ப‌ரிகார‌ங்க‌ள்

Spread the love

 

பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை

சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட

சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல்,

பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில்

பூஜை நடக்க உதவுதல்,

அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்-

ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம்

செய்ததற்குச் சமம்.

தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க,

வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி

வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற

பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா

பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.

எத்தகைய கிரக தோசமானாலும் தினமும்

சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம்

செய்வது மிக, மிக நன்மை தரும்.

வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால்

குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.

உயிரையும், உடலையும் பாதுகாக்கும் உடனடி

நிவர்த்திப் பரிகாரங்கள் –

மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் -திருக்கடையூரில் செய்வது

ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது,

லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மரை வழிபடுவது,

ஆஞ்ச நேயரை வழிபடுவது, ஆகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *