ப‌ரிகார‌ங்க‌ள்

Spread the love

தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து,

அதற்குரிய மந்திரங்களை சொல்லி வந்தால்

நீண்ட ஆயுள் கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரத்தன்று

அகத்தியரிடம் ஆசி பெற்று, அகத்திக்கீரையை

எருமை மாடுகளுக்கு கொடுக்க மரண பயம் நீங்கும்.

இராமேஸ்வரம் ஆலயத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில்

தீர்த்தமாட இயலாதவர்கள், கடல் நீரின் ஒரு பகுதியாக

இருக்கும் அக்னி தீர்த்தம், ஸ்ரீ ராமர் உருவாக்கிய

கோடி தீர்த்தத்தில் நீராடினாலே பாவங்கள்,

தோஷங்கள், பித்ரு தோஷமும் நீங்கும்.

அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும்

பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமிஹயகிரீவர்

ஆகியோரை தரிசித்து, கேசரி, பாயாசம் நைவேத்தியம்

செய்ய தொழில், வியாபார விருத்தி, நிரந்தர வேலை,

மற்றும் லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.

சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி,

எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள்

உண்டு மகிழும் போது அவற்றின் வயிறு வாழ்த்த

அதனால் நாம் புண்ணியம் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *