திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகுமா?

 

12 ராசிக்காரர்களும் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகுமா?

 

அப்படிதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் சில பேருக்கு மனதில் அழுத்தம் இருக்கும்.

கோயிலுக்கு போயிட்டு வந்து தான் பிரச்சனை,

கோயிலுக்கு போய் தான் நடந்தது,இதெல்லாம் உண்மைதான்.

நடக்கிறது.

ஆனால், சில கரும பயன்கள், சில விஷயங்கள் அனுபவித்து கரைத்து பிரச்சினைகளை முடித்து என்னுடைய மனதில் உள்ள அழுக்குகள், என்னுடைய உடலில் உள்ள அழுக்குகள், வெளி வந்தால்தான் அது முழுமை அடையும்.

 

என்னுடைய வெளி மனம் நான் அந்த கோவிலுக்கு போனேன் ,அந்த கோவிலுக்கு போனதால்தான் பிரச்சனை, விரயம் என்று சொல்வார்கள் ஆனால் ஏதோ ஒரு காரணம் உள்ளுக்குள் இருக்கும்.

 

ஆனால் சில ராசிகள் அங்கு போனால் உண்மையிலேயே பாதிப்பு உண்டு.

12 ராசிகளும் போய் அந்த கோவில் நடந்தால் அந்த நிகழ்வு எப்படி இருக்கும் என்றால் சில தவறுகள் செய்து இருப்பார்கள் இதற்கான தண்டனை இன்னும் உனக்கு ஆறு மாதம் இருக்கு அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.

என்பதுதான் கடவுள் சொல்ல கூடிய விதி.அப்பொழுதுதான் ஆரோக்கியமான நிகழ்வாக அமையும்.

 

தப்பு செய்துவிட்டு கோவிலுக்கு போகிறேன் ,அதை கடவுள் மன்னித்து விட்டால் நான் அடுத்த தப்புக்கு ரெடியாகி விடுவேன்.

ஏதோ ஒரு காரண காரியங்களோடு தொடர்புடையது தான் இந்த நிகழ்வு. கடவுளுக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை, ஆனால் நாம் கேட்க கூடிய முறை தவறாக இருக்கும். அதனால்,

சில நட்சத்திரங்கள் ,சில கிரகணங்கள், சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கு.

 

உதாரணமாக ALP மிதுன லக்னத்தில் ஒருவர் இருக்கார்.

கண்டிப்பாக அவர் திருப்பதி போகலாமா? போகலாம்.

சிம்ம ராசி சிம்ம லக்னத்தில் ஒருவர் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்று நேராக அங்க போயிடுவாங்க.

 

அதேபோல் துலாம் ராசியில் ஒரு நடிகையோ, நடிகரோ இருந்தால் நீங்கள் திருப்பதி போயிட்டு வந்தால் ஒரு மாற்றம் கிடைக்கும்.

அதுவே ரிஷப ராசியில் போனால் கொஞ்சம் அழுத்தமாக இருக்கும்.

இது இரண்டுமே சுக்கிரன் ராசிகள்.

ஆனால் துலாம் ராசிக்கு இருக்கக்கூடிய யோகம் ரிஷப ராசிக்கு இருக்காது.

 

விருச்சிக ராசியில் போனால் அப்பொழுதுதான் வீடு வாங்கணும், சொத்து வாங்கணும்,என்னுடைய தொழில் பெரிதாக அமையனும் என்று வேண்டி கொண்டு போனாங்கனா அவங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கொடுத்து விடவும்.

 

நான் சந்தோஷமாக இருக்கணும் ஆனந்தமாக இருக்கணும் என்று வேண்டிக் கொண்டு போவார்கள். ALP தனுசு லக்னம் தனுசு ராசி,

அட்சய லக்னம் தனுசு லக்னம் போகும்போது திருப்பதி போய் கும்பிடுங்கள்,நினைத்தது எல்லாம் நடக்க ஆரம்பிக்கும்.

 

அதேபோல் மேஷ ராசி மேஷ லக்னம் ALP லக்னமாக வரும்போது

எதிர்பாராத சந்தோஷம் ,திருமணம் நடக்கவில்லை, குழந்தை,புகழ், அதிகாரம், யோகம், வேலை எல்லாம் கிடைத்துவிடும்.

 

மத்த ராசிகள்எல்லாம் தேவையில்லாத அழுத்தங்களையும், பிரச்சனைகளையும்,கழிக்கக்கூடிய காலமாக தான் அமையும்.

சில பேர் சொல்லுவாங்க அங்கு போகும் பொழுது கார், பஸ் பஞ்சர் ,

பஸ் கிடைக்கவில்லை , ரயில் கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடிய நிகழ்வுகள் எல்லாம் நான் சொல்லாத இந்த ராசிகள் உள்ளவர்களுக்கு இது இருக்கும்.

 

மிருகசீரிஷம் 3, 4 பாதம், திருவாதிரை 1, 2, 3, புனர்பூசம் 1, 2, 3, இந்த நட்சத்திரக்காரர்கள் திருப்பதி ஏழுமலையானை பலமாக பிடித்துக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

 

கண்ணாடி முன் நின்று பேசி பாருங்கள், உங்கள் மனசாட்சி உங்களுடன் பேச ஆரம்பிக்கும்.அதுபோல் ஒரு நிகழ்வு, 6 மாதத்திற்கு முன் செய்த தவறை,

6மாதத்திற்கு பின்பு நான் புரிந்து கொள்வேன்.

அப்பொழுது என்னுடைய இந்த கர்ம கழிந்து விடும்.

 

இப்பொழுது ALP லக்னம் மிதுன லக்னம் வரும்பொழுது நேராக திருப்பதி ஏழுமலையான் பெருமாள் கோவிலை சரணாகதி அடைந்தால் உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ பேர், புகழ், பணம், அதிகாரம் எல்லாமே கொடுத்து விடுவார்.

கண்டிப்பாக யோகம் உண்டாகும்.

 

பணம் வரவழைக்கும் பரிகாரம்

பணம் வரவழைக்கும் பரிகாரம்:

ALP லக்னம் கன்னி லக்னம் வரும்பொழுது அவர் என்ன செய்தால் பணம் வரும்?

ஒருவருக்கு கண்டிப்பாக பணம் வரவேண்டும் என்றால் வந்துவிடும்.
ஒருவருக்கு பணம் வரவே வராது ஆனால் சில விஷயங்கள் முயற்சி செய்ய பணம் வரும்,
வரவே வராது என்றால் என்னதான் பரிகாரம் பண்ணினாலும் அதற்கு வாய்ப்பே இல்லை.

கன்னி லக்னம் 10 வருட காலம் இயங்கும்.
ஒரு தடவையாவது குருவாயூர் போய் சாமி கும்பிட்டு வந்தால் அவருடைய வாழ்க்கை அவ்வளவு ஒரு ஆத்மார்த்தமாக இருக்கும்.

அதாவது பணம் வரணும் என்று நினைத்து போக வேண்டாம்,எங்கள் ஆத்மார்த்தமாக அந்த மண்ணை மிதித்து வரும்பொழுது அவ்வளவு ஒரு சந்தோஷம்.எப்படி எங்கிருந்து யார் மூலம் எந்த தொடர்பு அப்படி எல்லாம் எதுவும் வேண்டாம்,

இதுபோல் சந்திரதிசை யாருக்காவது நடந்தால் கண்டிப்பாக குருவாயூர் போகணும்.சந்திர திசை ,சந்திர புத்தி ,சந்திர அந்திரம், சந்திரன் சூட்சுமம்
ஏதோ ஒரு இடத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் குருவாயூர் கோவிலுக்கு போங்க, கன்னி லக்னம் காரர்கள் ஆத்மார்த்தமாக குருவாயூர் கோவிலுக்கு போங்கள்.

அவ்வளவு தூரம் போக முடியாது என்றால் லெட்சுமி நரசிம்மர் கோவில்கு போகலாம்.அல்லது லட்சுமி நரசிம்மர் போட்டோ பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம்.

ALP ஜோதிட முறையில் கன்னி லக்னம் போகக்கூடிய 10 வருட காலம் லெட்சுமி நரசிம்மர் போட்டோ கையில் வைத்துக் கொள்ளலாம். நாம் எங்கெல்லாம் பணம் வைத்திருக்கிறோமோ அங்கும் வைத்துக் கொள்ளலாம்.
வீட்டில் பூஜை அறையில், வீட்டில் பணப்பெட்டியில் இதிலெல்லாம் லெட்சுமி நரசிம்மர் போட்டோ வைத்துக்கொள்ளலாம்.
இல்லையென்றால் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு போய ஹோமம் நடக்கும், இல்லை தேன் வாங்கிக்கொடுத்து அபிஷேகம் செய்வது,அவ்வளவு ஒரு
ஆத்ம திருப்தி அடைந்து பணம் வருவதற்கான வாய்ப்பு கொடுக்கும்.

மகாலட்சுமி பூஜையில் கலந்துகொண்டு தாமரைப்பூைவையும்,தேனையும் அந்த யாகத்தில் கொடுக்கும் பொழுது அது பணமாக மாறிவிடும்..
அந்த தேன் கையில் கொடுத்தால் எடுத்து சாப்பிடுங்கள் கண்டிப்பாக ஆத்ம திருப்தி கிடைக்கும்.
அதேபோல் கன்னி லக்னக்காரர்கள் எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக் கொள்ளலாம்.அதை முழுமையாக வைத்துக் கொள்ள வேண்டும் உடைக்கக்கூடாது.
அது அறிந்து ஜூஸ் சாப்பிடலாம் ,உணவாக உட்கொள்ளலாம்.
ஆனால் வாகனத்திற்கு முன் வைக்கக் கூடாது.

இது போல் நிறைய விஷயங்கள், நிறைய பரிகாரங்கள்
அட்சய லக்ன பத்ததியில் இருக்கு.
ஆனால் யார் எதை செய்யணும், எப்ப எதை செய்யனும் என்பது முக்கியம்.

நன்றி.

https://www.youtube.com/watch?v=4Q9nH3vBRLA

இதுவரை திருமணம் ஏன் நடக்கவில்லை

அனைவருக்கும் வணக்கம்.
ரிஷப லக்னத்தில் பிறந்த இந்த ஜாதகருக்கு இப்போ வரையும் திருமணம் நடக்கவில்லை? ஏன்?

பாரம்பரிய முறைப்படி எப்படி ஒத்து வருகிறது என்று பார்க்கலாம்.

இப்பொழுது இவருடைய ALP லக்னம் விருச்சிக லக்னம், லக்னாதிபதி 5ம் இடத்தில் உள்ளது. 5ம் இடத்தில் நீச்சமாக இருந்தாலும்கூட புதன் சேர்ந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோகம் என்ற அமைப்பு உருவாகி இருக்கு.
அதனால் புதன், சுக்கிரன் எல்லாம் நல்லா இருக்கு.
5ம் இடத்தில் குரு, 2007 இல் இருந்து, குரு திசை போகிறது.
ஆனால் குரு 7ம் பார்வையாக லக்னத்திற்கு 11ம் இடத்தை பார்க்கிறார்.
அதனால் குரு 11-ம் அதிபதியாக தான் வேலை செய்கிறார்.
அதனால்,மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
லக்னத்துக்கு 9 ,10 இடத்துக்கு உரியவர் சனி.சனியும் 5ம் இடத்தில் இருப்பதால் பூர்வ புண்ணியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் நல்லா இருக்கும். இப்படி ஜாதக அமைப்பு இருப்பதால் திருமணம் நடந்து இருக்கணும், ஆனால் நடக்கவில்லை ஏன்? என்பதை ALP முறைப்படி பார்ப்போம்.
18 வயதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
பிறப்பு லக்னம் என்பது என்னுடைய பிரம்ம ரகசியம்.
எப்படி வந்தீங்க,எங்கிருந்து வந்தீங்க இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் தான் அட்சய லக்னம்.
3 ல் செவ்வாய் ராகு, செவ்வாய் என்றால் லக்னத்தில் 1,4 ,7 ,8 ,12, ல் இருந்தால் செவ்வாய் தோஷம்.
ALP முறைப்படி 18 வயதில் இருந்து 28 வயது வரை கடக லக்னமாக எடுத்துக்கொண்டால், புதன் வீட்டில் சந்திரன் என்பது Alp முறைப்படி கொஞ்சம் பிரச்சனைகளை கொடுக்கும்.

இதில் முதன்மையானது செவ்வாய் ராகு லக்னத்தில் இருப்பதால்,அந்த10 வருடம் out.
லக்னத்திற்கு 7ம் அதிபதி கேது ,சனி 3ம் அதிபதியாக இருக்கு. 3ல் இருந்தாலே லக்னாதிபதியும் 7ம் அதிபதியும் 3ல் இருந்தால் மூன்றுதாரம் யோகம் உண்டு.

28 வயதில் இருந்து 38 வயது வரையும் லக்னாதிபதி சூரியன்.நல்லா இருக்கார்.ஆனால் 7ம் அதிபதி சனி பகவான் 2ல் இருக்கக் கூடாது.
7ம் அதிபதி 8ல் இருப்பதால் திருமணம் நடக்காது.

ஜnதகருடைய வாழ்க்கை 28 வயதிலிருந்து 38 வயது வரை
லக்னாதிபதி சூரியன் நல்லா இருக்கார். நட்சத்திர அதிபதியான கேது 6ல் இருக்கார்.கோர்ட், கேஸ், வம்பு ,வழக்கு திருமணத்திற்காகவே நடந்திருக்கும்.
எப்பொழுதும் 7ம் அதிபதி 2ல் இருந்தால் இருதார யோகம்.
முன்னாடி மூன்று தார யோகம் இருக்கு. பலதரப்பட்ட தொடர்புகள் மூலமாக, நண்பர்கள் மூலமாக, கூட்டுத் தொழில் மூலமாக, கணவன் மனைவி தொடர்புகள் மூலமாக 6ல் இருக்கக்கூடிய கேதுவால் கண்டிப்பாக இவர் போலீஸ் ஸ்டேஷன் போகணும்.திருமணத்திற்கான ஒரு நிகழ்வு நடந்தால் பெண்கள் மூலமாகவே இந்த ஜாதகர் கோர்ட், கேஸ் ,வம்பு .வழக்கு என்று 4 வருடம் இந்த ஜாதகர் அலைந்து இருப்பார்.

38 வயதுக்கு பிறகு திருமணத்திற்கான ஒரு வாய்ப்பு இருக்கு,சூரியன் உடைய நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம் எடுத்துக்கொண்டால், சூரியன் 12ல் விரயாதிபதி,ஜாதகர் கற்பனைகள் மூலமாக, கௌரவம் மூலமாக ,அந்தஸ்துகள் மூலமாக இந்த ஜாதகருக்கு விரயத்தை பண்ணும்.
அங்கு ஒரு 3 வருடம் ,4 மாதம் சூரியன் அலைக்கழிக்கும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் இந்த ஜாதகருக்கு ஒரு வாய்ப்பு இருக்கு.அப்ப நடந்தால் தான் இந்த ஜாதகத்தில் திருமணம்.
அஸ்தம் நட்சத்திரம் போகும்போது 11 ஆம் அதிபதியான சந்திரன் லக்னத்தில் தொடர்பு படும்பொழுது சந்திரன் அங்கேயே இருப்பதால் இருதார யோகம்.
இரண்டாம் தாரமாக வரக்கூடிய பெண்ணை இந்த ஜாதகருக்கு யோகமுண்டு.

நன்றி.