்தை எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ஜோதிடர்களை பிச்சைக்காரர்களாக கருதாதீர்கள்.
11. வா வா என கூவி அழைக்கும் ஜோதிடர்களை தவிர்த்து, சத்தமில்லாமல் செயல்படும் நல்ல ஜோதிடர்களை தேடிப்போய் ஆலோசனை பெறுங்கள். குறிப்பாக உங்களுக்கு தெரிந்த நபர்கள் பரிந்துரை செய்யும் ஜோதிடர்களைப்போய் பாருங்கள்.
12. ஜோதிட ஆலோசனைப் பெறும்போது சொந்தக்காரர்களையோ அல்லது நெருங்கிய நண்பர்களையோ உடன் அழைத்து செல்லாதீர்கள்.

https://www.facebook.com/100000003671108/posts/2244207202256047/