பரிகார திருத்தலங்கள்
===================
பிருகுநந்தி நாடிமுறையில் செவ்வாய் புதன் சேர்க்கை பகை கிரக சேர்க்கையாகும். இந்த சேர்க்கை உடையவர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களிடையே ஒற்றுமை இருக்காது. அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும். கல்வி கற்பதிலும் தடை உண்டாகும். தோல்சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
செவ்வாய் புதன் சேர்க்கையுடையவர்கள் கும்பகோணம் அருகிலுள்ள அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவிலில் உள்ள முருகப்பெருமானை வணங்கிவரவும். இக்கோவிலில் உள்ள முருகன் பெருமாளுக்குரிய சங்கு சக்கரத்துடன் காட்சிதருகின்றார்.
செவ்வாயின் அதிதேவதை – முருகன்
புதனின் அதிதேவதை – பெருமாள்
பெருமாளின் ஆயுதங்கள் – சங்கு சக்கரம்.
செவ்வாய் புதன் சேர்க்கையுடையவர்கள் இந்த திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டு நன்மையடையவும்
ஜோதிடர்& ஜோதிட ஆராய்ச்சியாளர்
சிவகாளீஸ்வரன்
7418796879
நன்றி.