எந்த நட்சத்திரகாரர்களுக்கு காதல் திருமணம்

 

எந்த நட்சத்திரகாரர்களுக்கு காதல் திருமணம் நடக்கும்? வாய்ப்பு இருக்கா?

அட்சய லக்ன பத்ததியில் 5ம் பாவகம்,
உதாரணமாக தனுசு லக்னம், 5ம் அதிபதி செவ்வாய் 7 ல் ,7ம் அதிபதி புதன் 5 ல் சம்பந்தப்பட்டால், கண்டிப்பாக 5,7
லக்னத்தோடு தொடர்பு பெற்றால் காதல் திருமணம் உண்டு.

கிரக ரீதியான தொடர்புகள்,பாவக ரீதியான தொடர்புகள்,
நட்சத்திர ரீதியான தொடர்புகள் எல்லாம் இருந்தாலும்,
ஒரு பெண் ஒரு ஆண்ணையும் இல்லை, ஒரு ஆண் ஒரு பெண்ணையும் நேசிக்கிறார்கள் என்றால் காதல் கொள்வது,சந்தோஷப்படுவது, ஆசைப்படுவது இதெல்லாம் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்றால் பெற்றோர்கள் கொடுக்கக்கூடிய அடிப்படையான ஒரு நிகழ்வு.

பெற்றோர்கள் வேலை சம்பந்தமாகவோ, அல்லது தூரத்தில் இருப்பதாலும் அவர்கள் நிறைய நேரம் இந்த பெண்ணையோ, பையனையோ, அதிக நேரம் கவனிப்பதில்லை.அதிக நேரம் பேசுவதில்லை.
குடும்பத்தில் கூட இருப்பவர்கள் பேசுவதில்லை,நீ படிக்கனும், வேலைக்கு போகணும் என்று திணிக்கிறார்களே தவிர, அவர்களுக்கு என்ன தேவை, என்ன பிடிச்சிருக்கு, அவருடைய உடலில் ஏற்படக்கூடிய மாற்றம் என்ன,
இப்படி நடக்கும் பொழுது இன்னொருவரிடம் பேசுவதற்கு அந்த பெண், பையன் முயற்சி செய்வார்கள்.
இதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளனும்.

உதாரணமாக தனுசு லக்னம், தனுசு லக்னத்திற்கு 5ம் அதிபதி எப்பொழுதும் மனம் சந்தோஷப்படுவது, மனம் துக்கப்படுவது மனம் சந்தோஷப்படும் பொழுது சந்தோஷமாக பேசுவோம் துக்கப்படும் போது அழுது கொண்டு பேசுவோம்.
இப்படி பெண்ணோ, பையனோ அழும் போது ஒருவரை ஒருவர் கேட்டு கொள்வார்கள்.
இது பெற்றோர்களுக்கு தெரியாது , பெண்ணுக்கும், ஆணுக்கும் பொருள் சேர்பதிலே இருப்பார்களே தவிர அவர்களிடம் என்ன தேவை, அவர்களுடைய நடவடிக்கை பற்றி எதுவும் கேட்க மாட்டார்கள். பொருள் சேர்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள் இது மிகப்பெரிய தவறு. இங்கு யாரும் வேணும் என்று காதலிப்பதில்லை.
இவ்வளவு கஷ்டங்களும் யாருக்காக படுகிறார்கள் என்றால்,குழந்தைகளுக்காக தான் பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
இதை குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
பேசவில்லையே, கவனிக்கவில்லையே என்று வருத்தப்படுவது கிடையாது.பேசாமல் கவனிக்காமல் இந்த முழு நேரத்தையும் யாருக்காக கஷ்டப்படுகிறார்கள் என்றால் இந்த பையனுக்காகவும், பெண்ணுக்காகவும், அதை புரிந்து கொள்ள வேண்டும்.
காதல் என்பது சந்தோஷம் தான் ஆனால், காலம் அறிந்து செயல்பட வேண்டும்.
படிச்சிட்டு நல்ல வேலைக்கு போய்ட்டு இந்த அடிப்படையான நிகழ்வு எல்லாம் பூர்த்தியான பிறகு அந்த சந்தோஷமான மணவாழ்க்கை என்பது திருப்தியாக இருக்கும்.
நல்ல ஒரு நிலைக்கு வந்துட்டு உங்கள் காதலை பெற்றோர்களிடம் சொல்லுங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள்.

காதல் என்பது லக்னத்திற்கு 5ம் பாவகமோ, இல்லை 7ம் பாவகம் தொடர்பில் இருந்தால் காதல்வரும். எல்லாருக்கும் இருக்கும். ஒருவருக்கு லக்னத்திற்கு 5ம் பாவகம் இருந்தால் ஒரு புத்தகத்தின் மேல் காதல் இருக்கும், ஒருவருக்கு பெண்ணின் மேலோ, இல்லை பெண் ஆணின் மேலோ காதல் இருக்கும்.
1-10 வயது குழந்தைக்கு தாய் தகப்பன்னா காதலாக மாறும்.
11 – 20 வயது படிப்பதும் காதல், 21 – 30 கூட இருக்கக்கூடிய நண்பர்கள்,
31-40 வேலை பார்க்கக்கூடிய நண்பர்கள் அத்தனை பேரிடமும்,
காதல் என்பது அன்பு பாசம் தான். எல்லா இடத்திலும் பரவி இருக்கக் கூடியது.

ஆனால் 5ம் அதிபதி 7ம் அதிபதி தொடர்பு பெற்றிருந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
அதேபோல் புதன் சுக்கிரன் 7ம் பாவகத்தோடு தொடர்பில் இருந்தால் ஆண், பெண்ணிடம் ஈர்ப்புத்தன்மை எளிமையாக இருக்கும்
கண்டிப்பாக வாழ்க்கை மாறும், கவனமாக இருக்கணும்.
அதாவது அப்பா அம்மா நல்லா இருக்கணும், குழந்தையும் நல்லா இருக்கனும், அவர்களுடைய வாழ்க்கை தரமும் நல்லா இருக்கனும்.
உங்களுடைய ஜாதகத்தையும் வீடியோ பின் பகுதியில் பதிவு செய்யுங்கள் கண்டிப்பாக அடுத்தடுத்த நிகழ்வு இதைப்பற்றி பேசலாம்.

நன்றி.

உங்கள் திருமண தடைக்கு யார் காரணம்

வணக்கம்.

திருமண தடையால் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள்.

அப்படி திருமணத்தடை ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால், அந்த குடும்பத்தில் இருக்கும் நபர்களாலே திருமண தடை நடக்கிறது

அந்த முறையை எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்.அதைப் பற்றி சொல்லுங்கள்.

 

உதாரணமாக,

தனுசு லக்னத்தில் யாராவது வந்தால் அவங்க அம்மாவால் அவருக்கு திருமணத்தடை.

அதாவது பையனுக்கு வரக்கூடிய பெண், அதாவது பார்த்து பார்த்து தன்னுடைய பையனுக்கு அழகு, படிப்பு ,உயரம், வருமானம் எல்லாமே அம்மாவே பார்ப்பாங்க.

தனுசு லக்னம் போகக் கூடிய ஒருவருக்கு திருமண தடையாக அம்மாவே இருக்காங்க.

அதேபோல் திருமண தடைக்கு, தனுசு லக்னத்தில் வேலை கிடைத்த பிறகு தான் திருமணம் செய்யனும் என்று சொல்வார்கள்.

இல்லைனா, அந்தப் பெண் நான் டாக்டர் வேலையில் இருக்கேன், எனக்கு பையனும் டாக்டர் வேலையில் இருக்க வேண்டும் என்று முடிவு பண்றது.

 

கிரகங்களை வைத்து சொல்லலாம் :

 

ALP லக்னம் தனுசு லக்னம், குரு 7ல் இருக்கு,தனிச்ச குரு 7ல் இருந்தால் திருமணம் ஆகுமா ? ஆகாது.ஏன்னா?

பைனுடைய அம்மா வரக்கூடிய பெண் எனக்கு புடிச்ச மாதிரி இருக்கணும் என்று திருமணத்தை செய்துவிடும்.

அடுத்து செவ்வாய் 7 ல் இருக்கும். அதனால் அந்த அம்மா என் தம்பி முடிவெடுப்பது தான் ,

ஜாதகருக்கு சகோதர சகோதரிகள் மூலமாகவே, மாமன் வழி திருமண தடை ,

 

அதேபோல் சூரியன் 7ல் இருந்தால் என்னுடைய மருமகள் கௌரவமான, அந்தஸ்தான , எனக்கு சமமாக, எனக்கு 100 ஏக்கர் இடம் இருக்கு வரக்கூடிய சம்பந்திக்கு 200 ஏக்கர் வீடு, சொத்து, சுகம், பங்களா, அந்தஸ்து இருக்கணும்

இப்படி கௌரவத்தையும் ,சந்தோஷத்தையும் , அந்தஸ்தையும் தேடுமே தவிர அந்த பெண்ணை வாழ விடாது.

இதுதான் திருமணத்தில் கிரகங்கள் பண்ண கூடியது.

 

சனிபகவான் 7ல் இருந்தால் குடும்பத்தில் இருக்கக்கூடிய அண்ணன் தம்பி மாமன் இவர்களெல்லாம் அந்த குடும்பம்,இந்த குடும்பத்திற்கு செட் ஆகாது

குடும்பத்தின் மூலம் உள்ள நிகழ்வுகளை இந்த பையன் மேல் திணித்து திருமணத்தை தடை செய்வார்கள்.

நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இருக்கலாம்.

இதற்கு மேல் நண்பர்கள், புதன் 7ல் இருந்தால் நண்பர்கள் பையனிடம் பெண் கண் பெரிதாக இருக்கு, தலைமுடி கோணவாகு எடுத்து இருக்கு

அப்பா அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத நிகழ்வுகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.நண்பர்கள் மூலமாக திருமண தடை ஏற்படுத்துவது.

 

கடன் மூலமாக திருமண தடை ஏற்படுத்துவார்கள் உதாரணமாக தனுசு லக்னம் சுக்கிரன் 6ல் இருப்பார். 6க்குடையவன் 7 ல் இருப்பார்.

எனக்கு கொஞ்சம் கடன் இருக்கு கடனை கட்டிவிட்டு திருமணம் செய்யலாம்.

 

அதுவே சந்திரன் 7ல் இருந்தால் இந்த பையன் எனக்கு புடிச்ச மாதிரி கொண்டுவாங்கனு சொல்வார்.ஆனால் கடைசிவரையும் வராது.

 

எல்லா லக்னத்திற்கும் குரு பல படனும்.

குரு பலப்பட்டால் ஒரே நிமிடத்தில் திருமணம் அதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதுவே 6, 8, 10,12 ல் குரு இருந்தால் ஜோதிடர்களுக்கும் அந்த நேரத்தில் கண் தட்டும். குரு பலப்படவில்லை என்றால் ஜோதிடர் மூலமாகவும் சில திருமணங்கள் நின்றுவிடும்.

உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் எங்க இருக்கு என்று பாருங்கள்.

 

யோகங்களும் அபயோகங்களும் நம் கூட இருக்கக்கூடிய அப்பாவாக, அம்மாவாக,தங்கையாக , அக்காவாக, சகோதரராக, சகோதரியாக,குடும்பமாக, மாமாவாக, அண்ணனாக ,எதிரியாக, கடனாக, தொழிலாக , வருமானமாக

தடையாக இருக்கும், யோகமாக இருக்கும்.பார்க்கும் நிகழ்வுகளை இங்கு எல்லாமே பொருத்தமாக இருக்காது. 6 பொருத்தம் இருக்கும் ‘6 பொருத்தம் இருக்காது, 6 பொருத்ததில் தான் வாழ்க்கை .

எல்லா பொருத்தமும் இருந்தால் கடவுள் தான்.

உங்களுடைய ஜாதகத்தையும் பதிவு செய்யுங்கள்.

 

நன்றி.

திடீர் அதிஷ்டம் யாருக்கு ஏற்படும்

 

வணக்கம்.
நிறைய பேர் கேட்கக்கூடிய கேள்வி சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட்டு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டு அதனால் அவர்கள் பெரிய அளவில் யோகம் அடைகிறார்கள்.

இதுபோல் ஒரு ஜாதகருக்கு இந்த காலகட்டத்தில் திடீர் அதிர்ஷ்டமோ இல்லை திடீர் யோகமோ ஏற்படக்கூடிய காலகட்டம் ஏதாவது இருக்கா?

ஜாதகத்தில் யாருக்கு இந்த மாதிரி அமைப்பு இருந்தால் இப்படி ஏற்படும்?

உதாரணமாக யாருக்கு லாட்டரி டிக்கெட் அடிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.
ALP லக்னம் ரிஷப லக்னம், சிம்ம லக்னம், விருச்சிக லக்னம்,கும்ப லக்னம், இந்த நான்கு லக்னத்தில் போனால் லாட்டரி சீட் கிடைக்கும்.
அதாவது 40 கோடி பேரில் ஒருவருக்கு இந்த 4 லக்னத்தில் ஏதாவது ஒன்று போனால் லாட்டரி சீட் அடிக்கும்.

ALP ரிஷப ராசி, ரிஷப லக்னம் ,அதேபோல் சிம்ம லக்னம், சிம்ம ராசி,
கும்ப லக்னம், கும்ப ராசி, விருச்சிக லக்னம், விருச்சிக ராசிகள்
ALP லக்னமாக போய் உதாரணமாக கார்த்திகை 4ம் பாதம் அபரிவிதமான யோகத்தை கொடுக்க கூடிய நட்சத்திர பாதம்.
சரியான இடம், பொருள் போல் இந்த கிரக நிலைகள், சஞ்சாரங்கள் கோச்சாரத்திலும் சரி, ஜனன காலத்திலும் சரி அதாவது பிறப்பு காலங்கள் சரியாக அமைந்து விட்டால் பிரம்மாண்டமான யோகத்தை கொடுத்து விடும்.
லாட்டரி சீட் எல்லோருக்கும் அடிக்காது, ஆனால் இந்த ரிஷப லக்னத்திற்கு கண்டிப்பாக கார்த்திகை நட்சத்திரம் 4ம் பாதத்தில் யோகமான நிலையை கொடுக்கும்.

கார்த்திகை நட்சத்திரம் 4ம் பாதம் போகும் பொழுது சொத்து மூலமாக,இடத்தின் மூலமாக, வீட்டின் மூலமாக அபரிவிதமான பூர்வ புண்ணியத்தின் மூலமாக, குருட்டு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய ஒரு நட்சத்திர பாதம்.
லாட்டரி சீட் கோடியில் ஒருவருக்கு தான் அந்த அமைப்பு இருக்கும்.

அதேபோல் உங்களுடைய நட்சத்திரம் பலமாக அமைந்தால் அதாவது கார்த்திகை நட்சத்திரம் 4ம் பாதம் ,சூரிய பகவான் சரியாக அமைந்து சூரிய பகவான் கொடுக்கக்கூடிய நட்சத்திரம் சுக்ரன்.
அதாவது சூரியன் – சுக்கிரன் சரியாக 1, 2 ல்அமைந்தால் அதேபோல் ரிஷபம்,சிம்மம், விருச்சிகம், கும்பம் குருட்டு அதிர்ஷ்டம் திடீர் அதிர்ஷ்டம் எதன் மூலமாகவும் வரலாம்.
அதேபோல் வாகனங்கள் யோகமாக மாறக்கூடிய நிகழ்வுகளும் கார்த்திகை நட்சத்திரம் 4ம் பாதத்திற்கு மட்டும் உண்டு.
யோகமாக மாறக்கூடிய நட்சத்திரங்கள்,கிரகங்கள் , கிரக சேர்க்கைகள்பற்றி நிறைய விஷயங்கள் பேசப்போகிறோம்.
ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு தொடர்புகளோடு பயணிக்கிறது.
வாழ்க்கையில் யார் ஜெயிப்பார்கள் என்றால் ‘சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்தால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.
காலத்தை எப்படி தள்ளிப்போடுகிறீர்களோ அதேபோல் உங்கள் வாழ்க்கையும் தள்ளி போடப்படும்.
உங்கள் வாழ்க்கை விரயமாக்கப்படும். கடைசி வரைக்கும் அந்த நாள் கிடைக்காது.
வாழ்க்கையில் காலம்தான் மிகப்பெரிய சொத்து.
திட்டமிட்டு செயல்படுங்கள் உங்கள் வாழ்க்கை மாறும்.
எல்லா நட்சத்திரத்திற்கும் ஒரு வழி உண்டு.

நன்றி.

எந்த கோவிலுக்கு போனால் நல்ல யோகத்தை பெறலாம்

 

வணக்கம்

நிறைய கோவில் இருக்கு, இதில் யோகத்திற்காக, அதிர்ஷ்டத்திற்காக நிறைய கோயில்கள் போய் வழிபாடு செய்கிறோம் அந்த வகையில் எந்த கோவிலுக்கு போனால் ஒரு நல்ல யோகம் கிடைக்கும்?

 

உதாரணமாக அட்சய லக்ன பத்ததி (ALP) லக்னம் ரிஷப லக்னம்,கன்னி லக்னம் , மகர லக்னம், இதில் சந்திரனுடைய ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தில் உங்கள் லக்ன புள்ளி போனால் அதாவது சந்திரனுடைய நட்சத்திரம் 3. இந்த 3 நட்சத்திரத்தில்

4 வருடம் 5மாதம் 10 நாள் போனால் குருவாயூர் கோவில் போகணும்.

ஒரு பரம திருப்தி. ஆத்மார்தமாக எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது.போக முடியுமா போக முடியாதா என்பது உங்களுடையது.

ஏன்னா? எல்லாருக்கும் எல்லா வழியும் கிடைப்பதில்லை.

 

இந்த வீடியோ பார்க்கும் நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் ALP மென்பொருள் உள்ளது அதில் உங்களுடைய பிறந்த நேரம்,பிறந்த தேதி, பிறந்த இடம் கொடுத்தால் உங்களுடைய ALP புள்ளி வரும்.

 

அதில் ஹஸ்தம், ரோகிணி, திருவோணம் வந்தால் கண்டிப்பாக நீங்கள் குருவாயூர் கோவில் போங்க. உங்கள் வாழ்க்கையில் யோகம் கிடைக்கும்.

 

இல்லை ARP சந்திர திசை, சந்திர புத்தி, சந்திர அந்திரம் இப்படி உங்களுடைய திசை உங்களுக்கு . அதில் சந்திர திசை நடந்தால் கண்டிப்பாக குருவாயூர் கோவில் போங்க.அங்கு ஆத்மார்த்தமாக இருந்துவிட்டு கோவிலில் இருந்து வெளியில்வரும் போது உங்கள் வாழ்க்கையில் இதுநாள்வரையில் பெறாத புகழ், எதிர்பார்க்காத நிகழ்வு, என் வாழ்க்கையில் அடுத்த நிலை,பணம், பேர், புகழ்,அங்கீகாரம் இதையெல்லாம் தாண்டி மற்றற்ற மகிழ்ச்சி,பேரானந்தம் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தக் கூடியதுதான் குருவாயூர். ஒரே ஒரு தடவை போய்ட்டு வாங்க. கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும்.சந்திர திசை 10 வருடம். உங்கள் வாழ்க்கை கண்டிப்பாக மாறும்.

 

எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படையான நிகழ்வு ,நாம் எல்லோரும் வாழ்க்கையில் வெற்றிபெற அடிப்படையான நிகழ்வு, நாம் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் பயணிக்கிறோம், எவ்வளவு தூரம் நல்லது, கெட்டது என்று கையில் நாம் google map பயன்படுத்துகிறோமோ, அதேபோல் ஒரு வீட்டிற்கு ஒரு ஜோதிடர். ஒவ்வொரு வீட்டிற்கு அடிப்படியான ஜோதிட நிகழ்வு தெரிந்திருந்தால் வாழ்க்கைப் பயணம் புலப்படும். பாதுகாப்பாக இருக்கும்.

ஒரு 100 கிலோமீட்டர் போயிட்டு அந்த road close ஆகியிருந்தால் திரும்ப வர முடியாது.இதுதான் வாழ்க்கை பயணம் கடன், வம்பு,வழக்கு, நோய் ,ஆரோக்கியம்,இதில் எல்லாம் மாட்டிக் கொண்டு அங்கிருந்து

வர முடியவில்லை என்ற பிரச்சனை எல்லோருக்கும் இருக்கு.

 

அதுவே இந்த தூரத்தில் கடன் பிரச்சனை இருக்கு என்று தெரிந்துகொண்டால், அதை தவிர்க்கலாம், அதை எப்படி கையாளுவது,என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஜோதிடர் வரணும்.

 

நன்றி, வணக்கம்.

https://youtu.be/_12tAvmv0