* கோவில் பிரகாரத்தை குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லது.
* கோவில்களில் உள்ள பிரகாரத்தை சுற்றும்போது, பெண்கள் தலையில் துணியை கட்டிக் கொண்டு சுற்றுதல் கூடாது. தலைக்கு குளித்த பின் தலைமுடியின் பின் நுனியை முடிந்து போடாமல், விரித்து போட்டுக் கொண்டு சுற்றுவதும் தவறான முறை.
* கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே செல்லும் முன்பு, சில நிமிடங்கள் உட்காந்து விட்டு செல்வது சிறப்பு தரும். அப்போது கோவில் கோபுரத்தை தரிசனம் செய்வதும் நல்லது. கோபுர தரிசனம் கோடி பாவங்களில் இருந்து விமோசனம் அளிக்கக்கூடியது.
* கோவிலில் உள்ள அரச மரங்களை சனிக்கிழமைகளில் தான் தொட்டு வணங்க வேண்டும். அதே போல் காலையில் அரச மரத்தை சுற்றுவது தான் மிகவும் நல்லது. பெரும்பாலும் பிற்பகல், மாலை நேரங்களில் சுற்றுவதை தவிர்த்து விடவும்.
* கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொண்டு கோவிலை சுற்றி சிலர் உருண்டு வலம் வருவார்கள். அப்படி செய்கிறவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காலை வேளையை தேர்வு செய்வது நன்மையை தரும்.
* கோவிலை சுற்றும்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒருமுறை இருக்கிறது. பிள்ளையாரை ஒருமுறை சுற்றி வந்தாலே போதுமானது. அம்மனை தரிசிக்கும்போது 4 முறை வலம் வர வேண்டும். அரச மரத்தை 7 முறையும், நவக்கிரகங்களை 9 முறையும் சுற்றி வர வேண்டும்.
வள்ளலார் பெருமான்
மூன்று மந்திரங்கள்.
தனித்திரு என்பதற்கு ஏகாந்தமாய்
இரு என்பது பொருளாகும்.ஏகாந்தமாக
இருந்து இறைவனை மனதில்
இருத்தி வழிபடவேண்டும்.அதன் மூலம்
மோட்சம் கிட்டும்.
உடலால் தனித்திருந்து பழகினால் உள்ளத்தால்
தனித்து நின்று வாழும் மனோபக்குவம்
உண்டாகும்.இவ்வாறு இறைவனை சதாகாலமும்
சிந்தித்து தனிமையில் இருப்பதே பெரும்
சுகமாகும்.
விழித்திரு
தூங்காமல் தூங்குவதே சித்தர்
வாக்காகும்.அதாவது இறை சிந்தனையில்
ஆழ்ந்து பேரின்பக் களிப்பில்
மூழ்குவதே உண்மையான இன்பம்
தரும்.தூங்காமல் தூங்கி அறிதுயிலாய் நிற்கும்
அன்பர்கள் சிவனையும் சிவ உலகையும்
தம்முன்னே காண்பர்.ஆகாரம்
அரை,நித்திரை அரைக்கால்
என்பர்.சாவாநிலை பெற்ற சித்தர்கள் தூக்க
மொழிந்தவர்களாய் சதா பேரின்பத்தில்
ஆழ்ந்திருப்பார்கள்.அதனால்தான் சாகாக்
கலையின் இரண்டாவது மந்திரமாக
விழித்திரு என்று வள்ளலார் கூறுகின்றார்.
மனிதன் உறக்க நேரத்தில் 48 அங்குல சுவாசம்
வெளியே பாய உள்ளே 24 அங்குலம்
மட்டுமே மூச்சாக இழுக்கப்படுகிறது.இந்த
சுவாசமே விழிப்பு நேரத்தில்
சமமானதாகவோ அல்லது வெளிவிடும்
மூச்சு அளவு குறைவானதாகவோ இருக்கிறது.
நம் உடலின் ஆயுள் சுவாசத்தால்
கணக்கிடப்படுகிறது.விழிப்பு நிலையே நம்
ஆயுளை அதிகரிக்கச் செய்யும்
வழியாகும்.மகா சிவராத்திரியன்றும் வைகுண்ட
ஏகாதசியன்றும் கண்விழிக்கச் சொல்லும்
ரகசியமும் இதுவே.
உறக்கத்தைச் சுத்தமாக ஒழித்த
நிலையே தேவர்நிலை. அதனால்தான்
தேவர்களை இமையை மூடாதவர்
என்று புராணங்கள் சுட்டுகின்றன. ஆனால் இந்த
உறக்கமற்றநிலை தவம் செய்வோரின்
இறுதி முயற்சியாகும். ஆரம்ப
கட்டநிலைகளுக்கு பயன் விளைவிக்காது.
3மணிநேர உறக்கம் போதுமானது என்கிறார்
வள்ளலார் பெருமான்.
பசித்திரு
அதிக உணவும் அடிக்கடி உண்பதும்
நோய்க்கு வித்திடும்.குறைந்த உணவும்
சத்தில்லாத உணவும்
நோய்க்கு அடிகோலிடும் .எனவே பட்டினியால்
இறந்தவரைக் காட்டிலும் அதிக
உணவு உண்டு நோய்வாய்ப்பட்டு சீக்கிரத்தில்
மடிந்தவரே அனேகர்.
“ஆகாரம் அரை : நித்திரை அரைக்கால்:
மைதுனம் வீசம்: பயம் பூஜ்யம்” வள்ளலார்.
அதாவது அரை வயிறு உணவு உண்ணவேண்டும்.கால்
வயிறு நீர் பருக
வேண்டும்.கால்வயிறு காலியாக
காற்று சென்று உணவைக் கூழாக்க இடம்
தரவேண்டும். வள்ளலார் உபதேசித்த
இம்மந்திரங்களை தாயுமானவரும்
கடைபிடித்தார் என்பதை அவரது பாடலின்
வாயிலாக அறியலாம். ஓம் சிவாய நம!
அபிராமி அந்தாதி
அன்னையும் ஆயினள்
பெண் ஒரு பெரும் சக்தி.
பெண்ணில், தாய்மை எண்ணம் எப்போதும் ஓங்கியே இருக்கும் என்று நினைக்கிறேன். உயிரை உருவாக்குவதும், அதை காத்து போற்றுவதும் பெண்ணிற்கு இயல்பாகவே உள்ள குணம் என்று நினைக்கிறேன்.
அபிராமியை காணும் பட்டருக்கு இரண்டு எண்ணம் தோன்றுகிறது. அவள், சங்கரனின் மனைவி மட்டும் அல்ல, சங்கரனின் தாயாகவும் இருக்கிறாள்.
எப்படி மனைவியே தாயாகவும் இருக்க முடியும் ?
அதுதான் பெண்மை. அவள் என்னவாக இருந்தாலும் தாயாக, அன்னையாக எப்போதும் இருக்கிறாள்.
ஒவ்வொரு மனவிக்குள்ளும் ஒரு தாய் இருந்து கொண்டே இருக்கிறாள்….பரிந்தெடுக்க, அரவணைக்க, அன்பு காட்ட…
பாடல்
தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே
பொருள்
தவளே இவள் = தவம் செய்தவள் இவள்
எங்கள் சங்கரனார் = எங்கள் சங்கரனார்
மனை மங்கலமாம் = மனைக்கு மங்கலம் சேர்ப்பவள். அவன் மனைவி.
அவளே = அவளே
அவர்தமக்கு அன்னையும் ஆயினள் = அவனுக்கு அன்னையும் ஆகினாள்
ஆகையினால் = ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை = இவளே கடவுள்கள் யாவர்க்கும் மேலானவள்
இறைவியும் ஆம் = இறைவியும் ஆனவள்
துவளேன் = வெவ்வேறு தெய்வங்களின் பின்னால் போய் துவண்டு போக மாட்டேன்
இனி ஒரு தெய்வம் உண்டாக = இனி மேல் ஒரு தெய்வம் உண்டாக
மெய்த் தொண்டு செய்தே = உண்மையான தொண்டு செய்தே.
கடன்
கடன் தொல்லை :
1. தோலால் ஆன செருப்பு,பெல்ட் மற்றும் பர்ஸ் உபயோகத்தை நிறுத்தவும்.
2. தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.
3. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம் பருப்பை மறு நாள் புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும் போதெல்லாம் செய்யலாம்.
4. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில் தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும்.
5. தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.
6. முடியும் போதெல்லாம் 11 பால் பாக்கெட்டுகள் கோவிலுக்கு கொடுத்து வரவும்.
இழந்ததை பெற மேலும் இழக்காமல் இருக்க
ஒவ்வொரு திங்களும் அரச மரத்து இலைகள் 11 பறித்து அதில் 4 முறை சிகப்பு சந்தனத்தால் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) “ராம் ராம்” (இரண்டிரண்டாக 4 முறை) மேலிருந்து கீழ் எழுதி அந்த 11 இலைகளையும் ஏதாவது ஒரு அனுமன் கோவிலில் சென்று வைத்து விட்டு அனுமானை வழிபட்டு வர ஆஞ்சநேயன் நாம் இழந்த பொருள்,நஷ்டம் அனைத்தையும் திரும்ப பெற செய்வார் என்பது உறுதி
வேலை அல்லது தொழில் சிறப்பாக அமைய:
சம்பந்தபட்ட ஜாதகர் தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து சூரிய உதயத்திற்கு முன் எழுந்து முறையான சூரிய நமஸ்காரம் செய்து வருவது நிச்சயம் நல்ல வேலை, தொழில் அமைய வழிவகுக்கும்.
சுய ஜாதகத்தில் சனிபகவான் எந்த வகையிலாவது பாதிக்க பட்டு இருப்பின் சனி பீரிதி செய்து கொள்வது, விரைவான நன்மையை தரும் சிறந்த வேலை, தொழில் நிச்சயம் அமையும்.
அல்லது மாற்று திறனாளிகளுக்கு ஜாதகரால் முடிந்த அளவு உதவிகளை எந்த வகையிலாவது செய்து வருவது விரைவான ஜீவன மேன்மையை தரும். செய்தொழில் வளர்ச்சி பெற முடியாமல் இருப்பவர்கள், தனக்கு கீழ் பணியாற்றும் தொழிலார்களிடம், கண்ணியமாகவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் தன்மையுடன், நடந்து கொள்வார்களே ஆயின் அந்த தொழில் விரைவில் முனேற்றம் பெரும்.
தனது தகப்பானார் மூலம் எவ்வித துன்பங்களை ஜாதகர் அனுபவித்தாலும், அதை ஏற்று கொள்வாரே ஆயின், ஜாதகர் செய்யும் தொழில் நிச்சயம் 100 சதவிகித வெற்றி பெரும், ஏனெனில் ஒருவகையில் ஜீவன ஸ்தானத்துடன், தகப்பானர் ஆதிபதியமும் சம்பந்தம் பெறுவதால், அதன் காரகதுவ வழியில் ஜாதகர் கர்ம வினை பதிவை தீர்த்துக்கொள்ள கிடைத்த ஒரு வழி, மேலும் ஜீவன வழியில் அதிக நன்மையை ஜாதகர் பெறுவார் இது உறுதி.
ஒன்றுமே இயலாத நிலையில் உள்ளவர்கள் கூட, கன்று குட்டியுடன் உள்ள ஒரு பசுவிற்கு ஒன்பது சனிக்கிழமைகளில் தொடர்ந்து ஒரு வாழை பழம் கொடுத்துக்கொண்டு வருவாரே ஆயின், சில நாட்களில் ஜாதகருக்கு நிச்சயம் நல்ல வேலை அல்லது தொழில் அமையும்.