ALP ஜோதிடம்…

ஓம் நமசிவாய… குரு வாழ்க… குருவே துணை…

..A..L..P…. ஜோதிடம்…

… அட்சய லக்ன பத்ததி… ஜோதிடம்..

… ஜாதகர் பிறந்தபோது எந்த லக்னத்தில்
பிறந்திருந்தாலும்,…

…. ஜாதகம் பார்க்க படுகின்ற நாளில் என்ன
வயது நடந்து கொண்டிருக்கிறது எனக்
கண்டறிந்து..

… அதற்கு வயது இலக்கணம்
கண்டுபிடித்து..

… பலன் கூறும் முறையே அட்சய லக்கன
. பத்ததி முறை…

….A .L .P … ஜோதிட முறையில் துல்லியமாக
பலனை எடுக்கலாம்…

…. நம்முடைய கர்மா லக்கனம் என்ன.???

… போன ஜென்ம பிறவி லக்கனம்
என்ன..???

…. நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த
பாவம் ..சாபம் ..தோஷம் .என்ன..???

… இதற்கு பரிகாரம் உண்டா இல்லையா..???

… நல்ல தசாபுத்தி காலமாக இருந்தாலும் முன்னேற்றம் இல்லையே ஏன்..???

… பொதுவாக நாம் இலக்கணப்படி பார்த்தால் தசாபுத்தி நல்லதாக இருக்கும்..!!!

… அட்சய இலக்கண பத்ததி முறையில் பார்த்தால் லக்னம் மாறி இருக்கும்..!!!.

… அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதே..

…””A.L.P “”.. ஜோதிட முறை….

… பூர்வஜென்ம வாசனையை குறிக்கும்
கிரகங்கள்..

… இராகு கேது…

…. ராகு கேதுக்கள் சூரிய சந்திரனுடன் சேர்ந்திருந்தால் பூர்வீக ஜென்ம வாசனை உண்டு…

… பகலில் ஒளி வீசும் கிரகம் சூரியன்..

… இரவில் ஒளி வீசும் கிரகம் சந்திரன்..

… சூரியன் ராகு இணைவு பெற்ற
.. ஜாதகர்கள்…

… பகலில் உடலில் சூரிய ஒளி பட்டு விழுகின்ற நிழலை வணங்கி வந்தால் பூர்வீக ஜென்ம சாபம் தீரும்..

… சந்திரன் ராகு இணைவு பெற்ற
… ஜாதகர்கள்…

.. இரவில் உடலில் சந்திர ஒளி பட்டு விழுகின்ற நிழலை வணங்கி வந்தால்
… பூர்வீக ஜென்ம சாபம் தீரும்…

… ஏனென்றால் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள்…

… இப்படி பல கிரக கூட்டணிகளுக்கு பலனை கண்டுபிடித்து பல பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் முறையே…

..A.L.P..( அட்சய இலக்கண பத்ததி.). முறை.

… ஜாதகத்தை பார்த்தவுடன்…

… அவர்கள் குடும்பத்தில் எந்த லக்னத்தில் எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து இருப்பார்கள் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்…

… எந்த தசா புத்தியில் அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பதையும் அறியும் முறை..( A.L.P.)..

…A.L.P.. ஜோதிடத்தில் உலகியல் நிகழ்வுகளையும் கணிக்கலாம்…

…. எந்த நாட்டில் எப்பொழுது இயற்கை சீற்றங்கள்…

… நாட்டில் அரசியல் மாற்றங்கள்..

… தங்கம் விலை எப்போது ஏறும் குறையும்..

… பங்கு மார்க்கெட்டில் தரம் எப்பொழுது உயரும் குறையும்…

… மாணவர்கள் எத்தனை மார்க் எடுத்து தேர்ச்சி பெறுவார்கள்..

… போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டும் முறைதான்…

….A.L.P..( அட்சய லக்கன பத்ததி முறை.)..

…A.L.P. ( All _ Level _Prediction.).. method.

.. இந்த ஜோதிடக் கலையை ஜோதிட
உலகுக்கு வழங்கியவர்..

.. ஆழ்மன பயிற்சியாளர்…..
.. திரு பொதுவுடமை மூர்த்தி அவர்கள்…

… இனி வரும் காலங்களில் பலனை
துல்லியமாக எடுக்க…

…A.L.P.. ஜோதிட முறை சிறந்த உதாரணமாக விளங்கும்…

… இந்த கலையை கற்றுத்தந்த பொதுவுடைமை மூர்த்தி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்…

… தென்னாடுடைய சிவனே போற்றி.. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி…

.. ஜோதிடம் அடிப்படை கல்வி..
உயர்நிலைக் கல்வி கற்றுத்தரப்படும்…

M.S. செல்வராஜ்..D.A.B.A..Astro..
.. நல்லூர் ..திருப்பூர்…
..9965742366…
…9360354122..

கிருத்திகை நட்சத்திரம்

ஓம் நமசிவாய …குரு வாழ்க… குருவே துணை..

….. கிருத்திகை நட்சத்திரம்….

…. வார்த்தைகள் உடையன ஆகும்…
… வழக்கு அறிந்து உரைக்க வல்லான்….
… கூத்து மனத்தன் ஆகும்…
… குணமுடைகிளையனாகும்…
… போர்த்தொழில் வல்லதாகும்.. புகழுடன்
பொருளும் தேடும்…
… கார்த்திகை நாளில் தோன்றும் கருத்துடை காளை தானே….

…..27.. நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் கிருத்திகை…

… இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு வன்மை உடையவர்கள்…

…. வழக்குகளை மிகவும் தெளிவாக பேசி தீர்த்து வைக்கும் ஆற்றல் படைத்தவர்கள்…

… நடனம் போன்ற கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்…

…. நல்ல குணம் உள்ளவர்கள்…

… உறவினரிடம் சுமூகமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள்…

… போர்த் தொழில் புரிவதில் வல்லவர்கள்…

… ராணுவம் …போலீஸ் …பணியில் இவர்கள் தொழில் அமைந்து இருக்கலாம்…

…. பொன் பொருள் இவற்றுடன் புகழையும் தேடி உயர்ந்து வாழ்வார்கள்…

…. தெளிந்த கருத்து சொல்லும் பண்புடையவர்கள்….

…. மேலே உள்ள செய்யுளுக்கு இதுதான் பொருள்….

… மரிச கோத்திரத்தைச் சேர்ந்த பெண் நட்சத்திரம் கிருத்திகை…

… ஆகாயத்தில் கத்தி அல்லது வாள் போன்ற உருவம் உடையது…

… விருட்சங்களில் இது அத்திமரம் ஆகவும்..

… மிருகங்களில் பெண் ஆடாகவும்…

…. திசைகளில் தெற்காகவும்… விளங்குகிறது…

.. மேஷ ராசி யையும் ரிஷப ராசியை யும் இணைக்கும் பாதையாக கிருத்திகை நட்சத்திரம் விளங்குகின்றது….

… மேஷ ராசியில் முதல் பாதமும்…

… ரிஷப ராசியில் மீதி 3 பாதங்களும் பரவி உள்ளது….

…. நட்சத்திர அதிபதி சூரிய பகவான்…

…. கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி பகவான்…

…. வழிபட வேண்டிய தெய்வம் சுப்பிரமணிய பெருமான்….

… கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம் ….

.,.நாகப்பட்டினம் நாகநாதர் கோவில்..

… கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த நாயன்மார்கள்…
…. இடங்கழியார்…
… கணம்புல்லார்…
…. புகழ்ச்சோழர் மூர்த்தியார்….

… கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆழ்வார்கள்….
… உய்யக்கொண்டார் நம்பிள்ளை…
…. திருமங்கையாழ்வார்…

…. கடன் தொல்லைகளில் இருந்து விடுபட நினைப்பவர்கள்…

…. தொடர்ந்து 6 மாத காலம் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் விரதமிருந்து…

… முருகப் பெருமானின் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் ..

…. கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்…

… ஆண்கள் வெள்ளிக்கிழமையும்,, கிருத்திகை நட்சத்திரமும் _ இணைந்து வரும் நாட்களில் விரதம் இருந்தால்…!!!

… கணவன் மனைவி உறவு பலப்படும்…

…. கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய விருட்சம் அத்திமரம்…

… அத்தி மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட திருக்கோவில்கள்….

… கடலூர் …காட்டுமன்னார்குடி..
… பதஞ்சலி ஈஸ்வரர்…

… தஞ்சாவூர் ..சேங்கனூர்…
…. சத்தியகிரீஸ்வரர்….

….. திண்டுக்கல்… கீரனூர்…
…… சிவலோகநாதர்….

….. தூத்துக்குடி… திருச்செந்தூர்…
….. முருகப்பெருமான்…

…காஞ்சிபுரம்… வரதராஜ பெருமாள் கோவில்…

…. சென்னை…. திருவொற்றியூர் …
….வன்மீக நாதர்…

…. நாகப்பட்டினம் …திருச்செங்காட்டாங்குடி..
……. ஆத்தி வனநாதர்..

… திருவாரூர் ….திருமீயச்சூர்…
…. சகலபுவனேஸ்வரர்…

…. வருடத்திற்கு ஒருமுறையாவது …

…இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு
… ஸ்தலத்திற்கு சென்று…

… கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய விருட்சமான அத்தி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வந்தால்…

…. நாம் ஊற்றும் தண்ணீர் வேருக்கு பட்டதும்….

….. நம்முடைய வாழ்க்கை தரம் துளிர்க்க ஆரம்பிக்கும்…..

….. தென்னாடுடைய சிவனே போற்றி…
.., என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி…

…( கீழே உள்ள படத்தில் அடியேன் உடன் இருப்பவர் என் வாழ்க்கை துணைவி..

.. 35 ஆண்டு திருமண வாழ்வில் ஒரு சிறு கீறல் கூட விழாமல் வாழ்க்கையைச் செவ்வனே நடத்திச் சென்று என்னை ஒரு குழந்தை போல பாதுகாத்து வரும் என் மனைவியாகிய தாய்…)

… ( தாய்க்குப்பின் தாரம் என்ற பழமொழிக்கு உதாரணமாக விளங்கியவர்..)..

…. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது..

… இந்தப் பிறவியில் எனக்கு வாழ்க்கை துணைவியாக அவரை அமைத்துக் கொடுத்த..

… எம்பெருமான் சிவபெருமான் அவர்களின் கருணையே கருணை…

… சிவனை நம்பியவர்கள் தோற்றதில்லை…

… திருவாசகத்தை படித்தவர்கள் கெட்டதில்லை…

.. குறைவிலா நிறைவே, கோதிலா அமுதே..
.. ஈறிலா கொழுஞ்சுடர் குன்றே…
.. மறையுமாய் மறையின் பொருளுமாய்
வந்தென்..
,.. மனத்திடை மன்னிய மன்னே…
.. சிறை பெறா நீர்போல் சிந்தை வாய்ப்
பாயுந் திருப்பெருந்துறை சிவனே..
.. இறைவனே நீயென் உடலிடங்
.. கொண்டாய்
. இனி உன்னை என்னிரக்கேனே..
..( திருவாசகம்..).. திருச்சிற்றம்பலம்..

.. ஜோதிடம் அடிப்படை …உயர்நிலைக் கல்வி கற்றுத்தரப்படும்…

..M.S. செல்வராஜ்…D A.B.A..Astro..
… நல்லூர்… திருப்பூர்….
… மொபைல் எண்…
..9965742366..
…9360354122…

எனது ஜோதிட குருமார்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்

சூரியன் சந்திரன் ஒரு ஆன்மிக ஜோதிட பார்வை🌞🌝🌎

ஜோதிடத்தில்
சூரியன் தந்தையை குறிக்கும்
சந்திரன் தாயை குறிக்கும்

ஏன் தெரியுமா?

தந்தை என்ற கணவர் தான் கடமையை செய்ய வெளியே செல்லும் போது தனக்கு சமமான தாய் என்ற மனைவியை
பிள்ளைகளுக்கு(பூமிக்கு) துணையாக விட்டு செல்வர்

சூரியன் மறைந்து சந்திரன் ஒளிர்வது போல

அதேபோல்
சந்திரன் சுயம் ஒளிரும் தன்மை
கிடையாது,சூரியனின் ஒளியை தான் மீது வாங்கி கொண்டு அதை ஒளிர செய்கிறது.

அறிவியல்படி சந்திரனை தாய்க்கு காரகம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பெண்களின் மாதவிடாய் சுழற்சிக்கும் சந்திரனை போல் 28 நாட்களே.

சூரியன் என்ற தந்தையின் ஒளியாகிய உயிர் அணுவை தான் உடலில் கருவாய் மாற்றும் தாய் என்ற சந்திரன்
இவர்களால் தான் நாம் இந்த உலகில் உயிர் வாழ்கிறோம்.

ஆதி காலத்தில் மனிதனுக்கு இருந்த மிகா பெரிய பிரச்சனை இருட்டு இதனால் வரும் பயம்

சூரியன் மறையும் போது வரும் இருட்டின் பயத்தை சந்திரன் உதித்து வெளிச்சம் தந்து அந்த பயத்தை போக்குவர்.

அதேபோல் ஆதித்தொட்டு சூரியன் சந்திரன் தான் நாம் முதல் தெய்வம்
“தாயும்,தந்தையும்”இதனால் இருவரும் சேர்ந்து வரும் நாளில் அம்மாவாசை திதியாக
நாம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறோம்.

தந்தை உறுதி தன்மையுடனும்
தாய் உணர்ச்சி தன்மையுடனும் இருக்க காரணம் சூரியன் ,சந்திரனை வைத்து புரிந்துக்கொள்ளலாம்.

சூரியன் தெய்வதுதில்லை(உறுதி)
சந்திரன் தெயும் தன்மையுள்ளது(உணர்ச்சி)

வீட்டில் பிள்ளைகள் கையை வெட்டி கொண்டால் உடனே தாய் பதருவர்,
தந்தையோ காயத்தின் தன்மையை பார்த்து கொண்டு இருப்பார் ஒன்றுமில்லை சிறு காயம் தான் என்பார்.

இதுபோல் பல காரணத்தால் நாம் உறுதியாக புரிந்து கொள்ள முடியும்
“சூரியன் தந்தைக்கும் சந்திரன் தாய்க்கும்”
காரகம் என்று

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667