குழந்தை பாக்கியம்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு ஜாதகத்திலும் எப்போது யோகமான காலம் என்பதை பார்க்கிறோம். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை நான் ஏன் உருவாக்கினேன் என்றால்? ஒரு காலகட்டத்தில் ஜோதிடம் என்பது எல்லாரும் ஒரு பொதுவான, ஒரே மாதிரியான பலன் சொல்ல வேண்டும். அந்தக் காலகட்டத்தில் அது நடக்க வேண்டும். அட்சய லக்ன பத்ததி என்பது அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு, இங்கு இருக்கக் கூடிய நிகழ்வுகள், ராசி கட்டத்தில் உண்மையிலேயே அந்த நிகழ்வு இருக்கா என்பதை பார்க்க வேண்டும். குழந்தை பற்றிய கேள்வி என்றால் 5ம் வீடு பலமாக இருக்க வேண்டும். ஐந்தாம் வீடு பலமாக இல்லை என்றால் ஆய்வுகள் படி இந்த குறைபாடு இருந்தால் அது சரியான ஜாதகம் தான் என்பதை கண்டு பிடிப்போம். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு வயதிற்கும் லக்னம் நகரும் பொழுது ஐந்தாம் அதிபதி எப்படி இருக்கு? ஐந்தாம் வீட்டு நட்சத்திர அதிபதி எப்படி இருக்கு? ஒவ்வொரு ஜாதகத்திலும் பலமாக பார்க்க வேண்டும். 4ம் வீடு பாதிப்பு கேட்டால் 4ம் வீடே லக்னமாக பாவிப்பார்கள். 4ம் வீடு தன்மைகள் எப்படி இருக்கு, 4ம் வீடு நட்சத்திர அதிபதி எப்படி இருக்கு லக்னாதிபதி எப்படி இருக்கு, நட்சத்திர அதிபதி எப்படி இருக்கு, ALP லக்னாதிபதிக்கும், 4 ஆம் வீட்டு லக்னாதிபதிக்கும் உள்ள தொடர்பு என்ன, என்பதை ஆய்வு செய்யும் பொழுது யார் யாருக்கு பிரச்சனை? எதனால் பிரச்சனை? என்பதை பார்க்க வேண்டும். அட்சய லக்ன பத்ததியில் 108 நட்சத்திர பாதமும், 108 நவாம்ச பாதமும் தெரிந்திருக்கவேண்டும். ஒவ்வொரு லக்னமும் நகரும் பொழுது 12 லக்னமும் நகரும். நன்றி, வணக்கம்.

https://youtu.be/E5SfyR-ZVY0

செவ்வாய் தோஷம்

அனைவருக்கும் வணக்கம், இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையில் எந்த காலம் யோகமான காலம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடமுறையில் ஜென்ம லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆனால் ALP லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12 ல் இன்றைய லக்னத்திற்கு, இன்றைய வயதுடைய லக்னத்திற்கு, நகரும் லக்னத்திற்கு 1, 2, 4, 7 ,8 , 12ல் செவ்வாய் இருந்தால் எதிர்பார்த்த யோகத்தை கொடுக்காது. உடல் உபாதைகள் எண்ணங்களை மாற்றிக் கொடுக்கும். வேகம், கோபம், அவர்களுடைய தாக்கங்கள் அதிகமாக இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். செவ்வாய் என்பது இரத்தம், அதனால் இரத்தம் சார்ந்த உணர்வுகள் அதிகமாக தூண்டப்படும் பொழுது ஜாதகருக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்கும். சிம்ம லக்னத்திற்கு 4ம் ஆதிபத்தியம் பெறக்கூடிய செவ்வாய், சிம்ம லக்னம் ALP ஆக போகும் பொழுது 9ம் அதிபதியும் செவ்வாய் ஆக வரும். இந்த செவ்வாய் 1, 2, 4 ,7, 8, 12ல் இருந்தால் தாய், தந்தை மூலமாகவே ஜாதகருக்கு திருமணம் தடையாக இருக்கும். அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது 100% கண்டிப்பாக பலன் சொல்ல முடியும். மணமகன் மணமகள் யாராவது ஒருவருக்கு பொருத்தம் பார்த்தால் கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கையில் வழிகாட்ட முடியும். ஜென்ம லக்னம் என்பது நான் பிறக்கும் போது உள்ள லக்னம். ஆனால் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இன்றைய லக்னம் தான் பார்க்க வேண்டும். பிறக்கும்போது உள்ள மனம், உடல்,….. எல்லாமே நாம் வளர வளர மாறும். அதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் நான் சொல்வது. 28 வயதில் நம்முடைய புத்தி, நம்முடைய மனம், உடல், எல்லாமே வளர்ந்திருக்கும். அதை தான் பார்க்க வேண்டும். அதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை. நன்றி, வணக்கம்.

https://youtu.be/026Yf4qz-sU

திருமணம் ஏன் எனக்கு நடக்கவில்லை

அட்சய லக்ன பத்ததி பாகம் 1 pdf

அட்சய லக்ன பத்ததி பாகம் 3

அட்சய லக்ன பத்ததி பாகம் 2

அட்சய லக்னம் பத்ததி ஜோதிடம்

ஜோதிடம்

அட்சய லக்ன பத்ததி புத்தகம்

https://youtu.be/7l6kkda9vVA

2ல் ராகு 8ல் கேது கவனமாக திருமணம் செய்யவேண்டும்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஜோதிடம் என்பது ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையில் பங்கு வகிப்பது எப்படி என்றால், காலையில் நாம் எழுந்தவுடன் இன்றைய ராசி பலன், நம்முடைய ராசிக்கு அன்றைய நாளில் தினபலன் பார்க்கிறோம். நாம் ஒவ்வொரு நாளும் தினபலன் பார்க்கிறோம் அதை என்றைக்காவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைபட்டு இருந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும். உங்கள் வாழ்க்கை வளமாக போகிறது. வாழ்க்கை புரிதலுக்கான காலம் வரப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்களே விளக்கேற்ற கூடிய அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருக்கு என்பதை நீங்களே உணரனும். நம் வீட்டில் ஜோதிட புத்தகம் இருக்கும் பெயர், ராசி, திருமண பொருத்தம் புத்தகம் இருக்கும் இந்தப் புத்தகங்களை ஒரு 15 நிமிடம் படித்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு ஏதாவது நடந்திருக்கா என்பதை பாருங்கள். தினப்பலன் எப்படி சொல்கிறோம், கோச்சார கிரகங்கள் எப்படி எல்லாம் நகர்கிறது, சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், சனி, செவ்வாய், ராகு கேது இந்த கிரகங்கள் எப்படி நகர்கிறது, வான் வெளி மண்டலத்தில் இருந்து வரக்கூடிய ஒளிக்கற்றைகள் மனிதனுடைய வாழ்க்கையை எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதை அழகாக புரிந்துகொள்ளுங்கள் நாளடைவில் உங்களை அறியாமல் இந்த கிரகங்கள் உடைய தன்மையை உணரும் பொழுது, ஆமாம் சார் இந்த காலகட்டம் எதிர்பார்த்த மாதிரி அமைப்பு இல்லை அதை உணரணும், நீங்கள் புரிந்து கொள்ளனும், ஜோதிட புத்தகத்தை வாங்கிப் படிங்கள். புரியவில்லை என்றாலும் படிங்கள், எப்பொழுதும் விளக்கு ஏற்றுங்கள், சாமி கும்பிடுங்கள், வாசலில் இந்த பொருளை கட்டுங்கள் இது எல்லாம் அந்த காலத்தில் தாத்தா பாட்டி சொல்லிக்கொடுத்த ஒரு விஷயம். வீட்டில் ஏதாவது ஒரு இயந்திரம் வைத்திருப்போம், ஏதாவது சாமி பூஜை செய்வோம், எந்த சாமி போட்டோவாக இருந்தாலும் உங்களுக்கு விருப்பமாக இருந்தால் வையுங்கள். சாமி கும்பிடுங்கள், சரணாகதி அடையுங்கள். கிரகங்களும் கடவுள்களும் தேவதைகளும் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு வழி காட்டுவார்கள். தெய்வங்கள் எல்லாம் உங்களுடைய வாழ்க்கையை வழி காட்டும். அதில் மாற்று கருத்து கிடையாது. இல்லை இந்த தெய்வத்தை வைத்து வணங்க பயம் உள்ளது என்றால் அதைக் கொண்டு கோயிலில் வைத்து விடுங்கள். இந்த இயந்திரம் கொடுத்தார்கள். அதை வைத்து வணங்க பயம் உள்ளது என்றால் அதையும் வைக்காதீர்கள் கோவிலில் கொண்டு வைத்து விடுங்கள். உங்கள் மனம் புரியவில்லை என்றால் உங்கள் மனம் பயப்பட்டால் கண்டிப்பாக அதை பக்கத்தில் உள்ள கோவிலில் வைத்து விடுங்கள். நீங்கள் அந்த ஜோதிடத்தை படித்துக் கொண்டால் உங்கள் வீட்டில் விளக்கேற்றி இருளை அகற்றுவது போல் உங்களுடைய மன இருளை அகற்றுவதற்க்கு ஜோதிடம் என்பது உங்களுடைய வாழ்க்கையை வழிகாட்டும். இதைப் படிக்கும் பொழுது உங்களுடைய தன்மைகளை உணர முடியும் அதான் படிக்க சொல்கிறேன். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு காரணிகள் இருக்கு. அதில் ஜோதிடமும் ஒரு அங்கம்தான். அதைப்பற்றி தெரிந்து கொண்டால் அந்த ஜோதிடத்தின் மூலமாக பல அங்கங்கள் உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும். நன்றி

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_number_9786556156

https://youtu.be/bQI7m3AFOKY

செக்கு இருந்த இடத்தில் வீடு கட்டலாமா

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். கேள்வி ஊரில் செக்கு இருந்த இடத்தை வாங்கக்கூடாது என்கிறார்கள். ஏன் இது வாங்கக் கூடாதா? வாங்கலாமா? ஊரில் செக்கு இருந்த இடத்தை யாரும் வாங்க மாட்டார்கள். குறிப்பிட்ட ஒரு சில நபர்கள் தான் வாங்குவார்கள். செக்கு இருந்த இடத்தில் வீடு கட்டினால், செக்கு சுழலும் கஷ்டப்படும் அந்த மாதிரி இடத்தில் வீடு கட்டினால் ஒரு சந்தோஷமான நிலையை குறிக்காது. அதை வாங்க மாட்டார்கள். அந்த இடத்தில் வீடு கட்டமாட்டார்கள். செக்கு இந்த இடத்தில் இருந்தது, இந்த இடத்தில் இல்லை என்று தெரிந்துகொள்ள அந்த நிலத்தை சுற்றி சுத்தி செய்ய வேண்டும். சுத்தி என்பது மண்ணில் இருக்கக்கூடிய சல்லிய தோஷத்தை நீக்குவது. அந்தக் காலத்தில் நவதானியங்களை தெளித்து விட்டு உழுவார்கள். சிலபேர் அந்த இடத்தில் மாடு கட்டிமையாக்குவார்கள். அதுபோல் செய்து வந்த இடத்தை சுத்தி செய்வார்கள். சுத்தி என்பது அந்த இடத்தை சமநிலைப்படுத்துவது சாந்தப்படுத்துவது,அந்த இடத்தை சுத்தப்படுத்துவது. இன்றைக்கு நாம் அவசர உலகத்தில் இருக்கிறோம். அந்த இடத்தை சுற்றி எலும்புகூடோ அல்லது புதைகுழியோ ஏதாவது ஒரு பிரச்சனை அந்த இடத்தில் இருந்தால் ALP க்கு 4ம் இடத்தில் ராகு சம்பந்தப்பட்டு இருந்தால் கண்டிப்பாக வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும். இதை அட்சய லக்ன பத்ததி ஜோதிட மென்பொருளில் இரண்டு பகுதியாகப் பிரித்து உள்ளேன். வீடு சம்பந்தப்பட்ட கேள்வி என்றால் 4ம் பாவகத்திற்கு மேல் சிகப்பு கலர் இருக்கா? 4ம் பாவகத்திற்கு கீழ் சிகப்பு கலர் இருக்கா? 4ம் பாவகத்திற்கு கீழ் சிகப்பு கலர் இருந்தால் அந்த வீட்டில் வாஸ்து சம்பந்தப்பட்ட குறைபாடு இருக்கும். வாஸ்து சம்பந்தப்பட்ட நிபுணர்களை அழைத்து சரி செய்யணும். ஜாதகருக்கு நேரம் நன்றாக இருக்கும்பொழுது வாஸ்து சம்பந்தப்பட்ட நிபுணர்களை அழைத்து சரியான வழிகாட்டுதல் கொடுப்பாங்க. ஜாதகம் ,தசா புத்தி நன்றாக இருந்தால் இதை மாற்றி வையுங்கள் என்று சொன்னால் உடனே மாற்றுவார்கள். அதில் ஒரு மாற்றம் உண்டாகும் அந்த மாற்றத்தை பிடித்து ஏணிப்படியாக அந்த ஜாதகர் முன்னேறுவார். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அதனால் மனை என்பது மிக மிக பார்த்து சதுரமாக இருக்கிறதா, செவ்வகமாக இருக்கிறதா, நீள் வடிவமா,வடக்கும் தெற்கும் அருங்கோணம் ஆக இருக்கா, ரொம்ப ரொம்ப கவனமாக பார்க்கணும். கண்டிப்பாக மனை பார்க்கும்பொழுது நல்ல ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் நிலத்தில் தோஷம் இல்லாமல் வீட்டில் இருக்கக்கூடிய மற்ற பொருள்கள் மீது இருக்கும். பொருள்கள் மீது இருக்கும் தோஷம் மற்றொருவரிடம் தானமாக கொடுக்கும் பொழுது அதன் பிறகு அந்த ஜாதகர் சந்தோஷமாக இருப்பார். கண்டிப்பாக இதை உணரவேண்டும் உணரக் கூடிய அமைப்பு உள்ளது. உங்கள் ஜாதகத்தில் இப்படி அமைப்பு இருந்தால் அதை நாம் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை கண்டிப்பாக எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். Alp Astology வீடியோஸ் நிறைய உள்ளது. பாருங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வீட்டுக்கு ஒரு ஜோதிடர் உருவாக வேண்டும். நன்றி.

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்

#அட்சய_லக்ன_பத்ததி_pdf

#ALP_astrology_contact_number_9786556156

https://youtu.be/Mw-8lbxUXu4