பணம் வரவழைக்கும் பரிகாரம்:
ALP லக்னம் கன்னி லக்னம் வரும்பொழுது அவர் என்ன செய்தால் பணம் வரும்?
ஒருவருக்கு கண்டிப்பாக பணம் வரவேண்டும் என்றால் வந்துவிடும்.
ஒருவருக்கு பணம் வரவே வராது ஆனால் சில விஷயங்கள் முயற்சி செய்ய பணம் வரும்,
வரவே வராது என்றால் என்னதான் பரிகாரம் பண்ணினாலும் அதற்கு வாய்ப்பே இல்லை.
கன்னி லக்னம் 10 வருட காலம் இயங்கும்.
ஒரு தடவையாவது குருவாயூர் போய் சாமி கும்பிட்டு வந்தால் அவருடைய வாழ்க்கை அவ்வளவு ஒரு ஆத்மார்த்தமாக இருக்கும்.
அதாவது பணம் வரணும் என்று நினைத்து போக வேண்டாம்,எங்கள் ஆத்மார்த்தமாக அந்த மண்ணை மிதித்து வரும்பொழுது அவ்வளவு ஒரு சந்தோஷம்.எப்படி எங்கிருந்து யார் மூலம் எந்த தொடர்பு அப்படி எல்லாம் எதுவும் வேண்டாம்,
இதுபோல் சந்திரதிசை யாருக்காவது நடந்தால் கண்டிப்பாக குருவாயூர் போகணும்.சந்திர திசை ,சந்திர புத்தி ,சந்திர அந்திரம், சந்திரன் சூட்சுமம்
ஏதோ ஒரு இடத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் குருவாயூர் கோவிலுக்கு போங்க, கன்னி லக்னம் காரர்கள் ஆத்மார்த்தமாக குருவாயூர் கோவிலுக்கு போங்கள்.
அவ்வளவு தூரம் போக முடியாது என்றால் லெட்சுமி நரசிம்மர் கோவில்கு போகலாம்.அல்லது லட்சுமி நரசிம்மர் போட்டோ பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம்.
ALP ஜோதிட முறையில் கன்னி லக்னம் போகக்கூடிய 10 வருட காலம் லெட்சுமி நரசிம்மர் போட்டோ கையில் வைத்துக் கொள்ளலாம். நாம் எங்கெல்லாம் பணம் வைத்திருக்கிறோமோ அங்கும் வைத்துக் கொள்ளலாம்.
வீட்டில் பூஜை அறையில், வீட்டில் பணப்பெட்டியில் இதிலெல்லாம் லெட்சுமி நரசிம்மர் போட்டோ வைத்துக்கொள்ளலாம்.
இல்லையென்றால் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு போய ஹோமம் நடக்கும், இல்லை தேன் வாங்கிக்கொடுத்து அபிஷேகம் செய்வது,அவ்வளவு ஒரு
ஆத்ம திருப்தி அடைந்து பணம் வருவதற்கான வாய்ப்பு கொடுக்கும்.
மகாலட்சுமி பூஜையில் கலந்துகொண்டு தாமரைப்பூைவையும்,தேனையும் அந்த யாகத்தில் கொடுக்கும் பொழுது அது பணமாக மாறிவிடும்..
அந்த தேன் கையில் கொடுத்தால் எடுத்து சாப்பிடுங்கள் கண்டிப்பாக ஆத்ம திருப்தி கிடைக்கும்.
அதேபோல் கன்னி லக்னக்காரர்கள் எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக் கொள்ளலாம்.அதை முழுமையாக வைத்துக் கொள்ள வேண்டும் உடைக்கக்கூடாது.
அது அறிந்து ஜூஸ் சாப்பிடலாம் ,உணவாக உட்கொள்ளலாம்.
ஆனால் வாகனத்திற்கு முன் வைக்கக் கூடாது.
இது போல் நிறைய விஷயங்கள், நிறைய பரிகாரங்கள்
அட்சய லக்ன பத்ததியில் இருக்கு.
ஆனால் யார் எதை செய்யணும், எப்ப எதை செய்யனும் என்பது முக்கியம்.
நன்றி.