மரணம் எப்படி இருக்கும்

Spread the love

“மரணம்:”

மரணம் எப்படி இருக்கும்?!

மயக்கம்-தூக்கம்-மரணம் என மூன்று நிலை உள்ளது.

மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை.
உயிர் நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம். மிகக்குறுகிய காலம் உணர்வு இல்லாமல் போவது.

தூக்கம் – நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலை கொள்ளும் நேரம், ஒடுங்கும் நேரம். நாடு உடலில் ஒடுங்கும். மிக குறைந்த அளவில் உணர்வு இருக்கும்.

மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு வெளியேறுதல்.

மரணம் நம் கையில்!? தடுக்கலாம்!?

மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும்.

உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்து கொள்ளவேண்டும்.

உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ?!

அங்கேயே அதை பத்திரப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்!

அங்கே இருக்கச்செய்து விட்டால் அது தான் ஞான சாதனை! தவம்!!

பிறந்தது இறப்பதற்கல்ல! இறப்பை வெல்வதற்கு! அதுவே ஞானம்.

இதை உரைத்ததுவே சனாதானதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல் தடுக்க பாடுபட வேண்டும்.

“தூங்கி விழிக்க மறந்தவன்” என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு சாப்பாடு என அலைகிறான்.

சாப்பிடதான் வாழ்கிறான் அதற்குதான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான்.

ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான்!

பிறப்பதே சாப்பாட்டுக்காகத்தான்!

சாப்பாடு அல்ல! சாவுக்கான பாடு சா- பாடு!?

சாவதற்காக படாத பாடுபடுகிறான். எப்படியோ சாகிறான்!

சாககூடாது என்பதே சித்தர்கள் உபதேசம்!

“நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்”

“ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்”
படித்ததில் பிடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *