திருமணம்… மற்றும்..வேலை

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். அட்சய லக்ன பத்ததி முறையில் எப்படி ஜாதகம் பார்ப்பது. ஏன்னா? ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரு தனிப்பட்ட திறமை, தனிப்பட்ட அமைப்பு உண்டு. ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே நேரத்தில் பிறந்திருந்தாலும், 1 நிமிட இடைவெளி வைத்து பார்க்கும் பொழுது அட்சய லக்ன பத்ததி முறையில் பார்க்கும் பொழுது அது வெவ்வேறு பலன்களை குறிக்கும். அட்சய லக்ன பத்ததி முறையில் நட்சத்திரங்கள் மாறும்பொழுது மூன்று நிமிடத்திற்கு நட்சத்திர பாதங்கள் மாறும்பொழுது 45 நாள் அல்லது 90 நாள் பலன்கள் மாறுபடும். அப்படி பலன்கள் மாறும்பொழுது ஒவ்வொரு நட்சத்திர புள்ளிக்கும் இருக்கக்கூடிய அமைப்பு வெவ்வேறாக இருக்கும். 405 நாள் ஒரு நட்சத்திர பாதம் இயங்கினால் அடுத்த 45 நாள் ஒரு கிரகம் இயக்கும், அடுத்த 5 நாள் ஒரு கிரகம் இயக்கும், அடுத்த 13 . 1/2 மணிநேரம் ஒரு கிரகம் இயக்கும். அடுத்த 1 .1/2 மணிநேரம் ஒரு கிரகம் இயக்கும். அடுத்த 10 நிமிடம் ஒரு கிரகம் இயக்கும். அடுத்த ஒன்றரை நிமிடங்கள் ஒரு கிரகம் இயக்கும். இப்படி மாறுபடும் பொழுது உறவுகள் வகையிலும், நண்பர்கள் வகையிலும் ஏற்படும் சூழ்நிலைகள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். அதனால் ஜாதகத்தில் இரு நிலைகளைக் குறிக்கும். உதாரணமாக 45 நாள் ஒரு குழந்தைக்கு குரு இயக்கினால் அந்தக் குழந்தை படிப்பில் ஆர்வம் காட்டும். அதுவே 45 நாள் சுக்கிரன் இயக்கினால் ஒரு குழந்தைக்கு விளையாட்டு துறையில், விளையாட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டும். இரண்டும் படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் காட்டும். ஆனால் இரட்டையர்கள் இரு குழந்தைகளுக்கும் வெவ்வேறு துறையாக இருக்கும். ஒவ்வொரு இரட்டை குழந்தைகளின் ஜாதகங்களை ஆய்வு செய்யும் பொழுது ஒரு நிமிட இடைவெளியில் அட்சய லக்ன பத்ததி முறையில் பார்க்கும்பொழுது இரு குழந்தைகளுக்கும் பலன்கள் வெவ்வேறாக இருக்கும். நன்றி, வணக்கம்.

https://youtu.be/4pnffnKEogA

காதல் திருமணம் நடக்குமா….? நடக்காதா…?

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். அட்சய லக்ன பத்ததி முறையில் ஒவ்வொரு ஜாதகத்திலும் எந்த காலம் யோகம், எந்த காலம் அசுப காலம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். வாய்ப்புகளை நல்ல நேரத்தில் பயன்படுத்தினால் யோகம் உண்டு. அசுப காலத்தில் பயன்படுத்தினால் விரயமாகும். எல்லா காலகட்டத்திலும் ஜோதிடம் என்பது பரிணாம வளர்ச்சி. இதெல்லாம் கடவுளுடைய அமைப்பு. கடவுள் ஜோதிடம் வழியாக ஏதோ ஒரு ரூபத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். ஜாதகம் தனக்குத்தானே பரிணாமத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. கிரகங்களும் கடவுள்களும் ஏதோ ஒரு ரூபத்தின் வழியாக ஜோதிடத்தில் புதிய பரிணாமங்களை கொண்டு வந்து ஒரு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. குரு ஜாதகத்தில் எவ்வளவு பலபடுகிறதோ அந்த அளவிற்கு யோகத்தைக் கொடுக்கும். குரு என்றால் வழிகாட்டுதல். குரு பார்ப்பதால் உங்கள் வாழ்க்கை செம்மையாக மாறும். அட்சய ராசிக்கு கிரக பெயர்ச்சிகள் பார்ப்பது மிக சிறப்பான ஒரு விஷயத்தை ஏற்படுத்தும். கிரகப்பெயர்ச்சி என்பது ஜெனன கால ஜாதகம் தசாபுத்தி நன்றாக இருந்தால் அதனுடைய ஊன்றுகோல் கோள்களின் கிரகங்களுடைய கோட்சார தன்மைகள். ஜெனன ஜாதகம் நன்றாக இருந்தால் கோட்சார கிரகங்கள் எவ்வளவு சுபமாக இருந்தாலும், அசுபமாக இருந்தாலும், ஜாதகம் பளுவாக வேலை செய்யும். ஜாதகருடைய வாழ்க்கையை வழிகாட்டுதலும், நெறிப்படுத்துதலும் தான் ஜோதிடருடைய கடமை. ஜோதிட இருக்கும் பலப்பட வேண்டும் ஜாதகருக்கும் பலப்பட வேண்டும். நன்றி, வணக்கம்.

https://youtu.be/q0-pPXOxjSM

கர்மா என்றால் என்ன

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். கர்மா என்றால் என்ன? நம்முடைய எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு நிகழ்வு தான் காரணம் என்கிறோம். நிகழ்வுகள் எண்ணங்களாக, செயல்களாக, ஆசைகளாக, யோகங்களாக, அசுப யோகங்களாக, ஒருவருடைய வாழ்க்கையில் நடக்க கூடிய அத்தனை நிகழ்வுகளுக்கு பின் இயங்குவது தான் கர்மா. நம்முடைய வாழ்க்கையின் இயக்குனர் கடவுள். இது நமக்கு தெரியாது. நம்மை உருவாக்கியவர் தான் நம்முடைய அத்தனை செயல்களுடைய கட்டுப்பாடு. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கக் கூடிய அத்தனை செயல்களே கர்மா. செயல்கள், எண்ணங்கள் என்பதற்கு தான் கர்மா என்ற ஒரு விஷயம். எண்ணங்களும் செயல்களும் எதன் மூலமாக ஒரு மனிதனை இயக்கும் என்றால் ஆசைகள். ஒரு மனிதனுடைய ஆசைகள் மூலமாக தான் கர்மா தொடரும், ஆசைகள் இல்லை என்றால் கர்மா தொடராது. ஆசைகள் இருக்கும் வரையில் கர்மாவும் இருக்கும். கர்மா என்பது குழந்தைகள் முதல் மனிதர்கள் வரை சக மனிதர்களாக வாழும் அத்தனை பேருக்கும்,மரம் விலங்கு உலகத்தில் இருக்கும் அத்தனை உயிர்களுக்கும் கர்மா என்ற செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆசைகள் தான் கர்மா, ஆசைகளை எந்த அளவிற்கு மறுக்க முடியுமோ, அந்த அளவிற்கு கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும். நன்றி, வணக்கம்.

https://youtu.be/poA9sAK6PH0

குழந்தை பாக்கியம்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு ஜாதகத்திலும் எப்போது யோகமான காலம் என்பதை பார்க்கிறோம். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை நான் ஏன் உருவாக்கினேன் என்றால்? ஒரு காலகட்டத்தில் ஜோதிடம் என்பது எல்லாரும் ஒரு பொதுவான, ஒரே மாதிரியான பலன் சொல்ல வேண்டும். அந்தக் காலகட்டத்தில் அது நடக்க வேண்டும். அட்சய லக்ன பத்ததி என்பது அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு, இங்கு இருக்கக் கூடிய நிகழ்வுகள், ராசி கட்டத்தில் உண்மையிலேயே அந்த நிகழ்வு இருக்கா என்பதை பார்க்க வேண்டும். குழந்தை பற்றிய கேள்வி என்றால் 5ம் வீடு பலமாக இருக்க வேண்டும். ஐந்தாம் வீடு பலமாக இல்லை என்றால் ஆய்வுகள் படி இந்த குறைபாடு இருந்தால் அது சரியான ஜாதகம் தான் என்பதை கண்டு பிடிப்போம். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு வயதிற்கும் லக்னம் நகரும் பொழுது ஐந்தாம் அதிபதி எப்படி இருக்கு? ஐந்தாம் வீட்டு நட்சத்திர அதிபதி எப்படி இருக்கு? ஒவ்வொரு ஜாதகத்திலும் பலமாக பார்க்க வேண்டும். 4ம் வீடு பாதிப்பு கேட்டால் 4ம் வீடே லக்னமாக பாவிப்பார்கள். 4ம் வீடு தன்மைகள் எப்படி இருக்கு, 4ம் வீடு நட்சத்திர அதிபதி எப்படி இருக்கு லக்னாதிபதி எப்படி இருக்கு, நட்சத்திர அதிபதி எப்படி இருக்கு, ALP லக்னாதிபதிக்கும், 4 ஆம் வீட்டு லக்னாதிபதிக்கும் உள்ள தொடர்பு என்ன, என்பதை ஆய்வு செய்யும் பொழுது யார் யாருக்கு பிரச்சனை? எதனால் பிரச்சனை? என்பதை பார்க்க வேண்டும். அட்சய லக்ன பத்ததியில் 108 நட்சத்திர பாதமும், 108 நவாம்ச பாதமும் தெரிந்திருக்கவேண்டும். ஒவ்வொரு லக்னமும் நகரும் பொழுது 12 லக்னமும் நகரும். நன்றி, வணக்கம்.

https://youtu.be/E5SfyR-ZVY0

செவ்வாய் தோஷம்

அனைவருக்கும் வணக்கம், இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையில் எந்த காலம் யோகமான காலம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடமுறையில் ஜென்ம லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆனால் ALP லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12 ல் இன்றைய லக்னத்திற்கு, இன்றைய வயதுடைய லக்னத்திற்கு, நகரும் லக்னத்திற்கு 1, 2, 4, 7 ,8 , 12ல் செவ்வாய் இருந்தால் எதிர்பார்த்த யோகத்தை கொடுக்காது. உடல் உபாதைகள் எண்ணங்களை மாற்றிக் கொடுக்கும். வேகம், கோபம், அவர்களுடைய தாக்கங்கள் அதிகமாக இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். செவ்வாய் என்பது இரத்தம், அதனால் இரத்தம் சார்ந்த உணர்வுகள் அதிகமாக தூண்டப்படும் பொழுது ஜாதகருக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்கும். சிம்ம லக்னத்திற்கு 4ம் ஆதிபத்தியம் பெறக்கூடிய செவ்வாய், சிம்ம லக்னம் ALP ஆக போகும் பொழுது 9ம் அதிபதியும் செவ்வாய் ஆக வரும். இந்த செவ்வாய் 1, 2, 4 ,7, 8, 12ல் இருந்தால் தாய், தந்தை மூலமாகவே ஜாதகருக்கு திருமணம் தடையாக இருக்கும். அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது 100% கண்டிப்பாக பலன் சொல்ல முடியும். மணமகன் மணமகள் யாராவது ஒருவருக்கு பொருத்தம் பார்த்தால் கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கையில் வழிகாட்ட முடியும். ஜென்ம லக்னம் என்பது நான் பிறக்கும் போது உள்ள லக்னம். ஆனால் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இன்றைய லக்னம் தான் பார்க்க வேண்டும். பிறக்கும்போது உள்ள மனம், உடல்,….. எல்லாமே நாம் வளர வளர மாறும். அதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் நான் சொல்வது. 28 வயதில் நம்முடைய புத்தி, நம்முடைய மனம், உடல், எல்லாமே வளர்ந்திருக்கும். அதை தான் பார்க்க வேண்டும். அதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை. நன்றி, வணக்கம்.

https://youtu.be/026Yf4qz-sU