Spread the love

எனது ஜோதிட குருமார்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்

சூரியன் சந்திரன் ஒரு ஆன்மிக ஜோதிட பார்வை🌞🌝🌎

ஜோதிடத்தில்
சூரியன் தந்தையை குறிக்கும்
சந்திரன் தாயை குறிக்கும்

ஏன் தெரியுமா?

தந்தை என்ற கணவர் தான் கடமையை செய்ய வெளியே செல்லும் போது தனக்கு சமமான தாய் என்ற மனைவியை
பிள்ளைகளுக்கு(பூமிக்கு) துணையாக விட்டு செல்வர்

சூரியன் மறைந்து சந்திரன் ஒளிர்வது போல

அதேபோல்
சந்திரன் சுயம் ஒளிரும் தன்மை
கிடையாது,சூரியனின் ஒளியை தான் மீது வாங்கி கொண்டு அதை ஒளிர செய்கிறது.

அறிவியல்படி சந்திரனை தாய்க்கு காரகம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பெண்களின் மாதவிடாய் சுழற்சிக்கும் சந்திரனை போல் 28 நாட்களே.

சூரியன் என்ற தந்தையின் ஒளியாகிய உயிர் அணுவை தான் உடலில் கருவாய் மாற்றும் தாய் என்ற சந்திரன்
இவர்களால் தான் நாம் இந்த உலகில் உயிர் வாழ்கிறோம்.

ஆதி காலத்தில் மனிதனுக்கு இருந்த மிகா பெரிய பிரச்சனை இருட்டு இதனால் வரும் பயம்

சூரியன் மறையும் போது வரும் இருட்டின் பயத்தை சந்திரன் உதித்து வெளிச்சம் தந்து அந்த பயத்தை போக்குவர்.

அதேபோல் ஆதித்தொட்டு சூரியன் சந்திரன் தான் நாம் முதல் தெய்வம்
“தாயும்,தந்தையும்”இதனால் இருவரும் சேர்ந்து வரும் நாளில் அம்மாவாசை திதியாக
நாம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறோம்.

தந்தை உறுதி தன்மையுடனும்
தாய் உணர்ச்சி தன்மையுடனும் இருக்க காரணம் சூரியன் ,சந்திரனை வைத்து புரிந்துக்கொள்ளலாம்.

சூரியன் தெய்வதுதில்லை(உறுதி)
சந்திரன் தெயும் தன்மையுள்ளது(உணர்ச்சி)

வீட்டில் பிள்ளைகள் கையை வெட்டி கொண்டால் உடனே தாய் பதருவர்,
தந்தையோ காயத்தின் தன்மையை பார்த்து கொண்டு இருப்பார் ஒன்றுமில்லை சிறு காயம் தான் என்பார்.

இதுபோல் பல காரணத்தால் நாம் உறுதியாக புரிந்து கொள்ள முடியும்
“சூரியன் தந்தைக்கும் சந்திரன் தாய்க்கும்”
காரகம் என்று

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *