best consulting astrologer

நமது பாரம்பரியமான ஜோதிடக் கலையை மூத்தஜோதிடர்களிடன்  செய்து கற்றஜோதிடத்தில் பலன்கள் ஆய்வு செய்யும் பொழுது இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மனோபாவமும், கிரக சஞ்சாரமும் இணைந்துதான் செயல்படுகிறது என்பதை திட்டவட்டமாக அறிந்து கொண்டு, அனுபவத்தையும் கருத்தில் கொண்டு ஆலோசனை தந்தாக வேண்டும் .
ஆயள்கால ஜாதக பொதுப்பலன்கள்
நடப்பு தசா புத்திகளுக்கான பலன்கள்
ஜாதகத்தை கொண்டு நோய் அறிதல்
ஜாதகத்தில் பொருளாதார நிலை அறிதல்
எதிர் கால வாழ்க்கை போக்கு
உயர்கல்விக்கான ஜோதிட ஆலோசனை உத்தியோகத்திற்கான ஜோதிட ஆலோசனை
தொழிலுக்கான ஜோதிட ஆலோசனை
திருமண பொருத்தம் / திருமண தடைகள் பற்றி அறிய
காதல் வாழ்க்கைக்கான ஜோதிட ஆலோசனை
குழந்தை பிறப்பிற்கான ஜோதிட ஆலோசனை
உங்கள் வாழ்கையில் உள்ள பல கேள்விக்கான ஜோதிட ஆலோசனை
பிரசன்ன ஜோதிடம் ராசிக்கல் பரிந்துரை ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று நேரிலோ அல்லது தொலைபேசி, EMail மூலமாக பலன்களை அறிந்து கொள்ளவும்.

12670438_1099672750051287_1279321280883482607_n (1)

 

 

 

சூரியன்

எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிறந்தவர்கள் பழகுவதற்கும், பார்வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.

அரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள் இவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். 1 எண் ஆதிக்கம் நன்கு அமைந்திருந்தால், (பெரும்பாலும்) இவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்குடன் விளங்குவார்கள். ஆனால் நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். (இந்த எண்காரர்கள் மட்டும்தான்). மற்றவர்கள் அரசியலில் ஈடுபட்டால் சுயநலமும், பண வேட்கையும் அதிகமாகக் கொண்டு இருப்பார்கள். அதிகாரம் காண்பிப்பதில் இவர்கள் மிகவும் ஆசை கொண்டவர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். கடின உழைப்பும், கண்டிப்பான நடத்தையும் இவர்களைத் தலைமை ஸ்தானத்திற்குக் கொண்டு செல்லும். மனதில் ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள். தோல்வி ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத் துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள். புதிய செய்தியினை ஆராய்வதில் மகிழ்ச்சியடைவார்கள். நேர்மையான முறையிலேயே எதையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றும் அணியும் பொருள்கள் மிகவும் மதிப்பாகத் தெரிய வேண்டும் என்று அதற்காகச் செலவு செய்வார்கள். மன மகிழ்ச்சிக்காக தாராளமாகச் செலவு செய்யத் தயங்காதவர்கள்.

மஹாசிவராத்திரி

மஹாசிவராத்திரி என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சிவராத்திரிதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை மஹாசிவராத்திரி என்கிறோம். சிவராத்திரியைக் கொண்டாடுவதும் அல்லது மஹாசிவராத்திரியைக் கொண்டாடுவதும், இருளைக் கொண்டாடுவதாகத்தான் இருக்கின்றன. காரண அறிவின் அடிப்படையில் இயங்கும் எந்த ஒரு மனமும் இருளை எதிர்க்கும். சிந்திக்கின்ற மனங்கள் இயல்பாகவே ஒளியைத்தான் தேர்ந்தெடுக்குமே தவிர இருளை தேர்ந்தெடுக்காது. ஆனால் இருள் என்ற வார்த்தையின் ஆழமான பொருள் ‘எது இல்லையோ அது’ என்பதுதான். எது ‘இருக்கிறதோ’ அது பிரபஞ்சம், அதுதான் படைத்தல். எது ‘இல்லையோ’ அது சிவன்.

நீங்கள் கண்ணைத் திறந்து சுற்றிலும் பார்க்கும்போது, உங்களுடைய பார்வையின் நோக்கம் சிறியதாக இருந்தால், படைப்பின் பல அம்சங்களை நிறையவே பார்ப்பீர்கள். உங்கள் பார்வையின் நோக்கம் உண்மையில் பெரிய விஷயங்களை எதிர்பார்த்து இருந்தால், இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய இருப்பான, பரந்து விரிந்த வெறுமையைப் பார்ப்பீர்கள். வானில், மிகச்சிறிய புள்ளிகளாகத் தெரியும் ஆகாயவெளி மண்டலங்கள்தான் (Galaxies) அதிகமான கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் அவற்றைத் தாங்கி இருக்கும் பரந்த வெறுமை அனைவருடைய கவனத்துக்கும் வருவதில்லை. இந்தப் பரந்துவிரிந்த எல்லையற்ற வெறுமையைத்தான் சிவன் என்று சொல்கிறோம். இன்றைய நவீன விஞ்ஞானமும் அனைத்துமே ஒன்றுமில்லாததிலிருந்து பிறந்து, மீண்டும் அதற்குள்ளாகவே செல்கிறது என்று நிரூபித்துள்ளது. இதே அடிப்படையில்தான் இந்த பரந்த வெறுமையை, ஒன்றுமற்ற தன்மையை, ‘மஹாதேவா’ என்று குறிப்பிடுகிறோம்.

விஞ்ஞான ரீதியாகவே மஹாசிவராத்திரி ஒரு மனிதரின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு காரணமாக, அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருக்கும்போது, அவருக்குள் இயற்கையாகவே ஆன்ம எழுச்சி நிகழ்கிறது.