ஜோதிடம் ப‌ரிகார‌ங்க‌ள்

Spread the love

இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று

சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.

செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு

செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட

மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று

முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி

அர்ச்சனை செய்யவும்.

ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் உள்ள

இடத்தில் இருந்து சுமார் 10 கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.

பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில்

தெளிக்க, தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.

பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில்

காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால்

விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து

மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து

நெய்விளக்கு ஏற்றி வர, விரதம் ஏற்ற 192 நாட்களில்

கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *