நல்லதே செய்யுங்கள், நல்லதே நடக்கும்

அன்பே சிவம், அன்பே ஆனந்தம்,
அன்பே வாழ்க்கை,
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க,
“மகிழ்ச்சி” என்கின்ற இந்த ஒரு வார்த்தை எல்லோருக்கும் பிடிக்கும்.
அனைவரிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று கேட்டால் அதை ஒருமுடிவாகவே சொல்ல மாட்டார்கள்.

மகிழ் என்றால் “இன்பம்”, அந்த இன்பம் என்பது மூலாதாரத்திலிருந்து நமது உச்சந்தலை வரை சந்தோஷத்தில் திளைக்க கூடிய ஒரு நிகழ்வை மகிழ்ச்சி என்று சொல்லலாம்.
வெளியில் சிரிப்பதற்கும் ,மனதிற்குள் இருப்பதற்கும் வெவ்வேறு சூழ்நிலைகள் தான் உள்ளது.

மகிழ்ச்சி என்பது ஒரு அளவீடு,
ஆசை எப்படி இருக்கும், அந்த ஆசைக்கு தகுந்த மாதிரி தான் நம் மகிழ்ச்சி அமையும்.
கொஞ்சமாக ஆசைப்பட்டால் மகிழ்ச்சி நிறைய இருக்கும்.நிறையாக ஆசைப்பட்டால் மகிழ்ச்சி பேர் அளவாக இருக்கும்.
சிறிய வீடாக இருக்கும் அங்கே மகிழ்ச்சி நிறைய இருக்கும், பெரிய வீடாக இருக்கும் அங்கே மகிழ்ச்சி இருக்காது.
அத்தனைக்கும் ஆசைகள் தான் அளவுகோலாக அமைகிறது.

குடும்பத்தோடு ,உறவினர்களோடு, சுற்றத்தாரோடு ,நண்பர்களோடு,
சக மனிதர்களாக பேசி வாழ்ந்தாலே,பெரிய இன்பம், அதுதான் பேரின்பம்.அதுதான் மகிழ்ச்சி.

எப்ப ஒரு மனிதன் பெற்றோரிடம், மனைவியிடம்,குழந்தைகளிடம் பேசாமல் வாழ்க்கை நடத்தினால் அது மகிழ்ச்சி கிடையாது.

சக மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோமோ,சக மனிதர்களை எப்படி நடத்துகிறோமோ,அதைப் பொறுத்து தான் நமக்கு மகிழ்ச்சி அமையும்.

நம்முடைய சுற்றத்தார்கள் உறவினர்கள் குழந்தைகள் அனைவரிடமும் மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்.
மனம் விட்டு பேசுங்கள், மனம் விட்டு சிரிங்கள். ஒரு பத்து நிமிடம் ஒருநாளைக்கு கலகலவென்று சிரிங்கள்.உங்கள் வாழ்க்கை மாறுதா என்று பாருங்கள். யாரு என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும்,
கண்ணாடியிடம் உங்களைப் பார்த்து நீங்களே சிரியுங்கள் அந்த சிரிப்பு உங்களை மூலாதாரத்திலிருந்து பக்குவப்படுத்தும், சந்தோஷப்படுத்தும்.

அதீதமாக நம்முடைய எண்ண அலைகளை இன்னும் விரிவு செய்ய வேண்டும்.
நம்முடைய எண்ணங்கள் எளிதாக நிறைவேறும்.
வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதும் ஜெயித்துக் கொண்டே இருப்பீர்கள்.

என்னிடம் ஒருவர் நீங்கள் மட்டும் எப்படி ஜெயித்துக் கொண்டே இருக்கிறீர்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.
என்னைப் பொறுத்த அளவில் ஒரு நாளைக்கு 10 தியானம் நிமிடம் செய்யுங்கள் அது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக அமையும்.

வாழ்க்கையில் ஜெயிக்கணும் மகிழ்ச்சி என்பது இருக்கணும் அதாவது மகிழ்ச்சி என்பது உதட்டளவில் மட்டுமில்லாமல், மனதளவிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
நல்லதே செய்யுங்கள், நல்லதே நடக்கும், உங்கள் வாழ்க்கையில் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பேசுங்கள்.தேவையானது செய்யுங்கள், தேவையானதை பேசுங்கள், தேவை இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் பேசாதீர்கள்.
தேவை இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் வாங்காதீர்கள், அப்படி வாங்கினால் வாழ்க்கையில் கடன்பட்டு மகிழ்ச்சி என்பதை தொலைத்து விடுவோம்.

எது தேவையானது, எது தேவையற்றது என்பது நம்முடைய மன ஆசைகளை பொறுத்தது.
நல்லதொரு நிகழ்வை அமையட்டும்.
நன்றி, வணக்கம்

https://youtu.be/JsNC7xPiyCo

கும்ப லக்னத்திற்கு அவிட்டம் 3ஆம் பாதம் செல்லும்பொழுது துலாம் லக்னம் வரும்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள் ,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் ஒரு லக்னத்தை எப்படி ஆய்வு செய்வது?
என்னுடைய ஆய்வின்படி வயதுக்கேற்ப நம்முடைய லக்னம் மாறும் என்பதுதான்.
உதாரணமாக 50 வயது கன்னி ஜென்ம லக்னம், 51 வயதில் கும்பலக்னம்.
51 வயதில் கும்பலக்னம் ஆக வரும் பொழுது 6ம் பாவகமாக இயங்கும்.
ஆறாம் பாவகம் என்பது வாழ்க்கை பயணம்.
அதாவது ரண,ருண ,சத்ரு ஸ்தானம்.
கடன், வம்பு, வழக்கு, நோய் நொடிகளை பற்றிக் கூறக் கூடியது.
கடன் என்பது தன்னுடைய குடும்பத்திற்கு கடமை செய்யக்கூடிய காலம்.ஏன்னா?ஐந்தாம் பாவகம் மகன். மகனுக்காக கடமை செய்யக்கூடிய காலம்.
6ம் பாவகம் என்பது வழி வம்சமாக வரக்கூடிய குலத்தொழில்.
6ம்பாவகத்தில் இருக்கக் கூடிய கிரகங்கள் வழி வம்சத்தை குறிக்கும்.
உதாரணமாக கும்ப லக்னம் ஆறாம் பாவகத்தில் செல்கிறது.
கும்ப லக்னத்தின் 10ம் அதிபதி செவ்வாய்.
கும்பத்திற்கு 6ம் அதிபதி சந்திரன்.
சந்திரன் 10ம் இடத்தில் நீச்சம் பெறுகிறார்.

கும்ப லக்னத்திற்கு அவிட்டம் 3ஆம் பாதம் செல்லும்பொழுது துலாம் லக்னம் வரும்.
உங்க தொழில் விரையமாகி இருக்கும். இந்த ஒரு வருடம் எப்படி இருக்கும் என்ற விஷயத்திற்காக வந்திருக்கிறீர்கள்.
2019 ,2020 தொழில் விரயம் உண்டு. கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் முதலீடுகளில் புதிய பொருட்களை விட பழைய பொருட்களை வைத்து சரி செய்யலாம்.
செவ்வாய் என்பது இயந்திரம் சம்பந்தப்பட்டது அதனால் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்து தொழில் செய்யலாம்.

ஒரு லக்ன புள்ளியை வைத்து ஆயிரம் விதமான கேள்விகள், பதில்களை நாம் கொடுக்கலாம்.

வயதிற்கு ஏற்ற படி ஒவ்வொரு விதமாக பாவகங்களை பிரிக்கும் பொழுது உங்களுக்கு எளிமையாக புரியும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://youtu.be/MxhrEFPzfyg

 

முன் ஜென்ம ஜாதகம் இருக்கும் அதை ஆய்வு பண்ண முடிவு செய்தேன்.

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களையும் பெற வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான சந்தோஷங்கள், நல்லது கெட்டது, மகிழ்ச்சி, இன்பம் , துன்பம்இது எல்லாம் கிரகங்களின் அமைப்பு.

அட்சய லக்ன பத்ததி யில் என்னுடைய அடுத்த கட்ட ஆய்வுகள் என்ன?

இப்பொழுது உள்ள ஜாதகருடைய முன்ஜென்ம ஜாதாக அமைப்புகள் பற்றிதான் என்னுடைய ஆய்வுகள்.

இந்த ஜாதகத்தை உடைய தொடர் நிகழ்வுகளை நான் உருவாக்கி இருக்கேன்.

சில ஜாதகர்களுக்கு யோகமான ஜாதகமாக பார்த்திருப்போம். ஆனால் உண்மையில்அந்த ஜாதகர் எப்பொழுதும் வறுமையிலும் துன்பத்திலும்,நோய்நொடி யான வாழ்க்கை நடத்துவர்.ஆனா ஒண்ணுமே இல்லாத ஜாதகம் அதாவது அவர் கோடான கோடி வாழ்க்கை வாழ்வார்,இதைப் பற்றி ஆய்வு பண்ணும் போதுதான் கண்டிப்பாக இதற்கு முன் ஜென்ம ஜாதகம் இருக்கும் அதை ஆய்வு பண்ண முடிவு செய்தேன்.

அந்த ஜாதகத்திற்கும் இந்த ஜாதகத்திற்க்கும் இன்றைக்கு உள்ள தொடர்பு எப்படி இருக்கும்னா?

ஒரு நண்பர் வந்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்காது அந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன?என்பதை உணரும் பொழுது அதிர்ச்சியும் பேரின்பமும் ஒரு பயம் எனக்குஉருவானது.

வெளியிட முடியாத சூழ்நிலையில இருக்கேன்

அதை வெளியிடும்பொழுது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

ஒரு ஜாதகர் மீன லக்னம்,மீன லக்கனத்தில் 2 ,5,8 ,11 சம்பந்தப்படும்போது சுய கர்மா இயங்கும் சுய கர்மா என்பது நான் செய்த யோகங்கள் அவயோகங்களையும் குறிக்கும்.உண்மையாவே இயங்குதா னு ஆய்வு பண்ணும்போதுஅந்த ஜாதகத்தை எடுத்து பார்க்கும் பொழுது இரண்டாம் வீட்டில் மீன லக்னத்துல இருந்து சனிபகவான் இயக்குறாரு.முன்ஜென்ம ஜாதகத்தில அதே லக்கனத்திலிருந்து சனி பகவான் இயக்குறாரு இதே உத்திரட்டாதி நட்சத்திரம். 2ம் சுய கர்மா 5ம் சுயகர்மா இது எப்படி இயங்குது.இதை உணரும் போது இந்த விஷயங்கள் நிறைய விதமான ஆச்சரியங்களை உண்டாக்கியது.நான் சொல்லக்கூடிய விஷயங்கள் நான் பதிவு பன்ற விஷயங்கள் ஏன் சொல்ல வரனா?ஆய்வு பண்ணி பார்த்தால் 2 வருடம் கழித்தோ 5 வருடம் கழித்து இல்ல 10 வருடம் கழித்து 100 வருடம் கழித்து இந்த விஷயத்தை உணர்வாங்க.கண்டிப்பாக கூடிய விரைவில் வெளியிட வேண்டிக்கிறேன்.

அட்சய லக்ன பத்ததி யில் இன்றைக்கு ஒரு ஜாதகத்தை பார்ப்போம்.இப்பொழுது பார்க்கக்கூடிய ஜாதகம்,இந்த ஜாதகருடைய லக்கனம் விருச்சிகம் ALP லக்கனம் கும்பம்,இந்த ஜாதகருடைய கேள்விகுழந்தைகள் பற்றி. 1, 2, 3, 4, 5,      5-ம் வீடுபுதனுடைய வீடுஇந்த லக்னத்துக்கு இரண்டு அட்டமத்திலே போறாரு அதாவது இரண்டு ஆதிபத்திய தன்மைய செய்வது. 5க்கு அதிபதியுமான 2க்கு அதிபதியான புதன் அட்டமத்தில் உள்ளது.பத்தில் ஒரு பாவி இருந்தாலும் குழந்தை பாக்கியம் உண்டு.ஐந்தாம் அதிபதி அட்டமாதிபதி செயல்படும் பொழுது அந்த ஜாதகர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.மருத்துவ செலவுகள் சம்பந்தப்பட்டு இந்த ஜாதகர் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.விரயாதிபதி லக்னத்தில் உள்ளது.10 ல் சனி சம்பந்தப்படுவதால் இந்த ஜாதகத்திற்கு தத்து குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது.புதன் பகவானுடைய நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரம் விரயத்தில் லக்னாதிபதி உள்ளது. புதனும் சனியும் சம்பந்தப்படும்போது இந்த ஜாதகர் மருத்துவ செலவுகள் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.குழந்தைகள் பற்றிய அமைப்பில் குரு பகவான் பலமாக இருக்க வேண்டும். 2க்கும் 11-க்கும் அதிபத்தியத்தில் இருக்கக் கூடிய குருபகவான் பன்னிரண்டில் விரயத்தை உருவாக்கும்.யோகத்தைக் கொடுக்கும் ஆனா? யோகத்தை கொடுக்கல.கண்டிப்பாக இவருடைய முயற்சிக்கு தகுந்த மாதிரி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்.துர்க்கை அம்மன் உடைய வழிபாடு இந்த காலகட்டத்தில் யோகமாக இருக்கும்.சதய நட்சத்திரம் முடிந்து அடுத்து வரக்கூடிய பூரட்டாதி நட்சத்திரத்தில் ஒரு வாய்ப்பு உண்டு.குரு நட்சத்திரத்தில் இருந்தால் வாய்ப்பு உண்டு.2021 ஜனவரி 31ஆம் தேதிக்கு அப்பறம் யோகத்தை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.ஐந்தாம் அதிபதி அஷ்டமத்தில் குரு இருப்பதால் அங்கு பிரச்சனைகள் உருவாகும்.கும்ப லக்னத்திற்கு ஏழாம் வீடு சிம்மம்.சிம்ம லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான்.அவரே 6 விடாய் போவதால் பிரச்சனை உண்டு.எட்டுக்குடி முருகன் கோவிலில் குழந்தைகள் சார்ந்த அமைப்பு உள்ளது.செவ்வாய் அட்டமத்துல3க்கு உடையவன் அட்டமத்துல.முருகனை பலமாக கும்பிடுவதால் இந்த ஜாதகருக்கு ஒரு வாய்ப்பு உண்டு.

நல்லதொரு நிகழ்வேஅமையட்டும் மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம்.

நன்றி, வணக்கம்.

ஜாதகர் ஜெயில்க்கு போயிருக்காரு. என்ன காரணம்னு கேட்டாரு.

அனைவருக்கும் வணக்கம்,

இந்த நாள் இனிய நாள். வாழ்வில் எல்லோரும் எல்லா வரமும் பெறவேண்டும்.

அட்சய லக்ன பத்ததியில்நிறைய ஜோதிடர்கள்,ஜோதிட ஆய்வாளர்கள் நம்முடன் பயணித்திருக்கிறார்கள். ஜாதகருடைய லக்கனம் துலாம் லக்கனம், ALPலக்கனம் அவிட்ட நட்சத்திரம் இரண்டாம் பாதம்.

ஒரு நல்ல நிலையில் உள்ள ஜாதக ஆய்வாளர் ஒருதேதியை கொடுத்து 4.5.2017ஜாதகர் ஜெயில்க்கு போயிருக்காரு. என்ன காரணம்னு கேட்டாரு.

அவருடைய லக்கனம் துலாம் லக்கனம் ,ALP மகரம். மகரத்தில் திருவோணம் மூன்றாம் பாதம் 6ம் வீட்டை குறிக்கும்.திருவோணம் 1 திருவோணம் 2 திருவோணம் 3 மிதுனத்தை காட்டிக் கொடுக்கும். மகரம் 6ம்வீட்டைகாட்டிக்கொடுக்கும்.அதனால் ஜாதகருடையஅண்ணனுக்கும் அதேபிரச்சனை.மகரத்திற்கு மூத்த சகோதரன் விருச்சிகம்.விருச்சிகத்திற்கு மிதுனம் அட்டமாதிபதி வீடு.அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஜெயிலுக்கு போய் இருக்காங்க.

அவர்கிட்ட சொன்னதும் ஆமா அப்டினு சொன்னார். மகரத்தின் 9ம் அதிபதி புதன்,புதனுடன் 6ம் வீடாய் மிதுனம் வருது.ஒன்பதாம் வீட்டுக்கு அது பத்தாம் வீடு,9 10 சம்பந்தப்படும்போது அவருடைய அப்பாவோட கர்மமும் அங்க இணையிது.அப்ப மூணுபேரும் ஜெயிலுக்கு போயிருக்காங்க.

உங்களுடைய ஜாதகத்தில் அவிட்டம் நட்சத்திரம் 3-வது பாதத்தில் உங்களுக்கு திருமணம் நடைபெறும். 11ம் அதிபதி 4ம் அதிபதி சம்பந்தப்படுவதால்அவிட்டம் நட்சத்திரம். 3, 10 சம்பந்தப் படும்போது எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் கொடுத்தே தீரும்.

ஏன்னா கும்ப லக்னத்திற்கு 4ல இருந்து 7ம் வீட்டயும் 11-ம் வீட்டயும் பார்பாரு. 10ம் வீட்டையும் 11 ம் வீட்டையும் பார்பாரு.

அதனால் திடீர்யோகத்தைக் கொடுக்கும்,

திருமணம் நடக்கும்.இந்த ஜாதகர் பாம்பாட்டி சித்தர் கோவிலில் சரணாகதி அடைந்தால்இந்த ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.

அறம், பொருள், இன்பம்
இருக்கக்கூடிய சந்தோஷத்தையும் இருக்கக்கூடிய பொருட்களை வைத்துக்கொண்டு சந்தோஷமாக குடும்பத்தோடு வாழ்வது தான் மூன்று காலங்களும் நமக்கு உணர்த்தும் ,

அதாவது அறம் ,பொருள் ,இன்பம்.பத்தாம் அதிபதி வலுவடைந்தால் 4-ம் அதிபதி வலுவிலக்கும்.ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு லக்கனமும் ஒன்றுக்கு மேற்பட்ட யோகத்தை கொடுக்குமானா? கொடுக்காது.அதுவே 3ம் வீடு வலுவா இல்லனா 9ம் வீடு பலமாக இருக்கும்.தன்னுடைய முயற்சி இருந்தால் 3ம்பாகம் வலுவாக இருக்கும் 9ம் பாகம் வலுவிலக்கும். 2ம் வீடு பலமாக இருந்துச்சுன்னா திடீர்னு 8ம் வீடு அதாவது வம்பு ,வழக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் உருவாகும்.

அதாவது ஒவ்வொரு பாகத்திற்கும் எதிர் பாவகம் வேலை செய்யும்.

மீண்டும் ஓர் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்

நன்றி வணக்கம்.

ஐந்து நிமிடத்தில் ஜாதகத்தை ஆய்வு செய்வது.

அனைவருக்கும் வணக்கம்

ஐந்து நிமிடத்தில் ஜாதகத்தை ஆய்வு செய்வது.

இன்றைக்கு ஜாதகருடைய லக்னம் கன்னி லக்னம் தற்சமயம் அக்ஷய லக்னம் மூல நட்சத்திரம் மூன்றாவது பாதம்.தனுசு லக்னத்தை ஏற்கக்கூடிய 10 வருஷ அதிபதி குருபகவான்பாக்கியாதிபதியாக லக்னத்தில் உள்ளார் .பாக்கியாதிபதியான சூரியன் லக்னத்தில் உள்ளார். பஞ்சம் அதிபதியான செவ்வாய் ,விரயாதிபதியான செவ்வாய், அட்டமதிபதியானசந்திரன் லக்னத்தில் உள்ளார். 7,10க்குஅதிபதியான புதன் லக்னத்தில் உள்ளார். அங்கே ராகுவும் உள்ளது.ஜாதகருடைய பத்து வருட பலன்கள் எப்படி இருக்கும் அப்படினா ஜாதகர் பாக்கியத்திற்கு நல்ல இடத்தில் உள்ளார்.ஆனால் ஜாதகரை சுற்றி சூரியன் ,செவ்வாய், புதன் ,சந்திரன், ராகு இவரை இந்த ஐந்து பேரும் இயக்குகிறாங்க.ஜாதகருடைய தனிப்பட்ட முறையில் அவருடைய அமைப்பு நல்ல நிலையில் உள்ளது.சனி பலமாகஇருப்பதால் வருமானத்தில்பிரச்சனைகள் இல்லை.தொழில் ஸ்தானத்தின் அதிபதி லக்னத்தில் உள்ளார். தொழில் பிரச்சினைகளும் இல்லை.அட்டம் அதிபதியான சந்திரன் லக்னத்தில் உள்ளார் .நாலாம் இடத்தின் அதிபதி குரு,குரு 4 க்கு ஆறாம் இடத்தில் உள்ளார்.இந்த ஜாதகத்தில் சந்திரன் காரகத்துவத்தையும் பார்க்கணும் பாகதத்துவத்தையும் பார்க்கவும்.நான்காம் இடமான பாகதத்துவத்துக்குஅதிபதியான கிரகம் ஜாதகருக்கு நல்லா இருக்கும் .ஆனால் 4 க்கு ஆறாம் இடத்தில் உள்ளது.இந்த சந்திரன் அட்டம் அதிபதியாக உள்ளார். இந்த ஜாதகருக்கும் அம்மாவுக்கும்கொஞ்சம் மனஸ்தாபங்கள் ஏற்படும் சூழ்நிலைஉண்டு. 7க்கும் 10க்கும் அதிபதியான புதன் ,அடுத்து இந்த ஜாதகரை மனைவி இயக்குறாங்க.பூர்வ புண்ணியம் ஐந்து 12-க்கு அதிபதியான செவ்வாய் இருக்கும், பூர்வபுண்ணிய தன்மைஇவரை இயக்குகிறது இந்த கிரகங்களின் கூட்டு அவரை இயக்குகிறது ஐந்தாம் இடத்தின் அதிபதி லக்னத்தில் உள்ளார் தேவை இல்லாத மன சஞ்சலங்கள் உருவாகும் அவரை 12 க்கு அதிபதியாகி கிரக சேர்க்கை தன்மைகள் அவருக்கு சில சஞ்சலங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் இருக்கும்.ஜாதகருக்கு சஞ்சலமான சஞ்சலம் தேவையில்லாத எண்ணங்கள் , சிந்தனைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை இந்த காலகட்டங்களில் கொடுகும். மூல நட்சத்திரம் மூன்றாவது பாதம் என்பது கேதுடைய நட்சத்திரம். கேதுக்கு அதிபத்திய வீடுகள் கிடையாது. ராகு கேது வரும் பொழுது நிற்கக் கூடிய இடத்தை பலமாக எடுத்துக்கனும். மூல நட்சத்திரத்தின் அதிபதி கேது.கேது 7ஆம் இடத்தில் உள்ளார் .கேதுவுக்கும் குருவுக்கும் உள்ள சம்பந்தம் எப்படி இருக்கும் .கேது 7ல் நல்லா இருக்காரு, ஆனால் லக்னத்துக்கு அதிபதியாக குரு 11-ஆம் இடத்தில் உள்ளார்.கேது உடைய நட்சத்திரம் வர காலகட்டங்களில் 4 வருடம் ஐந்துமாத காலங்கள் எப்படி இருக்கும்னா,கேது 7ம் இடத்தில் உள்ளதால் மனைவி ரீதியான சில பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும் .ஆனால் ஜாதகருக்கு பிரச்சனை இல்லை. மூல நட்சத்திரம் 3ஆம் பாதம் லக்னத்திற்கு 7-ம் வீட்டு லக்னத்தை தொடும் பொழுது 1,4,7 சம்பந்தப்படும்போது எதிர்பார்த்த யோகங்கள் தரும்.
7-ம் இடத்தை லக்னப்புள்ளி தொடக் கூடியக்காலகட்டத்தில் இவருக்கு சுப பலன் களுக்கான வாய்ப்புகள் உள்ளது .இடம், வீடு ,வண்டி ,வாகனங்கள் வாங்கலாம்பாக்கியத்தில் குரு இருப்பதால் எதிர்காலத்தில் லாபமாக நினைக்கக்கூடிய எந்த விஷயங்களாக இருந்தாலும் மூல நட்சத்திரம் மூன்றாவது புள்ளி காலகட்டங்களில் மட்டும் இதை பயன்படுத்தலாம்.
அடுத்து வரக்கூடிய 4-வது புள்ளிஅட்டம ஸ்தானத்தில் வரும்.லக்னத்திற்கு எட்டாம் இடத்தை தொட்டுச்செல்லும் எட்டாம் அதிபதி கேது சந்திரன் பார்வை வரும் அப்பொழுது பிரச்சனைகள் மன சங்கடங்கள் இன்னும் அதிகமான சூழ்நிலை உருவாகும் மன உளைச்சல் அதிகமாகும்.
மூல நட்சத்திரம் 4 – வது பாதம் கவனமாக கடக்கக்கூடிய காலகட்டம். லக்க ததை இயக்கக்கூடிய 10வருஷத்தின்அதிபதி பலமாக இருக்கும். இதில் உள் சூட்சமமாக இயங்கக்கூடிய கேது ,சுக்கிரன், சூரியன் இந்த பத்து வருசத்தை எப்படி அனுபவிக்க போகிறார் என்பதை குறியிட்டு காமிக்கும். கேது ஓரளவுக்கு பரவாயில்லை. சுக்கிரன் 6-ம் 11 ம் இடத்திற்கு அதிபதியாகி அவர் 12ம் இடத்துல் உள்ளார்.இது கடன்பட கூடிய காலமாக அமையும். பூராட நட்சத்திரம் லக்கன புள்ளி வரக்கூடிய காலகட்டத்தில் இவருடைய ஜாதகத்தில் 6, 11 க்கு அதிபதி சுக்கிரன் போய் 12 ம் வீட்டில் உள்ளார்.12-ல் உள்ளதுசிறப்பு, அதற்காக கடன் வாங்கி லாபத்தை அடைவதற்கு விரயம் பண்ணுவதற்கான சூழ்நிலை உருவாகும். ஜாதகர் செலவு பண்ணக்கூடியசூழ்நிலையை கொடுக்கும்.